search icon
என் மலர்tooltip icon

    சிம்மம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    இளமையான கன்னி ராசியினரே குருபகவான் 7ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.

    சனி பகவான் 5, 6ம் இடத்திலும், ராகு பகவான் 8ம் இடத்திலும் கேது பகவான் 2ம் இடத்திலும் பயணிக்கிறார்கள். கன்னி ராசிக்கு குருபகவான் 4, 7ம் அதிபதி. நான்காம் இடம் என்பது சுக ஸ்தானம் . 7ம் இடம் என்பது களத்திர ஸ்தானம், நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் பற்றிக் கூறுமிடம். 7ல் ஆட்சி பலம் பெற்ற குரு ராசியைப் பார்ப்பதால் தொட்டது துலங்கும். காரிய சித்தி உண்டாகும். வெற்றி மேல் வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை குருவைச் சாரும். சமுதாய அந்தஸ்து புகழ், கவுரம் என வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. இந்த ஒரு வருட காலம் அஷ்டம ராகுவால் ஏற்படப் போகும் இன்னல்கள், அவமானங்கள் மட்டுப்படும்.

    குருவின் பார்வையால் தற்காலிக நிவாரணம் கிடைக்கும். 6ல் குரு நின்ற காலத்தில் ஏற்பட்ட காலத்தில் ஏற்பட்ட கடன், நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உத்தியோகம் இழந்தவர்களுக்கு மீண்டும் நல்ல உத்தியோகம் கிடைக்கும். வேலையாட்களால் ஏற்பட்ட மனச்சங்கடம் நீங்கும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். பகையானவர்கள் உறவாகுவார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து நிறைந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் ஆர்வம் பிறக்கும்.

    தொழில், உத்தியோகம், கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். இது நாள் வரை தம்பதிகளிடம் மனக்கசப்புடன் வாழ்ந்த தம்பதிகளிடம் அன்பும், ஆசையும் அதிகரிக்கும்.திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவார்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் அகலும்.பலருக்கு வாழ்க்கைத் துணை மூலம் திரண்ட சொத்துக்கள் கிடைக்கும். அல்லது நிறைய வரதட்சனை, சீர் மற்றும் சொத்துக்களுடன் கூடிய மணமகள் கிடைக்கும். மனைவி அல்லது உறவினரின் உயில், பங்குச்சந்தை, லாட்டரி, இன்சூரன்ஸ் ஆகியவற்றின் மூலம் எதிர்பாராத திடீர் தன வரவு ஏற்பட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்கள்.

    சிலருக்கு அடமான சொத்துக்கள் மீண்டு வரும். சிலருக்கு சுய உழைப்பில் சொத்து சுகம், வீடு, வாகனம், ஆடம்பர பொருட்கள் கிடைக்கும். தாய் வழி வீடு மனை தொடர்பான சாதகமான பலன் ஏற்படும். இதுவரைவிற்காமல் இருந்தபூர்வீகஅசையா சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும் . தாயின் ஆரோக்கியம் சீராகும்.பணத் தேவைகள் நிறைவாகும். ஆக மொத்தம்உங்களை சூழ்ந்திருந்த பல விதமான பிரச்சனைகளிலிருந்து மீள வழி பிறக்கும்.

    5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை ராசிக்கு 11மிடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. லாப ஸ்தானத்திற்கு சனிப் பார்வையும் உள்ளது. குரு மற்றும் சனியின் பார்வை ராசிக்கு இருப்பதால் அனைத்துவிதமான கவலைகளும் அகன்று வளமான வாழ்க்கை கிடைக்கும் காலம். சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைப்பது உறுதி. வெகு நாட்களாக இருந்து வந்தகடன் தொல்லை குறைவதற்கு தேவையான தன லாபம் ஏற்படும்.சேமிப்பு உயரும் . 11மிடம் கடகம் என்பதால் வெளிநாட்டு தொழில், உத்தியோக வாய்ப்பும் கிடைக்கும் மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும்.

    சிலர் மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் ஆரம்பிக்கலாம். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கையில் ஆர்வம் மிகும்.சிலருக்கு விலை உயர்ந்த சொகுசு வாகன யோகமும் உண்டாகும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடக்கும். ஆனால் வேலைப் பளு அதிகமாக இருக்கும்.

    வேலை பளுவால் ராஜினாமா செய்ய நினைத்தால் கூட முடியாத வகையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சுய தொழில் புரிவர்களுக்கு தொழில் நடக்கும். கூட்டம் கலை கட்டும். காசு கொட்டி வைக்க கல்லாவில் இடம் பத்தாது. 8ல் ராகு இருப்பதால் சிலர் பணத்தை இரட்டிப்பாக்குவது போன்ற செயல்களில் முதலீடு செய்து அதிர்ஷ்டத்தை நம்பி பணத்தை இழக்க வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வம்பு வழக்கு வராது.

    7ம் பார்வை பலன்கள்:குருவின் 7ம் பார்வை ராசிக்கு இருப்பதால் உங்களை பீடித்த பதம் பார்த்த அனைத்து இன்னல்களும் அகலும். உங்களின் மனோநிலை வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படும். நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் ஏற்படும். தடை பட்டசெயல்கள் வெகு விரைவில் செயலாக்கம் பெறும்.உங்களுடைய தகுதி, திறமைஉயரும். சமூதாய அங்கீகாரம்ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியத்தையும் குரு பகவான் தருவார். சகலசௌபாக்கியமும் உருவாகும்.யோகா, மூச்சுப் பயிற்சி, மெடிடேசன் மூலம் உடல் ஆரோக்கியம்மேம்படும். மனைவியால் கௌரவ பதவிகள் தேடி வரும்.

    9ம் பார்வை பலன்கள்:குருவின் 9ம் பார்வை ராசிக்கு 3ம் இடமான சகாய ஸ்தானத்திற்கு இருப்பதால் மனதில் தெம்பு, தைரியம் உற்சாகம் குடிபுகும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். புதுப்புது முயற்சியில் ஈடுபடுவர்கள். சிலருக்கு அரசியல் ஆர்வம் துளிர்விடும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

    அடிக்கடிசிறு தூர பயணம் ஏற்படவாய்ப்புள்ளது. ஒருசிலருக்கு வீடு மாற்றம், ஊர்மாற்றம்ஏற்படவாய்ப்பு உண்டு. உங்களுடைய தனித் திறமை மிளிரும். உங்களின் செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டுலகுவாக பணியாற்றி நற்பெயர்பெறுவீர்கள். இளைய சகோதரத்தின் மூலம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள்மறைந்து நல்லிணக்கம்ஏற்படும். உடன் பிறந்தவர்களின் இல்லத் திருமணம் உங்கள் தலைமையில் விமரிசையாக நடக்கும். உயில், சொத்து வழக்குகள் சாதமாகும். ஜாமீன் பிரச்சனைகள் தீரும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட பிணக்குகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு படிக்கும் பாடம் நன்றாக புரியும். ஞாபக சக்தி அதிகரிக்கும். பாடம் நன்றாக புரிந்து ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள்.கல்வி முன்னேற்றத்திற்கு விடுதியில் தங்கி படிக்கலாம். தீர்த்த யாத்திரை, ஆலய வழிபாடு,மந்திர உபதேசங்கள் கிடைக்கும்.

    முன்னோனோர்களின் நீத்தார் கடன்தொடர்பான வழிபாட்டு குறைவை சரி செய்ய ஏற்ற காலம். ராசி அதிபதிபுதன் என்பதால்கணிதம் சார்ந்த தொழில், வங்கி தொழில், அறிவு சார்ந்த தொழில் ,ஜோதிடம் , கல்வி நிறுவனங்கள் புத்தக விற்பனை சிறப்பாக இருக்கும்.தகவல் தொடர்பு துறை , ஊடகங்களில் செய்தித் துறை போன்றவற்றால் அனுகூலம் ஏற்படும். அரசாங்க ஒப்பந்த, கண்டிராக்ட் தாரர்களுக்கு நன்மைகள் ஏற்படும்.

    வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். எதிர்கட்சியினர் உங்கள் வார்த்தையைக் கொண்டே உங்களுக்குகலங்கத்தை ஏற்படுத்துவார்கள்.

    ராகுவும், கேதுவும் சாரப் பரிவர்த்தனையில் சஞ்சரிக்கும் காலத்தில் பிரமாண்ட வாய்ப்புகள் தேடி வரும்.திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வருமானத்தை மறு முதலீடாக மாற்றக்கடாது. கடன் வாங்கக் கூடாது. சில நேரங்களில் அவை நன்மையாகவும்பல நேரங்களில்தீமையாகவும்முடிந்து விடும். 5ல் சனி இருப்பதால் புத்திர பேறு ஏற்படுவதில் கால தாமதம் உண்டாகும்.

    பெண்கள்:குழந்தைகளின் கல்வி, ஆரோக்யம், திருமணம் என்று ஏதாவது சுப செலவு இருந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். சகோதர சகோதரிகளிடம் அனுகூலும் ஏற்படும். தந்தை, தந்தை வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

    பரிகாரம்: தினமும் பெருமாள் கோவில் கருடாழ்வாரை வழிபட மன வேதனை நீங்கும். 5ம் இடத்தில் கோட்சார சனி நிற்பதால் உங்களின் வேண்டுதல்கள் பிரார்தனைகளை குல தெய்வம் நிறைவேற்றித் தரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×