கன்னி
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். கடந்த சில வாரங்களாக ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்து அபரிமிதமான சுப பலன்களை வழங்கிய ராசி அதிபதி புதன் ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு சென்று குருவின் பார்வையை பெறுகிறார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றம் கிடைக்கும். பணிபுரிபவர்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாகவே வந்து சேரும். வெளிநாடு சென்றவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசியினர் தாத்தா பாட்டியாகும் யோகம் உள்ளது. சில பிள்ளைகள் கல்விக்காக விடுதிக்கு செல்வார்கள். குருவின் பார்வை ஆறாம் இடத்திற்கு இருப்பதால் கடன் நோய் சார்ந்த பாதிப்புகள் அதிகரிக்கும். அதிக கோபம் மற்றும் மன அழுத்த பாதிப்பு உருவாகும். அனைத்து செயலிலும் நிதானம் மற்றும் பொறுமை மிக முக்கியம். நேர் மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406