search icon
என் மலர்tooltip icon

    கன்னி - ஆண்டு பலன் - 2024

    கன்னி

    புத்தாண்டு ராசிபலன்கள்-2024

    அழகான கன்னி ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இந்த ஆங்கிலப் புத்தாண்டில் குருவின் சஞ்சாரம் ஏப்ரலுக்கு மேல் மிகச் சாதகமாக உள்ளது. சனி மற்றும் ராகு கேதுவினால் ஏற்படும் இன்னல்கள் குரு கடாட்சத்தால் மட்டுப்படும்.அனைத்து செயல்களிலும் துணிந்து செயல்பட்டு வெற்றி வாகை சூடுவர்கள். தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் உங்களை வந்து அடையும்.ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். நினைத்த காரியங்கள் வெற்றியடையும். சுய முயற்சி, உழைப்பினால் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்டு தேவையானதை அடைவீர்கள்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டின் துவக்கத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் விபரீத ராஜ யோகம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்ட பொருள், வருமானம் போன்றவைகள் கிடைக்கும்.வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். ஏப்ரல் 21, 2024-க்குப் பிறகு பாக்கிய ஸ்தானம் செல்லும் குருபகவான் 5-ம் பார்வையால் ராசியை பார்க்கிறார். 7-ம் பார்வையால் முயற்சி ஸ்தானத்தை பார்க்கிறார். 9-ம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கிறார்.இதனால் பய உணர்வு நீங்கும். மன சஞ்சலம் அகலும்.

    ஆன்ம பலமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.பாக்கிய பலன் மிகுதியாகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப் புள்ளியாகும்.உயர் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என அனைத்தும் சாதமாக உள்ளது.மறு திருமண முயற்சி பலிதமாகும். சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீங்கும்.சிலர் சகோதர, சகோதரிகளுக்காக பணம் செலவு செய்ய நேரும்.வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக உயர்வு உண்டு.

    சனியின் சஞ்சார பலன்கள்

    ஆண்டு முழுவதும் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சனியின் 3-ம் பார்வை அஷ்டம ஸ்தானத்திலும் 7-ம் பார்வை 12-ம்மிடமான விரய ஸ்தானத்திலும் 10-ம் பார்வை சகாய ஸ்தானத்திலும் பதிகிறது.சொத்துக்கள் தொடர்பான முக்கிய விஷயங்களை பிறரை நம்பி ஒப்படைக்கக் கூடாது. தொழில் அபிவிருத்தி மூலம் வளர்ச்சி உண்டாகும். தொழில், வேலைக்காக அங்கும், இங்கும் அலைந்து, திரிந்த நிலை மாறி ஒரே இடத்தில் பணிபுரியும் நிலை உண்டாகும்.அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப் பீர்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள்.

    பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.கலைப் பொருட்கள் சேமிப்பீர்கள். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். குழப்பங்கள் தீர்ந்து தெளிவான நிலை உண்டாகும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். புண்ணியத் திருத்தலம் யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும்.கை, கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் வெறுப்பு மறையும்.

    ராகு-கேது சஞ்சார பலன்கள்

    ராசியில் கேது 7-ல் ராகு நிற்பதால் மன தடுமாற்றம் அதிகரிக்கும். இது வரையில் உண்டான வெற்றிகள் எல்லாம் தடைபட்டது போன்ற உணர்வு மேம்படும்.பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்கலாம். தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியத்தை காப்பது நல்லது.

    யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்களிடம் கவனம் தேவை. வாழ்க்கைத் துணை மூலம் நல்ல உறவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனை யாக உருவாகும். முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம். புதிய கடன் உருவாக வாய்ப்புகள் அதிகம். அதனால் மன வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும்.இயற்கை உணவுகளை உண்பதால் ஆரோக்கியத் தொல்லைகளைத் தவிர்க்க முடியும்.

    உத்திரம் 2,3,4

    நன்மையும், தீமையுமற்ற வருடம். சிறிய முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைப்பீர்கள். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். நாள்பட்ட வியாதிகளின் தன்மை புரியும். எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும். குடிப்பழக்கம், போதைக்கு அடிமையானவர்கள் மருத்து உதவியில் சீராக வாய்ப்பு உள்ளது. கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள்.

    இழந்த வெளிநாட்டு வேலை மீண்டும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஆண் வாரிசு கிட்டும். காதல் காலை வாரும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். நெருங்கிய சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    அஸ்தம்

    பாக்கிய பலன்களை அடையும் வருடம். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் தோற்றத்தில் மிடுக்கும், செயலில் வேகமும் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டுக் கொண்டு இருந்த உங்கள் வாழ்வில் புது வசந்தம் வீசப்போகிறது. உங்களை வாட்டி வதைத்த நோய் தாக்கம் குறையும். உங்கள் வாழ்க்கை நிலை உயரப்போகிறது. பிறந்த பலனை அடையப் போகிறீர்கள். வியாபாரத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகி லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் பாராட்டப்படுவார்கள். அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க உகந்த காலம்.

    உங்களின் புகழ், கவுரவம் உயரும். புதிய நட்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கணவன்-மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தினமும் சுந்தரகாண்டம் படிக்கவும்.

    சித்திரை 1,2

    இந்தப் புத்தாண்டில் அனைத்து தடைகளும் தகறும்.தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் பொற்காலம் என்று சொல்லக் கூடிய வகையில் முன்னேற்றமான, சிறப்பான நன்மைகளை அடையக் கூடிய நிலை உண்டாகும்.

    அஷ்டம குருவின் தாக்கம் குறைந்த பிறகு. புதிய முதலீடுகளால் தொழிலில் ஏற்றம் காணலாம்.பதவி உயர்வு, வருமான உயர்வு உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் நடைபெறும். உங்கள் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். சிலருக்கு மறுதிருமணம் நடக்கும். சொத்துக்களின் மதிப்பு உயரும். தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

    திருமணம்

    கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்பட்டு இருப்பதால் ஜனன ஜாதகத்தில் மீனத்தில் உள்ள கிரகங்களின் வலிமையை பொருத்தே திருமண வாய்ப்பு கூடி வரும். திருமணத்திற்கு சாதகமான தசை புத்தி நடப்பில் இருந்தால் திருமணத் தடை அகலும். சிலருக்கு காதல் கலப்புத் திருமணம் நடைபெறும். ஏழாமிடமான மீனம் இரட்டை ராசி என்பதால் முதல் திருமணத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு மறு விவாகம் நடைபெறும்.

    பெண்கள்

    சர்ப்ப தோஷம் ஏற்படுவதால் ராசியில் கேது ஏழில் ராகு நிற்பதால் உங்களின் செயல்களில் சுயநலப் போக்கு உருவாகும். பேராசையால், முறையான திட்டமிடுதல் இன்மையால் குழப்பமான மன நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். ஞாபக மறதி உண்டாகும். பய உணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் அசாதரண சூழ்நிலை நிலவும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழல் வரும். திருமணம், குழந்தை பாக்கியம் தடைபடும். குழந்தைகளைப் பற்றிய கவலை உருவாகும். யோக மெடிடேசன், பிராணயாமம் போன்றவற்றால் மனதை சமப்படுத்த வேண்டும்.

    வியாபாரிகள்

    தொழில் அபிவிருத்தி உண்டாகும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும்.கல்வி நிறுவனங்கள், நூல் வெளியீட்டாளர்கள், அச்சுத்துறை போன்ற தொழிலில் இருப்பவர்கள் பெரும் பலன் அடைவார்கள். ஏப்ரலில் ஏற்படும் குருப்பெயர்ச்சி வரை விரயங்கள் சற்று அதிகமாக இருக்கும். அதன்பிறகு விரயங்கள் அனைத்தும் சேமிப்பு, முதலீடாக மாறி உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும்.

    உத்தியோகஸ்தர்கள்

    உத்தியோகஸ்தர்கள் மற்றவரின் பணியையும் இழுத்துப் போட்டு வேலை செய்து பொருளீட்டும் நிலை உருவாகும். அரசுப் பணியாளர்கள் ஆதாயம் அடைவார்கள். சம்பந்தமில்லாத நபர்களின் குறிக்கீட்டால் மன சஞ்சலம் அதிகரிக்கும். கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் உள்ளதால் நண்பர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்கக் கூடாது.

    அரசியல்வாதிகள்

    ராசியில் கேது ஏழில் ராகு. நண்பர்கள் போல் நடித்து உங்களைப் பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொண்டு உங்களை கவிழ்க்க முயலலாம் எனவே புதிய நண்பர்களிடம் கவனம் தேவை. அதே நேரத்தில் ஏழாமிடம் சமுதாய பழக்க வழக்கம் பற்றிக் கூறுமிடம் என்பதால் பொதுமக்களிடம் கவுரவம் பார்க்காமல் சகஜமாக பழகினால் தேர்தல் காலத்தில் அது ஓட்டாக மாறும்.

    பரிகாரம்

    வெற்றிலை, பாக்கு பழத்துடன் பாசிப்பயிறு பாயசம் வைத்து புதன்கிழமை இஷ்ட, குல தெய்வம், பெருமாளை வழிப்பட்டால் கவலைகள் தீரும்.

    கன்னி

    ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

    காரியவாதியான கன்னி ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு மேன்மையான சுப பலன்களை வழங்கிட நல் வாழ்த்துக்கள். இந்த வருடத்தில் நல்ல மன அமைதி, ஆனந்தம், மாற்றம், முன்னேற்றங்கள் உண்டாகும். கண் திருஷ்டி குறையும். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் விலகி சாதகமான பலன் உண்டாகும். வருட கிரகங்களின் சஞ்சாரம் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குருவின் பார்வை பதியும் இடங்கள் மூலம் போட்டி பொறாமைகளை சமாளிக்கும் திறமையும் வைராக்கியமும் உண்டாகும். கிரகங்கள் சாதகமாக உள்ள சூழ்நிலையில் வெற்றியை சுவைப்பது சாதாரணம்.கோட்சார கிரகங்களின் சஞ்சாரம் சுமாராக உள்ள காலகட்டத்தில் வெற்றியை எட்டிப் பிடிப்பவர்களே சாதனையாளர்கள். இனி விரிவான பலன்களைப் பார்கலாம்.

    குருவின் சஞ்சார பலன்கள்:

    கன்னி ராசிக்கு 4, 7ம் அதிபதியான குருபகவான் ஏப்ரல் 22, 2023 வரை 7ம் இடத்திலும் அதன் பிறகு 8ம் இடம் சென்று ராகுவுடன் சேர்ந்து சனி பார்வை பெறுகிறார். எட்டில் உள்ள குரு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த குடும்ப பிரச்சனைகள் குறைந்து மன நிம்மதியுடன் இருப்பீர்கள்.

    சிலருக்கு அதிர்ஷ்டத்தில் ராஜயோகம் பணக்கார யோகம் கிடைக்கும். தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வீட்டில் சேரும். புதிய சொத்துக்கள் தோட்டம், விவசாய நிலம், வாகனம் என செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். சிலருக்கு வசதியான வாழ்க்கைத் துணை அமைந்து அதன் மூலம் பொன், பொருள் ஆபாரணங்கள் கிடைக்கும். சொந்தத் தொழிலில் அல்லது உத்தியோகத்தில் நல்ல வருமானம் கிடைக்கும்.

    சுய ஜாதகத்தில் தசாபுத்தி சாதகமற்றவர்கள் புதியதாக சுய தொழில் துவங்குவதை தவிர்க்கவும். ஏற்கனவே சுய தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் புதிய பெரிய தொழில் முதலீடுகள் மற்றும் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களிடம் சுமூகமாக பழகவும். எட்டாமிடம் என்பது பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால் வாழ்க்கையின் துணையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

    சனியின் சஞ்சார பலன்கள்:

    கன்னி ராசிக்கு 5, 6ம் அதிபதியான சனி பகவான் இதுவரை 5ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று இருந்தார். இனி ஜனவரி 17, 2023 முதல் 6ம் இடத்தில் ஆட்சி பலம் பெறப் போகிறார். 5ம் அதிபதி சனி 6மிடம் செல்வதால் தொழில், உத்தியோகம் அல்லது மன நிம்மதிக்காக பூர்வீகத்தை விட்டு இடம் பெயரலாம். சிலருக்கு சொத்துக்கள் கை நழுவிப் போகலாம் அல்லது பூர்வீகச் சொத்தை விற்று அந்த பணத்தில் புதிய சொத்துக்கள் வாங்கலாம்.

    பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம். சிலருக்கு பிள்ளைகளின் திருமணம், படிப்பு, தொழில்,வைத்தியம், போன்றவற்றிக்கு கட்டுக்கு அடங்காமல் வரவிற்கு மீறிய செலவு உண்டாகும். வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். சிலர் கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். புதிய கடன் பெற்று பழைய கடனை அடைப்பீர்கள். ஒரு சிலருக்கு தகுதிக்கு மீறிய வேலையால் அவதி உண்டாகும். தொழில் போட்டிகள் எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். புதிய தொழில் முதலீட்டில் கவனம் தேவை. விரயம் இருந்தாலும் வருமானம் வந்து கொண்டே இருக்கும். தம்பதிகள் உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். பிள்ளைகளை உங்களின் நேரடி கண் காணிப்பில் பராமரிப்பது அவசியம்.உடன் பிறந்த சகோதரர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். வேலையை மாற்றக்கூடாது. கோட்சார கிரகங்கள் சாதகமற்ற காலத்தில் தன் நம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.

    ராகு/கேது சஞ்சார பலன்கள்:

    ராசிக்கு 8ம் இடத்தில் கேது 2ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். அக்டோபர் 30, 2023க்குப் பிறகு ராசிக்குள் கேதுவும் ஏழாமிடத்தில் ராகுவும் செல்கிறார்கள். 8மிடத்தில். குரு ராகு சேர்க்கை இருப்பதால் பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த /எதிர்பாராத பெரும் தொகை, அதிர்ஷ்ட சொத்து கிடைக்கும். வீட்டிற்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.தன வரவு மிகுதியால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். துன்பம் என்றால் என்னவென்றே தெரியாது. பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    திருமணம்: 2ல் கேது, 8ல் ராகு, 7ம் அதிபதி குரு எட்டாமிடம் சென்று சனி பார்வை பெறுகிறார். திருமணத்திற்கு கோட்சார கிரகங்களின் சஞ்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் சுய ஜாதக பரிசீலனைக்குப் பிறகு திருமண முயற்சியில் ஈடுபடுவது நல்லது.

    பெண்கள்: பொது நலச் சேவையில் ஆர்வம் பிறக்கும்.பிள்ளைகளின் திருமணத்தின் மூலம் சமுதாய அந்தஸ்து நிறைந்த நல்ல சம்பந்திகள் அமைவார்கள். தொழில், உத்தியோக நிமித்தமாக ஆளுக்கொரு ஊரில் அல்லது நாட்டில் வாழ்ந்த சம்பந்திகள் சேர்ந்து வாழ்வர்கள்.மன நிறைவான மண வாழ்க்கை அமையும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உணவு கட்டுப்பாடு தேவை. பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். குழந்தை பேற்றுக்கான மருத்துவ சிகிச்சை பலன் தந்து நல்ல முறையில் குழந்தை பிறக்கும்.

    மாணவர்கள்: கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும். மாணவ மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுடன் ஆசிரியர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். பள்ளி, கல்லூரி கலை நிகழ்சிகளில் கலந்து பரிசுகளும், பதக்கங்களும் பெறுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதுத்தெம்பையும், புத்துணர்வையும் கொடுக்கும்.

    உத்திரம் 2,3,4: தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதம் விலகும். எதிர்பார்த்த தொகை உடனே கைக்கு வந்து சேரும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்சியை தரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும், சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் மாமன் வழி ஆதாயம் உண்டு. தம்பதியிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும்.

    பரிகாரம்: பிரிந்து வாழும் தம்பதிகளை ஆலோசனை கூறி சேர்த்து வைக்கவும். வசதி இல்லாதவர்களின் திருமணத்திற்கு உதவவும்.

    அஸ்தம்: வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படப் போகும் நேரம். உங்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. குடும்பம் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும். வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். மன வேதனையைத் தந்த மகள் உங்களைப் புரிந்து கொள்வார். கணவருடன் இருந்த ஈகோ மாறும். பாராமுகமாக இருந்த உறவுகள் சுப நிகழ்வில் இணைந்து மீண்டும் அன்பு பொழிவார்கள். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும்.திருமணம் கை கூடும். இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல காலம் . ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.

    பரிகாரம்: தொடர்ந்து பன்னிரன்டு பவுர்ணமிக்கு கிரிவலம் வர நிலையான முன்னேற்றம் உண்டாகும்.

    சித்திரை 1, 2: உங்கள் செயலில் ஆற்றலும், வேகமும் கூடும். கூட்டுத் தொழிலில் மிகப்பெரிய அதிர்ஷ்டங்களை அள்ளித்தரக்கூடிய காலமாகும். பொருளாதாரம் உயர்வதோடு, குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும். சமூக அந்தஸ்து கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் சிறக்கும். தந்தை வழி உறவு மேம்படும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும்.

    ஆரோக்கியம், தொழில், கல்வி போன்றவற்றில் நிலவிய தடை, பிரச்னைகள் சீராகும். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மூத்த அதிகாரிகள், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், மூத்த சகோதரர் வகையில் ஆதரவும், அன்பும் கிடைக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்த தம்பதிகள் அல்லது பிரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற தம்பதிகள் இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.

    பரிகாரம்: வாழும் ஊரின் சிறப்பு வாய்ந்த அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து ஆறு நெய்தீபம் ஏற்றி வழிபட திருமணத் தடை அகலும். திருமண வாழ்க்கை தித்திக்கும். பொருளாதாரம் பெருகும்.

    புத்தாண்டிற்கு கன்னி ராசியினர் சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் இராமேசுவரம் அருள்மிகு இராமநாத சுவாமி கோவில். ராம நாத சுவாமியை புத்தாண்டில் சென்று வழிபட கன்னி ராசியினரின் பாவங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு அமையும்.

    சிம்மம்

    ஆங்கில ஆண்டு பலன் - 2022

    வசீகரமான தோற்றம் கொண்ட கன்னி ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டில் மன நிறைவான சுகபோக வாழ்விற்கு மனம் ஏங்கும். அதற்காக கடுமையாக போராட நேரும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஏப்ரல் 2022 வரை வருட கிரகமான குருவினால் ஏற்படும் சுப பலன்கள் குறையும். ஏப்ரல் மாதத்திற்கு மேல் ராசிக்கு 7ல் செல்லும் குருவினால் சுப பலன்கள் மிகைப்படும்.

    ஆண்டு முழுவதும் சனியின் சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. ஏப்ரல் 12, 2022 வரை ராகு/கேதுக்களால் பெரிய பாதிப்பு இருக்காது. ஏப்ரலுக்கு மேல் ராகு/கேதுக்களால் சற்று இன்னல்களை சந்திக்க நேரும். அனைத்து விதமான இன்னல்களில் இருந்தும் குரு பகவானின் பார்வை உங்களை காக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

    குரு சஞ்சார பலன்: 13.4.2022 வரை 4, 7--ம் அதிபதி குரு 6ல் மறைவதால் கடன் பெற்று உங்களின் வீடு, வாகன கனவை நிறைவேற்றுவீர்கள்.

    வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் காலம். தாய் வழிச் சொத்தால் தாய் வழி உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்படும்.

    இதனால் தாயின் உடல் நிலையில் சற்று பாதிப்பு உண்டாகும். சிலருக்கு பல தலைமுறையாக பாதுகாத்த குடும்ப சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்று கடனை அடைத்து விடலாம் என்ற எண்ணம் மேலோங்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை குறைபடும். சிலருக்கு விவாகரத்தும் நடக்கலாம். வீண் விவாதங்களைத் தவிர்த்தல் நலம். களத்திரத்தின் மூலம் சில வீண்மருத்துவச் செலவுகளைச் சந்திக்க நேரும். தொழில் கூட்டாளிகளால் கடன் உருவாகலாம் அல்லது புரிதல் இன்மையால் பிரியலாம். நண்பர்களின் சொந்த விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடக் கூடாது.

    குருபகவான் பெயர்ச்சியாகி ஏழாடமிடமாகிய மீனத்திற்கு ஏப்ரல் 13ல் செல்லும் போது 6ம் இடத்து குருபகவானால் ஏற்பட்ட இன்னல் முற்றிலும் அகலும். சம்பந்திகள் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

    சொத்து வாங்கும் முயற்சியில் வாழ்க்கை துணையின் பங்களிப்பும் இருக்கும். வீடு அல்லது தொழில் நிறுவனங்களை மாற்ற நேரும். மன சஞ்சலத்தால் மதம் மாறியவர் மீண்டும் சொந்த மதத்திற்கு மாறுவார்கள். சில உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொத்து தொடர்பான கோர்ட் பிரச்சனைகள் சாதகமாகும். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட இன்னல்கள் மாறும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். புதியவாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன்காரர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த நிலை மாறும்.

    சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் சனி பகவான் 5-ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். சனி பகவான் கன்னி ராசிக்கு 5, 6-ம் அதிபதி. உங்களின் ஐந்தாம் அதிபதி சனி ஐந்தில்ஆட்சி பலம் பெறுவதால் நடக்குமா ? நடக்காதா? என உங்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல விசயங்கள் நல்ல முடிவிற்கு வரும். உங்களின் துன்பங்கள், துயரங்களுக்கு விடிவு காலம் வந்துவிட்டது. இதுவரை இருந்து வந்த தடை தாமதங்கள் நீங்கி கிடைப்பதற்கரிய பல நற்பலன்கள் உங்களை தேடி வரும். தொழில், வேலை நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் ஓய்வு காலத்தில் சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகுவீர்கள்.

    இதுவரை சொந்த ஊரில் வாழ்ந்தவர்கள் உத்தியோகம், தொழில் நிமித்தமாக இடம்பெயர நேரும்.கூப்பிட்ட குரலுக்கு உங்களின் குல தெய்வம் ஒடி வரும் 26. 2. 2022 முதல் 6. 4. 2022 வரை 3, 8-ம் அதிபதியான செவ்வாய் 5-ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்ற சனியுடன் இணையப் போகிறார். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோகத்தில் பதவி இறக்கம் உண்டாகும் அல்லது பதவி விலக நேரும். சிலர் அதிர்ஷ்டத்தை துரத்தி கால விரயம் செய்வார்கள். தவறான சொத்து அல்லது பயன்படாத சொத்தை கட்டிக்காத்து ஏமாறுவீர்கள். அல்லது கடனுக்காக சொத்தை இழக்க நேரலாம்.

    கன்னி ராசியினர் சொத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளுக்காக அதிக பொருள் விரயம் செய்ய நேரும். சிலர் நண்பர்கள், உறவினர்களின் விஷயத்தில் மாட்டி தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவார்கள். அண்டை, அயலாருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். யாருக்கும் ஜாமீன், கியாரண்டி போடக் கூடாது.

    3, 8-ம் அதிபதிகளின் சம்பந்தம் ஏற்படுவதால் வாகன விபத்து ஏற்படும். வாகனங்களை இயக்கும் போது அதிக கவனம் தேவை. வாகனத்தை உரிய பாதுகாப்பு கவசத்துடன் இயக்க வேண்டும்.

    ராகு/கேது சஞ்சார பலன்: 12.4.2022 வரை 3ல் கேதுவும் 9ல் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ஒன்பதாமிடம் என்பது பாக்கிய ஸ்தானம் என்பதால் ஞானமார்கத்தில் மனம் லயிக்கும். தீர்த்தயாத்திரை செல்ல ஆர்வம் ஏற்படும். பித்ரு கடனை முறைப்படுத்தி பாக்கியப் பலனை அதிகரிப்பீர்கள். குரு உபதேசம் கிடைக்கும். ஆன்மீகப் பெரியோர்களின் நட்பும் நல்லாசியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகள் தொடர்பான சர்ச்சைகள் நீங்கும்.

    தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களின் நல்லாசிகள் கிட்டும். ஆத்மஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்வர்களுக்கு சமுக அந்தஸ்தை நிலைப்படுத்தும் கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

    வீடு, வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உருவாகும்.

    ஏப்ரல் 12-ல் 2-ல் கேதுவும், 8ல் ராகுவும் பெயர்ச்சியாகும் போது கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் உண்டாகும். கண் பார்வை குறையும். ஒருசிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யநேரும். சம்பாதித்த அனைத்தையும் பாதுகாப்பது அவசியம். சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம்.

    சில குழந்தைகள் மாற்றாந்தாயிடம் வளரும் நிலை ஏற்படலாம். குழந்தைகளுக்கு மந்தத் தன்மை ஏற்படும். நரம்பு தொடர்பான சிறு பாதிப்பு இருக்கும். பயண அலைச்சல் மிகும். தீயவழியில் பொருள் விரயம் ஏற்படும். உங்களின் சொத்துகள் பிறரால் அனுபவிக்கப்படலாம். உடல் உஷ்ணம், அஜீரணம் தொடர்பான நோய்கள் சங்கடத்தில் ஆழ்த்தும். அவ்வப்போது உடல் களைப்பு, அசௌகரியங்களால் அவதி ஏற்படும்.

    திருமணம்: வெகு சிலருக்கு ராசிக்கு 5ம் இடத்தில் உள்ள சனியின் 3ம் பார்வை ஏழாம் இடத்தில் பதிவதால் திருமணம் தடைபடலாம் ஏப்ரல் 2022ல் குரு மீனத்திற்குப் பெயர்ச்சியானவுடன் நிறைய வரன்களின் ஜாதகம் வந்து குவியும். ஆனால் தகுதியான வரனை தேர்ந்தெடுக்கிறேன் என்று காலம் தள்ளுவார்கள்.

    பலர் அழகான மாப்பிள்ளை, மணப்பெண்ணை எதிர்பார்த்து தாங்களே திருமணத் தடையை உருவாக்குவார்கள்.சில பல விசயங்களில் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால் பலருக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணத் தடை இருக்கும் வாய்ப்பு மிகமிக குறைவு.

    பெண்கள்: ஏப்ரல்13,2022 வரை பெண்கள் வாழ்க்கைத் துணையிடம் வீண் வம்பைத் தவிர்ப்பதுடன் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் உங்களின் பேச்சு எடுபடும். கௌரவம் அந்தஸ்து உயரும். உங்கள் கணவர் நீங்கள் மனதில் நினைப்பதையும் நினைக்காததையும் செய்வார். மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப் பட்டு இருப்பார்கள்.

    விவசாயிகள்: விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான நேரம். விவசாயமும் செழிக்கும். பணமும் செழிக்கும். விளை நிலங்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும். இரண்டு வருட லாபத்தை ஒரே வருடத்தில் பார்ப்பீர்கள். புதிய விவசாயக் கருவிகள் வாங்குவீர்கள். கால்நடை பண்ணைகள் அமைப்பீர்கள். பலருக்கு வேலை கொடுப்பீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள்: வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும். பல வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும். புதிய பொறுப்புகள் வழங்கப்படும். மதிப்பு, மரியாதை சமூக அந்தஸ்து உயரும். வேலைப் பளு குறையும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்பிற்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை கிடைக்கும்.

    முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: சொந்த தொழில் ஆரம்பிக்க விருப்புபவர்களுக்கு விரும்பிய தொழில் வாய்ப்பு தேடி வரும். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். ஏற்கனவே கையிருப்பில் இருந்த பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனையாகும். தொழில் கூட்டாளிகளிடம் நல்லுறவு நீடிக்கும்.பல புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.பழைய பாக்கிகள் வசூலாகும்.

    அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகளுக்கு மிகச் சாதகமான காலம். மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆக்க பூர்வ பணிகளை செய்து உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள்இழந்த பதவி உங்களை தேடி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். அரசு சார்ந்த பணிகளில் மக்களுக்கு பயன்படும் பல்வேறு நலன்களை செய்து பொது மக்களின் நல் ஆதரவை பெறுவார்கள்.

    மாணவர்கள்: புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும்.கல்லூரி, உயர்கல்வியில் இருந்த தடைகள் அகலும். ஆனால் எந்த கல்லுரியில் சேர்வது,என்ன படிப்பு தேர்வு செய்வது போன்ற மனக்குழப்பம் ஏற்படும்.சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.அரியர்ஸ் பாடத்தில் தேர்ச்சி பெறுவார்கள். சிலருக்கு ஞாபகக் குறைவு இருக்கும்.

    உத்திரம் 2,3,4: புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டு பல தொழில் கிளைகளை திறந்து, தொழில் விரிவு செய்வீர்கள். எதிலும் சிறப்பாக செயல்பட்டு படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். நல்லவைகள் தொடர தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

    ஹஸ்தம்: உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றி தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடித்தால் நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும். வளர்பிறை காலங்களில் சந்திர தரிசனம் செய்து வர முத்தாய்ப்பான மாற்றங்கள் தேடிவரும்.

    சித்திரை 1,2: இதுவரை எந்த வேலையும் செய்யாதவர்ககள், தெரியாதவர்களுக்கு கூட வாழ்வாதாரத்திற்கு தேவையான வேலை, தொழில் வாய்ப்பு கிடைத்தே தீரும். தீராத கடன், நஷ்டம், ஆபத்து, சிக்கல்கள் விலகி நிம்மதி பிறக்கும். செவ்வாய்கிழமை அரளிப் பூ சாற்றி முருகனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×