என் மலர்
கன்னி
2026 பங்குனி மாத ராசிபலன்
அதிபுத்திசாலியான கன்னி ராசியினரே
கன்னி ராசி அதிபதியான புதன் மாதத் துவக்கத்தில் வக்ரமாக 6ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். மாத இறுதியில் பங்குனி 27ல் ராசிக்கு ஏழாமிடம் சென்று சூரியன், செவ்வாய், சனியுடன் இணைகிறார்.புதிய சிந்தனைகள் உதயமாகும். முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும். உழைப்பிற்கான உண்மையான பலனை அறுவடை செய்வீர்கள். குல இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை சிறப்பாக வழிநடத்தும்.சுப செலவுகள் அதிகரிக்கும்.ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.குடும்ப உறவுகளின் செய்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பெற்றோர்களின் அன்பு, ஆதரவு, ஆசீர்வாதம் கிடைக்கும்.
பல வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்க முடியும். சிலர் கட்டிய வீட்டில் ,சொத்துக்களில் வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்துவார்கள். புதிதாக வாங்கிய சொத்துக்கள் மீது வில்லங்கம் ஏற்படும். மாணவர்கள் கல்வி நாட்டத்தை அதிகரிக்க வேண்டும். சிலர் பள்ளி மாறலாம். போரிங் போடலாம். விவசாய நிலத்தில் கிணறு தோண்டலாம்.உடல் ஆரோக்கியத்தை சீராக்க வைத்தியச் செலவு செய்ய நேரும். பஞ்சம ஸ்தான ராகுவின் காலம் என்பதால் சுய ஜாதகம் அறிந்து புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவது நல்லது. தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக வெளியூர் செல்லலாம்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். சிறிய இடப்பெயர்ச்சி செய்ய நேரும். குடியிருக்கும் வீடு,தொழில் நடத்துமிடம் என ஏதாவது ஒரு இடமாற்றம் செய்ய நேரும்.வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்கள் நான்கைந்து மாதங்கள் பூர்வீகம் வந்து செல்லலாம்.பூர்வீகத்தில் இருப்பவர்கள் வேலை விஷயமாக குறுகிய காலம் வெளிநாடு சென்று வரலாம்.பல்வேறு சுப பலன்கள் தேடி வந்து கொண்டே இருக்கும். முறையான திட்டமிடல் மன சஞ்ச லத்தை குறைக்கும். ஆரோக்கிய குறைபாடு அதிகரிக்கும். அலைச்சலும் மந்த தன்மையும் இருக்கும். இயன்றவரை வம்பு வழக்கு சண்டை, சச்சரவுகளை விட்டு ஒதுங்க வேண்டும்.
வழக்குகளில் உங்க ளுக்கு சாதகமாக தீர்ப்பு வராது. ரேஸ் சூதாட்டம் லாட்டரி போன்றவைகள் மீள முடியாத இழப்பில் கொண்டு நிறுத்தும்.உடன் பிறந்தவர்களின் வெறுப்பை சம்பா திக்காமல் விட்டு கொடுத்து செல்லவும்.உற்றார் உறவினரிடம் பகையை வளர்க்க கூடாது. சிலருக்கு திருமணம் தடைபடும். திருமணம் நடந்தவர்கள் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்வார்கள். அல்லது கல்யாணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பற்று குறைந்து இல்லற சந்நியாசியாக வாழ்வார்கள்.
குருமங்கள யோகம்
கன்னி ராசிக்கு 4,7ம் அதிபதியான குரு பகவான் தற்போது தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவரை 3,8ம் அதிபதியான செவ்வாய் நான்காம் பார்வையால் பார்க்கிறார். வெகு சுமரான காலம். நல்லது செய்தால் கூட கெட்டதாகவே முடியும்.மாமியார் மருமகள் பிரச்சனை மிகும். புகுந்த வீட்டாருடன் இணக்க மற்ற சூழல் ஏற்படும். நீங்கள் செய்யாத தவறுக்கு தண்டனையை அனுபவிக்கும் காலம். பெற்றோருடன் கருத்து வேறுபாட்டால் தனிக் குடித்தனம் செல்வீர்கள். சிலருக்கு கண் பார்வை குறைவின் காரணமாக கண்ணாடி அணிவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். அடுத்தவர் தவறை சுட்டிக் காட்டி உங்களின் வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்தது வாங்க கூடாது.சொத்து வாங்குதல் , விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை. கணப்பொழுதில் தவறான பத்திரப் பதிவு , தவறான விலை நிர்ணயம், பூமி தோஷம் உள்ள இடம் , விருத்தியில்லாத வீடு போன்ற வில்லங்கத்தில் மாட்டி மீள முடியாத விரயத்தை தந்து விடும். குடும்ப செலவு, மருத்துவ செலவு என்று செலவை சமாளித்தே மனம் விரக்தி அடையும். சிக்னம், சேமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் பெற நேரும். உங்களுக்கு எதிரி என்று ஒருவர் வெளியில் இருந்து வரத் தேவை இல்லை. உங்களின் செயல்பாடே உங்களுக்கு எதிரியை அதிகரிக்கும்.மன சஞ்சலம் மிகுதியான காலம் என்பதால் ஸ்ரீ ராம ஜெயம் ஜெபிக்க வேண்டும்.
பொருளாதாரம்
உபரி வருமானங்கள் அதிகம் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். தங்கம் இல்லாதவர்களுக்கும் நகை சேரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. இதுவரை சொத்து இல்லாதவர்களுக்கு சொத்து கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் செயல்பாட்டினை மாற்றி அகலக் கால் வைக்காமல் இருப்பதை வைத்து நிம்மதி அடைய முயற்சி செய்ய வேண்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தொல்லைகள் படிப்படியாக குறையும். சொத்துக்களை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வார்கள். காவல் துறையினரின் உதவியால்மீ ட்டு விடுவீர்கள். விவசாயிகள் அதிக கவனத்துடன் பணிகளில் ஈடுபட்டால் நஷ்டம் ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.
முதலீட்டாளர்கள்
பல தொழில் ஞானம் உண்டு. இவர்களின் தொழில் ஞானம் பிறருக்கு பயன்படும். சுய தேவைக்கு பயன்படாது .உங்களின் திறமைகளை உங்களைச் சார்ந்தவர்கள் பயன்படுத்துவார்கள்.வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடு மிகும் அல்லது தொழிலாளிகள் மூலம் வழக்கை சந்திக்க நேரும். தொழிற்சாலைகள், சுய தொழில் நடத்துபவர்கள் தங்கள் பணியாளர்களின் செயலில் மாறுபாடு கண்டு மன வேதனை ஏற்படும். எவ்வளவு செய்தாலும் தொழிலாளர்களிடையே அதிருப்தி நிலவும் என்பதால் முன்பை விட முழு கவனத்துடன் அனைத்து பணி களிலும் ஈடுபட வேண்டும். முன்னோர்கள் வழி நோய் தாக்கம் உரு வாகலாம்.
உத்தியோகஸ்தர்கள்
சக பணியாளர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு, மன பாரம் குறையும். வேலைக்கான நேர்காணலில் வெற்றி உறுதி.வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலர் வாய்ப்பு கிடைத்தாலும் குடும்ப உறவுகளை பிரிய விருப்பமின்றி கிடைத்த வாய்ப்பை வற விடுவார்கள்.
சில திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கடனால் வம்பு, வழக்கால் பாதிப்பு அடைவார்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது அல்லது ஆதாயம் குறையும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும்.
அரசியல்வாதிகள்
நாணயமானவர்கள் என்று பெயர் எடுப்பீர்கள். புதிய திட்டத்துடன் சளைக்காமல் செயல் ஆற்றுவீர்கள். கள்ளம், கபடம் இல்லாமல் வெள்ளை மனதுடன் கடமையாற்றுவீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். எடுத்த சில செயல்கள் சவ்வாக இழுத்துக் கொண்டே போகும். அதனால் குழப்பமான மனநிலை நிலவும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்வர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும்.ஒரு சிலருக்கு கவரவப் பதவிகள் அதிகாரப் பதவிகள் தேடி வரும்.இது வரை பணம் சம்பாதிக்கும் ஆர்வம் மிகுந்த அரசியல்வாதிகள் கூட தியாக மனப்பான்மை மிகுந்தவர்களாக மாறுவார்கள். உங்களின் விரோதிகள் உங்களை வம்பில் மாட்ட தயராக இருக்கிறார்கள் என்பதையும் மறக்க கூடாது. அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து அசிங்கப் படாமல் பேச்சை குறைத்து இறை வழிபாட்டில் நாட்டம் செலுத்த வேண்டும்.
பெண்கள்
கல்வி அறிவு கூடும். கற்ற கல்வியால் பயன் உண்டாகும். ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்வீர்கள். அழகு, ஆடம்பரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும்.மனித நேயமும் தொழில் நியாயமும் நோக்கமாக இருக்கும்.தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்கள்ந டக்கும். பணியாளர்களை அனுசரித்து வேலை வாங்குவீர்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இருக்கும். கணவனின் அன்பு, அனுசரனைக்காக ஏங்கிய கன்னி ராசிப் பெண்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. இதுவரை புரிந்து கொள்ளாத உங்களின் கணவர் உங்களை புரிந்து கொண்டு உங்கள் மனதிற்கேற்ற மணாளனாக மாறுவார். கூட்டுக் குடும்ப த்தில் இருக்கும் பெண்கள் மாமியாரால் புகழப்படுவீர்கள். சுருக்கமாக எந்த சூழ்நிலையிலும் உங்க ளையும், உங்களைச் சார்ந்த வர்களையும் காப்பாற்றிக் கொள்வீ ர்கள்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை ராசிக்கு 7ம்ம்மிடமான சம சப்தம ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 3,8ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்.இது கன்னி ராசிக்கு சுபத்துவத்தை ஏற்படுத்தும் அமைப்பு அல்ல. மனதுக்குள் பாதுகாப்பற்ற உணர்வு அடிக்கடி தோன்றும். அதனால்தான் யாரையும் இவர்கள் நம்புவதில்லை. வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. தம்பதிகளுக்குள் கெளரவ பிரச்சனையால் அன்யோன்யம் குறைந்து பிரிவினை ஏற்படலாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து வாழும் தன்மை இருக்காது. கடன் பெற்று நிர்வாகச் செலவு, ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. சிறிய வீட்டில் இருக்கும் சிலர் வசதியான வீட்டிற்கு செல்வார்கள். வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும்.புத்திர பாக்கியத்தில் கால தாமதம் ஏற்படலாம். சிலர் ஆன்ம பலம் இழந்து சூழ்நிலை கைதியாக வாழ்வார்கள். பலமுறை தோல்விகளைச் சந்தித்தா லும் சளைக்காமல் உழைப்பார்கள்.இவரின் உழைப்பு இவரைவிட பிறருக்கே பயன்படும். தந்தை மகன் கருத்து வேறுபாடு உண்டு.
பரிகாரம்
பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






