search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம் - ஆண்டு பலன் - 2024

    விருச்சகம்

    புத்தாண்டு ராசிபலன்கள்-2024

    விருச்சிகம்- அனைத்து சுப பலன்களையும் அடையமுடியும்

    உதவி செய்வதில் உயர்ந்த விருச்சிக ராசியினரே விரும்பியதை மன பலத்தால் அடையும் தைரியம் நிறைந்த விருச்சிக ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் ராகு-கேதுக்களின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது. சனி பகவான் அர்தாஷ்டமச் சனியாக பலன் தர உள்ளார். ஏப்ரலுக்குப் பிறகு ராசிக்கு குருப்பார்வை கிடைக்க உள்ளதால் தடைகள் தகன்று எதிர்பார்த்த அனைத்து சுப பலன்களையும் அடையமுடியும்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டின் துவக்கத்தில் ஏப்ரல் 21 வரை குருபகவான் 6-ம்மிடத்தில் சஞ்சரிப்பதால் வேலையில் விரும்பிய மாற்றம் கிடைக்கும்.அரசு உத்தியோக வாய்ப்பு சித்திக்கும். நோய்க்கான சிகிச்சை பலன் தரும். எதிரிகள் தாமே விலகுவார்கள். ஏப்ரல் 21 அன்று களத்திர ஸ்தானமான 7-ம் மிடத்திற்குச் செல்லும் குரு பகவான் 5-ம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் ராசியையும் 9ம் பார்வையால் முயற்சி, சகாய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். நல்ல செய்திகள் தேடி வரப்போகிறது. வைத்தியச் செலவு குறையும்.

    முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற தடைபட்ட சுப நிகழ்வுகள் நடக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தவர்கள் குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு உள்ளது. பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மனதளவில் உற்சாகமாகவும், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குரு பகவானின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. புதிய தொழில் வியாபாரம் தொடங்கலாம். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    ஆண்டு முழுவதும் அர்த்தாஷ்டமச் சனியாக பலன் தந்தாலும் 3,4ம் அதிபதி சனி 4ல் ஆட்சி பலம் பெறுவதால் மனதில் உற்சாகம் பிறக்கும். மனத்தடுமாற்றம் பய உணர்வு அகலும். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாகனங்கள் சேரும்.வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டிற்குச் செல்வார்கள். தாயின் மூலம் ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளின் மனக்கவலை அகலும். சனி பகவான் 3ம் பார்வையால் ருண ரோக சத்ரு ஸ்தானத்தைப் பார்ப்பதால் கடன் தொல்லைக் கட்டுக்குள் இருக்கும்.

    உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். 7ம் பார்வையால் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் தொடர்பான இழுபறியான விசயங்கள் சித்திக்கும். அரசின் ஆதரவு மானியம் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். 10ம் பார்வையால் ராசியை பார்ப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். முக்கிய செயல்களில் நன்மை தீமை அறிந்து முடிவு எடுப்பது நல்லது. போதிய பண வரவு இருந்தாலும் எதிர்பாராத செலவும் இருக்கும். ஏப்ரலுக்குப் பிறகு ராசியை குரு பார்ப்பதால் எதையும் சமாளிக்கக் கூடிய மனபலம் உண்டாகும்.

    ராகு கேது சஞ்சார பலன்கள்

    5ல் ராகுவும் 11ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். 5ல் உள்ள ராகு பகவான் ஆட்சி பெற்ற குரு பகவானைப் போலவே செயல்படுவார். அனைத்து துறையினருக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வு, திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். பங்குச் சந்தை ஆதாயம் பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். பூர்வீகச் சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். முன்னோர் சொத்துக்களை பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம் இது.

    பிள்ளைகள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். மாணவர்களுக்கு உயர் கல்வி கற்கும் ஆர்வம் உண்டாகும். மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர் பாலினத்தவரிடம் தேவையறிந்து பழகவும். காதல் விவகாரங்கள் வம்பு, வழக்கில் முடியும்.கடந்த சில ஆண்டு காலமாகவே கஷ்டத்தில் தவித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024ம் ஆண்டு நிம்மதியும் சந்தோஷமும் தரக்கூடிய ஆண்டாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

    விசாகம் 4

    மனக் கட்டுப்பாடு கூடும். ராசிக்கு குருப்பார்வை கிடைப்பதால் மன சஞ்சல மிகுதியால் கட்டுப்பாடு இல்லாமல் அலைந்த மனம் கட்டுப்படும். எவை நல்லவை, எவை தீயவை என மனதால் பகுக்க முடியும். உங்களை ஏளனம் பேசியவர்கள் எல்லாம் புகழ்வார்கள் .தன் நம்பிக்கையும் தைரியமும் மிகுதியாகும்.தோற்றப் பொலிவு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும்.

    எதிர்பாலின நட்பால் குடும்பத்தில் தேவையில்லாத மன சஞ்சலம் உருவாகலாம்.உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் .புதிய தொழில் முயற்சி வெற்றி அடையும். வீட்டில் சுபமங்கள காரியங்களால் தாராளமான பணச் செலவுகள் ஏற்படும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சங்கடஹர சதுர்த்தியன்று வெள்ளெருக்கு மாலை சாற்றி விநாயகரை வழிபடவும்.

    அனுஷம்

    முயற்சிகள் வெற்றியடையும். ராசியை குரு பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். உடல் நலக் கோளாறுகள் சீராகும். இறை வழிபாட்டில் மகிழ்ச்சி அடைவீர்கள். திறமையால் உங்களைச் சார்ந்தவர்களை நல்வழிப்படுத்துவீர்கள்.வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளினால் நன்மைகள் நடைபெறும்.சொத்துக்களினால் வருமானம் உண்டு.

    தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைவாக நிறைவேறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொலைத்து போன, கை மறதியாக வைத்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் திரும்பவும் கிடைக்கும். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும்.வர வேண்டிய பணம்வரும். சங்கடஹர சதுர்த்தியன்று மஞ்சள் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.

    கேட்டை

    தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றிக் கொள்வீர்கள். இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். ராசியை குரு பார்ப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். தாய், தந்தையின் அன்பு,ஆதரவு, ஆசீர்வாதம் நிறைந்து இருக்கும். வீடு, வாகன யோகம்,குழந்தை பாக்கியம், பிள்ளைகளின் சுப காரியம் வெளியூர், வெளிநாட்டு தொழில் வேலை வாய்ப்பு என பலவிதமான பாக்கிய பலன்களும் கிடைக்கும்.

    ஆலயத் திருப்பணி, குரு உபதேசம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். கை விட்டுப் போன சொத்துக்கள் கைவசமாகும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.முன் கோபத்தைக் குறைத்துப் பொறுமையோடு செயல்பட வேண்டும்.சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

    திருமணம்

    தடைபட்ட திருமணம் நடக்கும். காதல் கலப்புத் திருமணம் அதிகரிக்கும். முதல் திருமணம் தோல்வியடைந்து இரண்டாம் திருமணத்திற்கு வரன் பார்பவர்களுக்கு வரன் அமைந்து திருமணம் நடைபெறும். 40 வயதைக் கடந்தும் திருமணமாகாத பல ஆண்கள், பெண்களுக்கும் திருமணம் நடக்கும்.

    பெண்கள்

    கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அடிக்கடி மங்களகரமான விசேஷங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீண் பேச்சை குறைப்பதால் குடும்பத்தில் கலகலப்பு கூடும். மாமியார், மருமகள் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பணப்புழக்கம்அதிகரிக்கும் நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும்.நகை புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள்.

    வியாபாரிகள்

    சுமாராக இருக்கும் தொழில் கூட சூப்பர் தொழிலாகும்.இழுத்து மூடிவிட்டு செல்லும் நிலையில் இருந்த தொழில் கூட விறுவிறுப்பு அடையும். தொழில் மேன்மைக்கு அளப்பரிய புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவீர்கள்.கூட்டுத் தொழில் செய்யும் சகோதரர்களாக இருந்தால் உங்களின் மூத்த சகோதரர் உழைப்பை தராமல் லாபத்தை மட்டும் எடுத்து செல்வார். கணக்கில் முறைகேடு செய்யவும் வாய்ப்புள்ளது .நிர்வாக கணக்கில் குழப்பம் செய்து கூட்டுத் தொழில் பிரியும் வாய்ப்புள்ளது.

    உத்தியோகஸ்தர்கள்

    வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும் அல்லது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது . சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கும் நிலை இருக்கும். வேலையை தக்க வைக்க கடுமையான முயற்சியையும் போராட்டத்தையும் அதிக உழைப்பையும் செலவிட வேண்டும். அடிமட்ட ஊழியர்களை இது பாதிக்காது.அரசுப் பணியாளர்களின் உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் திருப்பம் ஏற்படும்.

    அரசியல்வாதிகள்

    5ம்மிடம் பதவி ஸ்தானம் என்பதால் கவுரவப் பதவிகள் தேடி வரும். பொது வாழ்க்கையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் மிகும்.அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் அடிக்கடி கட்சி மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். வம்பு, வழக்கைத் தவிர்த்தல் நல்லது.

    பரிகாரம்

    வெற்றிலை, பாக்குடன் பேரிச்சம்பழம், தேன் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட, குலதெய்வம் முருகனை வழிப்பட்டால் துயரம் தீரும்.

    விருச்சகம்

    ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

    வீரமான விருச்சிக ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். முன்னோர்களின் நல்லாசி யையும், குல தெய்வ அருளை யும் பெற்றுத் தரவிருக்கும் ஆரவாரமான புத்தாண்டாக இந்த வருடம் அமையப் போகிறது. அனைத்து விதமான நல்ல முயற்சிகளும் பலிதமாகும்.

    மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள்.திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். இந்த வருடம் சனி மற்றும் ராகு கேதுவின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. குருவின் சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளதால் ஆன்மீக வழிபாட்டில் கவனம் செலுத்தினால் மலை போல் வந்த துன்பம் பனி போல விலகும்.

    குருவின் சஞ்சார பலன்கள்:

    விருச்சிக ராசிக்கு 2,5ம் அதிபதியான குருபகவான் ஏப்ரல் 22, 2023 வரை 5ம் இடத்திலும் அதன் பிறகு 6ம் இடத்திலும் சஞ்சாரம் . செய்கிறார். வீடு, வாகனம் போன்ற சுப விரயத்திற்கு கடன் பெறலாம். சுப செலவுகளுக்கு சகோதர சகோதரியிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் நலனில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியக் குறைபாட்டை முறையான வைத்தியத்தில் சரி செய்ய முடியும்.

    வாழ்க்கைத் துணையின் பிரச்சினைகள் தீரும். ஆடம்பரச் செலவைக் குறைப்பதன் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும். குருவினால் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பாதிப்பு இருக்காது. குடும்ப நலனுக்காக ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வர திட்ட மிடுவீர்கள். தடைபட்ட வேலை கிடைக்கும். வேலையாட்களால் தொல்லைகள் உருவாகலாம்.அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து பொழிவு பெறச் செய்வீர்கள்.

    சனியின் சஞ்சாரபலன்கள்:

    ராசிக்கு 3, 4ம் அதிபதியான சனி பகவான் ஜனவரி 17, 2023 முதல் 4ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். இது அர்தாஷ்டமச் சனியின் காலமாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். தேடி வரும் அதிர்ஷ்டத்தை தக்க சமயத்தில் பயன்படுத்தி பலன் பெறுவார்கள். தகுதிக்கும் திறமைக்கும் மீறிய வருமானம் கிடைக்கும். பங்குச் சந்தையில், யூக வணிகத்தில் பெரும் லாபத்தை கொடுப்பார்.

    பூர்வீகச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். குழந்தைகளால் ஏற்பட்ட தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் அகலும்.புத்திர தோஷம் நீங்கும்.பிள்ளைகளுக்கு சுப நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு புதியதாக காதல் உருவாகும். சிலருக்கு பட்டுப் போன காதல் மீண்டும் துளிர்விடும். புகழ், அந்தஸ்து, கவுரவம் உண்டாகும்.

    மனதளவில் ஆன்மீக வாதியாகவும் வெளி உலகத்திற்கு நாத்திகவாதியாகவும் மனதளவில் ஆன்மீகவாதியாகவும் இருப்பவர்களின் பக்தி வெளிப்படையாகும். சாஸ்த்திர நம்பிக்கை அதிகரிக்கும். குல தெய்வக குற்றம் நீங்கும். குல தெய்வ கோவிலுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு உண்டாகும். வயதான சிலர் பூர்வீகம் சென்று செட்டிலாவார்கள். அயல் நாட்டிலிருந்து பூர்வீகம் திரும்ப முடியாமல் சிரமப்பட்டவர்களுக்கு பூர்வீகம் திரும்பக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். விரும்பிய பதவி மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் பதவியில் திறமைக்கு ஏற்ற பாராட்டும் பரிசும் கிடைக்கும். பணிச்சுமை குறையும். தொழிலில் புதிய சிந்தனைகளை செயல்படுத்துவீர்கள். தாய் மாமாவின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும்.

    ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

    அக்டோபர் 30, 2023 வரையில் ராசிக்கு 6ல் ராகுவும், 12ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். அதன்பிறகு ராகு 5ம் இடத்திற்கும், கேது 11ம் இடத்திற்கும் செல்கிறார்கள்.

    பண வரவு அமோகமாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல வாபத்தை பெற்றுத்தரும். பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம்.பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். இழந்த பதவி தேடி வரும்.

    உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு. மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும்.பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும்.அதனால் சில செலவுகளும் வரும். கூட்டுத் தொழில் புரிபவர்கள் பொறுமை, நிதானத்துடன் இருக்க வேண்டும். தாய், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

    திருமணம்: திருமணமாகதவர்களுக்கு திருமணம் கூடி வரும். திருமணக் கனவு நினைவாகும். ராசிக்கு சனியின் பத்தாம் பார்வை இருப்பதால் நல்ல சொந்த தொழில் செய்யும் வரன் அமைய வாய்ப்புள்ளது. வெகு சிலருக்கு அர்தாஷ்டமச் சனியால் திருமணம் தள்ளிப் போகலாம்.

    பெண்கள்: தம்பதிகளின் உறவில் அந்யோன்யம் நீடிக்கும்.புதிய முயற்சிகளை கவனத்துடன் அணுகவும்.ஆரோக்கியத்தில் அக்கரை தேவை.தாய் வழி இல்ல விசேஷங்களில் நடைபெறும் உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும். சகோதரருக்கு கொடுத்த பணம் வசூலாகும்.குடும்ப உறவுகளிடையே நிலவி வந்த சங்கடங்கள் மறையும். தன வரவு தாராளமாக இருக்கும். அடமான நகைகள் மீண்டு வரும்.

    மாணவர்கள்: கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர வாய்ப்பு கிடைக்கும். சிலர் அரியர்ஸ் பாடத்தையும் சேர்த்து எழுதி உயர் கல்விக்குச் செல்வார்கள். குழந்தைகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள். வேற்று மொழி கற்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

    விசாகம் 4: மன சஞ்சலங்கள் பஞ்சம குருவால் சீராகும். பிரிந்த நட்புகள் மலரும். உறவுகளால் ஏற்பட்ட பகைமை மாறும். சொத்துக்காக சண்டையிட்டவர்கள் சொந்தம் தான் முக்கியம் சொத்து முக்கியமல்ல என்பதை உணர்வார்கள். புரிதல் உண்டாகும். தடைபட்ட பொருள் வரவு சீராகும். திருமணம், குழந்தை பேறு போன்ற சுப விசயங்கள் மனதில் மட்டற்ற மகிழ்சியை தரும்.கடன்களால் ஏற்பட்ட கவலைகள் அகலும்.பெண்களுக்கு எதிர்பார்த்த உத்தியோக மாற்றம் சித்திக்கும் கணவன், மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். புத்தியை தீட்ட வேண்டிய காலம்.புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நினைப்பதெல்லாம் நடக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். தங்கம் வாங்குவீர்கள். பிரார்த்தனைகள் உடனே பலிதமாகும்.

    பரிகாரம்: பெளர்ணமி திதியில் சத்திய நாராயணர் பூஜை நல்ல பலன்கள் அதிகரிக்கும்.

    அனுஷம்: தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கோபம் குறையும். வீண் அலைச்சல் நீங்கும். வியாபாரத்தில் தேங்கிய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் குறைந்தநேரம் வேலை பார்த்து அதிக வருமானம் ஈட்டுவீர்கள். தொழில், வேலையில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வெளிவட்டாரத் தொடர்புகள் மூலம் தொழில், வியாபாரம் விரிவடையும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். விரும்பிய வரன் கை கூடி வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு.பெற்றோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு சரளமாகும். உறவுகளின் அன்பில் உள்ளம் குளிரும்.

    பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டை முறைப்படுத்த பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை அடையும்.

    கேட்டை: எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையாட்களால், உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகி நன்மை உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அசையாச் சொத்து வகையில் அனுகூலங்கள் உண்டாகும். இளவயதினருக்கு புத்திர பிராப்தி உண்டாகும். வயோதிகர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் உண்டு. ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.

    வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். இல்லத்து விசேஷங்களுக்கு பாராமுகம் காட்டிய உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும்.தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். வரவு செலவு சீராக இருக்கும். ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.

    பரிகாரம்:ஞாயிற்று கிழமை காலை 6-7 சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    விருச்சிக ராசியினர் புத்தாண்டில் சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில். இங்கு சென்று வழிபட்டு வர சங்கடங்கள் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் அமையும்.

    விருச்சகம்

    ஆங்கில ஆண்டு பலன் - 2022

    அறிவாற்றலும், முன் கோபமும் நிறைந்த விருச்சிக ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் வருட கிரகங்களின் சஞ்சாரங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஏப்ரல் 2022-க்குப் பிறகு பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். உயர்ந்த நிலையை எட்டிவிட வேண்டும் என்று வைராக்கியத்துடன் செயல்படுவீர்கள். மூளை பலம் தான் மூலதனம் என புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள்.கடந்த ஒரு வருடங்களாக வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் நிலை மாறும். ஆரோக்கிய குறைபாடு அகலும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தொல்லை கொடுத்த வாழ்க்கை துணையிடமிருந்து விவாகரத்து கிடைக்கும். மனதிலிருந்த கவலைகள் மாறும். இனி விரிவான புத்தாண்டு பலன்களை காணலாம்.

    குரு சஞ்சார பலன்: ஏப்ரல் 13, 2022 வரை நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் நான்காமிடம் என்பது சுகஸ்தானம் என்பதால் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும். தேவையில்லாத எண்ணங்கள் நிறைவேறாத செயலில் முயற்சியை உண்டாக்கி மன சஞ்சலத்தையும் அமைதியற்ற நிலையையும் ஏற்படுத்துவார். உடல் நலம் பாதிப்படையும். நெருங்கிய உறவுகள் பகையாவார்கள். தாய் வழி உறவுகளிடம் வீண், வம்பு, வழக்கு உருவாகும் அல்லது பொருளாதாரத்திற்கு யாருடைய கட்டுப்பாட்டிலாவது இருக்க நேரும்.

    சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையும். சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம். சிலருக்கு அடமானத்திலிருந்த சொத்துக்கள் மீண்டு வரும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புது சொத்தாகி விடும். சிலருக்கு சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும். ஓட்டை வண்டியை வைத்து காலத்தை ஒட்டியவர்கள் புது வண்டி வாங்கலாம்.சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள்இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும்.

    ஏப்ரல் 13-ல் குரு கும்பத்திலிருந்து மீனத்திற்கு பெயர்ந்து ஆட்சி பலம் பெற்றவுடன் அதிர்ஷ்டம் பேரதிர்ஷடமாகும். கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம். அதிர்ஷ்டப் பணம் அதிர்ஷ்ட சொத்து, பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தாயின் ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்த கவலைகள் அகலும். தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும். ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் உழைப்பீர்கள். செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும்.

    பலருக்கு சுய விருப்ப விவாகம் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். சிலருக்கு ஒரு துணை இருக்க மற்றும் ஒரு துணை கிடைக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். குலதெய்வ, குடும்ப தெய்வ வழிபாடு உங்களுக்கு உதவியாக இருக்கும். உடலும் உள்ளமும் குளிரும். சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்புமுனையான சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும்.

    சனியின் சஞ்சார பலன்கள்: கோட்சார சனி 3ல் இருப்பதால் பல்வேறு சோதனைகள் சாதனையாகும். ஆயுள் ஆரோக்கியம் சீராகும். உங்களின் முயற்சிகள் பலிதமாகும். தைரியம் ,தெம்பு உருவாகும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிறும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும்.

    இது வரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்சி கடலில் ஆழ்த்தும். சிந்தனை செயல் திறன் கூடும். முகப் பொழிவு ஏற்படும். தன வரவு இரட்டிப்பாகும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கிட்டும்.சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும். அசையும், அசையாச் சொத்து வாங்கி மகிழ்வீர்கள்.

    26.2.2022 முதல் 6.4.2022 வரை ராசி அதிபதி செவ்வாயும் 3, 4-ம் அதிபதி சனியும் 3ம் இடமான சகாய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானத்தில் இணைகிறார்கள். செவ்வாய் உங்களின் ராசி அதிபதி. அவரே 6ம் அதிபதி என்பதால் உங்களுக்கு எதிரி என்று ஒருவர் வெளியில் இருந்து வரத் தேவை இல்லை. உங்களின் செயல்பாடே உங்களுக்கு எதிரியாக மாறும்.

    சகோதர்களிடம் ஒத்துப் போக முடியாத நிலை உண்டாகும். சிலரின் தாய், தந்தை உயில் எழுதலாம். உயில் உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். காது, மூக்குத் தொண்டைக்கு சிகிச்சை செய்ய நேரும். கண் திருஷ்டி செய்வினைக் கோளாறு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.உஷ்ணம் தொடர்பான நோய்கள் வாட்டி எடுக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எனினும் தேவைக்கு அதிகமாக கடன் வாங்கினால் திருப்பி கட்ட முடியாமல் பகை உருவாகும்.

    சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வாங்கும் எண்ணம் தோன்றும். யாருக்கேனும் ஜாமீன் போட்டு வம்பு வழக்கில் சிக்கி கொள்ள நேரும். விற்கப்பட வேண்டிய சொத்துக்கள் முறையான ஆவணம் இன்மையால் தடைபடும். அண்டை அயலாருடன் சொத்து தொடர்பான எல்லைத் தகராறு உண்டாகும். அடுத்தவர் தவறை சுட்டிக் காட்டி உங்களின் வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கக் கூடாது.

    ராகு/கேது சஞ்சார பலன்: ராசியில் கேதும் 7-ல் ராகுவும் 12.4.2022 வரை சஞ்சா ரம் செய்கிறார்கள். ராசியில் உள்ள கேது உங்க ளின் அனுசரணையான அணுகு முறை யால் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங் களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கௌரவம் உயரும். உங்கள் இன, மத இயக்கங்களில் முதன்மைப் பதவியும், கௌரவமும் தேடிவரும். லக்னத்தில் நிற்கும் கேது பலவிதமான தொழில் ஞானத்தை வழங்குவார். ஏழாமிட ராகு மிகுதியான பொருளாசையைக் கொடுத்து தவறான செயலைத் தூண்டுவார். ராகுவின் தாக்கத்தால் ஆன்மா தன் தொழில் ஞானத்தை மறக்கும்.

    பரம்பரையாக கௌரவத் தொழில் செய்பவர்கள் தொழில் தொடர்பான நல்ல முடிவை எடுக்கிறோம் என்று தவறான முடிவை எடுக்கவைக்கும் காலம். அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும். பல ஆண்டுகளாக தொழில் செய்தவர்கள்கூட தவறான முடிவை எடுக்கிறார்கள். அதிர்ஷ்டத்தைத் தேடி லாபத்தை இழக்கநேரும். ஏழாமிட ராகு ஒருசிலரின் தந்தைக்கு தவறான நட்பை ஏற்படுத்தி, அதன்மூலம் பொருள் இழப்பை மிகுதிப் படுத்தி, தொழிலை நிலைகுலையச் செய்யும். கௌரவத்தைக் காக்க பூர்வீக சொத்தையும் இழக்கநேரும் என்பதால் கவனம் தேவை.

    12.4.2022-ல் கேது 12-ம் இடத்திற்கும் ராகு 6-ம் இடத்திற் கும் மாறுகிறது. உடல் ஆரோக்கியம் குறையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுமாரான நேரம். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தடைப்பட்ட திருமணங்கள் மனச் சங்கடத்துடன் நடக்கும். வேதனைப்படுத்தும் காதல்- கலப்புத் திருமணங்கள் அதிகமாக நடக்கும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். திருமணமான தம்பதிகள் மகிழ்சியாக இருந்தாலும், சம்பந்திகளின் சண்டையால் மன வருத்தம் ஏற்படும். இரண்டாவது குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும்.

    தொழில் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் தொழில் சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கும். சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும்.

    திருமணம்: ராசியில் கேதுவும் ஏழில் ராகுவும் உள்ளதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் புதன், கேது தசை நடப்பவர்களுக்கு மிகைப்படுத்தலாக இருக்கும். கோட்சார சனி, குருவால் திருமணத் தடை இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. மேலும் 2022 ஏப்ரலில் ராகு/கேதுக்கள் விருச்சிகம், ரிஷபத்தைக் கடக்கும் வரை விருச்சிக ராசியினருக்கு நடக்கும் திருமணம் கலப்பு திருமணமாகவோ அல்லது மன நிறைவற்றதாகவோ இருக்கும். திருமண வாழ்வில் நிம்மதி இருக்காது. மன கசப்பான சம்பவங்கள் நடைபெறும். ஏப்ரல் 2022-க்குப் பிறகு நடைபெறும் திருமணம் நீடித்த நிலைத்த இன்பம் தரும்.

    பெண்கள்:பணப்புழக்கம் சரளமாக இருக்கும். வீட்டிலும் பணிபுரியும் இடத்திலும் சாதகமான சூழல் நிலவும். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வரும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி உறவில் அன்பு மிளிரும்.

    விவசாயிகள்: கடந்த ஆண்டு இழப்புகளால் ஏற்பட்ட எதிர்மறை எண்ணங்கள் மறையும் நேரம் வந்து விட்டது. இந்த ஆண்டு விளைச்சல் பணத்தை வீடு கொண்டு வந்து சேர்க்கும். பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். கடன் பிரச்சனை சிறிது சிறிதாக குறையும்.வாய்க்கால் வரப்பு தகராறு பேச்சு வார்த்தை சமரசமாகும்.

    உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார் துறை ஊழி யர்களுக்கும் ஓவர் டைம் வருமானம் மகிழ்ச்சியைத் தரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற் றம் உண்டாகும்.தொழிலா ளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். ஆனால் உயர் அதிகாரிகளால் சில சங்கடங்கள் நிலவும். அதனால் வேலை மாற்றம் செய்யும் சிந்தனை மேலோங்கும்.

    வேலை இல்லாமல் திணறிக் கொண்டு இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்ய ஏற்ற நேரம். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும்.

    முதலீட்டாளர்கள் / வியாபாரிகள்: தொழிலில் நிலவிவந்த மந்தநிலை மாறி, தொழிலை விரிவுபடுத்த வாய்ப்பு உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும்.தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்றுக் கருத்து மறையும். பொருளாதாரத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சூழ்நிலை உண்டாகும்.

    அரசியல்வாதிகள்: உங்களின் மூன்றாம் அதிபதி சனி மூன்றில் ஆட்சி பலம் பெற்று ஐந்தாமிடமான பதவி ஸ்தானத்தை பார்ப்பதால் விரும்பிய பதவி தேடி வரும். சனி பகவான் பதவி கொடுத்தால் யார் தடுக்க முடியும். மேலும் ஏப்ரலில் குரு 5ம் இடமான மீனத்தில் ஆட்சி பலம் பெற்றவுடன் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான பலன்கள் நடைபெறும்.ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதை மூன்றாமிட சனி புரிய வைப்பார்.

    மாணவர்கள்: ராசியில் உள்ள கேதுவால் ஞானம் பெருகும். சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும். ஆசிரியர் , மாணவர்களுக்குள் நல்லுறவு ஏற்படும். 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படிக்கும் விருச்சகராசியின்ர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மாநில, மாவட்ட அளவிளான போட்டி பந்தயங்களில் கலந்து வெற்றி பெற்று பரிசுகளும் பதக்கங்களும் வாங்கி குவிப்பார்கள்.

    விசாகம் 4-ம் பாதம்: புத்திர பாக்கியம் சித்திக்கும். சாஸ்த்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். நிலுவையில் உள்ள தொழில் தொடர்பான வழக்குகள் சாதமாகும். வியாழக் கிழமை ஸ்ரீ சாய் பாபாவை வழிபட நன்மைகள் அதிகமாகும்.

    அனுஷம்: ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந் தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனை யாக உருவாகும். முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம். சனிக்கிழமை ஸ்ரீ ஆஞ்ச நேயரை வழிபட ஏற்றமான பலன் உண்டாகும்.

    கேட்டை: பல வருடங்களாக தீராத பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாதத்தவணையில் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தினமும் சிவபுராணம் படித்து வர நிம்மதி உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×