என் மலர்tooltip icon

    ரிஷபம் - வார பலன்கள்

    ரிஷபம்

    வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை

    15.6.2025 முதல் 21.6.2025 வரை

    மனதில் அமைதி குடிபுகும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூரியன், குரு, புதன் சேர்க்கை இருப்பதால் சூரியன் குரு சேர்க்கை சிவராஜ யோகம். இழந்த இன்பங்களை மீட்டுப் பெறும் காலம். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொட்டது துலங்கும். நண்பர்கள் மூலம் புதிய தொழில், வருமான வாய்ப்புகள் அமையும். அன்றாட தேவைக்காக சிரமப்பட்ட நிலை மாறும். நிறைந்த பொருளாதாரமும் சொகுசு வாழ்க்கையும் கிடைக்கும்.

    குடும்ப உறுப்பினர்களின் உல்லாசத்திற்காக தாராளமாக செலவு செய்து மகிழ்வீர்கள். நீண்ட காலமாக நிலவிய திருமணத் தடை அகலும். நல்ல வரன் அமையும். தாயார் மற்றும் மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டு. பல மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்குவீர்கள்.

    பங்கு வர்த்தகம் நல்ல லாபம் பெற்றுத் தரும். பெண் பிள்ளைகள் பூப்பெய்துவார்கள். பரம்பரை நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைய துவங்கும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். சீட்டு பணம், பாலிசி முதிர்வு தொகை, கிடைக்கும். தினமும் காலபைரவ அஷ்டகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை

    08.06.2025 முதல் 14.06.2025 வரை

    முன்னேற்றமான வாரம். ராசியில் சுகஸ்தான அதிபதி சூரியன் இருப்பதால் நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருந்த நிலை மாறும். தொழில், உத்தியோக ரீதியான சில முன்னேற்றகரமான மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த அரசாங்க உதவி கிடைக்கும். அரசு, அரசு சார்ந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் உயரும்.

    அரசாங்க வேலை முயற்சி வெற்றி தரும். வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பு உயரும். வாழ்நாள் லட்சியமாக எதிர்பார்த்த பதவி தேடி வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். உங்களின் முயற்சிக்கு மனைவியும், பிள்ளைகளும் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் உபரி நேரத்தில் தையல், அழகுகலை போன்ற தொழில் தொடர்பான கல்வி கற்கும் ஆர்வம் உண்டாகும்.

    பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். 11.6.2025 அன்று காலை 8.50 முதல் 14.6.2025 அன்று அதிகாலை 5.38 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் மிகுந்த பயணங்கள் மிகுதியாகும். தம்பதிகள் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பெண்களுக்கு தாய் வீட்டு சீதனம் மன நிறைவைத் தரும். நவகிரக சுக்கிரனை வழிபடவும்

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை

    01.06.2025 முதல் 07.06.2025 வரை

    மன அமைதி கிடைக்கும் வாரம். ராசியில் சூரியன், புதன் சேர்க்கை உள்ளதால். புத ஆதித்ய யோகம். எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும். எதையும் எதிர் கொள்ளும் தைரியம் உருவாகும். கொடுக்கல், வாங்கலில் திறமையாக செயல்பட்டு அதிக லாபம் ஈட்டுவீர்கள்.

    சேமிப்புகள் இரட்டிப்பாகும். நல்ல தொழில் தொடர்புகளால் ஊக்கமும், சந்தோஷமும் உண்டாகும். கூட்டுத் தொழில் முயற்சி பலன் தரும். உத்தியோகம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். சக ஊழியர்களுடன் பொறுமையுடன், பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கும். மாணவர்களின் கல்வி ஆர்வத்திற்கு பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் அனுமதி கிடைக்கும். குடும்பத்தினரின் நிம்மதிக்காக கோபத்தை வெல்லும் சூட்சமத்தை கற்பீர்கள். அண்டை, அயலாருடன் இருந்த தகராறுகள் சுமூகமாகும். உங்களின் செயல்பாடுகளுக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு அரசு வழி ஆதாயம் உண்டு. வெள்ளிக்கிழமை ஸ்ரீ கஜ லட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை

    25.05.2025 முதல் 31.05.2025 வரை

    லட்சியங்களும், எண்ணங்களும் நிறைவேறும் வாரம். ராசியில் உள்ள சூரியனுக்கு சனியின் 3-ம் பார்வை திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என அவரவர் வயதிற்கேற்ற சுப பலன்கள் உண்டு. தடைபட்ட பாக்கியங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் முயற்சிக்க உகந்த அற்புதமான நேரம். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

    மனக் குழப்பம் அகலும். குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக குறையும் பெண்களுக்கு தாய், வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. உடன் பிறந்தவர்களின் நலனுக்காக சிறிய பொருள் விரயத்தை சந்திக்க நேரும். தடைகள் தகர்ந்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வரும். பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள்.

    தொழில், உத்தியோக ரீதியான வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். கணவன் மனைவியிடம் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் நட்பு, சந்திப்பால் உற்சாகம் அதிகரிக்கும். உயர் ஆராய்ச்சி கல்வி முயற்சியில் வெற்றி வாய்ப்பு அதிகம். சிலரின் மறுமண முயற்சி கை கொடுக்கும். சிலர் பிழைப்பிற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். அமாவாசையன்று அரிசி பருப்பு தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை

    18.05.2025 முதல் 24.05.2025 வரை

    லாபகரமான வாரம். ராசியில் சுக அதிபதி சூரியன் சஞ்சாரம் செய்வதால் இது ரிஷப ராசிக்கு இழந்ததை மீட்டுக் கொடுக்கும் அமைப்பாகும். ஆத்ம ஞானம் பெருகும். மனக்குழப்பம், மன சஞ்சலம் அகலும். ஞாபக சக்தி அதிகரிக்கும், முயற்சி நிறைவேறும். தகவல் தொடர்பு துறை மற்றும் ஊடகங்களில் பணி புரிபவரின் தனித்திறமைகள் பாராட்டப்படும்.

    அரசு உத்தியோகம் அல்லது அரசின் உதவிகள் கிடைக்கும். ஓரிடத்தில் நிற்காமல் அலைந்து திரிந்து தொழில் செய்பவர்களின் லாபம் பெருகும். புதியதாக தொழில் துவங்க ஏற்றமான காலம். குழந்தை பாக்கியம் ஆண் வாரிசு கிடைக்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பிப்பார்கள். தொலைந்து போன, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும்.

    வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். சொத்துக்களின் மதிப்பு உயரும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். தாய்வழி உறவுகளால் ஆதரவான பலன் உண்டு. பெண்களுக்கு தாய் வீட்டுச் சீதனம் கிடைக்கும். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை

    11.5.2025 முதல் 17.5.2025 வரை

    மனச் சங்கடம் குறையும் வாரம். ராசியில் 4ம் அதிபதி சூரியன். தன ஸ்தானத்தில் குரு பகவான் என ரிஷப ராசிக்கு கோட்சாரம் சாதகமாக உள்ளது. ஜென்ம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். நன்மதிப்பும், பெருமையும் உண்டாகும். தோற்றப் பொலிவு மற்றும் பழக்க வழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் நல்ல எண்ணங்களை உதயமாகும்.

    குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். புதிய பெரிய மனிதர்களின் நட்பால் அந்தஸ்து உயரும், ஆதாயம் அதிகரிக்கும். மனதில் ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும். செலவிற்கு தேவையான பணம் தாராளமாக கிடைக்கும். வீடுகட்டும் பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும்.

    மனைவி வழிச் சொத்தில் நிலவிய எதிர்ப்புகள் அகன்று முழுச் சொத்தும் கிடைக்கும். உபரி வருமானம் கிடைக்கும். 15.5.2025 அன்று மதியம் 2.07 மணி முதல் 18.5.2025 நள்ளிரவு 12.04 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் நண்பர்கள் போல் நடித்து கால் வாரி விடுவார்கள். காது, மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும். சித்ரா பவுர்ணமி அன்று ஆடை தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை

    4.5.2025 முதல் 10.5.2025 வரை

    மகிழ்ச்சியான வாரம். இன்னும் சில நாட்களில் ராசியை விட்டு குரு விலகி தன ஸ்தானம் செல்கிறார். ஜென்ம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் குறைய துவங்கும். தன குருவினால் ஏற்படக்கூடிய சுப பலன்களை அனுபவிக்கக்கூடிய நேரம். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடைபெறும். பண பற்றாக்குறை அகலும். உற்றார் உறவினர், குடும்ப நண்பர்களின் அனுசரனை அதிகமாகும். அரசாங்க உதவி தேவைகளை நிறைவேற்றும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.

    பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும், தொழில் துவங்கும் அமைப்பும் உண்டாகும். வராக் கடன்கள் வசூலாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும், வருகையும் மகிழ்ச்சி தரும். வாலிப வயதினருக்கு திருமணமாகும். புத்திர பிராப்தம் கிட்டும். ஆரோக்கிய கேட்டால் விடுப்பில் இருந்தவர்கள் மீண்டும் பணிக்குச் செல்லும் வகையில் உடல் நலம் சீராகும். சித்தப்பாவின் ஆதரவு கிடைக்கும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை

    27.4.2025 முதல் 03.5.2025 வரை

    எண்ணங்கள் நிறைவேறும் வாரம். ஜென்ம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் முடிவிற்கு வரப் போகிறது. வாக்குத் திறமையால் லாபம் ஈட்டுவீர்கள். பணத்தட்டுபாடு சீராகும். பங்குச் சந்தையில் ஆர்வம் குறைப்பது நல்லது. புதிய கூட்டுத் தொழில் முயற்சி நிறைவேறும். தொழில், வியாபாரம், வேலையில் ஏற்பட்ட பின்னடைவுகள் நீங்கும்.

    சக பணியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். பெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதில் நாட்டம் மிகுதியாகும். வீடு, வாகன பிராப்தம் உண்டு. இடமாற்றம், வீடு மாற்றம் பதவி மாற்றம் வரும். ஆரோக்கிய தொல்லை அகலும். மருத்துவ செலவு குறையும். சகோதர, சகோதரிகள் அல்லது தந்தையின் கடன் மற்றும் ஜாமீன் தொகைக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல் உண்டாகும்.

    குடும்ப ஒற்றுமையை சிதைத்த எதிரிகள் இருந்த இடம் தெரியாது.திருமண முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். சிதைந்த கூட்டுக் குடும்பங்கள் அன்பை பரிமாறுவார்கள். உயர் கல்வி முயற்சி நிறைவேறும். மறுமண முயற்சி சித்திக்கும். தினமும் லலிதா சகஸ்ஹர நாமம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை

    20.4.2025 முதல் 26.4.2025 வரை

    லாபகரமான வாரம். லாப ஸ்தானத்தில் 4 கிரகச் சேர்க்கை. தடைபட்ட சொத்து விற்பனை சித்திக்கும். வீடு கட்டும் பணி துரிதமடையும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும். தொழிலில் நிலவிய மந்த நிலை மாறும். சிலருக்கு பினாமிச் சொத்து கிடைக்கும். சிலருக்கு உழைப்பில்லாத அதிர்ஷ்ட வருமானத்தில் நாட்டம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதியில் நிலவிய சட்டச் சிக்கல்கள், வழக்குகள் முடிவுக்கு வரும்.

    ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு நீங்கும். கடன் தொல்லை கட்டுக்குள் வரும். வராக்கடன்கள் வசூலாகும். நிலுவையில் உள்ள சில முக்கிய பணிகளை இப்பொழுது நடத்தி முடிக்கலாம். கூட்டுத் தொழிலில் நிலவிய கருத்து வேறுபாட்டில் புரிதல் உண்டாகும். பெண்கள் முன்னேற்ற பாதையை நோக்கி வெற்றி நடை போடுவார்கள்.

    பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும். சில மாணவர்கள் பள்ளி மாறலாம். 20.4.2025 அன்று மாலை 6.04 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்மறை எண்ணங்கள் உண்டாகும். காரியத் தடை ஏற்படலாம். உறவுகளுடன் கருத்து வேறுபாடு வரலாம். பிரதோஷ வழிபாடு சிறப்பு.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை

    13.4.2025 முதல் 19.4.2025 வரை

    வளமான எதிர்காலம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் வக்ர நிவர்த்தி பெறுவதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்புகள் அகலும். உயர் அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதியாக பணிபுரிய முடியும். சுற்றமும், நட்பும் நிரம்ப பெற்றவர்களாக இருப்பீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாகவே கருதுவீர்கள்.

    பழைய சாஸ்திரங்கள், பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கூடும். உடல் நிலை சீராகும். தீராத பிணிகளும் தீரும். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான சட்டச் சிக்கல் தீரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். ஆரோக்யம் மேம்படும். லாபம் அதிகரிக்கும். வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். சிலரின் பிள்ளைகளுக்கு அரசாங்கப் பணிதேடி வரும். 18.4.2025 அன்று காலை 8.21 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது. ஆத்திரமும் அவசரமும் அறிவுக்கு சத்துரு. எனவே பிறரின் காரியங்களில் அவசரப்பட்டு மூக்கை நுழைப்பதை தவிர்க்கவும். மகா விஷ்ணுவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை

    06.4.2025 முதல் 12.4.2025 வரை

    எடுக்கும் அனைத்து முயற்சியிலும் வெற்றி பெறும் வாரம். 2,5-ம் அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெறுவதால் அனுகூலமற்ற காரியங்களைக் கூட சுமூகமாக முடித்துக் காட்டுவீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும்.தன வரவு திருப்தி தரும். குடும்ப முன்னேற்றம் கூடும். மாமன், மைத்துனர் வழி மனக்கசப்புகள் மாறும். சுபமங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய வேலை முயற்சிகள் பலிக்கும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும்.

    சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். சிலர் புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். சிலரின் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். திருமணத் தடை அகன்று நல்ல வரன்கள் வீடு தேடி வரும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள் வீர்கள். நவகிரக புதன் பகவானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை

    30.3.2025 முதல் 5.4.2025 வரை

    கடன் தீர்க்க உகந்த காலம். தற்போது ராசியில் உள்ள குருவிற்கு சனி பார்வை கிடைப்பது தர்ம கர்மாதிபதி யோகம். இந்த கிரக நிலவரம் 14-5- 2025 வரை நீடிக்கிறது. இது கடன் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து மீள பிரபஞ்சம் கொடுத்த சந்தர்ப்பமாகும் எவ்வளவு கடன் சுமையில் உள்ளவர்களும் இந்த காலகட்டத்தில் கடனை தீர்க்கக்கூடிய மார்க்கம் தென்படும். அதேபோல் எவ்வளவு திருமணத் தடை இருப்பவர்களுக்கும் இந்த காலகட்டத்தில் திருமணம் நடந்து முடியும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு தன ஸ்தானத்திற்கு குரு சென்ற பிறகும் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும்.

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். பெற்றோர்கள், பெரியவர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தடைபட்ட உயர்கல்வி வாய்ப்பு தற்போது கை கூடி வரும். வெளிநாடு செல்வதில் நிலவிய தடைகள் அகலும். பாஸ்போர்ட் விசா சார்ந்த பிரச்சினைகளை முடிவுக்கு வரும்.புதிய சொத்துக்கள் சேரும். நோய்க்கு உரிய வைத்தியம் கிடைக்கும். மன நிம்மதி கூட விநாயகர் அகவல் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×