என் மலர்
கன்னி - சோபகிருது வருட பலன்
கன்னி
சோபகிருது வருட பலன் 2023
ஏற்றம் இறக்கம் நிறைந்த வாழ்க்கை!
தோற்றத்தில் இளமையும் அமைதியும் கொண்ட கன்னி ராசியினருக்கு சோபகிருது வருட தமிழ் புத்தாண்டு லட்சியத்தை நிறைவேற்றும் புத்தாண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 22 முதல் குருபகவான் ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
ஜனவரி 17 முதல் சனி பகவான் 6ம்மிடத்தில் நிற்கிறார். தற்போது8, 2ல் நிற்கும் ராகு கேதுக்கள்அக்டோபர் 30க்குப் பிறகு 7,1ம்மிடம் செல்கிறார்கள்.பேராசையால் மிகக் குறுகிய காலத்தில் பெரிய தொகை சம்பாதிக்க ஆசைப்பட்டு அது விபரீத விளைவை தரும்.அதிக முதலீடு, புதிய தொழில் ஒப்பந்தங்களை தவிர்க்க வேண்டும்.அதிக கடன் வாங்கக்கூடாது.நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் வியாபாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். திடீர் புகழ் வரும், புகழுக்கு திடீர் பங்கம் வரும்.
உங்களுக்கு கிடைக்க வேண்டிய மாரியாதை பிறருக்கு கிடைப்பது, வதந்திகளால் அவமானம் போன்ற மன சஞ்சலம் இருக்கும். கோட்சார கிரகங்கள் சாதகமாக இல்லாத காலத்தில் மனிதனுக்கு பொறுமையும் தன்னம்பிக்கையும் மிக அவசியம்.இடமாற்றம் இருந்தாலும் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்காது. மேலதிகாரியின் தொல்லை அதிகரிக்கும். தனியார் துறையில் இருப்பவர்கள் குடும்ப நலன் கருதி வேலையில் பொறுப்போடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டும்.
குடும்பம், பொருளாதாரம் : குருவின் ஏழாம் பார்வை தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் வாக்கால் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான காலம்.பிறரால் சாதிக்க முடியாதவற்றை சாதிக்கும் திறனும் மனதில் பட்டதை தைரியமாக பேசும் தைரியமும்.வாக்கு பலிதமும் உண்டாகும். நீண்ட கால எண்ணங்கள் திட்டங்கள்பலிதமாகும்.
இது வரை ஐந்துக்கும் பத்துக்கும் அள்ளாடியவர்களுக்கு கூட கையில் சரளமாக பணம் புரளும்.பணவரவு பல மடங்கு அதிகரிக்கும்.குடும்பதேவையை நிறைவு செய்வீர்கள். பாராமுகமாக இருந்த குடும்ப உறவுகள் உங்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். ராகு /கேது பெயர்ச்சிக்குப் பிறகு கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தால் திருமணம் தடைபட வாய்ப்பு உள்ளது.
பெண்கள் : இந்த தமிழ் புத்தாண்டு உங்களுடைய அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் ஆண்டாக அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வழக்குகள் சாதகமாகும். கணவர் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சகோதர வகையில் நல்லது நடக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள்.சம்பள பாக்கிகள் வந்து சேரும்.
உத்திரம் 2, 3, 4 : தன்னம்பிக்கையால் சாதிக்கும் வருடம். இயல்பாகவே நளினமான தன்மையும் மன உறுதியும் கொண்ட நீங்கள் எந்த பிரச்சினை, கஷ்டம் வந்தாலும் சோர்ந்து போக மாட்டீர்கள்.வேலை பார்க்கும் நிறுவனத்தில் சில அசவுகரியங்கள் நடந்தாலும் முதலாளிக்காக நன்றியுடன் வேலை செய்வீர்கள். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். சொத்து வாங்குவது விற்பது சுலபமாக நடந்து முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தினமும் விஷ்ணு சகஸ்ஹர நாமம் கேட்கவும்.
ஹஸ்தம் : சமயோஜிதமாக செயல்பட வேண்டிய வருடம்.வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் அறிவாற்றலால், செயல்திறனால் தெரிந்து கொண்டு தேவையானதை அடைவீர்கள். உங்கள் மனதை தேவையற்ற வழியில் திசை திருப்பாமல் காரியத்தின் மீதும் உயர்வின் மீதும் முழு கவனத்துடன் இருப்பீர்கள். தடைபட்ட வேலைகள் முடியும். அரசாள்பவர்களின் நட்பு கிடைக்கும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு.
அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். வீடு கட்ட லோன் கிடைக்கும்.வியாபார விசயங்கள் கசிவதையறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள்.பணியிடத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பணி நிரந்தரமாவதில் தாமதம் ஏற்படலாம். தூக்கமின்மை விலகும். கண்டும் காணாமல் இருந்த உறவுகள் வலிய வந்து பேசுவார்கள். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். மகா விஷ்ணு மூல மந்திரம் படிக்கவும்.
சித்திரை 1, 2 : தடைகள் தகறும் காலம். உங்கள் தகுதியை திறமையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். தேவைக்கு பணம் வரும். செல்வாக்கு கூடும். குடும்ப நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.பூர்வீகச் சொத்து கைக்கு வரும். திட்டமிட்ட நீண்ட தூர வெளிநாட்டு பயணங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் எதிர்கால நலனிற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றிதரும். குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும்.
தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சிலருக்கு கண், காது சார்ந்த பிரச்சினைக்கு மருத்துவம் செய்ய நேரும்.சிலருக்கு பொதுக் காரியங்களில் உத்தியோகத்தில் தொல்லை தந்த உயர் அதிகாரி இடமாறுவார். நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவர்கள். சிவ காயத்திரி மந்திரம் படிக்கவும்.
பரிகாரம் :திட்டை குருபகவானை நினைத்தாலே திருப்பம் நிச்சயம் உண்டு. கன்னி ராசியினர்கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் உள்ள தென்குடிதிட்டை அருள் மிகுவசிஷ்டேஸ்வரர்திருக்கோயிலில்சுவாமிக்கும்,அம்பாளுக்கும்இடையில்ராஜ குருவாக நின்றகோலத்தில் தனி சந்நிதியில் அருள்பாலித்து வரும் குருபகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
சுபகிருது வருட பலன் - 2023
புத பகவானின் ஆசி பெற்றகன்னி ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் அதிர்ஷ்டம் உங்களுடன் உறவாட நல் வாழ்த்துக்கள்.
உங்கள் ராசிக்கு 8ம் இடத்திற்கு ராகு பகவானும், 2ம் இடத்தில் கேது பகவானும் சஞ்சரிக்கிறார். குரு பகவான் 7ம் இடத்தில் நிற்கிறார். சனி பகவான் 5,6 ம் இடத்தில்பயணிக்கிறார்.7ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்ற குருவின் பார்வை ராசிக்கு இருப்பதால் ஒருவருட காலத்திற்கு குருவின் பார்வை கவசமாககாக்கும் என்பதால் தைரியமாக, தெம்பாக இருக்கலாம். 8ம்மிட ராகு விபரீத ராஜ யோகத்தை தர விருக்கிறார்.
2ம்மிட கேதுவால் சில மன சஞ்சலம் ஏற்படலாம். 17.1.2023 வரை சனியின் சஞ்சாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் விதத்தில் உள்ளது. சனி பூர்வ புண்ணியத்துக்கு காரகன்என்பதால் குல தெய்வ அனுகிரகம் மற்றும் முன்னோர்களில் நல் ஆசிகள் உள்ளது. எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும். ஆன்ம பலம் பெருகும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக்குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.
குடும்பம்: ஒரு குடும்ப உறவுகளின் ஒற்றுமையை நிர்ணயிப்பதில் பணமும், சொத்தும் முக்கிய காரணியாக உள்ளது. பணம் குவியும் காலத்தில் உறவுகள் ரத்தின கம்பளம் விரிக்கும். பிற நேரத்தில் ஏளனப்படுத்தும்.இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்தில் கோட்சார கேது சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகள் விலகிச் செல்வது போன்ற உணர்வு உண்டாகும்.யாரையும் பார்க்கவோ, பேசவோ பிடிக்காது. சிலர் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு வெளியூர் என வாழ நேரலாம். சிலர் உறவுகளிடம் மனஸ்தாபத்தால் தனிமையாக வாழ விரும்பலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது.அடுத்தவரின் குறுக்கீடு மிகுதியாகும். சம்பந்தமில்லாத குற்றத்தில் உங்களை மாட்டி வம்பு வழக்கை உருவாக்குவார்.
ஆரோக்கியம்:ராகு/கேது மற்றும் சனியால் ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவு இருக்கவே செய்யும். உடல் உஷ்ணம், அஜீரணம் தொடர்பான நோய்கள் சங்கடத்தில் ஆழ்த்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆயுளை அதிகரிப்பார், ஆனால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடக் கூடிய நோய்களின் வீரியத்தை அதிகப்படுத்தி உடல் தளர்ச்சியையும் மனபயத்தையும்மிகைப்படுத்துவார். அவ்வப்போது உடல் களைப்பால் அவதி அசௌகரியங்களால்ஏற்படும். சிலருக்கு கண் பார்வை குறையும். ஒருசிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யநேரும்.
திருமணம்:8ல் ராகு, 2ல் கேது என்பதால்கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்பட்டுள்ளது. ராகு/கேது தசை, புத்தி நடப்பவர்கள் சுய ஜாதகத்தை பரிசீலிக்கவும். குரு தசை, புத்தி நடப்பவர்களுக்கு குரு பலத்தால் பெரியோர்களின் நல்லாசியால் திருமணம் விமரிசையாக நடக்கும்.
பெண்கள்: 8ம்மிட ராகு பெண்களுக்கு மாங்கல்ய தோஷத்தை தருவார் என்பதால் ஒரு நல்ல நாளில் மாங்கல்யத்தை தங்க செயினில் போடாமல் மஞ்சள் கயிற்றில் அணிந்து கொள்ளவும். சிலருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு வம்பு, வழக்கு வரலாம். இந்த ஒன்றரை ஆண்டுகள் தேவையற்ற பேச்சை குறைத்தாலே எந்த பாதிப்பும் வராது. அறிமுகம் இல்லாத பழக்கம் இல்லாத நபர்களிடம் குடும்ப விபரங்களை பகிரக் கூடாது. விலையுயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்க கூடாது. வாங்க கூடாது.காஞ்சி காமாட்சியை வழிபட தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.
மாணவர்கள்:கல்வி முன்னேற்றத்திற்கு விடுதியில் தங்கி படிக்கலாம். ராசிக்கும் 3ம் இடத்திற்கும் குருப் பார்வை இருப்பதால் படிக்கும் பாடம் நன்றாக புரியும். இது வரை சுமாராக படித்தவர்கள் கூட நன்றாக படிக்க துவங்குவார்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள்.
உத்தியோகஸ் தர்கள்:அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடக்கும். ஆனால் வேலைப் பளு அதிகமாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இல்லை. கடுமையாக உழைத்தாலும் உழைப்பிற்கான ஊதியம் நற்பெயரும், அங்கீகாரமும் கிடைக்காது.
முதலீட்டாளர்கள்:சுய தொழில் புரிவர்களுக்கு தொழில் நடக்கும். தொழில் நடத்த தேவையான பொருளாதாரத்தை எப்படியாது திரட்டுவீர்கள். கூட்டம் கலை கட்டும். ஆனால் கல்லாவில் காசு இருக்காது. சிலர் பணத்தை இரட்டிப்பாக்குவது போன்ற செயல்களில் முதலீடு செய்து அதிர்ஷ்ட நம்பி பணத்தை இழக்க வாய்ப்புள்ளது. தொழில் கூட்டாளிகளால் வம்பு வழக்கு வரலாம். அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.
அரசியல்வாதிகள்:அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். எதிர்கட்சியினர் உங்கள் வார்த்தையைக் கொண்டே உங்களுக்குகலகத்தை ஏற்படுத்துவார்கள். அதனால் களங்கம் தரும் வீண் விமர்சனம், கவுரவக்குறைவு உருவாகலாம்.
கலைஞர்கள்:கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ராகுவும், கேதுவும் சாரப் பரிவர்த்தனையில் சஞ்சரிக்கும் காலத்தில் பிரமாண்ட வாய்ப்புகள் தேடி வரும்.திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வருமானத்தை மறு முதலீடாக மாற்றக்கடாது.
விவசாயிகள்:ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் விளைச்சல் மற்றும் அறுவடை நன்றாக இருக்கும்.பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் மிகுதியாக இருக்கும். கோட்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் குறுகிய கால பயிர்களை பயிரிட பாதிப்பு இருக்காது.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்
ராகு/கேது: 21.2.2023 முதல்கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராகு 8ம் இடத்திலும் கேது இரண்டாம் இடத்திலும் சஞ்சரிப்பதால் சுய சிந்தனை மட்டுப்படும். வந்த வாக்கிலும் போன வாக்கிலும் வாழ்க்கையை வாழ்வார்கள்.2,8ம்,இடத்துடன் ராகு- கேதுக்கள் சம்பந்தம் பெறும்போதுவட்டிக்கு வட்டிகட்ட நேரும். வழக்குகளில் சாதகமாகத் தீர்ப்பு வராது. ரேஸ், சூதாட்டம், லாட்டரி போன்றவை மீளமுடியாத இழப்பில் கொண்டு நிறுத் தும்.குடும்பத்தில்உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் கிடைப்பதில் தடை ஏற்படும்.ஒவ்வாமை ஏற்படும் என்பதால் வெளி உணவினை சாப்பிடாமல் வீட்டில் சமைத்த சூடான உணவுகளை சாப்பிட வேண்டும்.
குரு:29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 5ல் சஞ்சரிக்கும் கோட்சாரசனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் பிள்ளைகளால் மன அமைதி குறையும். புத்திர பாக்கிய யோகத்தில் தடை ஏற்படும். உடல்நலம் பாதிக்கும்.அரசின் உதவித் தொகை கிடைப்பது தடைப்படலாம்.பயண அலைச்சல் மிகும். தீயவழியில் பொருள் விரயம் ஏற்படும். உங்களின் சொத்துகள் பிறரால் அனுபவிக்கப்படலாம். சிலர் மதம் மாறலாம் அல்லது கலப்புத் திருமணம் செய்லாம். உயர்கல்வி முயற்சிதடை, தாமதத்திற்குப் பிறகு பலிதமாகும்.
பரிகாரம்:பிரதோச காலத்தில் பச்சரிசி மாவில் நந்திக்கு தீபம் ஏற்றி வழிபட கர்ம வினை தீரும். மன சஞ்சலம் நீங்கும்.
சுப செலவுகள் அதிகரிக்கும்
8ம்மிடராகுவாலும் 5ம்மிட சனியாலும் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை அடைய முயற்சிப்பார்கள். விட்டதை பிடிக்கிறேன் என அதிர்ஷ்டத்தை துரத்துவார்கள். 8ம்மிட ராகு கெட்டவன் என்பதால்கிட்டிடும் ராஜ யோகம் என்பதால் சிலருக்கு சுப பலன்களும் நடக்கும். அதிர்ஷ்ட வசமாக வீடு, வாகனம், பொன், பொருள் சேர்க்கை, பிள்ளைகளின் திருமணம், கல்வி என சுப செலவுகள் ஏற்படலாம். 2ம்மிட கேதுவினால் பெரிய சேமிப்போ லாபமோ எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு பய உணர்வினால் நேரம், காலம், பொருள் விரயம் உண்டாகும். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால்பெரிய நஷ்டமோ, மிகுதியான அசுபமோ இருக்காது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406