என் மலர்
ரிஷபம்
வார ராசிபலன் 12.10.2025 முதல் 18.10.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ளார். சொத்து இல்லாதவர்களுக்கு புதிய வீடு, வாகன யோகம் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு பிறந்த வீட்டு பாகப்பிரிவினை சொத்து, பணம், நகை கிடைக்கும். ஜாமீன் வழக்கு, செக் மோசடி வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.
திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். ராசிக்கு செவ்வாயின் எட்டாம் பார்வையின் சனியின் மூன்றாம் பார்வையும் பதிகிறது. மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சங்கடமும் முயற்சியில் இழுபறியும் உண்டாகும். கை, கால் வலி மற்றும் உடல் உபாதைக்கு வைத்தியம் செய்வீர்கள். அண்ணன், தம்பிகளை அனுசரித்து செல்லுதல் நலம். சிலருக்கு வேற்று மத நம்பிக்கை அதிகரிக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு கிடைக்கும்.
தீபாவளிக்கு வீட்டு தேவைக்கான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தீபாவளி போட்டி வியாபாரத்தை சூழ்நிலைக்கு ஏற்ப பேசி சமாளிப்பீர்கள். விநாயகர் வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






