என் மலர்
ரிஷபம்
2025 புரட்டாசி மாத ராசிபலன்
ரிஷப ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சுக ஸ்தானத்தில் கேதுவோடு சஞ்சரிக்கிறார். 'குரு சந்திர யோக'த்தோடு மாதம் தொடங்குவதால், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புகழ் கூடும். புனிதப் பயணங்கள் உண்டு. நல்ல சந்தர்ப்பங்கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பாதை புலப்படும். வாகன யோகமும், தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் நற்பலன்கள் நடைபெறும். உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். பெரிய மனிதர்களின் உதவியால் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். பிள்ளைகளின் வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு வாங்குவது அல்லது இடம் வாங்கி வீடு கட்டுவது என்ற சிந்தனையை செயல்படுத்த முற்படுவீர்கள். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பதால், பொருளாதார நிலை உச்சம் அடையும். எனவே கடன் சுமை குறையவும் வழிபிறக்கும்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகை கிரகம் ஆவார். இருப்பினும் குருவின் பார்வை சகல தோஷங்களையும் அகற்றும் என்பதால், அவரது பார்வை பதியும் இடங்கள் அத்தனையும் புனிதமடைகிறது. அதன் விளைவாக எண்ணற்ற நற்பலன் உங்கள் இல்லம் தேடி வரலாம். முன்னேற்றம் தரும் குரு பகவானை இக்காலத்தில் முறையாக நீங்கள் வழிபடுவது நல்லது.
குருவின் பார்வை பலத்தால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கருத்து வேறுபாடு அகலும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளமும், குதூகலமான சூழ்நிலையும் உருவாகும். உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் இப்பொழுது விலகுவர். கடை திறப்புவிழா, கட்டிடத் திறப்புவிழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட நாள் எண்ணங்கள் இப்பொழுது நிறைவேறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. பாக்கிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவதால், சில காரியங்களில் திடீர் திடீரென மாற்றம் செய்வீர்கள். வாகனங்களால் பிரச்சினைகள் வரலாம். ஒரு சிலர் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். தொழில், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு வருமானம் உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 21, அக்டோபர்: 3, 4, 6, 7, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.






