என் மலர்
ரிஷபம்
2026 மாசி மாத ராசிபலன்
மகிழ்ச்சியான ரிஷப ராசியினரே
பிறக்கப் போகும் மாசி மாதத்தில் உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனியுடன் இணைந்து உச்சம் பெற போகிறார்.
உச்சம் பெற்ற ராசி அதிபதி சுக்கிரனுக்கு வீடு கொடுத்த குரு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது ரிஷப ராசியினருக்கு இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் மீட்டு தரக்கூடிய அதிர்ஷ்டமான மாதமாக அமையப் போவதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் மாதம். புகழ், அந்தஸ்து, கவுரவும் உயரும்.
மன நிறைவும், நிம்மதியும் உண்டாகும்.எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். எந்த சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கூடும். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.ஒழுக்கமே உயர்த்தும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். எண்ணங்களும் லட்சியங்களும் செயல் வடிவம் பெறும் நிம்மதியாக சுதந்திரமாக செயல்படுவீர்கள். குடும்ப உறவுகளின் ஆசைகளை, தேவைகளை நிறை வேற்றுவீர்கள். எதிரில் பார்த்தாலும் பார்க்காமல் விலகிச் சென்ற சகோதரர் போனில் நலம் விசாரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
தந்தை மகன் உறவு சிறக்கும். தந்தை வழி உறவினர்–களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். தம்பதிகள் மிக மகிழ்ச்சியுடன் சந்தோசமாக ஓர் உயிர் ஈருடலாக வாழ்வார்கள். வாழ்க்கைத் துணையின் ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும். கணவன், மனைவி இருவருமே தீர்க்காயுளுடன் வாழும் பாக்கியம் பெறுவார்கள். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் உத்தியோகத்திற்காகவோ கருத்து வேறுபாடு காரணமாகவோ பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ்வார்கள். சிலர் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள். சம்பந்திகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். அண்டை, அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். திருமணம் கை கூடும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். மாணவர்கள் சிந்தனையை ஒரு நிலைப்–படுத்தினால் வளமான எதிர்காலம் உண்டு. உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பொருளாதாரம்
பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து, எதிர்பாராத தன வரவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். சொத்துக்களின் மதிப்பு உயரும். பல தலைமுறையாக விற்காமல் கிடந்த குடும்ப சொத்துக்கள் விற்று விடும்.
முதலீட்டாளர்கள்
பல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். புதிய கூட்டாளிகளை நம்பி அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும். தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். நம்பிக்கையான விசுவாசமான வேலையாட்கள் கிடைப்பார்கள். கடுமையாக உழைக்க நேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் கிடைக்கும். சிலர் நண்பர்கள் அல்லது களத்திரத்துடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த உகந்த காலம். வராக்கடன்கள் வசூலாகும்.
உத்தியோகஸ்தர்கள்
எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். நடப்பவையெல்லாம் நல்லதாகவே நடக்கும்.இதுவரை இருந்த பயம் அகலும்.கடந்த காலத்தில் நிலவிய தடைகள் நீங்கும்.புதிய வேலைக்காக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் பற்றிய எண்ணம் அதிகமாகும். சிலருக்கு உத்தியோக மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.பெரிய பதவிகளும் கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது. வேலையில் நல்ல சம்பளத்துடன் கூடிய இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதே நேரம் வேலையில் கடினமாக உழைக்க நேரும்.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த மாதம் திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும். ஆற்றலுக்கும், திறமைக்கும் பெருமை சேர்க்கும் சம்பவங்கள் நடக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். கட்சியில் ஏதாவது செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். பிறரின் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிலருக்கு மிகப் பெரிய கட்சி மாறி இணையும் வாய்ப்பு கிட்டலாம்.
பெண்கள்
பெண்களுக்கு தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு கிடைக்கும். தாய் மாமா அல்லது தாய்வழி தாத்தா மூலம் நிதி உதவி கிடைக்கலாம். தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. தடை பட்ட சொத்து விற்பனை சாதகமாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். அரசின் நலத்திட்டத்தால் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும்.
கவனம் தேவை:
சூரிய கிரகணம்:
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்தியாவில் கிரகணம் தெரியாது என்றாலும் இந்த காலகட்டத்தில் ராகுவும் செவ்வாயும் நெருக்கமாக பயணிப்பார்கள். ராசிக்கு பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் கிரகணம் நடக்கப் போகிறது. தேவையற்ற அலைச்சலும் மன உளைச்சலும் வரலாம். சொத்துக்கள் வாங்கும் மற்றும் விற்கும் விஷயத்தில் கவனம் தேவை. பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் அவசரப்படக்கூடாது. குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்
இடப்பெயர்ச்சி வீடு மாற்றம் நாடு மாற்றம் ஊர் மாற்றம் வேலை மாற்றம் வரலாம். பெரிய மனிதர்களின் தொடர்பால் சமுதாய அங்கீகாரம் கூடும்.பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். சிலருக்கு வெளி நாட்டு குடியுரிமை கிடைக்கும். வேற்றுமொழி கற்கும் ஆர்வம் கூடும்.
நல்ல திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும். வழக்குகள் சாதகமாகும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும். அதனால் புதிய தொழில் முயற்சியை தவிர்ப்பது நல்லது. அகலக்கால் வைக்க கூடாது. சுய ஜாதக. ரீதியாக ராகு/கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்வது நல்லது.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். உங்கள் ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. தாய் தந்தை, தந்தை வழி உறவுகளுடன் மோதல் கருத்து வேறுபாடு வரலாம். தாய் தந்தையரை அனுசரித்துச் செல்வதால் அவர்களின் ஆசிர்வாதத்தை பெற முடியும். சொத்து வாங்குவது விற்பது ஆகியவற்றில் தவறான விலை நிர்ணயம் ஏற்படலாம். பூமி வாங்கும் விசயத்தில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது சிறப்பு. புதியதாக வாங்கிய சொத்தின் பத்திரப் பதிவு தள்ளிப்போகும். முதல் முறையாக நோய்க்கு வைத்தியம் செய்வது நல்லதல்ல. தாயின் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வரலாம்.
இன்கம்டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் கணக்கை முறையாக வைத்துக் கொள்வது அவசியம். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பெறுவதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் ஜாதக ரீதியான தோஷம் நீங்கும். மன துக்கம் விலகும். காரிய வெற்றி கிடைக்கும்.ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் அகலும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






