என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கன்னி - சனிப்பெயர்ச்சி பலன்கள்
கன்னி
சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023
வசீகரமான கன்னி ராசியினரே இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்ற சனி பகவான் 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார். தன் 3ம் பார்வையால் 8ம் இடமான ஆயுள், வம்பு வழக்கு ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 12ம் இடமான விரய, அயன, சயன மோட்ச ஸ்தானத்தையும்,10ம் பார்வையால் 3ம் இடமான சகாய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.
ருண, ரோக சத்ரு ஸ்தான சனியின் பலன்கள்: ஆறாம் அதிபதி சனி ஆறில் ஆட்சி பலம் பெறுகிறார். ஆறாமிடம் என்பது உப ஜெய ஸ்தானம். ஒரு மனிதனுக்கு வாழ்வில் உன்னதமான வெற்றியை உயர்ந்த நிலையைத் தருவதில் ஆறாமிடம் முதன்மை வகிக்கிறது. ஆறாமிடம் எனும் பொருள் கடன் இருந்தால் மட்டுமே தன் முயற்சியால் (3ம் பாவகம்) தொழில் செய்து (10ம் பாவகம்)லாபம்(11ம் பாவகம்) எனும் இன்பத்தை அனுபவிக்க முடியும்.
இதையே வேறு விதமாக சொன்னால் பொருள் கடன் மிகுதியாக இருக்கும் ஒருவரே பொருளீட்ட,உழைக்க முயற்சி செய்து லாபம் ஈட்டுவார். இந்த சனிப் பெயர்ச்சியில் ஆறாமிடமான மறைவு ஸ்தானத்திற்கு வரும் சனி பகவான் 8, 12,3 ஆகிய இடங்களை பார்வை செய்வதால் 3,6,8,12 ஆகிய மறைவு ஸ்தானங்கள் இயங்குகின்றன. மறைவு ஸ்தானங்கள் இயக்கங்கள் மதில் மேல் பூனை என்பதால் சிறப்பித்துச் சொல்லக் கூடிய பலன் இல்லை என்றாலும் , சில நன்மைகளும் கன்னி ராசிக்கு கிடைக்கப் போவதில் எந்த சந்தேகமும் இல்லை. மறைவு ஸ்தான அதிபதிகள் வலுப் பெறக்கூடாது.
கெட்டவன் கெட்டால் தான் ராஜ யோகம். ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி வலுப் பெறுகிறார். ருணம்-கடன், ரோகம்- வியாதி, சத்ரு - எதிரி இந்த மூன்றும் உங்களை ஆட்சி செய்யப் போகிறது. இதனால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கேட்ட இடத்திலும் கேட்காத இடத்திலும் கூட கடன் கிடைக்கும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க உங்கள் வீட்டு வாசலில் காத்து இருப்பார்கள். பண வரவு உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். வழக்கு வியாஜ்ஜியங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதிகளின் அறிகுறி தோன்றும், எனவே ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசியல்வாதிகளுக்கு சத்ரு ஜெயம் உண்டு. மாணவ மாணவிகளுக்கு போட்டித் தேர்வில் வெற்றி வாய்ப்பு அதிகம்.
3ம் பார்வை பலன்: சனியின் 3ம் பார்வை 8ம் இடமான ஆயுள் வம்பு , வழக்கு ஸ்தானத்திற்கு இருப்பதால் நித்திய கண்டம் பூரண ஆயுள் . ஆயுள் தீர்க்கம். எவ்வளவு நோய் தாக்கம் இருந்தாலும் ஆயுளுக்கு பங்கம் இல்லை. முன்னோர் வழி சொத்தில் இருந்த வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிறர் பணம், வரதட்சணை பணம், எதிர்பாராத தன லாபம், லாட்டரி, புதையல் , உயில். ஆயுள் காப்பீடு போன்ற வகையில் கிடைக்கும். எப்பொழுதோ பதிவான வழக்குகள் இப்பொழுது விசாரணைக்கு வரும். ஜனன கால ஜாதகத்தில் 6,8,12ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை, புத்தி நடப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்.
7ம் பார்வை பலன்: சனியின் 7ம் பார்வை 12 ம் இடமான அயன ,சயன, விரய ஸ்தானத்திற்கு இருப்பதால் வெளி நாட்டு வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் பதவி உயர்வுடன் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவீர்கள். தொழில் அதிபர்களின் நீண்ட நாள் கனவான ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாய்ப்பு தேடி வரும். வயதானவர்களாக இருந்தால் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள், பேரன், பேத்திகளுடன் சென்று சிறிது காலம் தங்கி வருவார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் கட்டுக்கடங்காத விரயமும் இருக்கும். பணம் வந்த சுவடும் போன தடமும் தெரியாது. அதீத விரயதால் மன உளைச்சல் அதிகமாகும். கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் சுபச் செலவுகள், சுப மங்கள விரயம் உண்டாகும். இடது கண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். நிம்மதியான தூக்கம் வரும்.
10ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை 3ம் இடமான சகாய ஸ்தானத்திற்கு இருப்பதால் இடப்பெயர்ச்சி நிச்சயம் உண்டு. உங்களின் திறமையின் மீது நீங்கள் கொண்ட வைராக்கியம், பிடிவாத குணம், ஆளுமை திறன் உங்களின் தொழில், உத்தியோகம் மூலம் உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும். உங்களின் முன்னேற்றத்தை தடுத்தவர்கள் காணாமல் போவார்கள். திருமணம் , சடங்கு போன்ற விசேஷங்களில் குடும்பப் பகை, வருத்தம், சம்பந்திகள் சண்டை, பங்காளி பகையும் மறையும். இரு தரப்பினரும் நடந்ததை மறந்து விட்டு கொடுத்து பெருந்தன்மையோடு நடந்து கொள்வீர்கள். கெளரவப் பிரச்சனையால் பல வருடமாக தடைபட்ட குல தெய்வ வழிபாடு தொடரும். கவலைகள் மறைந்து வளம் பெருகும். சகோதர, சகோதரிகளால் பொருள் இழப்பு, நட்டம் ஏற்படும். நீண்ட கால கனவுகளும், முயற்சிகளும், திட்டங்களும், லட்சியமும் பலிதமாகும்.
சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை
கன்னி ராசிக்கு 3,8ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் மூட நம்பிக்கை, அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும்.சோம்பலும், கோபமும் மிகுதியாகும்.உழைப்பில் ஆர்வம் குறையும் சுய தொழிலில் இருப்பவர்களுக்கு உத்தியோகத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் எண்ணம் உதயமாகும். இலவச ஆபர் கொடுப்பவர்கள், முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவதாக கூறுபவர்களிடம் பணம் கொடுப்பது,ஆன் லைன் வணிகம், ஷேர் மார்க்கட், சொத்து வாங்குதல், விற்றல், ஜாமீன் கையெழுத்து போடுதல் போன்றவற்றில் விழிப்புடன் இருக்க வேண்டும். எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழக வேண்டும். வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும்.வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் வேலை பார்க்கும் இடம், வேலையைப் பற்றிய முழு விபரமும் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்.
சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை
கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை 8ம்மிடத்திலும் அதன்பிறகு 7மிடத்திலும் சஞ்சரிக்கும் கோட்சார ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் திடீர் அதிர்ஷ்டம் , புதையல் , உயில் சொத்து, தொழில் என பல்வேறு வழிகளில் பொருள் குவியும். தொட்டதெல்லாம் துலங்கும். எந்த வழியிலாவது உங்கள் தேவைக்கு ஏற்ற பொருளாதாரம் கிடைக்கும். கிடைக்கும். பொருளை பன் மடங்காக பெருக்க குறுக்குவழியில் நாட்டம் மிகும்.கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படலாம். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். அரசு காரியத்தில் எடுக்கும் முயற்சிகள் பெற்றி தரும். கண்ணுக்கு தெரியாத தீய சக்தியை நாடி பொருள் விரயம் செய்வீர்கள்.
17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் இது வரை உங்களைத் துரத்திய அவமானம், நஷ்டம், கவலைகள் விலகும். பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும். பிறரை நம்பி களத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்த நீங்கள் சுய நம்பிக்கையில் இழந்தததை ஈடுகட்டுவீர்கள். விரும்பிய வேலைக்கு சோதனை தேர்வில் வெற்றி பெற்றாலும் விஐபி சிபாரிசுக்கு அலைய நேரும். தொழில் வாழ்க்கை முறையில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் சனிக்கு ராகு சம்பந்தம் ஏற்பட போவதால் இனம் புரியாத குறை, கவலை தோன்றலாம்.
பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை
கன்னி ராசிக்கு 4,7ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை விஷயங்களிலும் நட்பு கூட்டு பங்குதாரர்கள் வழி இருந்த விரக்தி மன இறுக்கங்கள் மாறும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். நல்ல வருமானமும் கிடைக்கும்.
பெற்றோர்களுடன் சேர்ந்து கூட்டு குடும்பமாக வாழும் அமைப்பு உருவாகும். இது வரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. சிலருக்கு தாயின் மூலம் வருமானம் கிடைக்கும். சிலர் புதியதாக சுய தொழில் துவங்கலாம். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு கடன் பெற்று புதிய சுய தொழில் அல்லது கூட்டுத் தொழில் துவங்கலாம். ஏற்கனவே சுய தொழில் நடத்துபவர்கள் புதிய தொழில் கிளைகள் துவங்கலாம்.
30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் பூர்வீக நிலப் பிரச்சனை தீரும். பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். மனைவியால், உடன் பிறந்தவர்களால், தாய்மாமனால் அனுகூலமான பலன்கள் நடைபெறும். வர வேண்டிய கடன் வசூலாகி கொடுக்க வேண்டிய கடனும் ஓடி அடையும்.வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தலைக்கு மேல் வந்த பிரச்சனைகள் தலைப்பாகையோடு சென்று விடும்.
திருமணம்: கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை 2 , 8ம்மிடத்திலும் அதன்பிறகு 1,7மிடத்திலும் சஞ்சரிக்கும் கோட்சார கேது/ராகுக்கள் சஞ்சரிக்கிறார்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாக செயல்பட்டால் திருமண முயற்சி பலிதமாகும். மறுமண முயற்சியில் வெற்றி உண்டு.
பெண்கள்: வைராக்கியத்தாலும், விடாமுயற்சியாலும் சிரமமான கடுமையான காரியங்களைக் கூட எளிதாக நடத்தி முடிப்பீர்கள். ஜனன கால ஜாதரீதியாக நன்மையான தசாபுக்திகள் நடந்தால் நன்மையின் அளவை அளவிட முடியாத வளர்ச்சி உண்டு. எதிர்காலத்தில் உங்கள் பெயர் பிரகாசிக்குமளவு புகழ், பெருமை, கவுரவம் சேரும். தாய் வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும் வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்: கடுமையாக உழைத்தால் ஆறாமிட சனிபகவான் வெற்றியை வழங்குவார்.சகலவிதமான தடைகள் கடன் நோய் விலகி செல்வம் செல்வாக்கு சொல்வாக்கு போன்ற பலவிதமான நற்பலன்கள் கிடைக்கும்.அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி வழங்க ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கம் மட்டுப்படும். குலதெய்வ வழிபாடு உங்களை நன் முறையில் வழி நடத்தும். தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்
ஐந்தில் வந்தது சனிபகவான், அற்புதப் பலன்கள் இனிசேரும்!
கன்னி ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாகச் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 5-ம் இடத்திற்குச் செல்கின்றார். 5-ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் தனது சொந்த வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் இனிய பலன்கள் ஏராளமாக வரப்போகின்றது. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வருமானம் உயரும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் இருக்கின்றார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே குடும்பத்தில் சந்தோஷ வாய்ப்புகளை அதிகம் சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தை அடையும் சனி பகவானால், நல்ல மாற்றங்கள் வரப்போகின்றது. இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும். பிரிந்து சென்ற உறவினர்கள் பிரியமுடன் வந்திணைவர். செய்தொழில் எதுவாக இருந்தாலும் முன்னேற்றம் கூடும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், 2, 7, 11 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கப் போகின்றார். வாக்கு, தனம், குடும்பம், களத்திரம், வெளிநாட்டு முயற்சி, இளைய சகோதரம், பொருளாதாரம், மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு, சேமிப்பு, கவுரவப்பதவி போன்றவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் இடங்களில் சனியின் பார்வை பதிவதால், அந்த ஆதிபத்யங்களில் எல்லாம் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். 2-ம் இடத்தை சனி பார்ப்பதால், பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் தம்பதியர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். சனியின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால், தொழிலில் இதுவரை இருந்த இழப்புகளை ஈடுகட்டும் விதத்தில் வியாபாரம் சூடுபிடிக்கும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் இயல்பாக வந்து சேரும்.
28.12.2021 முதல் 26.1.2023வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை உயரும். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும். சந்திரன் உங்கள் ராசிக்கு லாபாதிபதியாக இருப்பதால் இக்காலத்தில் பணப்பற்றாக்குறை ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் மீது சுமத்திய குற்றங்களில் இருந்து விடுபட்டு மீண்டும் பணியில் சேருவர்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. செவ்வாய் உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே முன்னேற்றத்தில் சிறுசிறு சறுக்கல்கள் வரலாம்.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 'சகட யோக' அடிப்படையில் பலன் கிடைக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை உங்கள் கரங்களில் புரளும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச்சிறந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. வருமானம் மிதமிஞ்சியதாக இருக்கும். மேஷ குருவின் சஞ்சார காலத்தில் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். மறைவிடங்களில் பாம்பு கிரகங்கள் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளையே செய்யும். சுயபலமற்ற கிரகம் என்பதால் இருக்கும் இடத்தைப் பொறுத்தே பலன் கிடைக்கும். பண விரயம் அதிகரித்தாலும், அதற்காகப் பயப்பட வேண்டியதில்லை. தன ஸ்தானத்தில் கேது இருப்பதால் எந்த வகையிலாவது உங்களுக்கு வருமானம் வந்து சேரும். தேங்கிய காரியங்கள் நடைபெறும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் மாற்றம் செய்தால் நல்லது என்று நினைப்பீர்கள். குடும்பச்சுமை கூடும்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத மாற்றங்கள் இல்லம் தேடி வரும். ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் அதிக தொல்லைகள் ஏற்படலாம். நினைத்த காரியத்தை செய்துமுடிக்க இயலாமல் உடல்நலத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் கூடும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது.
வெற்றி பெறவைக்கும் வழிபாடு
வியாழன் தோறும் விரதம் இருந்து குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்துப் பூஜை அறையில் குரு பகவான் படம் வைத்து, குரு கவசம் படித்து வழிபடுவது நல்லது. குடும்ப முன்னேற்றம் கூடும்.
சுரங்கப்பாதைகள் மூடல்.. கடும் போக்குவரத்து நெரிசல்.. கனமழையில் சிக்கித் திணறும் சென்னை
கனமழை எதிரொலி- 3 மாவட்டங்களில் பள்ளிளுக்கு விடுமுறை அறிவிப்பு
அங்க போனீங்க.. இங்கயும் வாங்க.. எலான் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த ஹமாஸ்
சீனாவில் சுவாச தொற்று எதிரொலி- இந்தியாவில் 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை
லோகேஷ் கனகராஜின் முதல் படம்.. வைரலாகும் Fight Club போஸ்டர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
