என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். அரசுவழிச் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். ஊர்மாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிய வேண்டிய நாள். தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். வருமானம் திருப்தி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    புதிய முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புண்ணிய காரியங்களுக்கும் கொடுத்து உதவுவீர்கள். தொழில் முயற்சி வெற்றி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன் 30.5.22

    பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களது செயல்பாடுகள் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன் 28.5.22

    தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் பணி சார்ந்த பிரச்சினைகளுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரிடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன் 27.5.22

    தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். உறவினர் வழியில் விரயம் உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும். கல்யாண கனவுகள் நனவாகும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக விளங்குவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும்.

    ரிஷபம்

    ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023

    12.4.2022 முதல் 30.10.2023 வரை

    பனிரென்டில் ராகு/ ஆறில் கேது

    அழகான ரிஷப ராசியினரே ராகு கேதுக்கள் ராசிக்கு 12, 6ம் இடத்திலும் குரு பகவான் 11, 12ம் இடத்திலும் சனிபகவான் 9,10ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள்.

    12ம்மிட ராகுவின் பலன்கள்:இதுவரை ராசியில் சஞ்சாரம் செய்து மன உளைச்சலை அதிகரித்த ராகு 12ம் மிடமான விரய ஸ்தானத்திற்குச் சென்றதால் மன நிம்மதி அதிகரிக்கும். ராகு அந்நிய தேசத்தைக் குறிக்கும் கிரகம் என்பதால் சிலர் பிழைப்பிற்காக வெளிநாட்டை நோக்கிச் செல்வார்கள். ரிஷபம் கால புருஷ குடும்ப ஸ்தானம் என்பதால் தலை மறைவாக வாழ்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். ராகு தான் நின்ற இடத்தின் பலனை பிரமாண்டப்படுத்துவார் என்பதால் விரயம் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். வீடு கட்டப் போட்ட பட்ஜெட் எகிறும். கல்யாண செலவு திட்டமிட்டதை விட இரட்டிப்பாகும்.இப்படி தொட்டதெல்லாம் செலவில் கொண்டு போய் நிறுத்திவிடும்.

    அதனால் குழந்தைகளின் படிப்பு, சுப விசேஷங்கள் என வாழ்வின் அனைத்து தேவைகளையும் ராகு நிறைவேற்றி வைப்பார். சிலருக்கு இடது கண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும்.

    12.4.2022 முதல் 14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:ரிஷபத்திற்கு 4ம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிக்கும் காலத்தில் தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். சிலருக்கு வீடு கட்ட அரசின் மானியம் கிடைக்கும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு வாகன பிராப்தம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான அழகு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தாயுடன் புரிதல் உண்டாகும். சிலருக்கு நாய், பூனை, மீன், பறவைகள் என உயிரின வளர்ப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெகு சிலர் தங்கள் பெயருக்கு அவப் பெயரை தேடிக் கொள்வார்கள்.

    15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுக்ரனின் நட்சத்திரமான பரணி ரிஷபத்திற்கு ராசியதிபதி மற்றும் ஆறாம் அதிபதி. ராசி அதிபதி மற்றும் ஆறாம் அதிபதியும் சுக்ரன் என்பதால் உங்களுக்கு நடக்கும் நல்லது, கெட்டது இரண்டிற்கும் நீங்களே காரணமாக இருப்பீர்கள். சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்த்துக் கொண்டு இருந்த உத்தியோகத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்வார்கள். சிலருக்கு பார்த்த வேலைக்கு உடனே ஊதியம் வராமல் தடை தாமதமாகும். சிலருக்கு தகாத பெண்களின் நட்பு உருவாகும். கேட்ட, கேட்காத இடத்திலும் கடன் கிடைக்கும்.

    தாய்மானுடன் சிறிய மன பேதம் உண்டாகும். ராசி அதிபதியின் நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிப்பதால் சிலருக்கு கண் திருஷ்டி, உடல் அலர்ஜி, செரிமானக் கோளாறு, காய்சல், தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றும். இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். தொழில் எதிரிகள் உங்களை கண்டு விலகுவார்கள்.

    21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:அசுவினி கேதுவின் நட்சத்திரம். கோட்சாரத்தில் 6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார்.கேது தான் நின்ற பாவக பலனை சுருக்குவார் என்பதால் எதிரி, கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுவிப்பார். நாள்பட்ட வியாதிகள் மறையும். வாடகை வீட்டு தொல்லை, அண்டை அயலார் சச்சரவு முற்றிலும் நீங்கும். உங்கள் வாழ்வில் நடந்த கெட்ட சம்பவங்களின் தாக்கம் குறையும்.

    தாய், தந்தை வழி உறவுகளிடம் அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு குடும்பத்தில் இணைவீர்கள். பகைமை மறந்து உறவுகள் ஆறுதலாக இருப்பார்கள். செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்தவர்கள் நன்னடத்தையால் விடுபடுவார்கள். இழுத்தடித்த, நிலுவையில் இருந்த வம்பு வழக்குகள் தீரும்.

    6ம்மிட கேதுவின் பலன்கள்:ராசிக்கு 6ம் இடமான துலாத்தில் சஞ்சரிக்கும் கோட்சார ருண ,ரோக, சத்ரு ஸ்தானத்தை இயக்கப் போகிறார். அதன் பலனாக எதிரி தொல்லை முற்றிலும் அகன்று விடும்.

    கடந்த ஒன்றறை ஆண்டுகளாக ரிஷப ராசியினர் பட்ட இன்னல்களுக்கு கேது முற்றுப் புள்ளி வைப்பார். விவாகரத்து வழக்கை சாதகமாக்குவர்.

    வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும். இதுவரை விற்காமல் இருந்த அசையாச் சொத்துக்கள் விற்று விடும். பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

    " கடனா " அப்படின்னா என்ன? என்று கேட்கும் அளவிற்கு பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்.ஜாமீன் பொறுப்பால், வராக்கடனால் இழந்த பணம் வசூலாகும். திருடு போன பொருட்கள் கிடைக்கும். அடமான நகை, வீடு, நிலம் மீளும். இது நாள் வரை பட்ட கடன், அவமானதால் பாவம், புண்ணியம் பற்றிய புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் எதிர்பாராத பணவரவு உங்களை திணற வைக்கும். வர வேண்டிய பணம்வரும்.

    12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:ரிஷப ராசிக்கு 8,11ம் அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் திடீர் அதிர்ஷ்டத்தையும் விபரீத ராஜ யோகத்தையும் வழங்குவார். ஜனன கால ஜாதகத்தில் குரு, கேது தசை புத்தி நடப்பவர்களுக்கு சமுதாய அங்கீகாரத்தை தரக்கூடிய தொழில் தொடர்பான புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தோன்றும். மிகக் குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகும் தொழில் சிந்தனைகள் அதிகரிக்கும். பொருளை பன் மடங்காக பெருக்கும் குறுக்கு வழியில் நாட்டம் மிகும்.அதற்காக புதிய பங்கு தாரர்களை தேடும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

    பல புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் முதலீட்டாளர்கள், ஏஜென்சி நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் தேடி வரும். சிலர் இலவச ஆபர் கொடுப்பது, முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவது , ஆன் லைன் வணிகம், ஷேர் மார்க்கட்,சதுரங்க வேட்டை படத்தில் மண் பாம்பை வைத்து பணம் சம்பாதிப்பது போன்ற அவயோக தொழிலவை தேர்வு செய்து சட்ட சிக்கலில் மாட்ட நேரும். மற்ற தசை நடப்பவர்களின் தொழில் முயற்சிகள் சுப பலனை தரும்.

    18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:ராசிக்கு 12ல் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கோட்சார ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் கேது சேவை மனப்பான்மையை மிகைப்படுத்துவார். ஆன்மீக தொண்டு நிறுவனங்கள், சங்கங்களில் இணைந்து சேவை செய்வீர்கள். வயதான சிலர் அல்லது மத்திம வயதினர் கோவில்களில் உலவாரப் பணிகள் செய்து முக்திக்கு வித்திடுவார்கள்.

    சிலர் முழு நேர அரசியல்வாதியாக மாறி மக்களுக்கு சேவை செய்வார்கள். நீண்ட நாட்களாக படுக்கையில் கிடந்தவர்கள் எழுந்து நடமாடுவார்கள். மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கு கூட நோய் தாக்கம் குறையும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான சுகர், பிரஷர் போன்றவற்றிற்கு மாற்று மருத்துவம் நல்ல பலன் தரும். கை, கால் மூட்டு வலி குறையும்.

    நீண்டதூர பிரயாணத்தை தரும் ஆன்மீக சுற்றுலா தலங்களான கேதார்நாத், பத்திரிநாத், கைலாஷ், மானசரோவர் போன்ற தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.நெடுந்தூர வெளிநாட்டு பயணம் , இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

    27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:ரிஷபத்திற்கு 7, 12ம் அதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் திருமணத் தடையைத் தருவார். அல்லது தவறான கலப்பு திருமணத்தை ஏற்படுத்துவார் அல்லது களத்திர விரோதத்தை ஏற்படுத்துவார். சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தம் காரணமாகவோ பிரிந்து வாழலாம். தொழில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு அல்லது பிரியும் நிலை ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீட்டை தவிர்க்க வேண்டும். விரையங்கள் அதி கரிக்கும். குடும்ப வாழ்வில் நாட்டக்குறைவு உருவாகும்.

    வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறுவார்கள்.

    இந்த ராகு/கேது பெயர்ச்சி கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் இருக்கும். கடன் வாங்குவதை தவித்து நம்பிக்கையோடு உழைக்க நல்லதே நடக்கும்.

    பரிகாரம்

    சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல், தேங்காய் மாலை சாற்றி வழிபாடு செய்வதால் சகல விதமான தடைகள் சங்கடங்கள் நீங்கும். விநாயகர் அகவல் பராயணம் செய்து வர கஷ்டங்கள் விலகும். வெள்ளிக்கிழமை சக்ரத் தாழ்வாருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபட கடன் தீரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    அன்பான ரிஷப ராசியினரே ராசிக்கு 11ம் இடத்தில் குருபகவானும், 6ல் கேதுவும், 12ல் ராகுவும், 9, 10ம் இடத்தில் சனி பகவானும் சஞ்சரிக்கிறார்கள்.

    இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருந்து பதவி, அந்தஸ்து, கௌரவம் ஆகியவற்றைதந்து கொண்டுஇருந்த குரு பகவான் இனி 11ம்இடமான லாபஸ்தானத்திற்குபெயர்ச்சி ஆகி வந்து பெரும் லாபத்தை தர இருக்கிறார். குரு பகவான்உங்கள் ராசிக்கு 8, 11ம் அதிபதி.லாபாதிபதி லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவது மிகச் சிறப்பு. தொட்டது துலங்கும். ரிஷபத்திற்கு குரு அஷ்டமாதிபதி என்பதால் பெரியதாக நன்மை செய்வதில்லை. ஆனால் கோட்சாரத்தில் 11ம் இடத்திற்கு வரும் அனைத்து கிரகங்களும் நன்மையை மட்டுமே செய்யும்.

    பணம் இருந்தால் முகத்தில் தனி கலை தென்படும், என்பது உங்களைப் பார்த்து மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு வசீகரமான தோற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். பற்றாக் குறை வருமானத்தில் சொற்ப்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியவர்களுக்கு பணம் எனும் தனம்சமூக அங்கீராத்தை பெற்றுத் தரும். ராஜ மரியாதை கிடைக்கும். உங்கள் முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும். தாய், தந்தை மற்றும் பெற்ற மக்களால் செல்வம் சேரும்.

    பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து நல்ல பெயர் கிடைக்கும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள்.

    வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு அதிக தொழில் முதலீடு செய்யக் கூடிய தொழில் பார்ட்னர்கள் கிடைப்பார்கள். உங்களின் 4ம் அதிபதி சூரியன் என்பதால் சிலர்அழகும், அந்தஸ்தும், ஆடம்பரமும் நிறைந்த அப்பார்மென்ட் வீடு வாங்கி குடியேறுவீர்கள். பழைய வாகனத்தை கொடுத்து புதிய 2 , 4 சக்கர வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆடம்பரத்தை, அந்தஸ்த்தைதக்க வைத்துக் கொள்ள அதிக செலவு செய்ய நேரும். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. லாப ஸ்தானத்தில் குரு பகவான் இருந்தாலும் விரய ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும்

    5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 3ம் இடமான முயற்சி மற்றும் இளைய சகோதர ஸ்தானத்திற்கு உள்ளது. மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். இடப் பெயர்ச்சி செய்யும் வாய்ப்பு உள்ளது. சிலர் தொழில் அல்லது வேலைக்காகசிறு தூரப் பயணம் செய்வார்கள். சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்து விடுவீர்கள். இதுவரை உலகுக்கு தெரியாமல் இருந்து வந்த உங்களுடையதிறமைகள் அனைவருக்கும்தெரியவரும்.

    தங்களின் செயல் திறனில்மாற்றம் ஏற்பட்டுலகுவாக பணியாற்றி நற்பெயர்பெறுவீர்கள். ஆபரணச் சேர்க்கை உருவாகும். வேலையாட்களால் உருவாகிய பிரச்சனை சீராகும். மனோதிடம்கூடும். 3ம் இடத்திற்கு அஷ்டமாதிபதி குரு மற்றும் பாதகாதிபதி சனியின்பார்வையும் இருப்பதால் கூட்டுத் தொழில் செய்யும் சகோதரர்களாக இருந்தால் உங்களின் சகோதர்உழைப்பை தராமல்லாபத்தை மட்டும் எடுத்து செல்வார். கணக்கில் முறைகேடு செய்யவும் வாய்ப்புள்ளது .நிர்வாக கணக்கில் குழப்பம்செய்து கூட்டுத் தொழில் பிரியும் வாய்ப்புள்ளது.

    7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு உள்ளது. 5ம் இடம் என்பது பதவி ஸ்தானம், புத்தி ஸ்தானம் , பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்தி கூர்மை, தெய்வ அனுகிரகம் பற்றி கூறும் இடம் . கோச்சாரத்தில் 5ம் இடத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் இதுவரை கருத்தரிக்காத பெண்களுக்கு பூர்வ புண்ணிய பலத்தால் கரு உருவாகும். கருத்தரிப்பில் சிரமம்உள்ளவர்களுக்கு வைத்தியம் பலன் தரும். பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும். எப்பொழுது வீட்டில் மேளச் சத்தம் கேட்கும் என்று எதிர்ப்பார்த்த பெற்றோர் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி ஆனந்தம் அடைவீர்கள்.

    கவுரவப் பதவிகள் தேடி வரும். பூர்வீகம்தொடர்பானபிரச்சனைகள் குறையும். குல, இஷ்ட,தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குல தெய்வம் தொடர்பான வேண்டுதல்கள் பலிதமாகும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றஏற்ற காலம் இது.இதுவரைகுல தெய்வம்தெரியாமல்இருந்தவர்கள் முயற்சியின் பேரில் குல தெய்வத்தை கண்டறிய முடியும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். சாஸ்திர ஞானம் கிடைக்கும். விமானம் மூலம்ஆன்மீகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு வரும்.

    11ம் இடம் இரண்டாம் திருமணத்தைக் குறிக்குமிடம். 11ம் அதிபதி குரு 11ல் ஆட்சி பலம் பெற்று 5ம் இடத்தை 7ம் பார்வையாக பார்ப்பதால் இக்கால கட்டத்தில்திருமணம்ஆனவர்கள் கூட தவறான நட்பில்விழுந்துவாழ்கை கேள்விக்குறியாக்கி கொள்வார்கள். ஒருவனுக்குஒருத்தி என்பதே நம் மரபு என்பதை உணர்ந்து செயல்படாவிட்டால் வீட்டு விசயம் வீதி வரை வந்து அவமானப்படுத்தும். மேலும் சுக்ரனின் வீடான ரிஷபத்தில் பிறந்த கலைஞர்கள் கலைத் துறையில் தங்களுக்கென்று தனி இடம் பிடிப்பார்கள். 5ம் இடத்திற்கு குருப் பார்வையும் இருப்பதால் மிகப் பெரிய விருதுகளும், பாராட்டும் கிடைக்கும். அற்புதமான நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தயாரிப்பாளர்கள் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க வேண்டும்.

    9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 7ம் இடத்திற்கு இருப்பதால் திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார்கள். தம்பதியினர்தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோவெவ்வேறுஊர்களில்பிரிந்துவாழ்ந்து கொண்டிருந்தால்இப்பொழுதுஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம்.

    திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்துவாழும் கணவன், மனைவிமீண்டும் சேர்ந்து வாழ்வர். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். களத்திரத்தின் மூலம் சில பொருள் வரவுகள் ஏற்படும். மனக்கசப்பு மாறும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.நண்பர்களுடன்விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

    குருவின் வக்ர பலன்:29.7.2022 முதல் 23.11.2022 வரை

    குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலம் தந்தை வழிச் சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சித்தப்பா, பெரியப்பாவின் மூலம் தீர்த்து வைக்கப்படும். முன்னோர்கள் வழி நரம்பு சம்பந்தமான நோய்க்கு உடனே சிகிச்சை எடுத்தல் அவசியம். சிலர் குடும்ப உறுப்பினர்களால்கடன் பட நேரும். தொழில் நெருக்கடி இருக்கும். தொழில் வாய்ப்புகள் கைநழுவிப் போகும்.

    வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள்.முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடு மிகும் அல்லதுதொழிலாளிகள் மூலம் வழக்கை சந்திக்க நேரும். வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும் அல்லது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது . சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கும் நிலை இருக்கும்.தொழிலை தக்க வைக்க கடுமையானமுயற்சியையும் போராட்டத்தையும் அதிக உழைப்பையும் செலவிட வேண்டும்.

    பெண்கள்:பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். 12ல் ராகு இருப்பதால் பொருளின் தரம், பயன்பாடு, தேவை அறிந்து வாங்கி பயன்படுத்துவது சிறப்பு. தவறான பயன்படாத பொருள் விரயத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை.

    பரிகாரம்:சனிக்கிழமை இஷ்ட ,குலதெய்வம், பைரவரைவழிப்பட்டால் கவலை தீரும். தினமும் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட 12 மிட ராகுவினால் ஏற்படும் விரயம் மட்டுப்படும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    சுபகிருது வருட பலன் - 2023

    நினைப்பதை சாதிக்கும் ஆர்வம் மிகுந்த ரிஷப ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில்சொல்வாக்கு, செல்வாக்கு அதிகரிக்க நல்வாழ்த்துக்கள்.

    ராகு கேதுக்கள் ராசிக்கு 12, 6ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்கள். குரு பகவான் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் உலா வருகிறார். சனிபகவான் 9ம் இடத்தில் நிற்கிறார். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும்.உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். புதிய எண்ணங்கள்மற்றும் திட்டங்கள் தோன்றும். சேவை மனப்பான்மையை மிகும். ஆன்மீக தொண்டு நிறுவனங்கள், சங்கங்களில் இணைந்து சேவை செய்வீர்கள். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறுவார்கள் உங்கள் வாழ்வில் நடந்த கெட்ட சம்பவங்களின் தாக்கம் குறையும்.

    தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும்.உங்களின் புகழ்,அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும்.பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் அனைத்துவிதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள். கடந்த ஆண்டு ரிஷப ராசியினர் அனுபவித்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்.

    குடும்பம்: தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவு செய்வீர்கள். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள்வாங்கி மகழ்வீர்கள். வாடகை வீட்டு தொல்லை அகலும். இதுவரை விற்காமல் கிடந்த அசையாச் சொத்துக்கள் விற்று விடும். பல தலைமுறையாகவிற்காமல் கிடந்த குடும்ப சொத்து கூட விற்று விடும். பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தாய், தந்தை வழி உறவுகளிடம் அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு குடும்பத்தில் இணைவீர்கள். பகைமை மறந்து உறவுகள் ஆறுதலாக இருப்பார்கள். அண்டை அயலார் சச்சரவு முற்றிலும் நீங்கும்.

    ஆரோக்கியம்: நாள்பட்ட வியாதிகள் மறையும்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.பயண அலைச்சலால் சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும்.நீண்ட நாட்களாக படுக்கையில் கிடந்தவர்கள் எழுந்து நடமாடுவார்கள். மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கு கூட நோய் தாக்கம் குறையும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான சுகர், பிரஷர் போன்றவற்றிற்கு மாற்று மருத்துவம் நல்ல பலன் தரும். கை, கால் மூட்டு வலி குறையும்.. ஆயுள் தீர்க்கம். சிலருக்கு கண்களில் அறுவை சிகிச்சைகள் செய்ய நேரும்.

    பெண்கள்: தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் ஆதரவும் சொத்தும் கிடைக்கும். பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு நம்பிக்கையை அதிகரிக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குழந்தைகளின் கல்வி ஆர்வம் , முன்னேற்றம் மன நிம்மதி தரும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

    மாணவர்கள்: உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் இந்த குருப் பெயர்ச்சி ரிஷப ராசி மாணவர்களுக்கு நல்ல எதிர் காலத்தை உருவாக்கித்தரும். பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். 12 ம் இடத்திற்கு ராகு செல்வதால்உயர் கல்விக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகிட்டும். அல்லது விடுதியில் தங்கி படிப்பார்கள். நீங்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாட திட்டத்தில் சேர்ந்து படிப்பீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள்: வேலையில்லாமல் திணறிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு.

    முதலீட்டாளர்கள்: சனி மற்றும் குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால்இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில் இருந்த தொழில் கூட விருவிருப்பு அடையும். தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்ச்சிப்பீர்கள். நீண்ட காலமாக உங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமாகிக் கொண்டு இருந்தால் இப்பொழுது வசூலாகும். தொழில்சிறப்பாகஇருந்தாலும் 12ம் இடமான விரைய ஸ்தானத்தில் ராகுஇருப்பதால்எவ்வளவு லாபம் இருந்தாலும் உபரி வருமானம் இருக்காது. கோட்சார குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிலருக்கு அதிக முதலீட்டில் தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் உதயமாகும். ராகு விரய ஸ்தானத்தை கடக்கும் வரை முதலீட்டாளர்கள் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.

    அரசியல்வாதிகள்: 7ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு உண்டு. பொது மக்களின் ஆதரவு. 5ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சியில் உங்களுக்கு தலைமைப் பொறுப்புகள் உண்டு. நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த பதவிகள் தேடி வரும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் தன்னலமற்ற சேவை செய்வீர்கள்.

    கலைஞர்கள்:சுக்ரனின் வீடான ரிஷபத்தில் பிறந்த நீங்கள் கலைத் துறையில் உங்களுக்கென்று தனி இடம் பிடிப்பீர்கள். 5ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் மிகப் பெரிய விருதுகளும், பாராட்டும் கிடைக்கும். அற்புதமான நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

    விவசாயிகள்: நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம்பாதுகாப்பான முறையில் விவசாயம் செய்வீர்கள். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு உபரி உற்பத்தியும், உபரி வருமானமும் கிடைக்கும்.

    ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார். ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராகு/கேதுக்கள் 12, 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்த்துக் கொண்டு இருந்த உத்தியோகத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்வார்கள். சிலருக்கு பார்த்த வேலைக்கு உடனே ஊதியம் வராமல் தடை தாமதமாகும். சிலருக்கு தகாத பெண்களின் நட்பு உருவாகும். கடன் தொல்லை அதிகரிக்கும். தாய்மானுடன் சிறிய மன பேதம் உண்டாகும். சிலருக்கு கண் திருஷ்டி, உடல் அலர்ஜி, செரிமானக் கோளாறு, காய்சல், தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மருத்துவ செலவு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். தொழில் எதிரிகள் உங்களை கண்டு விலகுவார்கள். சேமிப்புகள் கரையும்.

    குரு: 29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 9ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் வெளியூர், வெளிநாட்டு பயணத்தில் தடை, தாமதம் ஏற்படும். தொழில் போட்டி அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளுடன் மனகசப்பு உண்டாகும். தந்தை குடும்பத்தை பிரிந்து தூர தேசம் செல்லலாம்.சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தம் காரணமாகவோபிரிந்து வாழலாம். தொழில் கூட்டாளிகளிடம்கருத்து வேறுபாடு அல்லதுபிரியும்நிலை ஏற்படும்.

    பரிகாரம்: முறையான பித்ருக்கள் வழிபாடு இன்னல்களை நீக்கும்.

    வரவும் செலவும்

    லாப ஸ்தான குருவால் பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். தொட்டது துலங்கும். இது பொற்காலம் என்று சொல்லும் வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும். லாப குருவினால் கிடைக்கும் வருமானத்திற்கு விரய ஸ்தான ராகுசெலவுகளை இழுத்து விடுவார்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×