search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

    ரிஷபம்

    குருபெயர்ச்சி பலன்-2024

    ரிஷபம்- ஜென்ம குரு

    வசீகரமான ரிஷப ராசியினரே!

    உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் இடத்தில் நின்ற குரு பகவான் மே 1, 2024 முதல் ராசிக்குள் நுழைகிறார். இந்த காலகட்டத்தில் தொழில் ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் தனது 3ம் பார்வையால் விரய ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். ராசிக்கு 5ல் கேதுவும் 11ல் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    ஜென்ம குருவின் பொதுபலன்கள்

    ரிஷப ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதியான குருபகவான் ஜென்ம ராசிக்குள் நுழைவது ரிஷபராசிக்கு சுபமா? அசுபமா என்ற சிறு அச்சம் இருக்கத்தானே செய்யும். ஜென்மத்தில் குரு வந்த காலத்தில் ராமரே வனவாசம் சென்றார். நாமெல்லாம் எம்மாத்திரம் என்ற கேள்வி நிச்சயம் எழும். இங்கே அனைவரும் கவனிக்க வேண்டிய விசயம் என்ன வென்றால் ராமர் 14 வருடம் வனவாசம் செல்ல வேண்டும் என்பது அவருக்கு இடப்பட்ட கட்டளை.

    ஜென்மத்தில் நின்ற குரு குடும்ப ஸ்தானத்திற்கு சென்றவுடன் ஏன் ராமர் நாடு வந்து சேர வில்லை? அதனால் ரிஷப ராசியினர் வருத்தப்படத் தேவையில்லை. அஷ்டமாதிபதி ராசிக்குள் நுழைவது விபரீத ராஜயோகம். உண்மையை கூற வேண்டும் என்றால் விரயத்தில் குரு நின்ற காலத்தில் வீட்டை விட்டு சென்றவர்கள், சிறை தண்டனை அனுபவித்தவர்கள். தொழில், உத்தியோகத்திற்காக குறுகிய காலம் வெளியூர். வெளிநாடு சென்றவர்கள், வைத்தியத்திற்காக அதிக காலம் மருத்துவமனையில் தங்கியவர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்துடன் வந்து சேரும் காலம் வந்து விட்டது.

    ராசியில் நிற்கும் குருவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவதால் பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறந்து விட்டது. இதுவரை சந்தித்த இழப்புகள், கற்ற வாழ்க்கைபாடம், அனுபவித்த துன்பத்திலிருந்து மீளும் நேரம் வந்துவிட்டது. இழந்ததை நினைத்து வருத்தப்படாமல் நடக்க வேண்டியதை பார்ப்பது தானே புத்திசாலித்தனம். நேரம், காலம் நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும் இந்த குருப் பெயர்ச்சியில் தொட்டது துலங்கும். பட்டது பூக்கும். விட்டதை பிடிக்கும், இழந்ததை மீட்கும் அற்புதமான நல்ல காலம் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

    குருவின் 5ம் பார்வை பலன்கள்

    ஜென்ம ராசியில் நிற்கும் குருவின் 5ம் பார்வை 5ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிகிறது. ஒரு மனிதனுக்கு 5ம்மிடம் வேலை செய்யும் போது வாழ்வில் செட்டிலாக தேவையான அனைத்து அமைப்புகளும் கூடிவரும். 5ம்மிடம் குலதெய்வம், பூர்வீகம் மற்றும் குழந்தைகளைப் பற்றிக் கூறுமிடம் என்பதால் பல வருடங்களாக பூர்வீகத்தை மிதிக்காதவர்கள் கூட சொந்த மண்ணில் கால் பதிப்பார்கள்.

    பூர்வீகச் சொத்தில் நிலவிய சர்ச்சைகள் மறைந்து உரிய பங்குத் தொகை கிடைக்கும்.தான் பிறந்த மண்ணில் கைப்பிடி மண்ணாவது சொந்தமாக வாங்க முடியுமா என்று வருந்தியவர்கள் நிலம், தோட்டம் என வாங்கி ஆனந்தம் அடைவார்கள். புத்திரகாரக கிரகம் குரு புத்திர பாவகத்தை பார்ப்பதால் பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் விலகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குரு கடாட்சத்தால் ஆண் மகவு பிறக்கும்.

    5ம்மிடம் என்பது ஒருவரின் விருப்பம், லட்சியம், ஆசையை தெரிவிக்கும் இடம் என்பதால் உங்கள் எதிர்கால வாழ்க்கையின் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். இது பதவி ஸ்தானம் என்பதால் கவுரவப் பதவி, அரசியல் பதவி மற்றும் அவரவர் வயதிற்கும் ஏற்ற ஒரு உயர்வு நிச்சயம் உண்டு. கலைத்துறையைச் சார்ந்தவர்கள் தங்கள் நடிப்புத் திறமையால் சாதனையாளர்கள் பட்டியவில் இடம் பிடிப்பீர்கள்.

    குருவின் 7ம் பார்வை பலன்கள்

    ஜென்ம குருவின் சம சப்தம பார்வை நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், களத்திரம், சமுதாய நட்பு பற்றிக் கூறும் 7ம் இடத்தில் பதிகிறது. அங்கே குருவின் பார்வையுடன் 9,10ம் அதிபதியான சனியின் பார்வையும் பதிவதால் உங்கள் தொழில், வியாபாரத்தில் ஒரு உன்னத நிலை உண்டாகும். இது வரை தனித்து சுய தொழில் நடத்தியவர்கள் நண்பர்கள், வாழ்க்கைத் துணை, உற்றார், உறவுகளுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். ஏற்கனவே கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் புதிய பங்கு தாரர்களை இணைக்கலாம். தொழிலுக்கு அரசு ஆதரவு கிடைக்கும்.

    வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் புரிபவர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். தொழில், வேலைக்காக அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழும் சூழல் உருவாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் சீராகும். கூட்டுக் குடும்பமாக வசிக்கும் உறவுகளுக்குள் அன்பும் அனுசரனையும் அதிகமாகும். விட்டுக் கொடுத்துச் செல்வார்கள்.சுப நிகழ்வுகளால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

    குருவின் 9ம் பார்வை பலன்கள்

    குருவின் 9ம் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது.தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் கூடி வரும். பிறந்த குலத்தின் மேல் அபிமானம் கூடும்.எதற்கும் கலங்காமல் மன உறுதியுடன் செயலாற்றுவீர்கள். குலப் பெருமையை காப்பாற்ற பாடுபடுவீர்கள். உயர் கல்வி முயற்சி உடனே பலிதமாகும். வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்.பிள்ளைகளுக்கு திருமணம் நடப்பது, பேரன் பேத்தி பிறப்பது போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். பெற்றோர்களின் அன்பிற்கு மனம் ஏங்கும். பெற்றவர்களின் அருமை புரியும்.

    பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகளைப் பெற முயற்சிப்பீர்கள். பித்ருக்கள் வழிபாடு மற்றும் தில ஹோமத்தின் மூலம் பாக்கிய பலனை அதிகரிக்க உகந்த காலம். காசி, ராமேஸ்வரம், கைலாஷ், மான சரோவர் போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று ஆன்மாவை புனிதப் படுத்துவீர்கள். குல இஷ்ட தெய்வ வழிபாடுகள், வேண்டுதல்களை நிறைவேற்றலாம். ஆன்மீக வாதிகள், குருமார்கள், ஞானிகள், சித்தர்கள் மற்றும் தவசிகளின் நல்லாசிகள் கிடைக்கும். கோவில் கட்டுதல், கும்பாபிசேஷகம் நடத்துதல் போன்ற புண்ணிய காரியங்கள் செய்யலாம்.

    குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை)

    ரிஷப ராசிக்கு 4ம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தாய் வழி உறவுகளுடன் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். தாயின் அன்பும் அணுசரனையும் உங்களை மகிழ்விக்கும். ஆரோக்கிய கேடுகள் விலகும். நோய் தாக்கம் குறைந்து தேக சுகம் மேம்படும்.

    புதிய சொத்துக்கள் சேரும். பழைய சொத்துக்களின் மதிப்பு உயரும். கல்விக்கு மீறிய அனுபவ திறமை ஏற்படும். அரசு வேலை முயற்சி வெற்றி தரும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் .கடந்த காலத்தில் வாங்கிய கடன் சுமைகள் குறையும். தாய் மாமன், மைத்துனர் மூலம் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.

    குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024. வரை)

    ரிஷப ராசிக்கு 3ம் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பட்டா இல்லாத நிலபுலன், வீட்டு மனை வைத்து இருப்பவர்கள் முறையான ஆவணங்கள் கிடைக்கும். வீடு, மனை, வாகனங்கள் விற்றல், வாங்குதல் மிக சுலபமாக நடைபெறும். பூர்வீக சொத்து தொடர்பான சட்ட சிக்கல் ஏதேனும் இருப்பின் தீர்ந்து விடும் தாயார், பூர்வீகம் தொடர்பான விஷயங்களில் சகோதரர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும். சகோதரர்களுக்குகாக அதிக செலவு செய்ய நேரும்.

    குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள் (21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை)

    ரிஷப ராசிக்கு 7, 12ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பல நற்பலன்கள் நடக்க உள்ளது. உங்கள் அன்றாட பணிகள் சுலபமாக நடைபெறும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். அரசியல் தலைவர்கள் , மதச் சீர்திருத்த வாதிகள் பொது ஜனங்களை மிகவும் கவர்ந்து தங்கள் வசப்பபடுத்துவார்கள். சொகுசான வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். சினிமா , கேளிக்கை விசயங்களில் அதிக நாட்டம் உண்டாகும்.

    குருவின் வக்ர காலம் (செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

    வக்ரமடையும் காலத்தில் தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வாழ்க்கைத் துணை, களத்திரம், நண்பர்கள் மூலம்வீண் செலவுகள் விரயங்கள் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2 2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் அலைச்சல் அதிகமாகும். மனதிற்கு பிடிக்காத அசவுகரியமான இடப்பெயர்ச்சி ஏற்படும்.சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்வீர்கள். தொழில் கூட்டாளிகள் பிரிந்து செல்வார்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

    பெண்கள்

    தொழில், உத்தியோகத்தில் உங்களுக்கு என்று தனி முத்திரை பதிப்பீர்கள். அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். குடும்ப உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை கவனமாக கையாளவும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைப்பது நல்லது. 5ல் கேது, 11ல் ராகு இருப்பதால் பல சாதகங்கள் நடந்தாலும் இனம் புரியாத மிகைப்படுத்தலான மன உளைச்சலும் இருக்கும். சிலருக்கு கை, கால் வலி அதிகமாக இருக்கும். தம்பதிகளுக்குள் நிலவிய ஈகோ பிரச்சனை சுமூகமாகும்.

    மாணவர்கள்

    ராசிக்கு 5ம் இடத்தில் கேது நிற்கிறார். குருவும் 5ம் இடத்தை பார்ப்பதால் ஆழ்மன சிந்தனைகள் பெருகும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். படித்த பாடம் மனதில் அப்படியே பதியும். 2025ம் ஆண்டு பொதுத் தேர்வு உங்கள் வாழ்க்கைப் பாதையை நல்ல முறையில் மாற்றி அமைக்கப் போகிறது.

     பரிகாரம்

    ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குருபகவானால் சுப பலன்கள் மேம்பட புதன் கிழமை மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட வாழ்க்கை வளமாகும்.

    ரிஷபம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

    கலையார்வம் நிறைந்த ரிஷப ராசியினரே, இதுவரை ராசிக்கு பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் பனிரெண்டாமிடத்திற்கு செல்கிறார். அக்டோபர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

    விரய குருவின் பலன்கள்

    12ம்மிடம் என்பது வெளிநாட்டுப் பயணம் விரயம், அயன, சயன ஸ்தானமாகும்.ரிஷப ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதியான குருபகவான் விரய ஸ்தானத்திற்கு செல்வது சுபமும் அசுபமும் கலந்த பலனைத் தரும். ஒரு மறைவு ஸ்தானத்திற்கு அதிபதியான குரு அதாவது அஷ்டமாதிபதியாகிய குரு மற்றொரு மறைவு ஸ்தானம் செல்வது சிறப்பு. கெட்டவன் கெட்டி டில் கிட்டிடும் ராஜயோகமாக அமையும். அதே நேரத்தில் லாபாதிபதி குரு விரய ஸ்தானம் செல்வது சுபித்துச் சொல்லக் கூடிய பலன் இல்லை. குரு விரய ஸ்தானம் செல்வதால் வரவைக் காட்டி செலவு கூடும். விரயங்கள் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.வருமானம் சிறப்பாக இருந்தாலும் சேமிக்க முடியாத விரயமும் உண்டாகும். சேமிப்பு கரையாமல் இருக்க சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.

    சிறிய செயலுக்கும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து அனுபவஸ்தர்களின் ஆலோசனை கேட்டுச் செய்ய வேண்டும். பிறருடைய விசயத்தில் தேவையில்லாமல் தலையிட்டால் அசிங்கம், அவமானம், வம்பு, வழக்கு வரும். வழக்குகள் சாதகமாகாது அல்லது விரும்பதகாத திருப்பங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் போதும் பழைய சொத்துக்களை விற்கும் போதும் தவறான விலை நிர்ணயத்தால் இழப்புகள் உண்டாகலாம். பலர் தொழில் உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாயகம் வந்து செல்ல முடியாத சூழ்நிலை உண்டாகும்.லாட்டரி, ரேஸ், பங்குச் சந்தை, யூக வணிகம் போன்றவற்றைத் தவிர்த்தல் நலம். சுய ஜாதகமும் தசா புத்தியும் சாதகமாக இருப்பவர்களுக்கு சுப விரயங்களால், சுப முதலீட்டால் வெற்றி மேல் வெற்றி கிட்டும். தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். சில அசவுகரியங்கள் இருந்தாலும் கடைசி நேரத்திலாவது காரியங்களில் வெற்றி உண்டாகும்.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

    விரய குருவின் 5ம் பார்வை ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் பதிகிறது. நான்காமிடம் வீடு, வாகனம், தாயார், தன் சுகம், கல்வி பற்றி கூறுமிடம் என்பதால் தாயின் அன்பும், அனுசரனையும்கிடைக்கும். சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். வாடகைக்கு போகாமல் இருந்த சொத்துக்களுக்கு நல்ல வாடகை தாரர் கிடைப்பார்கள். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.இதுவரை சொந்த வீடு இல்லாதவர்கள் கடன் பெற்றாவது சொந்த வீடு கட்டி குடியேறுவார்கள்.வாகனம் இல்லாதவர்களுக்கு நவீன வகை சொகுசு வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.

    தாய்வழிச் சொத்தில் நிலவிய வில்லங்கள் விலகும். சிலருக்கு சொத்துக்களின் மதிப்பு உயரும்.சிலர் கடன் தொல்லை தாளாமல் சொத்தை அடமானம் வைத்துக் கடன் பெறலாம் அல்லது அடிமாட்டு விலைக்கு விற்கலாம்.

    குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

    குருவின் 7ம் பார்வை ராசிக்கு 6ம்மிடத்தில் பதிகிறது. ஆறாமிடம் நோய், எதிரி, கடன், உத்தியோகம் ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம். நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து வசூலாகாமல் இருந்த கடன் தொகை இப்பொழுது வசூலாகும். வாங்கிய கடனை திரும்பச் செலுத்தக் கூடிய வகையில் வாழ்க்கைத் துணை பிள்ளைகள் மூலம் வருமானம் வரலாம். கல்விக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழில் கடன் என விரும்பிய அனைத்து கடன்களும் கிடைக்கும்.போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வாய்ப்பும் உள்ளது. தொழில் போட்டிகளை எதிரிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களையும், உடன் பணிபுரிபவர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பிறரின் விசயத்தில் மூக்கை நுழைத்து புதிய எதிரிகளை உருவாக்கமல் இருக்க வேண்டும். ஆரோக்கியத் தொல்லைகள் வைத்தியத்தில் சீராகும். வாழக்கைத் துணையின் வேலைக்காக எடுத்த முயற்சிகள் கைகூடும்.

    குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

    ராசிக்கு 8ம்மிடத்திற்கு குருவின் 9ம் பார்வை பதிகிறது. எட்டாமிடம் என்பது துன்பம், வேதனை, அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரி, ஆயுள், திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றைப் பற்றிக் கூறுமிடம். ஆயுள், ஆரோக்கியம், தீராத நோய் தொடர்பான பய உணர்வு நீங்கும்.வேதனைப் படுத்திய வம்பு, வழக்கு, அவமானம் இவற்றிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். யார் வம்புக்கு இழுத்தாலும் கண்டும் காணமலும் இருப்பது நல்லது. நல்ல நேரம் வரும் பொழுது எதிரிகளை ஒரு கை பார்த்துக் கொள்ளலாம். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாப்பது மிக அவசியம். வெற்றுப்பத்திரம், எழுதாத காசோலை போன்றவற்றில் கையெழுத்துப் போடுதல், ஜாமீன் போன்றவற்றைப் தவிர்க்க வேண்டும். வெகு சிலருக்கு விபரீத ராஜ யோகமாக உயில் சொத்து அதிர்ஷ்ட பணம் போன்றவை கிடைக்கலாம். பதறாத காரியம் சிதறாது. எனவே முறையாக திட்டமிட்டால் சங்கடங்களிலிருந்து விடுபடலாம்.

    அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.4.2023 முதல் 21.6.2023 வரை

    கோட்சாரத்தில் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் முன் கோபத்தால் சில முன்னேற்றத் தடை உருவாகலாம்.பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகளால் பணிச் சுமை அதிகமாகும். மன நிறைவு இருக்காது. தனிமையை அமைதியை மனம் விரும்பும். மலைபோல் நம்பிய சில முக்கிய நபர்கள் கடைசி நேரத்தில் காலை வாரி விடலாம். சிலர் கடனுக்கு பயந்து ஆரோக்கிய குறைபாட்டை இல்லாத நோயை புதியதாக வரவழைத்துக் கொள்வார்கள். எதிலும் நிதானத்தோடு நேர்மறை எண்ணத்துடன் செயல்பட்டால் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை

    பரணி சுக்கிரனின் நட்சத்திரம்.

    ரிஷப ராசிக்கு சுக்ரன் ராசி அதிபதி மற்றும் ஆறாம் அதிபதி. ராசி அதிபதியே ஆறாம் அதிபதியாக இருப்பதால் ஒரு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் ஜாதகரே காரணமாக இருப்பார். எனவே நல்லது, கெட்டது போன்ற நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்த்துச் செயல்பட வேண்டும்.அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். வருமானப் பற்றாக்குறை அகலும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவிகள் ,பொறுப்புகள் தாமாகவே வந்து சேரும். கடந்த காலத்தில் வாங்கிய கடன் சுமைகள் குறையும். தாய் மாமன், மைத்துனர் மூலம் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.

    கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

    கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். ரிஷப ராசிக்கு நான்காம் அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தாயின் ஆரோக்கிய குறைபாடு வைத்தியத்தில் சீராகும். சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.பூர்வீகச் சொத்துக்கள் பங்கு பிரிக்கப்படும். அடமான நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். விலை உயர்ந்த அழகு, ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தாய் வழி உறவுகளிடம் நெருக்கம் அதிகரிக்கும்.

    குருவின் வக்ர பலன்கள் :

    4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்வீர்கள். தொழில் கூட்டாளிகள் பிரிந்து செல்வார்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

    பெண்கள் :

    பொறுப்புள்ள குடும்ப தலைவியாக இருந்து குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்துவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளின் திருமணம், படிப்பு, வளைகாப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    மாணவர்கள் :

    நான்காமிடத்திற்கு குருப் பார்வை இருப்பதாலும், அக்டோபர் மாதத்திற்கு மேல் கேது ஐந்தாமிடம் செல்வதாலும் கல்வி ஆர்வம் அதிகரிக்கும். புரிந்து படிக்கும் தன்மை உருவாகும். போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். உயர் கல்வியை விரும்பிய பாடத்திட்டத்தில் விரும்பிய கல்லூரியில் சேர்ந்து படிப்பீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள் :

    அரசு வேலையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உங்களை மகிழ்விக்கும். சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் கேட்டவர்களுக்கு மாறுதல்கள் கிடைக்கும்.

    ராகு/கேது பெயர்ச்சி :

    அக்டோபர் 30, 2023 அன்று ராகு 11ம் இடத்திற்கும் கேது 5ம்மிடமும் செல்கிறார்கள். விரய குருவால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யக் கூடிய வகையில் வருமானம் உயரும்.குறைந்த சம்பளம் உள்ள வேலையிலிருந்து அதிக சம்பளம் கிடைக்கும் உத்தியோகத்திற்கு மாறலாம். இழந்த பதவிகள், வேலைகள் திரும்பக் கிடைக்கும்.

    பரிகாரம் : ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. அதனால் இன்பமும் துன்பமும் நிரந்தரமல்ல. உறவுகளும் பணமும் எப்பொழுது வேண்டுமானாலும் வரும், போகும். தொடர் வெற்றியை நிலைநாட்ட தன்னம்பிக்கை மிக முக்கியம்.ரிஷப ராசியினர் வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகா லஷ்மி வழிபாடு செய்து வர வீண் விரயங்கள் குறைந்து சேமிப்பு உயரும். மாதம் ஒரு முறை ஜென்ம நட்சத்திர நாளில் பசுவிற்கு 6 மஞ்சள் வாழைப்பழம் வழங்க தொழில் விருத்தியடைந்து லாபம் அதிகரிக்கும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    அன்பான ரிஷப ராசியினரே ராசிக்கு 11ம் இடத்தில் குருபகவானும், 6ல் கேதுவும், 12ல் ராகுவும், 9, 10ம் இடத்தில் சனி பகவானும் சஞ்சரிக்கிறார்கள்.

    இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருந்து பதவி, அந்தஸ்து, கௌரவம் ஆகியவற்றைதந்து கொண்டுஇருந்த குரு பகவான் இனி 11ம்இடமான லாபஸ்தானத்திற்குபெயர்ச்சி ஆகி வந்து பெரும் லாபத்தை தர இருக்கிறார். குரு பகவான்உங்கள் ராசிக்கு 8, 11ம் அதிபதி.லாபாதிபதி லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவது மிகச் சிறப்பு. தொட்டது துலங்கும். ரிஷபத்திற்கு குரு அஷ்டமாதிபதி என்பதால் பெரியதாக நன்மை செய்வதில்லை. ஆனால் கோட்சாரத்தில் 11ம் இடத்திற்கு வரும் அனைத்து கிரகங்களும் நன்மையை மட்டுமே செய்யும்.

    பணம் இருந்தால் முகத்தில் தனி கலை தென்படும், என்பது உங்களைப் பார்த்து மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு வசீகரமான தோற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். பற்றாக் குறை வருமானத்தில் சொற்ப்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியவர்களுக்கு பணம் எனும் தனம்சமூக அங்கீராத்தை பெற்றுத் தரும். ராஜ மரியாதை கிடைக்கும். உங்கள் முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும். தாய், தந்தை மற்றும் பெற்ற மக்களால் செல்வம் சேரும்.

    பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து நல்ல பெயர் கிடைக்கும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள்.

    வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு அதிக தொழில் முதலீடு செய்யக் கூடிய தொழில் பார்ட்னர்கள் கிடைப்பார்கள். உங்களின் 4ம் அதிபதி சூரியன் என்பதால் சிலர்அழகும், அந்தஸ்தும், ஆடம்பரமும் நிறைந்த அப்பார்மென்ட் வீடு வாங்கி குடியேறுவீர்கள். பழைய வாகனத்தை கொடுத்து புதிய 2 , 4 சக்கர வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆடம்பரத்தை, அந்தஸ்த்தைதக்க வைத்துக் கொள்ள அதிக செலவு செய்ய நேரும். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. லாப ஸ்தானத்தில் குரு பகவான் இருந்தாலும் விரய ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும்

    5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 3ம் இடமான முயற்சி மற்றும் இளைய சகோதர ஸ்தானத்திற்கு உள்ளது. மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். இடப் பெயர்ச்சி செய்யும் வாய்ப்பு உள்ளது. சிலர் தொழில் அல்லது வேலைக்காகசிறு தூரப் பயணம் செய்வார்கள். சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்து விடுவீர்கள். இதுவரை உலகுக்கு தெரியாமல் இருந்து வந்த உங்களுடையதிறமைகள் அனைவருக்கும்தெரியவரும்.

    தங்களின் செயல் திறனில்மாற்றம் ஏற்பட்டுலகுவாக பணியாற்றி நற்பெயர்பெறுவீர்கள். ஆபரணச் சேர்க்கை உருவாகும். வேலையாட்களால் உருவாகிய பிரச்சனை சீராகும். மனோதிடம்கூடும். 3ம் இடத்திற்கு அஷ்டமாதிபதி குரு மற்றும் பாதகாதிபதி சனியின்பார்வையும் இருப்பதால் கூட்டுத் தொழில் செய்யும் சகோதரர்களாக இருந்தால் உங்களின் சகோதர்உழைப்பை தராமல்லாபத்தை மட்டும் எடுத்து செல்வார். கணக்கில் முறைகேடு செய்யவும் வாய்ப்புள்ளது .நிர்வாக கணக்கில் குழப்பம்செய்து கூட்டுத் தொழில் பிரியும் வாய்ப்புள்ளது.

    7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு உள்ளது. 5ம் இடம் என்பது பதவி ஸ்தானம், புத்தி ஸ்தானம் , பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்தி கூர்மை, தெய்வ அனுகிரகம் பற்றி கூறும் இடம் . கோச்சாரத்தில் 5ம் இடத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் இதுவரை கருத்தரிக்காத பெண்களுக்கு பூர்வ புண்ணிய பலத்தால் கரு உருவாகும். கருத்தரிப்பில் சிரமம்உள்ளவர்களுக்கு வைத்தியம் பலன் தரும். பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும். எப்பொழுது வீட்டில் மேளச் சத்தம் கேட்கும் என்று எதிர்ப்பார்த்த பெற்றோர் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி ஆனந்தம் அடைவீர்கள்.

    கவுரவப் பதவிகள் தேடி வரும். பூர்வீகம்தொடர்பானபிரச்சனைகள் குறையும். குல, இஷ்ட,தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குல தெய்வம் தொடர்பான வேண்டுதல்கள் பலிதமாகும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றஏற்ற காலம் இது.இதுவரைகுல தெய்வம்தெரியாமல்இருந்தவர்கள் முயற்சியின் பேரில் குல தெய்வத்தை கண்டறிய முடியும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். சாஸ்திர ஞானம் கிடைக்கும். விமானம் மூலம்ஆன்மீகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு வரும்.

    11ம் இடம் இரண்டாம் திருமணத்தைக் குறிக்குமிடம். 11ம் அதிபதி குரு 11ல் ஆட்சி பலம் பெற்று 5ம் இடத்தை 7ம் பார்வையாக பார்ப்பதால் இக்கால கட்டத்தில்திருமணம்ஆனவர்கள் கூட தவறான நட்பில்விழுந்துவாழ்கை கேள்விக்குறியாக்கி கொள்வார்கள். ஒருவனுக்குஒருத்தி என்பதே நம் மரபு என்பதை உணர்ந்து செயல்படாவிட்டால் வீட்டு விசயம் வீதி வரை வந்து அவமானப்படுத்தும். மேலும் சுக்ரனின் வீடான ரிஷபத்தில் பிறந்த கலைஞர்கள் கலைத் துறையில் தங்களுக்கென்று தனி இடம் பிடிப்பார்கள். 5ம் இடத்திற்கு குருப் பார்வையும் இருப்பதால் மிகப் பெரிய விருதுகளும், பாராட்டும் கிடைக்கும். அற்புதமான நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தயாரிப்பாளர்கள் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க வேண்டும்.

    9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 7ம் இடத்திற்கு இருப்பதால் திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார்கள். தம்பதியினர்தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோவெவ்வேறுஊர்களில்பிரிந்துவாழ்ந்து கொண்டிருந்தால்இப்பொழுதுஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம்.

    திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்துவாழும் கணவன், மனைவிமீண்டும் சேர்ந்து வாழ்வர். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். களத்திரத்தின் மூலம் சில பொருள் வரவுகள் ஏற்படும். மனக்கசப்பு மாறும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.நண்பர்களுடன்விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

    குருவின் வக்ர பலன்:29.7.2022 முதல் 23.11.2022 வரை

    குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலம் தந்தை வழிச் சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சித்தப்பா, பெரியப்பாவின் மூலம் தீர்த்து வைக்கப்படும். முன்னோர்கள் வழி நரம்பு சம்பந்தமான நோய்க்கு உடனே சிகிச்சை எடுத்தல் அவசியம். சிலர் குடும்ப உறுப்பினர்களால்கடன் பட நேரும். தொழில் நெருக்கடி இருக்கும். தொழில் வாய்ப்புகள் கைநழுவிப் போகும்.

    வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள்.முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடு மிகும் அல்லதுதொழிலாளிகள் மூலம் வழக்கை சந்திக்க நேரும். வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும் அல்லது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது . சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கும் நிலை இருக்கும்.தொழிலை தக்க வைக்க கடுமையானமுயற்சியையும் போராட்டத்தையும் அதிக உழைப்பையும் செலவிட வேண்டும்.

    பெண்கள்:பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். 12ல் ராகு இருப்பதால் பொருளின் தரம், பயன்பாடு, தேவை அறிந்து வாங்கி பயன்படுத்துவது சிறப்பு. தவறான பயன்படாத பொருள் விரயத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை.

    பரிகாரம்:சனிக்கிழமை இஷ்ட ,குலதெய்வம், பைரவரைவழிப்பட்டால் கவலை தீரும். தினமும் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட 12 மிட ராகுவினால் ஏற்படும் விரயம் மட்டுப்படும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×