search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம் - ஆண்டு பலன் - 2024

    ரிஷபம்

    புத்தாண்டு ராசிபலன்கள்-2024

    வசீகரமான ரிஷப ராசியினரே

    இந்த 2024 ஆங்கிலப் புத்தாண்டில் வளமும் நலமும் பெற நல்வாழ்த்துக்கள். திருப்பு முனையான வருடம். இந்த ஆண்டில் வருட கிரகங்களின் சஞ்சாரம் ரிஷப ராசிக்கு மிகச்சாதகமாக உள்ளது. வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குலதெய்வ அருள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் ஊர் விட்டு ஊர் மாற நேரும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். ஆக மொத்தத்தில் இந்த வருடம் திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    ஏப்ரல் 21, 2023 வரை விரய ஸ்தானத்தில் நிற்கும் குருபகவானால் சுப விரயங்கள், சுப நிகழ்வுகள் மிகுதியாகும். ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். புதிய வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்கும் சொத்துகள் சேரும். ஏப்ரலுக்குப் பிறகு ஓராண்டு காலம் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்த குரு ஜென்ம குருவாக பயணம் செய்யப்போகிறார். உங்கள் ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானம், ஏழாமிடமான களத்திர ஸ்தானம், ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.

    முக்கியமான இடங்களுக்கு குருவின் பார்வை விழுவது சிறப்பான அம்சமாகும். கூட்டுத்தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். பணவரவு, வருமானம் கூடும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    ஆண்டு முழுவதும் தொழில் ஸ்தான அதிபதி சனி பகவான் ஆட்சி பலம் பெறுகிறார். 12-ம் இடமான அயன சயன ஸ்தானம், 4-ம் இடமான சுக ஸ்தானம் 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தை பார்வையிடுகிறார். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நிலவி வந்த எதிர்ப்புகள் விலகும்.மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். அவர்களின் முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்யலாம். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். கூட்டுத் தொழிலில் பலன் உண்டு.மறுமணம் கைகூடும். விரய ஸ்தானத்தை சனி பார்ப்பதால்பண விசயத்தில் யாரையும் நம்பக்க கூடாது. சனிக்கிழமை முன்னோர்களை வழிபட அனைத்தும் நற்பலன்களும் அதிகாரிக்கும்.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

    லாபஸ்தான ராகுவும் பஞ்சம ஸ்தான கேதுவால் வேதனைகளும் சோதனைகளும், சாதனைகளாக மாறும். உழைப்பின் மேல் ஆர்வம் குறைந்து அதிர்ஷ்டத்தின் நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும். தந்தையின் ஆலோசனைகளால் பயன் உண்டு. பங்குச்சந்தையில் புதிய முதலீடுகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள்.

    திருமணத் தடை அகலும். அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் சர்ச்சைகள் விலகும். லாப ஸ்தான பலத்தால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு நடக்கும். வழக்குகளில் வெற்றி உறுதி.ஆரோக்கியம் சீராகும். பயணங்கள் மிகுதியாகும்.

    கிருத்திகை 2,3,4

    புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். சிலர் தான் வாடகைக்கு வசிக்கும் குடியிருப்பை விலைக்கு வாங்குவார்கள்.பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். சிலருக்கு மறுமண யோகம் ஏற்படும். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள்.

    கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள்.திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும்.வீண் செலவுகளை குறைத்தால் மன அமைதி கூடும்.மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும்.மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். கோ பூஜை செய்யவும்.

    ரோகிணி

    குடும்பத்தில் நிம்மதி கூடும் .தன யோகம் சிறப்பாக அமையும்.உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.

    தாய், தந்தை பொருள் உதவி செய்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும்.வீடு, வாசல் யோகம் உண்டாகும். சமுதாய அங்கீகாரம் அதிகரிக்கும்.ஸ்ரீ ரங்கநாதரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    மிருகசீரிஷம் 1,2

    அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும் .வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.

    கணவன், மனைவி ஒற்றுமையால் மகிழ்ச்சி கூடும்.ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். காரியத்தடை, மன சஞ்சலம் குறைய மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சரபேஸ்வரரை வழிபட தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும்.

    திருமணம்

    திருமணத் தடை அகலும். இந்த ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்கு காதல், கலப்பு திருமணத்தை அதிகம் நடத்தி தருவார். ஏப்ரல் 2024-ல் ராசிக்குள் வரும் குருபகவான் காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதத்தை பெற்றுத்தருவார்.

    பெண்கள்

    பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பீர்கள். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும். கணவர் மற்றும் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிரம்பும். தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். மாதவிடாய் கோளாறு சீராகும்.

    வியாபாரிகள்

    ரிஷப ராசிக்கு 10-ல் நிற்கும் சனியும் லாபத்தில் நிற்கும் ராகுவும், மிகச்சாதகமாக உள்ளனர். ஏப்ரலுக்குப் பிறகு குருவும் சுப பலன் வழங்க உள்ளார். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.தொழில் விரிவாக்க கடனும் கிடைக்கும். நல்ல வருமானம் வரும். கடனும் அடைபடும்.நல்ல தொழில் முன்னேற்றம் ஏற்படும் காலத்தில் வரும் லாபத்தை மறு முதலீடாக்குவது உங்கள் கையில் தான் இருக்கிறது.

    உத்தியோகஸ்தர்கள்

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேலைக்காக பலர் குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். சுய ஜாதக பலனை சரி பார்க்காமல் தேவையில்லாமல் வேலை மாற்றம் செய்யாமல் இருப்பது நலம். அரசு அலுவலகத்தில் வேலை பார்பவர்கள் இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் வந்து சேர உத்தரவு வரும்.

    அரசியல்வாதிகள்

    ஜாதகருக்கு அரசியலில் வெற்றி ஏற்படும். பெற்ற பதவிக்கான வேலையை திறம்பட செய்து மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிப்பீர்கள். எப்பொழுது பதவி பறிபோகுமோ என்ற பரிதவிப்புடன் வாழ்ந்தவர்களுக்கு இப்பொழுது ராகு பகவான் உருட்டும் பகடை காயில் 2024-ல் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று உங்கள் கட்சிக்கு பெருமை சேர்ப்பீர்கள்.அரச பதவியில் இருப்பவர்கள் சிவ வழிபாடு செய்தால் சுப பலன்கள் இரட்டிப்பாகும்.

    பரிகாரம்

    வெற்றிலை, பாக்குடன் கல்கண்டு வைத்து வெள்ளி கிழமை இஷ்ட, குலதெய்வம், மகாலட்சுமி வழிபாடு செய்தால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

    ரிஷபம்

    ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் - 2023

    வசீகரமான ரிஷப ராசியினருக்கு இந்த ஆங்கில புத்தாண்டு இனிமையான சம்பவங்கள் நிறைந்த ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் விலகும்.

    அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும். இந்த ஆண்டின் சனிப் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கைப் பாதையை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் என்பதும் சிறிதும் சந்தேகம் இல்லை. குருப் பெயர்ச்சி நன்மை, தீமை இரண்டையும் சேர்ந்தே வழங்கப் போகிறது. ராகு/கேதுக்களின் சஞ்சாரம் சிறு மன சஞ்சலத்திற்குப் பிறகு காரிய வெற்றியைத் தரும். மிக மோசமான பலனை தராது என்பதை உறுதியாகக் கூறலாம். இனி விரிவான பலன்களைக் காணலாம்.

    குருவின் சஞ்சார பலன்கள்:

    ரிஷப ராசிக்கு 8,11ம் அதிபதியான குருபகவான் இதுவரை 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்தார். இனி 12ம் இடமான அயன, சயன விரய ஸ்தானத்திற்கு ஏப்ரல் 22, 2023ல் இடம் பெயறுகிறார். குருபகவான் விரய ஸ்தானத்திற்குச் செல்வதால் பலருக்கு வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அடிக்கடி வெளியூர், வெளிநாட்டு பிரயாணங்கள் செல்ல வேண்டி வரலாம். சுப விரயங்கள், சுப நிகழ்வுகள் மிகுதியாகும்.

    திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். அதற்கான பணியில் ஈடுபடுவீர்கள்.சிலருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு பெரிய தொகை கடனாக கிடைக்கும்.

    பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவுகளும் விரயங்களும் அதற்கு ஏற்றார்போல் இரு மடங்காக இருக்கும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் ஆதாயம் நன்மை அடைந்தவர்களே உங்களுக்கு போட்டியாக மாறி எதிரியாக செயல்பட்டு சூழ்ச்சி செய்து உங்களை வீழ்த்த நினைக்கலாம். சிலரின் மனம் அலை பாய்ந்து குறுக்கு வழியில் ஈடுபட்டு தொழிவில் வீண் விரயங்களை சந்திக்கலாம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம். எந்த செயலையும் பல முறை யோசித்து செயல்பட விரயத்தை சுபமாக்க முடியும். சிலருக்கு சிறு சிறு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம்.

    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும்.சுப கிரகம் 12ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எத்தனை கவலை இருந்தாலும் மறந்து நிம்மதியாக தூங்குவீர்கள்.

    சனியின் சஞ்சார பலன்கள்:

    ரிஷபத்திற்கு 9,10ம் அதிபதியான ஸ்ரீ சனி பகவான் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திலிருந்து 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு ஜனவரி 17, 2023ல் மாறுகிறார்.தொழில் ஸ்தான அதிபதி சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் முத்தாய்ப்பான பலன் தரும். குலத்தொழில் செய்பவர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும்.

    வாழ்க்கையில் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலம் பற்றிய நல்ல சிந்தனைகள் உண்டாகும்.கடின உழைப்பு, விடா முயற்சி ,வைராக்கியத்தால் தடைகளை கடந்து வெற்றி வாகை சூடுவீர்கள். தொழில் தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறும். எதிரிகளால் உண்டாகிய தொல்லைகள் விலகும். பல வழிகளில், பல தொழில்களில் சிறிய முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கும்.

    சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புதிய தொழில் வாய்ப்புகள், ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும்.மற்றவர்களால் மதிக்கப்படக் கூடிய நிலை ஏற்படும். கூலித் தொழிலாளிகளுக்கு இந்த வருடம் முழுவதும் தொடர்ந்து வேலை கிடைத்து வாழ்வாதாரம் உயரும்.

    எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் மனதை மகிழ்விக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும். புதிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி பெருகும். வெளியில் சொல்ல முடியாது தவித்த பல பிரச்சனைகள் தானாக தீரும். அதிர்ஷ்டச் சொத்து, லாட்டரி, போட்டி, பந்தய லாபம் உண்டு. நண்பர்கள் மற்றும் வேலையாட்கள் ஆதரவு உண்டு.

    ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

    அக்டோபர் 30, 2023 வரை ராகு 12ம் இடத்திலும் கேது 6 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். அதன் பிறகு ராகு 11ம் இடத்திற்கும் கேது 5ம் இடத்திற்கும் செல்கிறார். ராகு கேதுக்கள் தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்த்துவார்கள். வேதனைகளை விரட்டி சாதனைகளாக மாற்றும் சிந்தனைகள் உதயமாகும்.

    மூத்த சகோதர சகோதரிகள், சித்தப்பா இவர்கள் மூலம் பணவரவும் ஆதாயம் உதவிகள் கிடைக்கும். சிலர் தொழில், லாபம் என்று உபரியாக சம்பாதித்து சட்ட படியான அன்பான மனைவியிடம் வருமானத்தை கொடுக்காமல் சட்டத்திற்கு புறம்பான இரண்டாவது மனைவியிடம் வருமானத்தை கொடுத்து ஏமாறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு புகழ், வெற்றி கிடைக்கும்.

    திருமணம்: ராசிக்கு 7ம் இடத்திற்கு கோட்சார சனியின் 10ம் பார்வை இருப்பதால் திருமண முயற்சி இழுபறியாகும்.சுய ஜாதகத்தில் 7ம் இடத்தில் அசுப கிரகம் இல்லாமல் இருந்தால் நல்ல வரன் கிடைக்கும். எந்த தடையும் இன்றி பெரியோர்களின் நல்லாசியால் திருமணம் நடைபெறும். 7ம் இடத்திற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் வெள்ளிக்கிழமை துர்க்கையை வழிபட தடைகள் தகறும்.

    பெண்கள்: பெண்கள் நேரத்தை சரியாக பயன்படுத்தும் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நன்மை தரும். உங்களின் அனைத்து விருப்பங்களும் ஒவ்வொன்றாக நிறைவேறும் . தாய் வீட்டுச் சீதனத்தால் புகுந்த வீட்டில் கவுரவம் உயரும். உற்சாகமும், தெம்பும் அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் உண்டாகும்.

    மாணவர்கள்: சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். காலத்தின் அருமை உணர்ந்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்த வெற்றி உங்களுக்கு கரம் கொடுக்கும். கல்வியில் தடை ஏற்பட்ட மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர சாதகமான காலமாகும். உங்கள் லட்சியத்தை அடைய நவகிரகங்கள் ஆசி வழங்கும்.

    கிருத்திகை 2,3,4: தன வரவில் தன் நிறைவு உண்டாகும். வராக்கடன்கள் வசூலாகும். கடனுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்கும். புதிய சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணம் உண்டாகும். கடந்தகால நெருக்கடிகள் குறையத் துவங்கும்.குடும்ப உறவுகளிடம் புரிதல் உண்டாகும். பிணக்குகள் தீரும். சொந்தவீடு, மனை, வாகனம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சொத்து விஷயங்களில் இருந்து வந்த வம்பு வழக்குகள் குறையும்.

    தம்பதிகள் தேவையற்ற பேச்சு மற்றும் முன் கோபத்தை குறைப்பது நல்லது. சிலரின் விவாகரத்து வழக்கு சாதகமாகும். வேலை பார்ப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கைக்கு வரும். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். தடை, தாமதங்கள் அகலும்.

    பரிகாரம்: கால பைரவரக்கு சந்தன காப்பு சாற்றி வழிபட முன்னேற்றங்கள் அதிகரிக்கும்.

    ரோகிணி: திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரும். தொழில் ரீதியான ஏற்றம், அபிவிருத்தி ஏற்பட்டு லாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டில் மங்கள ஓசையையும், மழலை குரலும் ஒலிக்கப் போகிறது. எதிர்பாராத உதவிகளால் வாழ்வாதாரம் உயரும். கூலித் தொழிலாளிகளுக்கு தொழில் நெருக்கடிகள் சீராகும். உத்தியோகத்தில் நிலவிய இடையூறுகள் குறையத் துவங்கும்

    பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புத்திர பிராப்த்தி கிட்டும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும்.வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் உண்டாகும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்வீர்கள்.

    பரிகாரம்: ரோகிணி நட்சத்திரத்தினர் ஏகாதசி திதியில் அல்லது ரோகிணி நட்சத்திர நாளில் திருப்பதி வெங்கடாஜல பதியை வழிபட வேண்டும்.

    மிருகசீரிஷம் 1,2: மன சஞ்சலங்கள் குறையும். பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மன உளைச்சலைத் தந்த உயர் அதிகாரி இடமாற்றம் ஆகுவார். முதலீட்டாளர்களுக்கு நம்பகமான வேலையாட்கள் கிடைப்பார்கள். சிலர் தொழில் உத்தியோக நிமித்தமாக இடம் பெயரலாம். வேலைக்கு சென்று வர வசதியாக வீடு மாற்றம் செய்யலாம். பெண்களுக்கு வீட்டிலும் உத்தியோகத்திலும் வேலைப்பளு மிகுதியாக இருக்கும். தந்தையின் உள்ளுணர்வை புரிந்து கடந்த கால கசப்பான சம்பவங்களை மறக்க முயற்சிப்பீர்கள். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன் நின்று போட்டிகளை சமாளிப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். பெண்களுக்கு தடைபட்ட பணிகள் துரிதமாகும். மொத்தத்தில் பலபாக்கியங்கள் உண்டாகும்.

    பரிகாரம்: தினமும் வில்வாஷ்டகம் படித்து வர தொழிலில் லாபம் பெருகும்.

    ரிஷப ராசியினர் புத்தாண்டிற்கு சென்று வர வழிபட வேண்டிய ஸ்தலம் சிதம்பரம் கோவில். ரிஷப ராசியினர் நேரம் கிடைக்கும் போது சிதம்பரம் சென்று நடராஜரையும், தில்லை காளியையும் வழிபட நிலையில்லாமல் ஆடிக் கொண்டு இருக்கும் வாழ்க்கை சமன்படும். உள்ளத்தில் தெளிவு பிறக்கும். பொருள் குற்றம் நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.

    ரிஷபம்

    ஆங்கில ஆண்டு பலன் - 2022

    கலையார்வம் மிகுந்த ரிஷப ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் குரு மற்றும் சனியின் சஞ்சாரங்கள் ஓரளவு சாதகமாகவே உள்ளது. ஏப்ரல் 2022-க்கு பிறகு ராகு/கேதுக்கள் 6,12-ம் இடங் களுக்கு மாறும் போது ராகு/ கேதுவால் ஏற்படும் இன்னல்கள் அகலும்.

    இந்தப் புத்தாண்டில் தொழில் மேன்மை உண்டாகும். ஊதியஉயர்வு, பதவி உயர்வு உண்டாகும். காரியத்தடை நீங்கும். புதிய எண்ணத்துடன் பாடுபட மனதில் தெம்பு பிறக்கும். தொட்டது துலங்கும். ஆன்மீகத் தேடுதல் கூடும். மன வேதனை மறையும். உங்களின் குலதெய்வ அருள் கிடைப்பதை உணருவீர்கள். பக்தி அதிகமாகும். நீங்கள் நினைத்த அத்தனையும் படிப்படியாக நடக்கும். இந்த புத்தாண்டிற்கான விரிவான பலன்களை காணலாம்.

    குரு சஞ்சார பலன்:- ஏப்ரல் 13, 2022 வரை குரு பகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வியாபாரமே செய்ய முடியாத நிலை, இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில் இருப்பவர்கள், வேலை யாட்களால் தொழில் நெருக்கடியில் இருந்தவர்களுக்கு கும்ப குருவால் நம்பிக்கை துளிர் விடும். தொழில், உத்தியோகத்தில் நிலவிய வெறுப்புகள் மறையும்.

    தொழில் மற்றும் பிற தேவைக்காக கடன் வாங்கலாம். எதிரி, கடன், வைத்தியச் செலவு அதிகரிக்கும். போட்டி, பொறாமை உருவாகும். இவற்றை சமாளிக்கும் வைராக்கியம் உருவாகும். போட்டியையும், எதிரியையும் சமாளிக்கும் வல்லமை பெற்றவரே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

    நீண்ட காலத் திட்டங்களும், லட்சியங்களும், கனவுகளும் நிறைவேறும். கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டி தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி ஏற்பட வாய்ப்ப்பு உள்ளது. குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்கள் பெயரில் இருந்த கலங்கங்கள் மறையும். ஏப்ரல் 13-க்கு பிறகு 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு மாறும் குருவால் பயம், குழப்பம் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    பல்வேறு விதமான தொடர் ஆதாயங்கள் கிடைக்கும். புதிய எண்ணத்துடன் உழைக்க மனதில் தெம்பு பிறக்கும். தொழிலிலும் குடும்பத்திலும் விரும்பத்தகுந்த மாறுதல்கள் நடக்கும். அவமானப்படுத்திய மனைவி, பிள்ளைகள் மதிப்பு, மரியாதை தருவார்கள். கடன் தொல்லை படிப்படியாக குறையும். சிலருக்கு கடன் இருந்த சுவடே தெரியாது.

    தொட்டது துலங்கும். என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். புதிதாக வாங்கப் போகும் சொத்தின் மதிப்பும் பல மடங்கு உயரும். விற்காமல் கிடந்த சொத் துக்கள் நல்ல லாபத்திற்கு விற்கும். தடைபட்ட உடன் பிறந்தவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெறும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குல, இஷ்ட தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். வாரிசுகளுக்கு திருமணம், பிள்ளைப் பேறு, நிலையான சொத்து அமைவது, தொழில், உத்தியோக வாய்ப்பு போன்ற சுப நிகழ்வுகளால் மனதில் நிம்மதி கூடும்.

    சனியின் சஞ்சார பலன்கள்:- 9-ம் இடச்சனி என்பதால் இழந்த பாக்கிய பலன்களை மீண்டும் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில்/ வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். மோசமான பிரச்சனைகளை சந்தித்தவர்கள் கூட தலை நிமிர்ந்து நிற்க கூடி நல்ல நேரம் ஆரம்பம். டிரேடிங் துறையில் குறிப்பாக ஜவுளி அழகு ஆடம்பர பொருள், விற் பனையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

    வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கப் பெற்று முன்னேற்றப் பாதையில் செல்லுவார்கள்.பகல், இரவு பாராமல் அல்லும் பகலும் உழைத்த உழைப்பு பணமாக காய்க்கப்போகிறது.

    26-2-2022 முதல் 6-4-2022 வரை சனி பகவானும் 7, 12-ம் அதிபதியான செவ்வாய் இணைகிறார்கள்.சிலருக்கு தடைபட்ட திருமணம் கைகூடும்.தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக இக்கால கட்டத்தில் சிலர் வாழ்க்கை துணையை பிரிந்து வாழ நேரலாம் அல்லது கணவன் மனைவி கருத்து வேறுபாட்டாலும் பிரிய நேரும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு பஞ்சாயத்து நீதி மன்றம் செல்லும் நிலையை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். தவறான நட்பு வலையில் மாட்டலாம்.களத்திரம், நண்பர்கள் மூலம் வம்பு, வழக்கு, கோர்ட் கேஸ் பிரச்சனை வரும். வம்பு வழக்கிற்கு நீதி மன்றம் செல்லாமல் பெரியோர்களின் முன்னிலையில் பேசி தீர்த்தல் நலம் தரும்.

    ராகு/கேது சஞ்சார பலன்:- ஏப்ரல் 12, 2022 வரை ராசியில் சஞ்சரிக்கும் ராகு/கேதுவால் சிலருக்கு ஆழ்மனதில் இனம் புரியாத கலக்கம் தோன்றும்.

    தனித்திறமைகள் வெளிப்படும். எல்லாம் சரியாகவே நடந்தால் கூட நாம் செய்வது சரியா? என்ற இனம் புரியாத பய உணர்வு உங்களுக்குள் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒரு சிலருக்கு செரிமானக் கோளாறு இருக்கும்.

    ஜென்ம ராசி மற்றும் ஏழில் ராகு/கேதுக்கள் என்பதால் நாக தோஷம் உண்டாகும். நாக தோஷத்தால் திருமணத்தடை மற்றும் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, ஒற்றுமை குறைவு, உடல்நலக்குறைவு, கருச்சிதைவு போன்ற பிரச்சினைகள் எழும். ஜனன கால ஜாதகத்தில் தற்போது நடைபெறும் தசாபுத்திக்கு ஏற்பவே அசுப பலன்களின் பாதிப்பு இருக்கும் என்பதால் பயப்பட தேவையில்லை.

    லக்னத்தில் உள்ள ராகு உங்களை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைத்து பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். சுக்கிரன் வீட்டு ராகு பணத்தை அள்ளி அள்ளி கொடுப்பார். நிறைய பணம் வரும். ஆனால் கையில் பணம் தங்காது. ராகு அள்ளிக் கொடுக்கும் பணத்தை விருச்சக கேது அளவில்லாத செலவை கொடுத்து சேமிப்பை கரைப்பார். குடும்ப உறுப்பினர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களின் எதிர்பாராத பொருளாதார தேவையை நிறைவு செய்ய அதிக பண உதவி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

    எனினும் கடன் பிரச்சனையிலிருந்து பூரண விடுதலையாகுவீர்கள். ஏப்ரல் 12-ல் ராகு பகவான் பனிரெண்டாம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். கேது ஆறாம் இடமான துலாத்திற்கு மாறுகிறார். மறைவு ஸ்தானத்தில் ராகு/கேதுக்கள் வரும் போது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார்கள். விரயத்தை ராகு மிகுதிப்படுத்துவார். வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.

    குழந்தைகளின் படிப்பு, திருமணம் வீடு, வாகன செலவு என வாழ்க்கைக்கு அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரும். எலும்பு தேய்மானம், மூட்டு வலி தொடர்பான பிரச்சினைகள் கடுமையாக பாதிக்கும். ஒரு சிலருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேரும். எது எப்படி இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.

    ஆறாமிட கேது பொருள் கடன் மட்டும் அல்ல ஊழ் வினையால் ஏற்படும் உடல் உபாதைகள். எதிரிகள், பிறவிக் கடன், பித்ரு கடனையும் தீர்க்க உதவுவார்.

    திருமணம்:- ராசியில் ராகுவும் ஏழில் கேதுவும் நின்று கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தை வெளிப்படுத்துகிறது.மேலும் 9-ல் ஆட்சி பலம் பெற்று நிற்கும் பாக்கியாதிபதி சனி ஆன்மீக நாட்டத்தையும், வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கையையும் ஏற்படுத்தியதால் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பும் குறைவுபட்டு இருக்கும். தற்போது ராசிக்கு 10-ம் இடமான கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தைப் பார்க்கிறார். நான்காம் இடமான சுக ஸ்தானத்தை பார்க்கிறார். தடைபட்ட அனைத்து வழிகளும் திறந்து 2022 ஏப்ரல் மாதத்திற்குள் உங்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும்.

    பெண்கள்:- கணவன், மனைவியிடம் நிலவிய கருத்து வேறுபாடு குறையும். சில பெண்களின் விவாகரத்து வழக்கு சாதகமாகி விரும்பிய ஜீவனாம்சம் கிடைக்கும். உங்களுக்குள் நிலவிய மறைமுகப் போர், மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும். சக உழியரால் ஏற்பட்ட அவமானம் மறையும். மாமியார், மாமனார், நாத்தனார், மச்சினர் பிரச்சனை குறையும்.

    விவசாயிகள்: -கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்புகளால் உங்களுக்குள் பதிந்த எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டது. இந்த ஆண்டு நீங்கள் பயிருடன் பணத்தையும் சேர்த்து தான் அறுவடை செய்வீர்கள். பங்குதாரர் இல்லாத விவசாயமாக இருந்தால் பயிருடன் பணமும் வீடு வந்து சேரும். விவசாயிகள் நீண்ட காலமாக செலுத்தாக கடன் பாக்கிகளை அரசு தள்ளுபடி செய்யும்.

    உத்தியோகஸ்தர்கள்:- உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் சிறிது சிறிதாக மேலதிகாரியுடன் இருந்த கருத்து வேறுபாடு மாறும். உங்களுக்கு ஆதரவு தரும் புதிய மேலதிகாரி வரலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். வேலையில் நாட்டம் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கும். அரசு, வெளிநாட்டு வேலைக் கான முயற்சிகள் பலிதமாகும்.

    முதலீட்டாளர்கள் / வியாபாரிகள்:- புதிய தொழில் திட்டங்களுடம் போதிய முதலீடுகள் வைத்துள்ள புதிய தொழில் பங்குதாரர் அல்லது நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் தடவாளப் பொருட்கள் வாங்க அரசின் நிதியுதவி மற்றும் நலத்திட்டங்கள் பயன்படும். வேலையாட்களின் அனுசரனை தொழிலில் தடையற்ற வளர்ச்சி உண்டாகும். மதி நுட்பம் நிறைந்த நல்ல தொழில் ஆலோசகர் மற்றும் வேலையாட்கள் அமைவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொழில், வியாபாரம் செய்பவர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

    அரசியல்வாதிகள்: 9-ல் சனி இருப்பதால் பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். நினைத்ததை நிறை வேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றி மக்களின் ஆதரவை பெறுவீர்கள். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உயர் பதவி கிடைக்கும்.

    மாணவர்கள்: -படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். முன்பை விட அதிக ஈடுபாட்டுடன் படித்து நல்ல மதிப்பெண் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர்வார்கள். அரியர்ஸ் வைத்தவர்கள் மீண்டும் எழுதி வெற்றி பெறுவார்கள்.

    கிருத்திகை 2,3,4-ம் பாதம்: குடும்ப உறவுகளுடன் எல்லா விஷயங்களையும் மனம் விட்டுப் பேசி மகிழும் படியான சூழல் உருவாகும். சனிக்கிழமைகளில் வரும் பிர தோஷ நாளில் ஈஸ்வரனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபட நன்மை அதிகமாகும்.

    ரோகிணி:- ஏற்றமும், இறக்கமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை என்பதை உணர்ந்து எதர்த்தமாக வாழப் பழகுவீர்கள். திங்கட்கிழமைகளில் மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து அம்பிகையை வழிபட மன நிம்மதி உண்டாகும்.

    மிருகசீரிஷம் 1,2 :- இந்த ஆண்டு உங்கள் கவலைகள், கடன்கள் அனைத்தையும் கோட்சார குரு, சனி, ராகு/ கேதுக்கள் தீர்த்து வைப்பார்கள். செவ்வாய்கிழமை 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி நவகிரக அங்காரகனை வழிபட இன்னல்கள் அகலும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×