search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.3.2023 முதல் 13.4.23 வரை

    பிறரை பேச்சால் வசப்படுத்தும் வல்லமை பெற்ற ரிஷப ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரய ஸ்தானத்தில் ராகுவோடு கூடி சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் விரயாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். எனவே கடினமாக உழைத்தால் மட்டுமே தொழிலில் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். எதிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படுவதன் மூலமே நிம்மதி கிடைக்கும். நிலையான வருமானத்தையும் கைப்பற்றிக் கொள்ள இயலும்.

    செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவது அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு சப்தமாதிபதியாகவும், களத்திர ஸ்தானாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். தேவையற்ற வீண் பேச்சுக்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு குந்தகம் விளைவிக்கும். வாழ்க்கைத் துணை பணிபுரியும் இடத்தில் மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தால் இனிமை தராத மாறுதல்கள் கிடைக்கும். உழைப்பின் பயனை அடைய முடியாமல் சில இடையூறுகள் ஏற்படலாம். அசையா சொத்துகள் வாங்கும் பொழுது பத்திரங்களை சரிபார்த்து வாங்குவது நல்லது. விரயங்களை சமாளிப்பது உங்களுக்கு கைவந்த கலையாகும்.

    மேஷ - புதன்

    பங்குனி 15-ந் தேதி, உங்கள் ராசிக்கு தனாதிபதியான புதன் விரய ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கிறார். எனவே விரயங்கள் கூடுதலாக இருக்கும். குடும்பச்சுமை அதிகரிக்கும். வரவு இல்லாமல் கூட சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கி, சங்கிலித் தொடர் போல கடன்சுமை அதிகரிக்கலாம். எனவே இக்காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செய்வதே நல்லது. வீட்டுச் செலவுகளில் தாராளம் காட்ட வேண்டாம். கட்டுப்பாடான வாழ்க்கையே வெற்றிக்கு வித்திடும். பஞ்சமாதிபதியாகவும், புதன் விளங்குவதால் பிள்ளைகளால் விரயங்கள் அதிகரிக்கலாம். அவர்களின் கல்விச் செலவு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் செலவிடும் சூழ்நிலை உண்டு.

    ரிஷப - சுக்ரன்

    பங்குனி 24-ந் தேதி உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால் உடல்நலம் சீராகும். உற்சாகம் குடிகொள்ளும். கடன்சுமை குறைந்து கவலைகள் பறந்தோடும். அந்தஸ்து உயரும். அடுத்தவர்கள் மதிக்கும் அளவுக்கு வாழ்க்கை அமையும். செய்தொழிலில் மேன்மைபெற்று சிறப்புகள் தேடிவரும். கைதவறிப் போனவைகள் கச்சிதமாய் திரும்பிவரும். உத்தியோக உயர்வால் உள்ளம் மகிழ்வீர்கள். நற்செய்தியை சுமந்துகொண்டு நாளும் நண்பர்கள் வருவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் நடத்துபவர்கள் போட்டிகளை முறியடித்து வெற்றி காண்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சி தரும் தகவல்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு இல்லம் தேடி வரும். மாணவ-மாணவியர்களுக்கு விரும்பிய துறையில் மேற்படிப்பு அமையும். பெண்களுக்குப் பிள்ளைச் செல்வங்களால் பெருமை உண்டு. கணவன் - மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விருப்ப ஓய்வுபெறும் சிந்தனை மேலோங்கும்.

    இம்மாதம் அம்பிகை வழிபாடு அனைத்து யோகங் களையும் வழங்கும்.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 18, 19, 22, 23, 29, 30, ஏப்ரல்: 2, 3.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    13.2.2023 முதல் 14.3.2023 வரை

    விடாமுயற்சியால் வெற்றியை எட்டிப்பிடிக்கும் ரிஷப ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே விரயாதிபதி செவ்வாய் வீற்றிருக்கிறார். எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடும். இருப்பினும் லாபாதிபதி குரு, லாப ஸ்தானத்தில் இருப்பதால் விரயம் வருவதற்கு முன்னதாகவே வரவு வந்துசேரும். சேமிக்க இயலாமல் போனாலும் செயல்பாடுகளில் வெற்றி உண்டு.

    மாதத் தொடக்கத்தில் 6-ல் கேதுவும், 12-ல் ராகுவும் இருப்பதால் பயணங்கள் அதி கரிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் சிலர் செயல்பட்டு உங்கள் முன்னேற்றத்தை தடுக்க நினைக் கலாம். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவதால் சகோதர ஸ்தானம், புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம் பலப்படுகிறது. எனவே உடன்பிறப்புகளின் உதவியோடு ஒரு நல்ல காரியம் இல்லத்தில் நடக்கலாம். கல்யாண முயற்சிகள் கைகூடும்.

    உச்ச சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். அதோடு உங்கள் ராசிநாதனாகவும் விளங்கும் சுக்ரன், லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் இது ஒரு பொற்காலமாக அமையும். எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் பல நடைபெறும். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அரசு வேலைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தால், அது பலன் தரும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் மேற்படிப்பு மற்றும் வேலை சம்பந்தமான வெளிநாடு முயற்சி கைகூடும்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். தனாதிபதி நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. வருமானப் பற்றாக்குறை ஏற்படும். 'வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படுகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. கொள்கைப் பிடிப்போடு செயல்பட முடியாது. புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டினாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்வதில் சிக்கல்கள் உருவாகும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிநாதன் சுக்ரன், மாசி 29-ந் தேதி விரய ஸ்தானத்திற்குச் செல்கிறார். இக்காலத்தில் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக இடம், பூமி விற்பனை நடைபெறும். இனிய உறவுகள் பகையாகலாம். கடுமையாக முயற்சித்தாலும், காரியம் கடைசி நேரத்தில்தான் கைகூடும். ஆரோக்கியத் தொல்லை உண்டு. ஆதாயம் தராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்றவர்களுக்கு பிரச்சினை ஏற்படலாம்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் வாக்குவாதம் உண்டாகும். தேவையற்ற வழியில் வருமானம் செலவாகும். குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தேக்கநிலை வரலாம். தெளிந்த மனத்தோடு செயல்பட இயலாது. இந்த காலகட்டத்தில் யோக பலம் பெற்ற நாளில் அங்காரக வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

    இம்மாதம் பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 19, 20, 23, 24, மார்ச்: 2, 3, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    16.12.22 முதல் 14.1.23 வரை

    தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆற்றலைப் பெற்ற ரிஷப ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே சுபச்செலவுகள் அதிகரிக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.

    புதன் வக்ர இயக்கம்

    மார்கழி 3-ந் தேதி, தனுசு ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். வாக்கு, தனம், குடும்பம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், வக்ரம் பெற்று இப்படி வலிமை இழப்பது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ளமாட்டார்கள். பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகி மறையும். குழந்தைகளை நெறிப்படுத்தி வளர்ப்பதோடு உங்கள் மேற்பார்வையிலும் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் இடத்தில் பிரச்சினை மேல் பிரச்சினை அதிகரிக்கும்.

    மகர - சுக்ரன் சஞ்சாரம்

    மார்கழி 15-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கும் 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும். எதிரிகள் விலகுவர். லாபம் திருப்தி தரும். புதியவர்களின் தொடர்பால் பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொள்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும்.

    புதன் வக்ர நிவர்த்தி

    மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் நிறைய மாற்றங்களை சந்திக்கப் போகிறீர்கள். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். நிறைந்த மனதோடு நிம்மதி கிடைக்கும் நேரம் இது. மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மார்கழி 29-ந் தேதி ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான அவர், வக்ர நிவர்த்தியாவதால் இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வருமானம் கூடும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அதிக சம்பளத்துடன் அழைப்புகள் வரலாம்.

    உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கும் அதிபதியாக செவ்வாய் விளங்குவதால் விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். என்றாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. உடன்பிறப்புகளால் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பணிநிரந்தரமாகும். பயணங்களால் பலன் கிடைக்கும் நேரம் இது.

    இம்மாதம் பிரதோஷ காலத்தில் சிவன், உமையவள் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 26, 27, 30, 31, ஜனவரி: 11, 12. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    17.11.21 முதல் 15.12.21 வரை

    நாகரிகமான முறையில் பேசி எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ரிஷப ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். 6-க்கு அதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது, விபரீத ராஜயோக அடிப்படையில் நல்ல வாய்ப்புகள் பலவும் இல்லம் தேடி வரலாம்.

    செவ்வாய்-சனி பார்வைக் காலம்

    மாதத் தொடக்கத்தில் இருந்து கார்த்திகை 20-ந் தேதி வரை செவ்வாய்-சனியின் பார்வை இருக்கின்றது. மகரத்திலுள்ள சனி துலாத்தில் உள்ள செவ்வாயைப் பார்க்கின்றார். செவ்வாய் மகரத்திலுள்ள சனியைப் பார்க்கின்றார். யோககாரகன் சனியை விரயாதிபதி செவ்வாய் பார்ப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். செவ்வாயோடு புதனும் இருப்பதால் உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவதுடன், பொருளுதவியும் செய்வீர்கள்.

    விருச்சிக புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை முதல் நாளே விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் வரும்பொழுது குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலைவாய்ப்பு கிடைக்கலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    தனுசு புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை 18-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு சேர்ந்து புத-சுக்ர யோகத்தை உருவாக்குகின்றார். இதன் விளைவாக ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரலாம். வீடு மாற்றங்கள் அல்லது வீடு வாங்கும் முயற்சி பற்றிச் சிந்திப்பீர்கள். வைத்திருக்கும் பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டுப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் வந்து சேரலாம்.

    மகர சுக்ரனின் சஞ்சாரம்

    கார்த்திகை 19-ந் தேதி மகர ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் நேரமாகும். பயணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு உறுதுணைபுரிவர். உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

    விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் சகோதர ஒற்றுமை பலப்படும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். இடம், பூமி சேர்க்கையும் ஏற்படும். உற்சாகத்துடன் செயல்படும் விதத்தில் உடல்நலனும் இடம் கொடுக்கும். துர்க்கையை வழிபடுவதன் மூலம் துயரங்களிலிருந்து விடுபடலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 22, 23, 27, 28, டிசம்பர்: 8, 9, 12, 13,

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    சமூக சேவையில் ஈடுபட்டு பிறருக்கு உதவ விரும்பும் ரிஷப ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் மாதத் தொடக்கத்திலேயே சொந்த வீட்டிற்குச் சென்று பலம் பெறப் போகிறார். எனவே ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல் அதிகம் கிடைக்கும்.

    துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிநாதனாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், ஐப்பசி 2-ந் தேதி தன் சொந்த வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். 6-க்கு அதிபதி 6-ல் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், ஜீவன ஸ்தானம் வலுவடைகிறது. எனவே தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தரப் பணி அமையும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து, பொருளாதாரம் உயர வழி வகுத்துக் கொடுப்பர். உறவினர் பகை அகலும். நீண்ட நாளாக நடைபெற்று வந்த வழக்குகள், உங்களுக்கு சாதகமாக முடியலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரம் இது.

    துலாம் - புதன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும்.

    மிதுன - செவ்வாய் வக்ரம்

    ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியாகவும், சப்தமாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய் வக்ரம் பெறுவதால், விரயங்கள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். அதே நேரத்தில் வீட்டில் குழப்பங்கள் அதிகரிக்கும். இல்லத்தில்உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வது அரிது. பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்துகொள்ளுங்கள். மேலதிகாரிகள் உங்களிடம் அதிக பணிச் சுமையை திணிக்கலாம். வீடு தேடி வந்த வரன்கள் முடிவடையாமல் போகலாம். வெளிநாட்டு உத்தியோகம் சம்பந்தமாக ஏற்பாடு செய்தவர்களுக்கு அது கைகூடுவது தாமதமாகும். தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    விருச்சிக - புதன் சஞ்சாரம்

    ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதி யான புதன், சப்தம ஸ்தானத்திற்கு வரும் போது பணப் புழக்கம் சரளமாக இருக்கும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக் கசப்புகள் மாறும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி வந்துசேரும். உத்தி யோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

    ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல் கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் சப்தம ஸ்தானத்திற்கு வருகையில், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர் தனவரவும் உண்டு. அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் முயற்சி கை கூடும். வாசல் வரை வந்து கை நழுவிப் போன வரன்கள், மீண்டும் வந்து சேரும். சுப விரயங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    குரு வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இது ஒரு வழிக்கு நன்மைதான். பொருளாதார பற்றாக்குறை அகலும். அதே நேரம் உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகை கிரகம் என்பதால், சில நேரங்களில் மனஅமைதி குறைவு உண்டாகலாம். வருமானம் வந்தவுடனேயே செலவாகிவிடும். பயணங்கள் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 21, 22, நவம்பர்: 1, 2, 5, 6, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    18.9.22 முதல் 17.10.22 வரை

    மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் உன்னத குணம் பெற்ற ரிஷப ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி புதனோடு இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 'புத சுக்ர யோகம்' ஏற்படுகிறது. எனவே பொருளாதார விருத்தி அதிகரிக்கும்.

    கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

    புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதனும், 6-க்கு அதிபதியுமான சுக்ரன் நீச்சம் பெறுவதால், ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. தொழிலில் மந்த நிலை ஏற்படும். பங்குதாரர்கள் விலக நேரிடலாம். இல்லத்தில் இதுவரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    புரட்டாசி மாதம் 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் உச்சம் பெறுவது நன்மைதான். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப பிரச்சினை படிப்படியாகத் தீரும். கொடுக்கல் - வாங்கலில் நிறைவு ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், 2-ல் சஞ்சரிக்கும் பொழுது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வரலாம். விரயங்கள் அதிகரிக்கும் என்பதால், அதனை சுபவிரயங்களாக மாற்றிக் கொள்ளுங்கள். துணிவும், தன்னம்பிக்கையும் தேவைப்படும். தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடுகள் அவசியம். மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். இதனால் தந்தை வழி உறவில் விரிசல் ஏற்படலாம். பூர்வீக சொத்து பிரச்சினைஅதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. கொடுக்கல் -வாங்கல்களில் கவனம் தேவை.

    சனி வக்ர நிவர்த்தி

    புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி, வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடு அகலும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அண்ணன் - தம்பிக்குள் இருந்த உரசல்கள் மாறும். எண்ணங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறும். தொழிலுக்கான புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்து மற்றும் வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு.

    இம்மாதம் வராஹி வழிபாடு வளர்ச்சியைக் கொடுக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 23, 24, அக்டோபர்: 5, 6, 9, 10, 16, 17.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் வரவு திருப்தி தரும். சுப விரயங்களும் அதிகரிக்கும். கணவன் - மனைவி உறவு பலப்படும். உங்கள் பெயரிலேயே இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. பூர்வீக சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்புகள் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சனியின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.8.2022 முதல் 17.9.2022 வரை

    சமூக சேவையில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவ நினைக்கும் ரிஷப ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

    சிம்ம - சூரியன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சூரியன். அவர் அங்கேயே மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். கடன்சுமை குறையும். கல்வி, கலைகளில் தேர்ச்சி பெற எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    ஆவணி 8-ந் தேதி, கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், கன்னி ராசியில் உச்சம் பெறுவதால் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். பூமி விற்பனையால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிப்பது இரண்டாம் இடமாகும். எனவே கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

    வக்ர புதன் சஞ்சாரம்

    ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுவதால், எதிர்பாராத வகையில் பிரச்சினைகள் உருவாகும். ஆகையால் குடும்பப் பெரியவர்களை ஆலோசித்து முடிவெடுங்கள். கொடுக்கல்- வாங்கல்களில் சிலருக்கு ஏமாற்றம் வந்து சேரும். தன்னிச்சையாகச் செயல்பட இயலாது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள்.

    சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

    ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் போது, நல்ல காரியங்கள் பல இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் வந்துசேரும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். பயணங்கள் பலன் தரும். வீடு, இடம் வாங்கும் யோகம் வாய்க்கும்.

    குரு வக்ரமும், சனி வக்ரமும்

    மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் உள்ளனர். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகை கிரகம் ஆவார். எனவே குருவின் வக்ர காலம் நற்பலன்களை வழங்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் போட்டிகள் அகலும். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி வக்ரம் பெறுவதால், சுயதொழில் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

    இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் விநாயகப்பெருமானை வழிபட்டால் நல்லது நடக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 22, 23, 27, 28, செப்டம்பர்: 8, 9, 12, 13மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புத்திர ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவ தோடு இனிமை தரும் விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படும்.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17-07-2022 முதல் 16-08-2022 வரை

    கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் ரிஷப ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும்.

    ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்பர். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு.

    ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் சகாய ஸ்தானத்திற்கு வரும்போது நல்ல காரியங்கள் பல இல்லத்தில் நடைபெறும். நீங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருந்த முன்னேற்றம் வந்து சேரும். வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டு, புதிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகை கிரகமாகும். எனவே அவர் வக்ரம் பெறுவது நன்மை தான். என்றாலும், லாபாதிபதியான குருவால் சில சமயங்களில் பொருளாதார சிக்கல்கள் ஏற்படும். வெளிநாட்டு முயற்சியில் தடை ஏற்பட்டு அகலும். தொழில் போட்டிகளை சமாளிக்க புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். ஒரு சிலருக்கு, வாங்கிய இடத்தை விற்க நேரிடலாம். வியாபாரப் போட்டி அதிகரிக்கும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்காது. குருபகவான் அஷ்டமாதிபதியாகவும் விளங்குவதால் அதன் வக்ர காலத்தில் ஒருசில நன்மைகளும் நடைபெறும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, அரசு வழியில் சில சலுகைகள் கிடைக்கலாம். சில நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். குலதெய்வ வழிபாடு அவசியம்.

    ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசியான உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். சப்தம- விரயாதிபதியான செவ்வாய் உங்கள் ராசியில் வரும்போது, வாழ்க்கைத் துணை வழியே செலவுகளை ஏற்படுத்தலாம். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். 'சேமிப்பு கரைகிறதே' என்று கவலைப்படுவீர்கள். தொலைதூரத்தில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள இயலாது.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் விஷ்ணுவை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 18, 19, 20, 26, 27, 31, ஆகஸ்டு: 1, 11, 12, 15, 16மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் குருவின் வக்ரத்தால் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். சுபச்செலவு அதிக ரிக்கும். தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவிக்குள் அன்பு கூடும். உதிரி வருமானங்களும் வரலாம். 'புத ஆதித்ய யோகம்' இருப்பதால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைகளும் வந்துசேரும். குரு பகவான் வழிபாடு குதூகலம் வழங்கும்.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை

    விடாமுயற்சியால் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் ரிஷப ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். உங்கள் ராசியிலேயே தனாதிபதி புதன் சஞ்சரிக்கிறார். எனவே விரயத்திற்கேற்ற வருமானம் வந்து கொண்டே இருக்கும்.

    ஆனி 4-ந் தேதி, உங்கள் ராசிநாதனான சுக்ரன், உங்கள் ராசிக்கே வருகிறார். அவர் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கும் அதிபதியானவா். உங்கள் ராசியில் இருக்கும் புதனோடு, சுக்ரன் இணைவதால் 'புத சுக்ர யோகம்' ஏற்படுகிறது. எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொகை வரவு உண்டு. தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் அனுகூலமும், ஆதாயமும் கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.

    அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகின்றார். எனவே பொதுவாழ்வில் புகழ் கூடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். பஞ்சமாதிபதியாகவும் புதன் விளங்குவதால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும், கடல் தாண்டிச் சென்று படிப்பது சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும்.

    ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பாராத சில விரயங்கள் ஏற்படலாம். பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். பணப்பொறுப்பில் இருப்பவர்கள், கவனச் சிதறல் இல்லாமல் செயல்படுங்கள்.

    ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். தடைபட்டு வந்த காரியங்கள் துரிதமாக நடைபெறும். வழக்குகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும்.

    ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு செல்லும் இந்த வேளையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வழிபிறக்கும். வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உருவாகும். ஜீவன ஸ்தானாதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ்மிக்கவர்களைக் கொண்டு காரியங்களை சாதிப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

    இம்மாதம் பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டு நந்தியம்பெருமானை வழிபடுங்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 18, 19, 22, 23, 29, 30, ஜூலை: 4, 5, 15, 16 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதத் தொடக்கத்தில் விரயங்கள் ஏற்பட்டாலும், மாதத்தின் பிற்பகுதியில் பணவரவு திருப்தியாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு, அலுவலகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அதுவும் கைகூடலாம். தசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு திருப்தியளிக்கும்.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    விடாமுயற்சியும், மன உறுதியும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அங்குள்ள லாபாதிபதி குருவோடு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான செவ்வாய், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, விரயத்திற்கேற்ற பணம் வந்துசேரும். காரியங்கள் கடைசி நேரத்தில் எப்படியாவது கை கூடிவிடும். நண்பர்கள் உதவுவார்கள். ஊர் மாற்றம், வீடு மாற்றத்துக்கான முயற்சி கைகூடும். பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி யோகம் செய்யும் கிரகமாகும். அவர் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால், எதிர்பார்த்த நல்ல திருப்பங்கள் ஏற்படும். இல்லம் தேடி நல்ல தகவல்கள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். கடன்சுமை குறையும்.

    புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். எனவே அவர் வக்ர நிவர்த்தியாவதால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்பதவி கிடைப்பதற்கான அறிகுறிதென்படும். வைகாசி 23-ந் தேதி அன்று ரிஷப ராசியான உங்கள் ராசிக்கு புதன் வருகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். மருத்துவச் செலவு கூடும். எதையும் துணிந்து செய்ய இயலாது. உதவி செய்வதாகச் சொன்னவர்கள், கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி பகவான். அவர் வைகாசி 11-ந் தேதி வக்ரம் பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. பெற்றோர் வழி பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். பாகப்பிரிவினை முடிவுக்கு வராது. எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்கள்.

    இம்மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 21, 22, 25, 26, ஜூன்: 1, 2, 6, 7மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் விரய ஸ்தானம் வலுப்பெறுவதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை வரலாம். கணவன் - மனைவி உறவு திருப்திகரமாக இருந்தாலும், உறவினர்கள் வாயிலாக சில பிரச்சினைகள் உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைப்பது அரிது. நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நினைத்தது நிறைவேறும்.

    ×