search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம் - குரோதி வருடம் வருட பலன்

    ரிஷபம்

    தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    கொள்கை பிடிப்பு நிறைந்த ரிஷப ராசியினருக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டு வாழ்வில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த நல் வாழ்த்துக்கள்.

    ஜென்ம குருவின் பலன்கள்

    ரிஷப ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதியான குரு மே 1, 2024 முதல் ஜென்ம ராசிக்குள் நுழையப் போகிறார். உங்களுக்கு 8, 11 எனும் பணபர ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் ராசியில் நின்று தனது 5ம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் ஏற்படும். வெற்றியை தக்க வைக்க கடுமையான முயற்சியையும் போராட்டத்தையும் சந்தித்த காலம் முடிந்து குறைந்த உழைப்பில் அதிக வருமானம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை துரத்தி மனம் நொந்த காலம் முடிந்துவிட்டது. இது அதிர்ஷ்டம் உங்களைத் துரத்தும் வருடமாக அமையப் போகிறது.

    அஷ்டமாதிபதி ராசியில் சஞ்சரிப்பது விபரீத ராஜ யோகமாகும்.பூர்வீகச் சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி மகிழ்வீர்கள். மருமகன், மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். புத்திர பிராப்தம் சித்திக்கும்பெற்றோர்களின் நல்லாசி கிடைக்கும். 7ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தை பார்வையிடுகிறார். கூட்டுத் தொழில் செய்தவர்கள் விலகி தனித்து செயல்படலாம் அல்லது புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.

    தொழில் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய நல்ல சூழ்நிலை உண்டாகும்.

    தொழில் உத்தியோக நிமித்தமாக இடப் பெயர்ச்சி செய்ய நேரும். குருவின் 9ம் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால் குலதெய்வ அனுகிரகமும், முன்னோர்களின் நல்லாசியும் மகிழ்ச்சியான நிலைக்கு அழைத்துச் செல்லும். சிந்தனை, செயல்பாட்டில் நேர்மறை எண்ணங்கள் மிகுதியாகும்.

    தொழில் சனியின் பலன்கள்

    ரிஷப ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ளார். 10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். 10ம்மிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் தொழிலில் நிலையான வளர்ச்சியை வழங்குவார். அதன் 3ம் பார்வை 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் பதிகிறது. சிலர் தொழில் உத்தியோகத்திற்காக வெளிநாடு செல்லலாம். வெளிநாடு செல்வதில் நிலவிய சட்ட சிக்கல், விசா பிரச்சனை சுமூகமாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு தொழில் பிரமாண்ட வளர்ச்சி ஏற்படும்.

    தொழிலுக்காக விரும்பிய் கடன் தொகை கிடைக்கும். அரசு பணி தேர்வு எழுதியவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். கண் அறுவை சிகிச்சை வெற்றி தரும். சனி 7ம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார்.பூர்வீகம் சென்று வர திட்டமிடுவீர்கள். ரிஷப ராசியினர் தாத்தா, பாட்டியாகும் பாக்கியம் உள்ளது. பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். கவுரவப் பதவிகள், பெயர், புகழ், சலுகைகள் என வெற்றிப் பாதையை நோக்கி முன்னேறுவீர்கள். எதிரி தொல்லை, கண் திருஷ்டி பாதிப்பு விலகும்.

    எதையும் சமாளிக்கும் மனப் பக்குவம் உருவாகும். சனியின் 10ம் பார்வை நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணையையை பற்றிக் கூறும் 7ம்மிடத்தில் பதிகிறது. வாழ்க்கைத் துணைக்கு இடமாற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். கணவன், மனைவி சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சுப காரியப் பேச்சு வார்த்தை நடக்கும். அரசின் நலத்திட்டத்தால் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும். சுகமான ஆடம்பர வாழ்க்கை அமையும்.

    பஞ்சமகேது / லாப ராகுவின் பலன்கள்

    பூர்வீகம், குலதெய்வம், குழந்தைகள், அதிர்ஷ்டம் காதல் பற்றிக் கூறும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவும் வழக்கு வெற்றி, லாபம் பற்றிக் கூறும் பதினொன்றாமிடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் பல்வேறு ஆசைகளால் மனம் அலைபாயும். புதிய சிந்தனைகள் உருவாகும். நிதானமாக லாபம் கொடுத்த தொழில் நிலையான நிரந்தரமான லாபத்தை வழங்கும்.பொருளாதார முன்னேற்றத்தால் பணப் புழக்கம் சரளமாக இருக்கும்.

    வாங்கிய கடனை திருப்பி செலுத்தக்கூடிய விதத்தில் வருமானம் அதிகரிக்கும். சீட்டுக் கட்டி இழந்த பணம், ஜாமீன் போட்டு ஏமாந்த பணம் கிடைத்து விடும். சுப கிரக வலுவால் வீண் நஷ்டம், பயம் தீரும். வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறும். உடலும் உள்ளமும் குளிரும். மன சங்கடம். இனம் புரியாத கவலை ஒழியும். அதிர்ஷ்டம். பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மூத்த சகோதரம், சித்தப்பா, பிள்ளைகளின் ஆதரவால் நிம்மதி பெருகும். அடமானச் சொத்து நகைகளை மீட்கலாம். புதிய சொத்து, வாகனங்கள் சேரும். வீடு கட்டி குடியேறுதல் புதிய வாகனம் வாங்குதல் என பல ஆசைகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். ஆரோக்கியத்தால் நிலவிய கவலைகள் சீராகும்.வைத்தியம் பலன் தரும். படுக்கையில் வாழ்ந்தவர்கள் கூட எழுந்து நடமாட துவங்குவார்கள்.

    உயர் கல்வி முயற்சி சித்திக்கும். கவுரவப் பதவி கிடைக்கும். புகழ், அந்தஸ்து, செல்வாக்கு உயரும். முன்னோர் சொத்திற்காக நீதிமன்றப் படி ஏறியவர்களுக்கு தீர்ப்பு சாதகமாகும். இளைய மனைவியால் ஆதாயம், அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். செயற்கை கருத்தரிப்யை நாடியவர்களுக்கு இயற்கையாக குழந்தை உருவாகும்.

    கிருத்திகை 2, 3, 4

    சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை 2, 3, 4 ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டான குரோதி வருடம் லாபகரமான வருடமாக அமையப் போகிறது.மனம் விரும்பும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையப் போகிறீர்கள்.காலத்திற்கும் அழியாப் புகழ் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்கை அடையும் முயற்சி வெற்றி தரும். வெளிநாட்டு வேலை அரசு உத்தியோக முயற்சி பலிதமாகும். பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும்.

    விரும்பிய ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் வந்து சேரும். சிலருக்கு எலும்பு, நரம்பு தொடர்பான பிரச்சனைக்கு சிகிச்சை செய்ய நேரும். அழகு ஆடம்பர பொருட்கள் சேரும்.வீடு வாகன பிராப்தம் உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள், உதவாக்கரைப் பிள்ளைகள் திருந்துவார்கள். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும்.

    போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்,உடன் பிறப்புகளால் உயர்வுகள் ஏற்படும்.தந்தையால் ஏற்பட்ட உபத்திரவம் குறையும். தேவையற்ற வம்பு வழக்குகளை தவிர்க்கவும். தினமும் ஆதித்ய ஹ்ருதயம் படித்து சூரியனை வழிபட முத்தாய்ப்பான முன்னேற்றம் உண்டு.

    ரோகிணி

    சந்திரனின் ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு துன்பமும், துயரமும் தீரும் தமிழ் புத்தாண்டாக இந்த வருடம் அமையப் போகிறது. புதிய வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். சிலர் தொழிலுக்காக பூர்வீகத்தை விட்டு இடம் பெயரலாம். வாழ்க்கைதுணை, கூட்டாளிகள் அல்லது நண்பர்களால் சிறு மனக்கசப்பு உண்டாகும்.

    குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதம் நீங்கும். மண், மனை, பூமி, வீடு, வண்டி, வாகனம் வாங்கும், விற்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். கருத்து வேறுபாட்டால் பேசாமல் இருந்த சம்பந்திகள் பிள்ளைகள் நலனுக்காக கருதி அனுசரித்து செல்வார்கள். சுப விரையங்கள் அதிகமாகும். பணம், கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள் குறையும்.பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். பல தலைமுறையாக தீராத சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

    அதே போல உடல் நல பிரச்னைகள், நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு நல்ல நிவாரணம் அடைவார்கள். நோய் தாக்கம் குறையும். போட்டிகள், பொறாமை, சங்கடங்கள் உள்ளிட்ட சாதகமற்ற விஷயங்கள் படிப்படியாக குறையக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கிருஷ்ணரை வழிபட இன்பம் பெருகும்.

    மிருகசீரிஷம் 1, 2

    செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்த மிருகசீரிஷம் 1, 2 ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருடம் ஆன்ம பலத்தை பெருக்கும் அற்புத வருடமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை வாழ்வில் சாதிக்க முடியாத பல விசயங்களை தற்போது சாதிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும். பணி நிரந்தரமாகும். வீண் அலைச்சலால் நேரத்திற்கு சாப்பிட முடியாது. தாய், தந்தை, தம்பி, மனைவி பிள்ளைகள் ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒவ்வொன்றாக நிறை வேற்றுவீர்கள்.

    ஆரோக்கியம், பணம் கொடுக்கல் வாங்கல், வம்பு, வழக்கு, ஜாமின் போன்றவற்றில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சொத்துக்களின் மதிப்பு உயரும். திருமணம், குழந்தைபேறு போன்ற சுப விசேஷங்கள் நடக்கும். ஆன்மீக ஈடுபாட்டில் அதிக நாட்டம் உண்டாகும். கடன் சுமை குறையும். உயர் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். காதல் விவகாரங்கள் வம்பு, வழக்கை ஏற்படுத்தலாம். அரசியல் மற்றும் பொது காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை வழிபடவும்.

    பெண்கள்

    தொழில், உத்தியோகத்தில் உங்களுக்கு என்று தனி முத்திரை பதிப்பீர்கள். அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். குடும்ப உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை கவனமாக கையாளவும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைப்பது நல்லது. 5ல் கேது, 11ல் ராகு இருப்பதால் பல சாதகங்கள் நடந்தாலும் இனம் புரியாத மிகைப்படுத்தலான மன உளைச்சலும் இருக்கும். சிலருக்கு கை, கால் வலி அதிகமாக இருக்கும். தம்பதிகளுக்குள் நிலவிய ஈகோ பிரச்சனை சுமூகமாகும்.

    திருமணம்

    ராசிக்கு 7ம்மிடமான களத்திர ஸ்தானத்திற்கு சனி மற்றும் குருவின் பார்வை பதிவதால் திருமண முயற்சி தாய்மாமாவின் ஆதரவால் சித்திக்கும். திருமணம் பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். மறுமணத்திற்கு நல்ல வரன் கிடைக்கும்.

     பரிகாரம்:

    சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த ரிஷப ராசியில் பிறந்த நீங்கள் உப ஜெய ஸ்தானமான 11ம்மிட ராகுவினால் இந்த ஆண்டு முழுவதும் சுப பலன்கள் உண்டாக நீங்கள் வழிபட வேண்டிய ஸ்தலம் ஸ்ரீ ரங்கம். ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் "திருவரங்கம்" என இத்தலம் அழைக்கப்படுகிறது.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம், ஆழ்வார்கள் பாடிய 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் தலைசிறந்த தாகவும் கருதப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் பாற்கடலில் பாம்பு படுக்கையில் பள்ளி கொண்ட இறைவனான பெருமாள் ரங்கநாயகர். தாயார் ரங்கநாயகியை வழிபட பிறவிப்பிணி நீங்கி குரோதி வருடம் வளம் பெருகும் ஆண்டாக பலன் தரும்.

    ரிஷபம்

    சோபகிருது வருட பலன் 2023

    தொழில் வெற்றி!

    அழகு, இனிமை, ஆனந்தம் ஈர்ப்பு சக்தி கொண்ட ரிஷப ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டு வெற்றியை வழங்க நல் வாழ்த்துக்கள். பிறக்கப் போகும் இந்த சோப கிருது வருட தமிழ் புத்தாண்டில் அனைத்து வருட கிரகங்களும் ரிஷப ராசிக்கு சாதகமாக உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி ஏப்ரல் 22ல்நடக்கப் போகும் குருப்பெயர்ச்சியில் குருபகவான் ராசி க்கு 12-ம்மிடம் செல்கிறார். ஜனவரி17ல் நடந்தசனிப்பெயர்ச்சியில்சனிபகவான் தொழில்ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.

    தற்போது 12, 6ம் மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு/கேதுக்கள் அக்டோபர் 30, 2023ல் 11, 5ம் மிடம் செல்கிறார்கள். மன ஆற்றலும் மன உறுதியும் அதிகரிக்கும். உடலும் மனமும் பொலிவு பெறும். தடைபட்ட மகிழ்ச்சியும் சந்தோசமும் இனி தொடரும். இளம் சிறார்கள் நன்றாக படிப்பார்கள். போட்டி பந்தயம் போன்ற வற்றில் ஆதாயம் உண்டு. வம்பு, வழக்கு, சண்டை, அவமானம் முடிவிற்கு வரும்.விரயச் செலவுகள் அதிகரிக்கும்.தொழில் முன்னேற்றம்உண்டாகும். தொழிலை மேம்படுத்த வங்கிகளின் மூலம் கடன் உதவி கிடைக்கும். சிலர் கூட்டுத் தொழிலில் இருந்து விடுபடுவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    விற்க முடியாமல் கிடந்த பூர்வீகச் சொத்துக்கள் விற்கும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட தொல்லைகள் சீராகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும். வீடு, வேலை மாற்றம் செய்வீர்கள்.மாங்கல்ய தோஷம் விலகி திருமணம் நடைபெறும்.

    குடும்பம் பொருளாதார நிலை: விலகிய உறவுகள் அவர்களின் தவறுகளை உணர்ந்து மீண்டும் விரும்பி வருவார்கள். குடும்பத்தினர் மீது உங்களுக்கு அக்கறை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

    உங்களைத் துரத்திய துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும். குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். பணம் பல வழிகளில் பையை நிரப்பும். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்.கொடுத்த கடன்கள் வசூலாகும். கடன் பிரச்சனையிலிருந்துநிவாரணம் உண்டாகும்.சிலர் குடும்ப உறவுகளுக்காக ஜாமீன் பொறுப்பு ஏற்கும் நிர்பந்தம் உண்டாகும். எதிர்காலத்தில் அது உங்களை தர்ம சங்கடத்தில் மாட்ட வைக்கும் என்பதால் கவனம் தேவை.பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளின் விசாரணை துரிதமாகும்.

    பெண்கள்: பெண்களுக்கு சிறு தொழில், சுய தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்யும் யோகம் உள்ளது. சேமிப்பு, சிக்கனம் இவற்றில் கவனமாக இருப்பீர்கள்.

    கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். மாமியார், நாத்தனார் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

    கிருத்திகை 2,3,4: பரிபூரண வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகும் வருடம். மனதில் இருந்த இனம் புரியாத பயம் அகன்று தெளிவும், துணிவும் பிறக்கும்.புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். தொழில் ரீதியான முன்னேற்றம் இருக்கும். நிலையான வருமானம் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமானபிரச்சனைகள்நல்ல முடிவிற்கு வரும். வெளிநாட்டுப் பயணம், வேலையில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும்.

    எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். சுப விரயங்கள் அதிகரிக்கும். பாகப்பிரிவினை சுமூகமாகும். தந்தையின் அன்பும் ஆசியும் கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சங்கடத்தில் ஆழ்த்திய நோய் வைத்தியத்திற்கு கட்டுப்படும். தினமும் சிவ கவசம் படிக்கவும்.

    ரோகிணி: மாற்றங்கள் நிறைந்த வருடம். உங்கள் செயல்பாடுகளில் பிறரின் தலையீடு குறையும். குல தெய்வ தரிசனம் கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். தொழிலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். கூலித் தொழிலாளிகளுக்கு சீரான வேலையும், வருமானமும் கிடைக்கும். தீராத கடனைத் தீர்க்கும் மார்க்கம் தென்படும். எதிரி தொல்லைகள் குறையும். நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை மாறி சாதாரண வைத்தியத்தில் குணமாகும்.சிலரின் சொத்து வாங்கும் முயற்சி சித்திக்கும்.வீடு, வாகனத்தை பராமரிக்கு செலவு அதிகரிக்கும். கல்வி சார்ந்த விசயங்களில் ஏற்பட்ட தடை அகலும். புதிய எதிர்பாலின நண்பர்கள் கிடைப்பார்கள். ஆண்களுக்கு மாமனாருடன் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். கை மறதியாக வைத்த நகை கிடைக்கும். தினமும் லலிதா சகஸ்ஹர நாமம் படிக்கவும்.

    மிருகசீரிஷம் 1 ,2: சகாயங்கள் மிகுந்த வருடம். தைரியமும், தெம்பும் அதிகரிக்கும்.துணிந்து சில முடிவுகளை எடுத்து முன்னேறுவீர்கள். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்குபூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்புகள் உள்ளது. தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரயாணம் செய்ய நேரும்.

    வாடகை வீட்டில்வாழ்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள். பணிநிரந்தரமாகும்.அரசு வேலை கிடைக்கும்.வழக்குகள் சாதகமாகும்.

    முறையான முன்னோர்கள் வழிபாட்டால் தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் திருமணம், புத்திரபாக்கியம், உயர் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து விதமான சுபபலன்களும் கைகூடும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். தினமும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிக்கவும்.

    பரிகாரம்: இந்த தமிழ் புத்தாண்டில் ரிஷப ராசியினர் முழுக்கமுழுக்க தங்கத்தாலான வேலூர் மாவட்டம் "ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணிதங்க கோயில் சென்று வழிபட பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    சுபகிருது வருட பலன் - 2023

    நினைப்பதை சாதிக்கும் ஆர்வம் மிகுந்த ரிஷப ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில்சொல்வாக்கு, செல்வாக்கு அதிகரிக்க நல்வாழ்த்துக்கள்.

    ராகு கேதுக்கள் ராசிக்கு 12, 6ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்கள். குரு பகவான் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் உலா வருகிறார். சனிபகவான் 9ம் இடத்தில் நிற்கிறார். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும்.உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். புதிய எண்ணங்கள்மற்றும் திட்டங்கள் தோன்றும். சேவை மனப்பான்மையை மிகும். ஆன்மீக தொண்டு நிறுவனங்கள், சங்கங்களில் இணைந்து சேவை செய்வீர்கள். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறுவார்கள் உங்கள் வாழ்வில் நடந்த கெட்ட சம்பவங்களின் தாக்கம் குறையும்.

    தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும்.உங்களின் புகழ்,அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும்.பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் அனைத்துவிதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள். கடந்த ஆண்டு ரிஷப ராசியினர் அனுபவித்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்.

    குடும்பம்: தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவு செய்வீர்கள். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள்வாங்கி மகழ்வீர்கள். வாடகை வீட்டு தொல்லை அகலும். இதுவரை விற்காமல் கிடந்த அசையாச் சொத்துக்கள் விற்று விடும். பல தலைமுறையாகவிற்காமல் கிடந்த குடும்ப சொத்து கூட விற்று விடும். பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தாய், தந்தை வழி உறவுகளிடம் அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு குடும்பத்தில் இணைவீர்கள். பகைமை மறந்து உறவுகள் ஆறுதலாக இருப்பார்கள். அண்டை அயலார் சச்சரவு முற்றிலும் நீங்கும்.

    ஆரோக்கியம்: நாள்பட்ட வியாதிகள் மறையும்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.பயண அலைச்சலால் சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும்.நீண்ட நாட்களாக படுக்கையில் கிடந்தவர்கள் எழுந்து நடமாடுவார்கள். மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கு கூட நோய் தாக்கம் குறையும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான சுகர், பிரஷர் போன்றவற்றிற்கு மாற்று மருத்துவம் நல்ல பலன் தரும். கை, கால் மூட்டு வலி குறையும்.. ஆயுள் தீர்க்கம். சிலருக்கு கண்களில் அறுவை சிகிச்சைகள் செய்ய நேரும்.

    பெண்கள்: தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் ஆதரவும் சொத்தும் கிடைக்கும். பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு நம்பிக்கையை அதிகரிக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குழந்தைகளின் கல்வி ஆர்வம் , முன்னேற்றம் மன நிம்மதி தரும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

    மாணவர்கள்: உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் இந்த குருப் பெயர்ச்சி ரிஷப ராசி மாணவர்களுக்கு நல்ல எதிர் காலத்தை உருவாக்கித்தரும். பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். 12 ம் இடத்திற்கு ராகு செல்வதால்உயர் கல்விக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகிட்டும். அல்லது விடுதியில் தங்கி படிப்பார்கள். நீங்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாட திட்டத்தில் சேர்ந்து படிப்பீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள்: வேலையில்லாமல் திணறிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு.

    முதலீட்டாளர்கள்: சனி மற்றும் குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால்இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில் இருந்த தொழில் கூட விருவிருப்பு அடையும். தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்ச்சிப்பீர்கள். நீண்ட காலமாக உங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமாகிக் கொண்டு இருந்தால் இப்பொழுது வசூலாகும். தொழில்சிறப்பாகஇருந்தாலும் 12ம் இடமான விரைய ஸ்தானத்தில் ராகுஇருப்பதால்எவ்வளவு லாபம் இருந்தாலும் உபரி வருமானம் இருக்காது. கோட்சார குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிலருக்கு அதிக முதலீட்டில் தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் உதயமாகும். ராகு விரய ஸ்தானத்தை கடக்கும் வரை முதலீட்டாளர்கள் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.

    அரசியல்வாதிகள்: 7ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு உண்டு. பொது மக்களின் ஆதரவு. 5ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சியில் உங்களுக்கு தலைமைப் பொறுப்புகள் உண்டு. நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த பதவிகள் தேடி வரும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் தன்னலமற்ற சேவை செய்வீர்கள்.

    கலைஞர்கள்:சுக்ரனின் வீடான ரிஷபத்தில் பிறந்த நீங்கள் கலைத் துறையில் உங்களுக்கென்று தனி இடம் பிடிப்பீர்கள். 5ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் மிகப் பெரிய விருதுகளும், பாராட்டும் கிடைக்கும். அற்புதமான நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

    விவசாயிகள்: நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம்பாதுகாப்பான முறையில் விவசாயம் செய்வீர்கள். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு உபரி உற்பத்தியும், உபரி வருமானமும் கிடைக்கும்.

    ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார். ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராகு/கேதுக்கள் 12, 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்த்துக் கொண்டு இருந்த உத்தியோகத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்வார்கள். சிலருக்கு பார்த்த வேலைக்கு உடனே ஊதியம் வராமல் தடை தாமதமாகும். சிலருக்கு தகாத பெண்களின் நட்பு உருவாகும். கடன் தொல்லை அதிகரிக்கும். தாய்மானுடன் சிறிய மன பேதம் உண்டாகும். சிலருக்கு கண் திருஷ்டி, உடல் அலர்ஜி, செரிமானக் கோளாறு, காய்சல், தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மருத்துவ செலவு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். தொழில் எதிரிகள் உங்களை கண்டு விலகுவார்கள். சேமிப்புகள் கரையும்.

    குரு: 29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 9ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் வெளியூர், வெளிநாட்டு பயணத்தில் தடை, தாமதம் ஏற்படும். தொழில் போட்டி அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளுடன் மனகசப்பு உண்டாகும். தந்தை குடும்பத்தை பிரிந்து தூர தேசம் செல்லலாம்.சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தம் காரணமாகவோபிரிந்து வாழலாம். தொழில் கூட்டாளிகளிடம்கருத்து வேறுபாடு அல்லதுபிரியும்நிலை ஏற்படும்.

    பரிகாரம்: முறையான பித்ருக்கள் வழிபாடு இன்னல்களை நீக்கும்.

    வரவும் செலவும்

    லாப ஸ்தான குருவால் பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். தொட்டது துலங்கும். இது பொற்காலம் என்று சொல்லும் வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும். லாப குருவினால் கிடைக்கும் வருமானத்திற்கு விரய ஸ்தான ராகுசெலவுகளை இழுத்து விடுவார்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×