என் மலர்
ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்
ரிஷபம்
2025 கார்த்திகை மாத ராசிபலன்
ரிஷப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன - பஞ்சமாதிபதி புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். அந்த வகையில் 'புத சுக்ர யோகம்' ஏற்படுவதால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமியால் லாபம் வந்துசேரும். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் பதிவதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். சுபச்செய்திகள் அதிகம் கேட்கும் மாதம் இது.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகம் என்பதால், இந்த வக்ர காலம் வளர்ச்சி அதிகரிக்கும் காலமாகவே இருக்கும். திட்டமிடாமலேயே சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், இலாகா மாற்றம் ஏற்படலாம். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி பலன் தரும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்ப்பது யோகம்தான். இது ஒரு பொன்னான நேரம் மட்டுமல்ல புதிய திருப்பங்கள் ஏற்படும் நேரமும் ஆகும். அங்குள்ள சூரியன் மற்றும் செவ்வாயோடு சுக்ரன் இணைவதால் 'சுக்ர மங்கள யோகம்' ஏற்படுகிறது. எனவே உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ, தாமதித்த திருமணம் தடையின்றி நடைபெறும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரம் ஆரோக்கியத் தொல்லை உண்டு. அதனால் மனக்கலக்கமும், மருத்துவச் செலவும் அதிகரிக்கும். 'சேமிப்பு கரைகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராமல் வந்துசேரும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொன்னான நேரமாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மண், பூமி வாங்கும் யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். பயணங்களால் பலன் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 25, 26, 27, 30, டிசம்பர்: 1, 7, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
ரிஷபம்
2025 ஐப்பசி மாத ராசிபலன்
ரிஷப ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்குச் சென்று ஆட்சி பெறுகிறார். எனவே மாதத்தின் முற்பாதியைக் காட்டிலும் பிற்பாதி பலன் தரும். எதிர்பார்த்தபடி பொருளாதாரநிலை உயரும். உத்தியோகத்தில் நீடிப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் உண்டு. மனப்பயம் அகன்று மகிழ்ச்சி கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக விளங்குபவர் குரு பகவான். அவர் சுக்ரனுக்கு பகைக்கிரகமாக உச்சம் பெற்றாலும் நவக்கிரகத்தில் சுபகிரகம் என்று செயல்படுவதால், அதன் பார்வைக்குப் பலன் உண்டு. அந்த அடிப்படையில் கல்யாண முயற்சி கைகூடும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். ஆர்வம் காட்டிய புதிய தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். சனி வக்ரம் பெற்றிருந்தாலும் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். ஒரு சில குறுக்கீடுகள் ஏற்படலாம். தைரியத்தோடு எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதால் எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இல்லம் தேடி லாபம் வந்து கொண்டேயிருக்கும். பாக்கிய ஸ்தானாதிபதியாகவும் சனி இருப்பதால், குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இதுவரை குடும்பத்தில் நடைபெறாதிருந்த சுபகாரியம் இப்பொழுது நடைபெறும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். எதிர்பாராத பயணங்களால் லாபம் கிடைக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். தொழில் ரீதியாக முக்கிய முடிவெடுக்கும் பொழுது, அனுபவஸ்தர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. உடன்பிறப்புகளின் வழியில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாகும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசுவழிச் சலுகைகள் கிடைக்கும். ஆபரணப் பொருள் சேர்க்கை உண்டு. அரசாங்க வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். தொழில் போட்டிகள் அகலும். வருமானம் உயரும். வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. 'உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று வருந்தியவர்களுக்கு, இப்பொழுது உரிய பலன் கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு பகை மாறும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 29, 30, நவம்பர்: 2, 4, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்.
ரிஷபம்
2025 புரட்டாசி மாத ராசிபலன்
ரிஷப ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சுக ஸ்தானத்தில் கேதுவோடு சஞ்சரிக்கிறார். 'குரு சந்திர யோக'த்தோடு மாதம் தொடங்குவதால், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புகழ் கூடும். புனிதப் பயணங்கள் உண்டு. நல்ல சந்தர்ப்பங்கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பாதை புலப்படும். வாகன யோகமும், தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் நற்பலன்கள் நடைபெறும். உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். பெரிய மனிதர்களின் உதவியால் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். பிள்ளைகளின் வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு வாங்குவது அல்லது இடம் வாங்கி வீடு கட்டுவது என்ற சிந்தனையை செயல்படுத்த முற்படுவீர்கள். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பதால், பொருளாதார நிலை உச்சம் அடையும். எனவே கடன் சுமை குறையவும் வழிபிறக்கும்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகை கிரகம் ஆவார். இருப்பினும் குருவின் பார்வை சகல தோஷங்களையும் அகற்றும் என்பதால், அவரது பார்வை பதியும் இடங்கள் அத்தனையும் புனிதமடைகிறது. அதன் விளைவாக எண்ணற்ற நற்பலன் உங்கள் இல்லம் தேடி வரலாம். முன்னேற்றம் தரும் குரு பகவானை இக்காலத்தில் முறையாக நீங்கள் வழிபடுவது நல்லது.
குருவின் பார்வை பலத்தால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கருத்து வேறுபாடு அகலும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளமும், குதூகலமான சூழ்நிலையும் உருவாகும். உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் இப்பொழுது விலகுவர். கடை திறப்புவிழா, கட்டிடத் திறப்புவிழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட நாள் எண்ணங்கள் இப்பொழுது நிறைவேறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. பாக்கிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவதால், சில காரியங்களில் திடீர் திடீரென மாற்றம் செய்வீர்கள். வாகனங்களால் பிரச்சினைகள் வரலாம். ஒரு சிலர் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். தொழில், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு வருமானம் உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 21, அக்டோபர்: 3, 4, 6, 7, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
ரிஷபம்
2025 ஆவணி மாத ராசிபலன்
ரிஷப ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். முரண்பாடான இந்தக் கிரகச் சேர்க்கையின் காரணமாக ஏற்றமும், இறக்கமும் கலந்த சூழ்நிலை உருவாகும். ஒரு சமயம் மிதமிஞ்சிய பொருளாதார நிலை இருக்கும். மற்றொரு சமயம் வறட்சி நிலை நிலவும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர், திடீரென மாற்றங்கள் வந்து தேவையைப் பூர்த்தி செய்து கொடுக்கும். அசுர குரு, தேவ குரு ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையும் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால், குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில், உங்கள் ராசிநாதன் சுக்ரன் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும். அவர் அங்குள்ள புதனோடு இணைவதால் 'புத சுக்ர யோகம்' செயல்படுகிறது. எனவே பூமி வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் லாபமும் உண்டு. உடன்பிறப்புகளின் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வழக்குகள் சாதகமாக அமையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் நடத்துபவர்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த மூலதனம் ஏற்படலாம்.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 4-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருக்கும் தொய்வு அகலும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அதன்மூலம் வரும் உதிரி வருமானத்தில் குடும்பச்சுமை கொஞ்சம் குறையும். 'வீடு கட்டியும் நீண்ட நாட்களாக வாடகைக்கு விட முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பது யோகம்தான். எதிர்பாராத விதத்தில் இனிமை தரும் மாற்றங்கள் வந்துசேரும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். துணிந்து நீங்கள் எடுத்த முடிவுகளைக் கண்டு அருகில் இருப்பவர்கள் ஆச்சரியப்படுவர். பூமி பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு. மேல்அதிகாரிகளால் ஏற்பட்ட மனக்குழப்பம் மாறும். கேட்ட நிதியுதவி கிடைக்கும்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதி சுக ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரத்தில் மகிழ்ச்சி வந்து சேரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டு முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் அகலும். கொடுக்கல் - வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி நீடிப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சியில் வெற்றி உண்டு. மாணவ - மாணவி களுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு வாழ்க்கைத் தரம் உயரும். வசதி பெருகும். நல்ல தகவல் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 19, 20, 23, 24, செப்டம்பர்: 5, 6, 9, 10, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
ரிஷபம்
2025 ஆடி மாத ராசிபலன்
ரிஷப ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்ல தனாதிபதி புதனும் தன ஸ்தானத்திலேயே இருக்கிறார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள், இந்த மாதத்தில் துரிதமாக நடைபெறும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள், இப்பொழுது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். 'இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும்' என்றெல்லாம் கனவு கண்டவர்களுக்கு, அந்தக் கனவுகள் நனவாகி சந்தோஷத்தை வழங்கும்.
மிதுன - சுக்ரன்
ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்திற்கு சென்று, அங்குள்ள தனாதிபதி புதனோடு இணைவதால் இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். எதிர்பார்த்த காரியங்கள் எளிதாக நடைபெறும். முன்னேற்றப் பாதையில் இருந்த முட்டுக்கட்டை அகலும். புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பங்கள் தீரும். சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்களின் பழக்கம் கிடைக்கும். எதை எந்த நேரத்தில் செய்யவேண்டும் என்று விரும்பினாலும், அதை அந்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள்.
கன்னி - செவ்வாய்
ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இவர் உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். சப்தம - விரயாதிபதியாக விளங்கும் செவ்வாய், 5-ம் இடத்திற்கு வரும்பொழுது பிள்ளைகள் வழியில் சுபச்செலவு ஏற்படும். அவர்களின் கல்யாணக் கனவு மட்டுமின்றி, கடல்தாண்டிச் சென்று பணிபுரிய வேண்டுமென்ற விருப்பமும், கல்வி மேம்பாட்டிற்கான முயற்சியும் கைகூடலாம். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடி சம்பள உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.
கடக - புதன்
ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சகோதர - சகாய ஸ்தானத்திற்கு வரும்போது உடன்பிறப்புகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். அவர்களின் திருமணத் தடை அகலும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்களும் வந்துசேரும். அதோடு அண்ணன் - தம்பிகளுக்குள் இருந்த பிரச்சினைகள் மறையும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புதனோடு சூரியன் இணைந்து 'புத ஆதித்ய யோகம்' உருவாவதால், தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தரும் எதிரிகளின் பலம் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, இந்த மாதத்தின் முற்பகுதி லாபம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு சொந்த பந்தங்களால் நன்மை ஏற்படும். சொத்துக்களால் லாபமும் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 17, 22, 23, 27, 28, ஆகஸ்டு: 9, 10, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
ரிஷபம்
2025 ஆனி மாத ராசிபலன்
பேச்சால் கவர்ந்திழுக்கும் திறன்பெற்ற ரிஷப ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் மாத தொடக்கத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே அத்தியாவசிய செலவுகளும், ஆடம்பரச் செலவுகளும் அதிகரிக்கும். லாபாதிபதி குரு தன ஸ்தானத்தில் இருப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்துசேரும். என்றாலும், திடீர் திடீரென செலவுகள் அதிகரிக்கும். ஒருசிலருக்கு இடமாற்றமும், வீடுமாற்றமும் அமையும். வீண் விரயங்களிலிருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.
கடக - புதன்
ஆனி மாதம் 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தனாதிபதியாகவும், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் புதன், சகாய ஸ்தானத்திற்கு வரும்பொழுது எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் சிறப்பாக அமையும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். பாகப்பிரிவினைகளுக்காக எடுத்த முயற்சி பலன் தரும். நெருங்கிய நண்பர்கள் உங்களின் நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். வருமானம் உயர வழிபிறக்கும்.
ரிஷப - சுக்ரன்
ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும்போது அற்புதமான நேரமாகும். எதை எந்த நேரம் செய்ய நினைத்தீர்களோ அதை உடனடியாகச் செய்யும் அளவிற்கு பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கேட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணத் தடை அகலும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். பழைய தொழிலை விட்டுவிட்டுப் புதிய தொழில் தொடங்கும் சிந்தனை அதிகரிக்கும். கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரி்க்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கின்றார். சனியோடு ராகுவும் கூட்டுக்கிரக சேர்க்கையாக இருக்கின்றது. எனவே மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். ஆரோக்கியத் தொல்லையும், மருத்துவச் செலவும் உண்டு. கடன்சுமை காரணமாக வாங்கிய இடத்தையோ, வீட்டையோ விற்க நேரிடும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்பைக் கொடுத்து கவலையை உருவாக்குவர். இதுபோன்ற நேரங்களில் யோகபலம் பெற்ற நாளைத் தேர்ந்தெடுத்து அங்காரகனுக்கும், சனிக்கும் உரிய வழிபாடுகளை முறையாகச் செய்வது நல்லது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு சேமிப்பு உயரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
இம்மாதம் முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றம் வழங்கும்.
ரிஷபம்
2025 சித்திரை மாத ராசிபலன்
எவரிடமும் எளிதில் பழகும் ரிஷப ராசி நேயர்களே!
விசுவாவசு வருடம் புத்தாண்டில் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் குருவோடு பரிவர்த்தனை யோகமும் பெறுகிறார். நீச்சம் பெற்ற புதனோடு இணைந்து 'நீச்ச பங்க ராஜயோக'த்தை உருவாக்குகிறார்.
'புத சுக்ர யோக'மும் இருக்கிறது. எனவே மனக்கவலை மாறும். பணக்கவலை தீரும். புதிய முயற்சிகள் யாவிலும் வெற்றி கிட்டும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியிலும் ஆதாயம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும் நேரம் இது. விரய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் மருத்துவச் செலவு உண்டு.
குரு- சுக்ர பரிவர்த்தனை
உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம்பெற்ற சுக்ரனோடு பரிவர்த்தனை யோகம் பெறுகிறார். எனவே தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வருமானம் வந்துசேரும். இதுவரை கடுமையாக முயற்சித்தும் முடிவடையாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக முடிவடையும். தனவரவு திருப்தி தரும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்பு வியக்க வைக்கும்.
கும்ப -ராகு, சிம்ம- கேது
சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக தொழில் வளம் சிறப்பாக அமையும். பழைய நிறுவனங்களை கொடுத்துவிட்டு, புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற முன்வருவீர்கள்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து, சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். சுக ஸ்தான கேதுவின் பலத்தால் ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. பயணம் அதிகரிப்பதன் காரணமாக உடல் அசதி, காலம் தாழ்ந்து சாப்பிடுதல் உருவாகும். இக்காலத்தில் சர்ப்ப கிரகங்களுக்குரிய ஆலயங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வருவது நல்லது.
மேஷ - புதன் சஞ்சாரம்
சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் புதன் வருவதால் 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு' என்ற நியதிப்படி வருமானம் அதிகரிக்கும். ஆனால் இருமடங்கு செலவு ஏற்படும். குடும்பப் பிரச்சினை கூடும். பெற்றோர் மற்றும் சகோதரர்கள் வாயிலாக வரும் பிரச்சினையால் மன அமைதி குறையும். இடமாற்றம் மற்றும் வீடு மாற்றம் செய்ய முன்வருவீர்கள். மனக்குழப்பம் அதிகரிக்கும் நேரம் இது.
மிதுன - குரு சஞ்சாரம்
சித்திரை 28-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வருகிறார். இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக அவரது பார்வை பதியும் இடங்கள் எல்லாம் புனிதமடைகிறது. எனவே உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வழிபிறக்கும். தொழில் மாற்ற சிந்தனை அதிகரிக்கும். கூட்டாளிகளை விலக்கிவிட்டுத் தனித்து இயங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் இருந்த குறுக்கீடு அகலும். வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் மூலம் அனுகூலத் தகவல் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொன்னான நேரம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் இனிமை தரும். கலைஞர்களுக்கு கைநழுவிச் சென்ற வாய்ப்புக் கைகூடிவரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆடை- ஆபரண சேர்க்கை உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஏப்ரல்: 22, 23, 25, 26, மே: 2, 3, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
ரிஷபம்
2025 பங்குனி மாத ராசிபலன்
உழைப்பே உயர்வுக்கு வழி என்று சொல்லும் ரிஷப ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். அதே நேரம் லாபாதிபதி குரு, உங்கள் ராசியில் இருந்து பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். இதன் விளைவாக தடைப்பட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும்.
நினைத்த காரியங்களை நினைத்த நேரத்தில் செய்ய இயலும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்விக்கும். என்னயிருந்தாலும் ஜென்ம குருவின் ஆதிக்கம் இருக்கும்வரை கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுவது நல்லது.
மீன - புதன் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் சஞ்சரிக்கும் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தன - பஞ்சமாதிபதி வலிமை இழப்பது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும்.
என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. குறிப்பாக குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும்.
கும்ப - புதன் சஞ்சாரம்
பங்குனி மாதம் 4-ந் தேதி கும்ப ராசிக்கு வக்ர இயக்கத்தில் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு புதன் வருவது யோகம்தான். தனாதிபதியான புதன் தொழில் ஸ்தானத்திற்கு வருகையில், தொழில் வளர்ச்சி திருப்தி தரும். குறுக்கீடு சக்திகள் அகலும். புதிய தொழில் தொடங்கும் சிந்தனை மேலோங்கும்.
தொழிலுக்கு மேலும் முதலீடு செய்ய நிதி நிறுவனங்களின் உதவியும், ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். தொழிலில் இணைந்து செயல்பட்ட பழைய கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதிய கூட்டாளிகளை சேர்த்துக்கொள்வது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு உண்டு.
மீன - சுக்ரன் வக்ரம்
மீன ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். மேலும் குருவோடு பரிவர்த்தனை யோகமும் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான்.
எதிரிகளின் பலம் குறையும். இடையூறு சக்திகள் தானாக விலகும். கல்யாணம், கடை திறப்பு விழா, கட்டிடத் திறப்பு விழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு, புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
கடக - செவ்வாய்
பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் நீச்சம் பெறும் இந்த நேரத்தில், குடும்பப் பிரச்சினை தலைதூக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் தடுமாற்றம் ஏற்படும். இடம், பூமி வாங்குவதிலோ, விற்பதிலோ சிக்கல்களும், சிரமங்களும் வரலாம். மன பயம் அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்க்க வேண்டிய நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்குப் படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். நூதனப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 16, 17, 25, 26, 29, 30, ஏப்ரல்: 4, 5, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
ரிஷபம்
2025 மாசி மாத ராசிபலன்
மற்றவர்களை சிந்திக்க வைக்கும் விதம் பேசும் ரிஷப ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றுள்ளார். அவர், குருவோடு பரிவர்த்தனை யோகமும் பெற்றிருக்கிறார். எனவே இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
மனக்கவலை மாறும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். சம்பள உயர்வு பற்றி மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரபலங்களின் அறிமுகத்தால் பெருமை காண்பீர்கள்.
சூரியன் - சனி சேர்க்கை
இந்த மாதம் முழுவதும் தொழில் ஸ்தானத்தில் சூரியனும், சனியும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு அதிபதியான சூரியனும், 10-ம் இடத்திற்கு அதிபதியான சனியும் இணைவதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். இடமாற்றத்தை விரும்புபவர்களுக்கு அது கைகூடும். வருங்காலம் பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட விரயங்கள் அகலும்.
'வாங்கிய இடத்தையோ, வீட்டையோ விற்று விட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதுபோன்ற இடத்தை மீண்டும் வாங்கும் யோகம் உண்டு. இருப்பினும் சூரியனும், சனியும் அடுத்தடுத்து இருக்கும் தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். உங்கள் ராசிக்கு சப்தம - விரயாதிபதியானவர் செவ்வாய். அவர் வலிமையடையும் இந்த நேரத்தில், கல்யாணம் போன்ற சுபகாரியங்களுக்காக விரயம் செய்வீர்கள்.
வாழ்க்கைத் துணையின் வேலையில் எதிர்பார்த்த மாற்றம் உருவாகும். அவர்களின் மேற்படிப்பிற்காகவோ, வேலை சம்பந்தமாகவோ எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்லாமல், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கும் யோகம் உண்டு.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் புதன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் வலிமை இழக்கும் போது, பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய நேரம் இது.
வருமானப் பற்றாக்குறை ஏற்பட்டாலும், கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவரும். அதே நேரம் பூர்வீக சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. கட்டிய வீட்டினை கடன் சுமையின் காரணமாக விற்கும் சூழ்நிலை உருவாகும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதத் தொடக்கத்திலேயே மகிழ்ச்சியான தகவல் உண்டு. கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகம் பெறவேண்டும் என்ற எண்ணம் உருவாகும். பெண்கள், அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல முயல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 13, 14, 26, 27, மார்ச்: 2, 3, 8, 9, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
ரிஷபம்
2025 தை மாத ராசிபலன்
ரிஷபம்
எதையும் ஓரிரு முறை யோசித்து செய்யும் ரிஷப ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சனியும் இணைந்திருக்கிறார். எனவே தொட்டது துலங்கும். தொழில் வளம் மேலோங்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய மகிழ்ச்சி தகவல் கிடைக்கும். நிரந்தர வருமானம் அமைய வழியமைத்துக் கொடுக்கும் மாதம் இது. உங்கள் ராசியில் குரு வக்ரம் பெற்றிருப்பதால் படிப்படியாக நன்மைகள் நடைபெறும்.
மிதுன - செவ்வாய்
தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்திற்கு வரும்போது தன விரயங்கள் ஏற்படும். எனவே வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற செலவுகளை மேற்கொண்டால், வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம். உத்தியோகத்தில் ஊர் மாற்றம் விரும்பும் விதத்தில் அமையும். பயணங்கள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு சம்பள உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டு.
மகர - புதன்
உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். பாக்கிய ஸ்தானத்திற்கு புதன் வருவது, பொன்னான நேரமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கலில் இருந்த பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு ஊதிய உயர்வும், கேட்ட சலுகைகளும் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமணம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் எடுத்த முயற்சி வெற்றியாகும். பாகப்பிரிவினை இனிதாக முடியும்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு தன- பஞ்சமாதிபதியான புதன், தை 23-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் தொழில் ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம், தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொட்டது துலங்கும். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். நெடுநாட்களாக நடைபெறாமல் இருந்த ஒருசில காரியங்கள் இப்பொழுது நடைபெறத் தொடங்கும். வாடகைக் கட்டிடத்தில் நடக்கும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும்.
குரு வக்ர நிவர்த்தி
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு, தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். நவக்கிரகத்தில் சுபக்கிரகமாக விளங்குபவர், குரு. அவர் உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகம் என்பதால், அவர் வக்ர நிவர்த்தியாவது அவ்வளவு நல்லதல்ல. இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, புதிய வாய்ப்புகள் வந்தாலும், அதை உபயோகப் படுத்த இயலாது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைகூடிவரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு தலைமைப் பொறுப்புகள் தானாக தேடி வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டு. கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். மாணவ - மாணவிகள், தங்களின் மதிப்பெண் உயர்வதற்காக எடுத்த முயற்சி வெற்றிபெறும். பெண்களால் குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல் சரளமாக இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 14, 17, 18, 30, 31, பிப்ரவரி: 2, 3, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
ரிஷபம்
2024 மார்கழி மாத ராசிபலன்
முடியாத காரியத்தைக் கூட முடித்துக் காட்டும் ரிஷப ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரம் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிநாதனுக்கு பகைக்கிரகமான குரு பகவான் வக்ரம் பெற்று இருப்பதால், நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். வருமானம் உயரும். வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவிசெய்வர். பணிபுரியும் இடத்தில் பாராட்டும், புகழும் அதிகரிக்கும். சென்ற மாதத்தில் செயல்பட்டு பாதியில் நின்ற பணிகள், இப்பொழுது முடிவடைந்து ஆதாயம் கிடைக்கும்.
செவ்வாய் - சுக்ரன் பார்வை
மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். கும்ப ராசிக்கு சுக்ரன் சென்ற பிறகும் கூட, சப்தம- விரயாதிபதியான செவ்வாய் தொடர்ந்து பார்க்கிறார். எனவே இந்த மாதம் முழுவதும் செவ்வாய் - சுக்ரன் பார்வை இருக்கிறது. இதன் விளைவாக என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று ஆதாயம் கிடைக்கும்.
இடம் வாங்கும் யோகம், வீடு கட்டும் யோகம் உண்டு. அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரலாம். பெற்றோரின் உடல்நிலை சீராக வழிபிறக்கும். எதிரிகளின் தொல்லை குறையும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் வலிமை ஏற்படும் நேரம் இது.
குரு வக்ரம்
உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவதால் சில நல்ல காரியங்கள் நடைபெறலாம். குறிப்பாக வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்துகொள்வீர்கள். வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் இருப்பவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, உத்தியோகம் சம்பந்தமாகவோ முயற்சி செய்திருந்தால் அதில் வெற்றி வந்துசேரும்.
கும்ப-சுக்ரன்
மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் சுக்ரன். உங்கள் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிப்பதால், வியாபாரத்தில் கணிசமான லாபம் கைக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். உத்தியோகத்தில் உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.
தனுசு-புதன்
மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சூரியனோடு இணைந்து புத - ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். இது ஒரு நல்லநேரம்தான். தொட்டது துலங்கும். தொழில் வெற்றிநடை போடும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொண்டு, புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். மொத்தத்தில் மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும் நேரமிது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு கல்யாணக் கனவு நனவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 20, 21, 22, ஜனவரி: 1, 2, 3, 6, 7, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
ரிஷபம்
2024 கார்த்திகை மாத ராசிபலன்
உழைப்பே உயர்வுக்கு வழி என்று சொல்லும் ரிஷப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் மறைந்திருக்கிறார். 6-க்கு அதிபதி மறைவதால் 'விபரீத ராஜயோக' அடிப்படையில் திடீர் திடீரென நல்ல மாற்றங்கள் உருவாகும்.
திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்த, யாருடைய உதவியேனும் உங்களுக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும். லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உத்தியோக முன்னேற்றம், தொழில் வளர்ச்சி போன்றவை இப்பொழுது படிப்படியாக நடை பெறத் தொடங்கும்.
குரு வக்ரம்
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் அடைகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியாக விளங்குபவர், குரு. அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடு கட்டுவீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். நீங்கள் எடுத்த முயற்சியின் காரணமாக, பிறர் போற்றும் அளவிற்கு உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.
தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகல, அதிகார வர்க்கத்தினரின் ஆதரவை நாடுவீர்கள். வெளிநாட்டு முயற்சியில் தடை உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உங்கள் சகப் பணியாளர்களிடம் உங்கள் முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
சனி - செவ்வாய் பார்வை
கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் இருக்கும் சனியைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே இவரது பார்வை பலனால் வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். 'உறவினர்கள் சிலர் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறார்களே' என்று கவலைப்படுவீர்கள்.
உடன்பிறப்புகளின் அனுசரிப்பு குறையலாம். ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் சுமுகமாக நடந்துகொள்ளுங்கள். வாகன வழியில் சில பிரச்சினைகள் வரலாம். பணப் பற்றாக்குறையால் கவலைப்படுவீர்கள்.
மகர - சுக்ரன்
கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 9-ம் இடத்திற்கு செல்லும்போது நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். அரசு வழியில் செய்த முயற்சி கைகூடும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு உண்டு. உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டு, புதிய ஆபரணங்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும்.
செவ்வாய் வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடத்திற்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவதால், இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். திருமணத்தடை அகலும். திடீர் விரயங்கள், நல்ல விரயங் களாக மாறும். பெற்றோரின் ஆதரவோடு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவி களுக்கு நினைவாற்றல் அதிகரிக்க, பயிற்சி மிகவும் அவசியம். பெண்கள், தங்களின் பிரச்சினைகளில் இருந்து விடுபட வாய்ப்பு உண்டு. மருத்துவச் செலவுகளை தவிர்க்க இயலாது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 19, 20, 23, 24, டிசம்பர்: 6, 7, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.






