என் மலர்
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
20.3.2023 முதல் 26.3.2023 வரை
கூட்டுத் தொழிலால் ஆதாயம் கூடும் வாரம். 7,12-ம் அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் பங்காளிகளுடன் ஏற்பட்ட ஈகோ தணியும். மன வலிமை அதிகரிக்கும். எதிர் நீச்சல் போட்டு உழைத்து ஆதாயத்தை அதிகரிப்பீர்கள். கடந்த 6 மாத காலமாக செவ்வாய் ராசியில் நின்ற காலத்தில் விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் கூடி மகிழ்வார்கள்.
திருமணத் தடை அகலும். 2, 5-ம் அதிபதி புதன் ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கவுரவப் பதவிகள், இழந்த பதவிகள், வேலை கிடைக்கும். முன்னேற்றம் அதிரிக்கும். மாணவர்களுக்கு வினாத்தாள் எளிமையாக இருக்கும். பிள்ளைகளின் அனுசரணை உண்டு. புத்திர பிராப்தம் உண்டாகும்.
பங்குச்சந்தை, பந்தய வெற்றி. ஆரோக்கிய குறைபாடு சீராகும். அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகனம் போன்றவைகள் மூலம் சுப விரயம் உண்டாகும். வெள்ளிக்கிழமை மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406