என் மலர்
கன்னி - தமிழ் மாத ஜோதிடம்
கன்னி
2025 கார்த்திகை மாத ராசிபலன்
கன்னி ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சுக்ரனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 'புத சுக்ர யோகம்' செயல்படும் இந்த மாதத்தில் புதிய பாதை புலப்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிடைக்க நண்பர்கள் உறுதுணைபுரிவர். கடன்சுமை குறையும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எளிதில் வந்து சேரும். உச்சம்பெற்ற குரு சகாய ஸ்தானத்தைப் பார்ப்பதால் எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக் கிறார். அதே சமயம் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவது யோகம்தான். நல்ல சம்பவங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். காரியங்கள் கைகூட நம்பிக்கைக்குரிய நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து புகழ் பெறுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். மொத்தத்தில் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நேரம் இது.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வெற்றிகள் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாக சகோதர ஒற்றுமை பலப்படும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறி பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 'சுக்ர மங்கள யோகம்' இருப்பதால் மனையில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலை சீராகும். வழக்குகள் சாதகமாக அமையும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம், மிக கவனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கிய சீர்கேடு வந்து கொண்டேயிருக்கும். மன உறுதி குறையும். வருமானம் வரும் வழியில் குறுக்கீடுகள் ஏற்படலாம். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளில் இழப்புகள் ஏற்படலாம். விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். இல்லத்தில் கெட்டிமேளம் கொட்டும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். பணிபுரியும் இடத்தில் சலுகைகள் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். நிலையான வருமானம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 18, 19, 23, 24, டிசம்பர்: 4, 5, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
கன்னி
2025 ஐப்பசி மாத ராசிபலன்
கன்னி ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளார். சுக்ரனும், புதனும் தன் வீடுகளை மாற்றி அமர்ந்திருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய பாதை புலப்படும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். ஆலய தரிசனங்களும், ஆன்மிகப் பயணங்களும் உருவாகும். விரயாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் இருப்பதால் திடீர் விரயங்கள் உண்டு. என்றாலும் அதைச் சமாளிக்க, முன்னதாகவே அதற்குரிய தொகை வந்துசேரும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். அதிசாரப் பெயர்ச்சியாக இருந்தாலும் அதற்குரிய பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். 4, 7-க்கு அதிபதியானவர் குரு என்பதால் ஆரோக்கியம் சீராகும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்யாணத் தடைகளும், காரியத் தடைகளும் அகலும். தாயின் உடல்நலம் சீராகும். சென்ற மாதம் ஏற்பட்ட தட்டுப்பாடுகளும், பண நெருக்கடியும் தானாகவே விலகும். எதிர்பாராத வரவுகளால் இதயம் மகிழும். குடும்ப ஒற்றுமை பலப்பட நீங்கள் எடுத்த முயற்சி பலன்தரும். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சனி- ராகு சேர்க்கை ஏற்படுகிறது. 6-க்கு அதிபதி சனி, 6-ம் இடத்திலேயே வக்ரம் பெறுவது யோகம்தான். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சி தரும் விதத்தில் கொடுக்கல் -வாங்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சி அதிகரிக்கும் இந்த நேரத்தில் இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று சிந்திப்பீர்கள். தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறை வேறும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு மூலம் வெளிவந்து புது முயற்சியில் ஈடுபட்டு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக தொழில் நடக்கும் இடத்தை மாற்றம் செய்ய விரும்புவீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெறும். உடன்பிறந்தவர்கள் பகை மறந்து செயல்படுவர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். உடல்நலனில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் வந்து அலைமோதும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இப்ெபாழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். குறிப்பாக பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகம், தொழில் செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்குப் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 21, 22, 27, 28, நவம்பர்: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
கன்னி
2025 புரட்டாசி மாத ராசிபலன்
கன்னி ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவர் உச்சம் பெற்று, விரயாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே வருமானம் ஒருபுறம் வந்தாலும், விரயங்கள் மறுபுறம் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்றுவர வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடலாம். 10-ல் குரு இருப்பதால் பதவி மாற்றமும், இடமாற்றமும் வருவதற்கான அறிகுறி தென்படும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். வீடு வாங்குவதோ, வீடு கட்டுவதோ போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். 'கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்கலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் 'வேலையில் இருந்து விடுபட்டு, சுயமாக ஏதேனும் செய்யலாமா?' என்று சிந்திப்பார்கள்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம்பெறுவது நன்மைதான். என்றாலும் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றிருப்பதால் குடும்ப பிரச்சினை அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் உருவாகி மனக்கலக்கம் ஏற்படும். பெற்றோர் வழியில் வாழ்க்கைத் துணையின் உத்தியோகம் சம்பந்தப்பட்ட கவலை மேலோங்கும். என்ன இருந்தாலும் குருவின் பார்வைக்கு பலம் அதிகம் என்பதால், ஒருசில காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு அகலும். பூர்வீகச் சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைகூடும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழு வதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. 6-க்கு அதிபதி வக்ரம்பெறுவது நன்மைதான். என்றாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் சனி அதிபதியாக விளங்கு வதால் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். சொத்துக்களால் பகை உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்துகொண்டே இருக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு திருப்தி தரும். கலைஞர் களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் மேன்மை கிட்டும். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 24, 25, 29, 30, அக்டோபர்: 10, 11, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
கன்னி
2025 ஆவணி மாத ராசிபலன்
கன்னி ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரம் அஷ்டமாதிபதியான செவ்வாய் உங்கள் ராசியில் இருக்கிறார். எனவே பணம் ஒருபுறம் வந்தாலும், மறுபுறம் விரயங்களும் வந்தபடியே இருக்கும். இழப்புகளும் எதிர்பாராத குறுக்கீடுகளும் வந்து கொண்டே இருக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். திடீர், திடீரென சோதனைகள் வரலாம். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வருவது மிகவும் அற்புதமான நேரமாகும். பொதுவாக தனாதிபதி வலுவாக இருப்பதால் எந்த காரியமும் செய்யலாம். அந்த அடிப்படையில் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். உயர்மட்டத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு வழிபிறக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 10-ம் இடத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது பல வழி களிலும் விரயங்கள் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். காலையில் ஒரு ஊர், மதியம் ஒரு ஊர், மாலையில் ஒரு ஊர் என்று செல்லும் விதத்தில் அலைச்சல் அதிகரிக்கும். இதனால் ஆரோக்கியச் சீர்கேடுகள் உருவாகும். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் உங்களைவிட்டு விலகலாம். நாடு மாற்றம் செய்ய நினைத்தவர்களுக்கு அது தாமதப்படும். வெளிநாட்டில் உள்ளவர்களின் வேலையில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் அது விரும்பும் விதத்தில் அமையாது. அரசியல் களத்தில் உள்ளவர்கள் மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள இயலாது.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தன ஸ்தானத்திற்கு வந்து, தன் வீட்டைத் தானே பார்க்கப்போகிறார். எனவே சொந்தங்களாலும் நன்மை கிடைக்கும். துணிந்து எடுத்த முடிவுகளால் மற்றவர்கள் ஆச்சரியப்படுவர். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். வருமானப் பற்றாக்குறை அகலும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் உறுதியாகலாம். கொடுக்கல்- வாங்கல்களில் ஏற்பட்ட இடையூறு அகலும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படலாம். அதில் இருந்து விடுபட அனுபவஸ்தர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, பழைய வியாபாரம் லாபத்தைப் பெற்றுத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு, உயர் அதிகாரியிடம் நல்ல பெயர் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல திருப்பம் ஏற்படும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு உடல்நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். கவனம் தேவை. உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 21, 22, 28, 29, செப்டம்பர்: 2, 3, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
கன்னி
2025 ஆடி மாத ராசிபலன்
கன்னி ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். பல பணிகள் அரைகுறையாக பாதியில் நிற்கலாம். திடீர் செலவுகளால், சேமிப்பு கரையும். மருத்துவச் செலவுகளும், மனக்கலக்கம் தரும் தகவல்களும் வரலாம். ஆயினும் உங்கள் ராசிநாதன் புதன் வக்ர இயக்கத்தில் இருப்பதாலும், குருவோடு இணைந்து இருப்பதாலும் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. விரயாதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் விரயத்திற்கேற்ற வரவு வந்துசேரும்.
மிதுன - சுக்ரன்
ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதியானவர். தனாதிபதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். கொடுக்கல்- வாங்கல் திருப்தி தரும். குரு - சுக்ர சேர்க்கையின் காரணமாக எதிர்பாராத சில இனிய மாற்றங்கள் ஏற்படும். பயணங்களாலும் பலன் கிடைக்கும். குறிப்பாக வாழ்க்கைத் துணை அல்லது பிள்ளைகளின் வேலைக்காக எடுத்த முயற்சி பலன் தரும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் வருமானத்தால் மகிழ்ச்சி உண்டாகும். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறும் நேரம் இது.
கன்னி - செவ்வாய்
ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 'கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அஷ்டமாதிபதியான அவர் உங்கள் ராசிக்கு வரும்போது, சில இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். வாங்கிய சொத்துக்களாலும் பிரச்சினை வரக்கூடும். பாகப்பிரிவினை சுமுகமாக முடிவடையாது. பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் பங்குதாரர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர்.
கடக - புதன்
ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் பொழுது பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் நாடி வரும் நேரம் இது. வெளிநாடு செல்லும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். அரசு வழியில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு திடீரென பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பாராமல் வந்துசேரும். இக்காலம் ஒரு இனிய காலமாகவே அமையும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் போதுமானதாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு. கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து வருமானம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 21, 22, 25, 26, 31, ஆகஸ்டு: 1, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
கன்னி
2025 ஆனி மாத ராசிபலன்
அமைதியுடன் அரிய பணிகளைச்செய்யும் கன்னி ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் தொழில் ஸ்தானத்தில் விரயாதிபதி சூரியனோடும், குருவோடும் இணைந்து சஞ்சரிக்கின்றார். அதேநேரம் விரய ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் கேது சஞ்சரிப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் எதிர்பாராத விதம் வந்துசேரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு பணியில் இடமாற்றம் ஏற்படலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் குறையும். பிறரை நம்பி செய்த முயற்சிகள் கைகூடாமல் போகலாம். பிரச்சினைகள் குறைய வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
கடக - புதன்
ஆனி 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொழில் சூடு பிடிக்கும். கூட்டாளிகள் லாபத்தை வரவழைத்துக் கொடுக்க முயற்சிப்பர். பொருளாதார நிலை உச்சத்தை அடையும். பொன், பொருள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலை விரிவுசெய்ய எடுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைத்து ஊதிய உயர்வும், பதவி உயர்வும் பெறும் நேரமிது. இதுவரை உங்களுக்கு இடையூறாக இருந்த மேலதிகாரிகள் மாற்றப்படலாம். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு ஆச்சரியப்படுவர்.
ரிஷப - சுக்ரன்
ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தனாதிபதியான சுக்ரன் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். நடக்கும் தொழிலை விரிவுசெய்யும் முயற்சிக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உன்னதமான நேரமிது. உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை தருவர். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்யாண முயற்சிகளும் கைகூடலாம்.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கிறார். சனியோடு ராகுவும் கூட்டுக்கிரக சேர்க்கையாக இருக்கிறது. இது அவ்வளவு நல்லதல்ல. கூடுதல் விரயங்கள் ஏற்பட்டு குதூகலத்தை குறைக்கும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது. பணம் வந்த மறுநிமிடமே செலவாகி விடும். வாங்கிய இடத்தில் பிரச்சினைகளும், பத்திர பதிவில் தடைகளும் ஏற்படும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு அனுகூலமான நேரமிது. மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு உண்டு. மாதக் கடைசியில் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும்.
இம்மாதம் ஹயக்ரீவர் வழிபாடு நன்மையை தரும்.
கன்னி
2025 சித்திரை மாத ராசிபலன்
வரவு அறிந்து செலவு செய்யச் சொல்லும் கன்னி ராசி நேயர்களே!
விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரிக்கிறார். அவர் உச்சம் பெற்ற சுக்ரனோடு இணைந்து 'நீச்ச பங்க ராஜயோக'த்தை உருவாக்குகிறார்.
எனவே மாதத்தின் முற்பாதியை விட பிற்பாதி மகிழ்ச்சியாக இருக்கும். தடைகளும், தாமதங்களும் தானாக விலகியோடும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். ராகு - கேதுக்களின் பெயர்ச்சிக்கு பிறகு, உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.
குரு - சுக்ர பரிவர்த்தனை
சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை, குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் பாக்கிய ஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்று சஞ்சரிக்கும் போது, நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும். குடும்பத்துடன் உல்லாச பயணங்களை மேற்கொள்வீர்கள். வாகனம் அடிக்கடி பழுது ஆவதால், அதைக் கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கும்ப- ராகு, சிம்ம- கேது
சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 6-ம் இடத்தில் ராகுவும், 12-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஊர் மாற்றம், இட மாற்றம், வீடு மாற்றம் பலன் தருவதாக அமையும். வெவ்வேறு இடத்தில் பணிபுரியும் கணவனும், மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிய வாய்ப்பு உருவாகும். அதே சமயம் விரய கேதுவின் ஆதிக்கம் இருப்பதால், வீண் விரயங்கள் அதிகரிக்கும். இக் காலத்தில் ராகு- கேதுக்களுக்குரிய பரிகாரங்களை யோக பலம் பெற்ற நாளில் செய்வது நல்லது.
மேஷ - புதன் சஞ்சாரம்
சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாகவும், கலை சம்பந்தமாகவும் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு. அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கிடைக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ அல்லது வெளிநாடு செல்வது சம்பந்தமாகவோ நீங்கள் முயற்சி எடுத்திருந்தால், அதற்கு பலன் கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.
மிதுன - குரு சஞ்சாரம்
சித்திரை 28-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அதன் பார்வை பலத்தால் குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. எனவே குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தொடரும் வெற்றிகளால் துணிவு கூடும். தாய்வழி ஆதரவு உண்டு. தலைமை பதவிகள் கூட தானாக வரலாம். சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பெண்களுக்கு குடும்பச் சுமை கூடினாலும், அதை சமாளிக்கும் ஆற்றல் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஏப்ரல்: 14, 15, 18, 19, 20, 29, 30, மே: 4, 5, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.
கன்னி
2025 பங்குனி மாத ராசிபலன்
எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் கன்னி ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சப்தம ஸ்தானத்தில் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். மேலும் ஜென்ம ராசியில் கேது இருக்கிறார். எனவே எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும்.
எல்லாவற்றிலும் தடை, தாமதங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் பற்றாக்குறையும், புதிய முயற்சிகளில் போராட்டமும் ஏற்படலாம். கடுமையாக முயற்சித்தாலும் சில காரியங்கள் கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லும். 'எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலவில்லையே, திடீர் திடீரென மாற்றங்கள் வருகின்றதே' என்று கவலைப்படுவீர்கள்.
மீன - புதன் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் வலிமை இழப்பதால் தொழில் வளர்ச்சியில் இடையூறு ஏற்படும். எதிரிகளின் பலம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு பணிநீக்கம் செய்யப்படும் அளவிற்கு பிரச்சினைகள் வரலாம். மேலதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரத்தை வழங்கமாட்டார்கள். உடல்நிலையிலும் சிறு சிறு தொல்லைகள் வந்து கொண்டேயிருக்கும். உற்சாகம் குறையும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது.
கும்ப - புதன் சஞ்சாரம்
பங்குனி 4-ந் தேதி புதன் வக்ர இயக்கத்தில் கும்ப ராசிக்கு வருகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகவே அமையும். தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும். கடை திறப்பு விழா, கட்டிடத் திறப்புவிழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு வேண்டிய சலுகைகளை கொடுப்பார்கள். ஒரு சிலருக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். ஆகாரக் கட்டுப்பாட்டின் மூலம் ஆரோக்கியம் சீராகும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ வாய்ப்புகள் உருவாகும். புதிய உத்தியோகத்திற்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும்.
மீன- சுக்ரன் வக்ரம்
மீனத்தில் உள்ள சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அசுர குருவான சுக்ரன் வக்ரம் பெறுவது, ஒரு வழிக்கு நன்மைதான். என்றாலும் உங்கள் ராசிக்கு தனாதிபதியாகவும், பாக்கியாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் வக்ரம் பெறுவதால் தனவரவில் தடைகள் ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பணப்பற்றாக்குறையின் காரணமாக விலை உயர்ந்த பொருட்களை விற்க நேரிடும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படுவதற்கான சூழ்நிலை அமையும்.
கடக- செவ்வாய்
பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவது நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, நல்ல காரியங்கள் பல நடைபெறும். குறிப்பாக இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். இல்லத்தில் ஒற்றுமை நிலவும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக இருக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். தொழில் மற்றும் வியாபாரத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வீடு தேடிவரும். மாணவ - மாணவிகளுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 18, 19, 22, 23, ஏப்ரல்: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
கன்னி
2025 மாசி மாத ராசிபலன்
வரவிற்கு ஏற்ற விதம் செலவு செய்ய நினைக்கும் கன்னி ராசி நேயர்களே!
மாசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன், விரயாதிபதி சூரியனோடு கூடியிருக்கிறார். எனவே விரயங்கள் கூடுதலாக இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் எதிர்பாராத விதத்தில் வந்து சேரலாம். கடன் சுமை கொஞ்சம் அதிகரிக்கும். கடமையை சரி வரச் செய்ய முடியாமல் கவலைப் படுவீர்கள். உற்றார், உறவினர்களின் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
தொழில் பங்குதாரர்கள் உங்களை விட்டு விலக நேரிடும். எதிர்மறை சிந்தனை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார் என்றாலும், ஜென்மத்தில் கேது இருப்பதால் எதையும் போராடியே முடிக்கும் சூழ்நிலை உருவாகும்.
சூரியன் - சனி சேர்க்கை
இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு விரயாதிபதி சூரியன், ரோகாதிபதி சனி. இந்த இரண்டும் இணையும் நேரம், ரோக நிவர்த்திக்காக பரிகாரம் செய்வது நல்லது. ஆரோக்கியத் தொல்லை கொஞ்சம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ரண சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகலாம்.
தொழில் போட்டிகள் அதிகரிக்கும். எதைச் செய்தாலும் யோசித்து செய்வதே நல்லது. ஏன் என்றால் பிறருக்கு நன்மை செய்தாலும் கூட, அது தீமையாகத் தெரியும். பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். ஏற்றமும், இறக்கமும் தொடர்கதையாய் வரும் நேரம் இது.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். எனவே சகோதர சச்சரவுகள் அகலும். உங்களை சார்ந்திருப்பவர்களால் ஏற்பட்ட வாக்குவாதங்கள் நல்ல முடிவிற்கு வரும். சென்ற மாதம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரும். என்றைக்கோ விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது நல்ல விலைக்கு விற்பனையாகி அதிக லாபத்தைக் கொடுக்கும்.
பெற்றோர் வழிப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். 'முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். இப்பொழுது மகிழ்ச்சியடையும் விதத்தில் பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். 'பழைய வாகனங்கள் செலவு வைக்கின்றதே' என்று கருதி, புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம்பெறும் இந்த வேளையில், நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் யோகம் செய்ய வேண்டுமானால் நீச்சம்பெற வேண்டும் அல்லது வலிமை இழக்க வேண்டும். அந்த அடிப்படையில் இப்பொழுது எதிர்பாராத நல்ல திருப்பங்கள் வரப்போகின்றது. இருப்பினும் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. மருத்துவச்செலவு உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். கலைஞர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பிரச்சனைகள் நீங்க, பிரபலஸ்தர்கள் பின்னணியாக இருப்பர். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 18, 19, 23, 24, மார்ச்: 6, 7, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
கன்னி
2025 தை மாத ராசிபலன்
கன்னி
நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கன்னி ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மேலும் அவர் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். எனவே இந்த மாதம் இனிய மாதமாக அமையும். எடுத்த காரியங்கள் வெற்றியாக முடியும். கொடுத்த கடன்கள் வசூலா கும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக இருக்கும். குரு பார்வையால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். இதுவரை அதிக முயற்சி செய்தும் முடிவடையாத காரியங்கள் இப்பொழுது எடுத்த முயற்சியில் முடிவாகும்.
மிதுன - செவ்வாய்
தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் அடைவது நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் விருப்பம்போல் நிகழும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டாகும்.
மகர - புதன்
உங்கள் ராசிக்கும், 10-ம் இடத்திற்கும் அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். பஞ்சம ஸ்தானத்திற்குச் செல்லும் புதனால், படித்து முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு திருமண வாய்ப்பு கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்வு நடைபெற வழிபிறக்கும். உங்களை உதாசீனப்படுத்தி விட்டு விலகிச் சென்ற உறவினர்கள் இப்பொழுது மீண்டும் வந்து சேர முயற்சிப்பார்கள். வாகனங்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். கவனம் தேவை.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான புதன், தை 23-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் கும்பத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக இருக்கும். போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். பொழுதெல்லாம் சம்பாதிக்கும் எண்ணம் மேலோங்கும். ஆற்றல்மிக்கவர்கள் அருகிருந்து ஒத்துழைப்பு தருவார்கள்.
குரு வக்ர நிவர்த்தி
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இது ஒரு உன்னதமான நேரமாகும். பலம் பெற்ற குருவின் பார்வை உங்கள் ராசியில் பதியப்போகிறது. எனவே தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பாதை புலப்படும். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் நன்மை கிடைக்கும் நேரம் இது. வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது பற்றி முடிவெடுப்பீர்கள். பங்குச்சந்தையால் பலன் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களால் வளர்ச்சி கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பாதி மகிழ்ச்சி தரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு திருமண முயற்சி கைகூடிவரும். வருமானம் உயரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 16, 21, 22, 27, 28, பிப்ரவரி: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
கன்னி
2024 மார்கழி மாத ராசிபலன்
சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சொல்லும் கன்னி ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவர் மீது குரு பகவானின் பார்வை பதிகிறது. எனவே சாதகமான பலன்கள் நிறைய வந்துசேரும். சச்சரவுகள் அகலும்.
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைத்து பொருளாதார நிலை உயரும். புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் நன்மை கிடைக்கும் மாதம் இது.
செவ்வாய் - சுக்ரன் பார்வை
மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். கும்பத்திற்கு சுக்ரன் சென்றபிறகும், அவர் மீது தன் பார்வையை செலுத்துகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வெற்றிகள் மற்றும் தன ஸ்தானாதிபதியாக இருக்கிறார். எனவே அவர், சுக்ரனைப் பார்க்கும் பொழுது தனவரவு தாராளமாக வந்துசேரும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும் இந்த நேரத்தில், இதைச்செய்வோமா? அதைச் செய்வோமா என்று மனக்குழப்பம் ஏற்படும். இருப்பினும் வியாபாரம் மற்றும் தொழில் வெற்றிநடை போடும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த சுபகாரியங்கள் இப்பொழுது நடைபெறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.
குரு வக்ரம்
உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, வக்ரம் பெறுவது நன்மைதான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வலிமை இழக்கும் போது நன்மை செய்யும். அந்த வகையில் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாமல் இருந்த காரியங்கள், இப்பொழுது துரிதமாக நடைபெறும்.
கல்யாண முயற்சி கைகூடும். நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும். கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது அல்லது வீடு கட்டும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நல்ல சந்தர்ப்பங்கள் வாசல் கதவை தட்டும். நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும்.
கும்ப - சுக்ரன்
மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஜீவனத்திற்கு வழிபிறக்கும். பொருளாதாரம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் சூழ்நிலையும், அதனால் வருமான பெருக்கமும் ஏற்படும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.
தனுசு - புதன்
மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியான புதன், சுக ஸ்தானத்திற்கு செல்வது நல்ல நேரம்தான். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழிலில் உள்ள போட்டியாளர்கள் விலகுவர். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நெருக்கடி நிலை அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த இலக்கை அடைய நேரிடும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் திறமை வெளிப்படும். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வருங்காலத்தைப் பற்றிய பயம் அகலும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 18, 19, 25, 26, 30, 31, ஜனவரி: 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
கன்னி
2024 கார்த்திகை மாத ராசிபலன்
நிதானத்துடன் செய்தால் வெற்றி நிச்சயம் என்று சொல்லும் கன்னி ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி சூரியனும் இணைந்து சஞ்சரிப்பதால் விரயங்கள் கூடுதலாக இருக்கும். உடன் பிறப்புகளுக்காகவும், உடன் இருப்பவர்களுக்காகவும் விரயங்கள் செய்ய நேரிடும்.
ஜென்மத்தில் கேதுவும், ஏழில் ராகுவும் இருப்பதால் ஏற்ற இறக்கமான சூழ்நிலை உண்டு. வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். வருங்காலத்தை பற்றிய பயம் அதிகரிக்கும். பார்க்கும் குரு வக்ர இயக்கத்தில் இருப்பதால் எதையும் யோசித்து செய்வது நல்லது.
குரு வக்ரம்
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்றிருக்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது நன்மையே வழங்கும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பும், சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.
விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். விவாகப் பேச்சுக்கள் கைகூடுவதற்கான அறிகுறி தென்படும். வெளிநாடு சென்று பணிபுரிய நினைத்தவர்களுக்கு, வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.
சனி - செவ்வாய் பார்வை
கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். முரண்பாடான கிரகங்களின் பார்வையால் நிறையப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
நிலம் சம்பந்தமான வழக்குகள் வரலாம். நீண்ட நாட்களுக்கு முன்பு வந்த நோய் மீண்டும் தலைதூக்கி மனக்கவலை தரலாம். உத்தியோக மாற்றங்கள் திடீரென ஏற்பட்டு உள்ளத்தை வாடவைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லாத பொறுப்புகள் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நேரம் இது.
மகர - சுக்ரன்
கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியானவர், சுக்ரன். தன - பாக்கியாதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது புதிய திருப்பங்கள் ஏற்படும்.
நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம், அதிக விலைக்கு விற்று லாபம் தரும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு கிட்டும்.
செவ்வாய் வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவதால் நல்ல வாய்ப்புகள் பல கைநழுவிச் செல்லலாம். நாடு மாற்றம், வீடு மாற்றம் போன்றவை எண்ணத்தில் இருக்குமே தவிர எளிதில் கிடைக்காது. உடல்நலத்தில் கவனம் தேவை. மூட்டு வலி, முழங்கால் வலி என்று, ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டேயிருக்கும். முக்கியப் புள்ளிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
பொதுவாழ்வில் உள்ளவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டிக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு குறையலாம்.
கலைஞர்களுக்கு கடின முயற்சி தேவை. மாணவ-மாணவிகளுக்கு விருதுகளும், வெற்றிச் செய்திகளும் வந்துசேரும். பெண்கள் பரபரப்பாக செயல்பட்டு பாராட்டுக்களைப் பெறுவர். பிள்ளைகளின் லட்சியங்களை நிறைவேற்றுவீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 16, 17, 21, 22, 28, 29, டிசம்பர்: 3, 4, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.






