என் மலர்
ரிஷபம்
வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை
4.5.2025 முதல் 10.5.2025 வரை
மகிழ்ச்சியான வாரம். இன்னும் சில நாட்களில் ராசியை விட்டு குரு விலகி தன ஸ்தானம் செல்கிறார். ஜென்ம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் குறைய துவங்கும். தன குருவினால் ஏற்படக்கூடிய சுப பலன்களை அனுபவிக்கக்கூடிய நேரம். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடைபெறும். பண பற்றாக்குறை அகலும். உற்றார் உறவினர், குடும்ப நண்பர்களின் அனுசரனை அதிகமாகும். அரசாங்க உதவி தேவைகளை நிறைவேற்றும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.
பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும், தொழில் துவங்கும் அமைப்பும் உண்டாகும். வராக் கடன்கள் வசூலாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும், வருகையும் மகிழ்ச்சி தரும். வாலிப வயதினருக்கு திருமணமாகும். புத்திர பிராப்தம் கிட்டும். ஆரோக்கிய கேட்டால் விடுப்பில் இருந்தவர்கள் மீண்டும் பணிக்குச் செல்லும் வகையில் உடல் நலம் சீராகும். சித்தப்பாவின் ஆதரவு கிடைக்கும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






