search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்

    விருச்சகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.3.2023 முதல் 13.4.23 வரை

    வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரித்து தன ஸ்தானத்தைப் பார்க்கிறார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதரர்களுடன் இருந்த சலசலப்புகள் மாறும். பேச்சுத் திறமை யால் காரியங்களை சாதிப்பீர்கள். உற்ற நண்பர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வெற்றி வாகை கைகூட வழிவகுத்துக் கொடுப்பர். கரைந்த சேமிப்புகள் மீண்டும் வந்து சேரும். உறைந்த பனிக்கட்டிபோல் உள்ளம் குளிர்ச்சியாகும்.

    இம்மாதம் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை சகாய ஸ்தானத்தில் உள்ள சனியின் மீது பதிவதால், ஒருசில காரியங்களில் கவனத்தோடு இருப்பது நல்லது. வீடு, இடம் தொடர்பான விஷயங்களில் வில்லங்கம் இல்லை என்பதை உறுதி செய்து வாங்குங்கள். உறவுகளுக்குள் இருந்த உரசல்கள் மாற, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வரவுக்கு மத்தியில் செலவுகள் அதிகரித்தாலும், வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாது. தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் அதிகம் பெற்ற நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது வரும் முட்டுக்கட்டைகள் அகல வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். கசந்த காலங்களை வசந்த காலமாக மாற்றுவது வழிபாடுகள் தான்.

    மேஷ - புதன்

    பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான புதன், 6-ம் இடத்திற்கு செல்கிறார். எனவே பெயர், புகழ், கீர்த்தி அதிகரிக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும். விபரீத ராஜயோக அடிப்படையில் புதன் செயல்படும் என்பதால், மனக்கவலை மாறும். மகிழ்ச்சி கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பார்த்தோர் வியக்கும் வண்ணம் வாழ்க்கை அமையும். எதிரிகள் உதிரிகளாவர். லாபம் எளிதில் கிடைக்க வழி பிறக்கும். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளின் ஆதரவு கூடும். உயர் பதவியும், ஊதியத்தில் உயர்வும் கிடைத்து சந்தோஷத்தை சந்திக்கும் சூழ்நிலை உண்டு.

    ரிஷப - சுக்ரன்

    பங்குனி 24-ந் தேதி உங்கள் ராசிக்கு 7, 12-க்கு அதிபதியாக சுக்ரன், சப்தம ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே திருமண வாய்ப்புகளில் இருந்த தேக்க நிலை மாறும். அருமையான வாழ்க்கைத் துணை அமையும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவது முதல் அதிநவீன எந்திரங்கள் வாங்குவது வரை செயல்படும் நேரம் இது. மனதில் தோன்றியதை மறுகணமே செய்து முடிக்கப் பணவரவும் உண்டு. பக்கபலமாக நண்பர்களும் உண்டு. தொழில் வளர்ச்சிக்குத் தொகையும் வந்து சேரும். புதிய கூட்டாளிகளும் வந்திணைவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் நடத்துபவர்கள் போட்டிகளைச் சமாளித்து வெற்றி காண்பர். கலைஞர்களுக்கு ஒளிமயமான வாழ்வு அமைய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்களுக்கு நினைவுத்திறன் அதிகரித்து வெற்றி வாகை சூடுவர். உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பு கைகூடும். பெண்களுக்கு பாசத்திற்குரிய தம்பதியர்களாக மாறும் வாய்ப்பு உண்டு. பல்வேறு வகையில் உதவிகள் கிடைக்கும். சுபச்செய்திகள் இல்லம் தேடி வரும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு.

    இம்மாதம் லட்சுமி நரசிம்மர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 15, 16, 20, 21, 30, 31, ஏப்ரல்: 1, 6, 7, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    விருச்சகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    13.2.2023 முதல் 14.3.2023 வரை

    எதிர்காலத்தை இனியதாக மாற்றும் விருச்சிக ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், தன ஸ்தானத்தை பார்க்கிறார். எனவே பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ராசியின் மீது குரு பார்வையும் பதிவதால், தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் லாபாதிபதி புதனோடு இணைந்து சனி சஞ்சரிக்கிறார். இதனால் தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குருவின் பார்வை உங்கள் ராசியிலும், 9,11 ஆகிய இடங்களிலும் பதிவதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும்.

    உச்ச சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 4-ம் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு சப்தம - விரயாதிபதியான சுக்ரன், உச்சம் பெறுவது யோகம்தான். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணை வழியே நன்மைகள் கிடைக்கும். உதிரி வருமானங்கள் வந்துசேரும். புதிய வாகனங்கள் வாங்கி மகிழும் யோகம் உண்டு. பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இந்த நேரத்தில் இடம், பூமி வாங்குவது அல்லது வீடு கட்டிக் குடியேறுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியான புதன், 4-ம் இடத்திற்கு செல்லும் பொழுது தாய்வழி ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பாராத தன லாபம் இல்லம் தேடிவரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மார்ச் 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியாக விளங்கும் புதன், நீச்சம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான். அதே நேரத்தில் நீச்சம் பெற்ற புதன், குருவோடு இணைந்து 'நீச்ச பங்க ராஜயோக'த்தை உருவாக்குகிறார். இதனால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். அரைகுறையாக நின்ற பணிகள் அனைத்தும் நடைபெறும். வெளிநாட்டில் இருந்து நண்பர்கள் மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கலாம்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன், 6-ம் இடத்திற்கு வரும்பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் வந்துசேரும். உத்தியோக உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். தொழில் நடத்துபவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வளர்ச்சி கூடும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் ஒவ்வொன்றாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். செவ்வாயின் பார்வை சனி மீது பதிவதால் சகோதர வர்க்கத்தினர்களுடன் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பாகப்பிரிவினைகளில் தாமதம் ஏற்படும். இருப்பினும் குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடலாம்.

    இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபட்டு வந்தால் வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 16, 17, 18, 21, 22, மார்ச்: 4, 5, 8, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    விருச்சகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    16.12.22 முதல் 14.1.23 வரை

    தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்க்கிறார். பலம்பெற்று சஞ்சரிக்கும் குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    புதன் வக்ர இயக்கம்

    உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். அஷ்டமாதிபதியான புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். லாபாதிபதியாகவும் புதன் விளங்குவதால், அதன் வக்ர காலத்தில் பணவரவு தாமதப்பட்டாலும் திடீர் திடீரெனப் பெருந்தொகைகள் வந்து மகிழ்ச்சியைத் தரும். தொழில் வர்த்தகத் துறையில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் கூடுதல் பொறுப்புகளும், அதற்கேற்ற விதத்தில் சம்பளமும் கிடைக்கலாம். இலாகா மாற்றங்கள் இனிமை தரும்.

    மகர - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். களத்திர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வாழ்க்கைத் துணை வழியே நல்ல தகவல்கள் கிடைக்கும். குறிப்பாக அவர்கள் உத்தியோகம் சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடு செய்திருந்தால் அது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். அனுகூலமான விரயங்கள் உண்டு. அரைகுறையாக நின்ற காரியங்கள் செவ்வனே முடியும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து கடமையை முடித்துக் கொடுப்பர். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து உத்தியோகம், தொழில் ரீதியான அழைப்புகள் வரலாம்.

    புதன் வக்ர நிவர்த்தி

    மார்கழி 24-ந் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால், யோகங்கள் படிப்படியாக வந்து சேரும். குறிப்பாக லாபாதிபதி பலம்பெறும்போது, தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். வீடுகட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி கைகூடும். நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வர்த்தகம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கும் 6-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் செவ்வாய். உங்கள் ராசிநாதன் வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். தொழில் வளம் பெருகும். கிளைத் தொழில்கள் தொடங்க, கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம்.

    6-க்கு அதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் அதன் வக்ர நிவர்த்தி காலத்தில் பணியில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். தங்கள் முன்னேற்றத்தை சக பணியாளர்களிடம் சொல்ல வேண்டாம். செவ்வாய் பார்வை உங்கள் ராசியின் மீது பதிவதால் துணிந்து சில முடிவுகளை எடுத்து துயரங்களை வெளியேற்றிக் கொள்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை திருப்திகரமாகவே இருக்கும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு நீங்கள் செய்யும் கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    இம்மாதம் நடராஜப் பெருமான் வழிபாடு நலம் யாவும் வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 18, 23, 24, 28, 29, ஜனவரி: 8, 9, 13, 14. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    17.11.21 முதல் 15.12.21 வரை

    நல்லதைச் செய்தால் நல்லதே நடக்கும் என்று சொல்லும் விருச்சிக ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாபாதிபதி புதனுடன் இணைந்து குருவால் பார்க்கப் படுவதால் 'குருமங்கள யோகம்' ஏற்படுகின்றது. எனவே இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். செல்வ நிலை உயரும். செயல்களில் வெற்றி கிடைக்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.

    செவ்வாய்-சனி பார்வைக் காலம்

    மாதத் தொடக்கத்தில் இருந்து கார்த்திகை 20-ந் தேதி வரை செவ்வாய்-சனியின் பார்வை இருக்கின்றது. மகரத்திலுள்ள சனி துலாத்திலுள்ள செவ்வாயைப் பார்க்கின்றார். ராசிநாதனாகவும், 6-க்கு அதிபதியாகவும் விளங்கும் செவ்வாய் சகாய ஸ்தானத்திலுள்ள சனியைப் பார்க்கும் பொழுது நினைத்தது நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பூமி வாங்கும் யோகம் உண்டு. பொன், பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

    விருச்சிக புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை முதல் நாளே விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றாா். உங்கள் ராசியில் அடியெடுத்து வைக்கும் புதனால் நல்ல பலன்கள் இல்லம் தேடி வரப்போகின்றது. அரசாங்க வழியில் நன்மைகள் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வெற்றி நடைபோடும். வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றிச் சிந்திப்பீர்கள்.

    தனுசு புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை 18-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு இணைந்து புத சுக்ர யோகத்தை உருவாக்குகின்றார். இதன் விளைவாக கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும் யோகம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.

    மகர சுக்ரனின் சஞ்சாரம்

    கார்த்திகை 19-ம் தேதி மகர ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். சகோதர பாசம் அதிகரிக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். சுக ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் வாழ்க்கைத் துணை வழியே நல்ல தகவல் கிடைக்கும்.

    விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சி ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் உடல் நலம் சீராகும். தனவரவும் திருப்தி தரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். துணிந்து நீங்கள் எடுத்த முடிவால் வெற்றிப்பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். காரிய வெற்றிக்கு கலைமகள் வழிபாட்டை மேற்கொள்ளவும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 24, 25, 26, 30, டிசம்பர்: 1, 6, 7, 8, 10, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    விருச்சகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிகிறது. குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் தொழில் வளம் சிறக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.

    துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், ஐப்பசி 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார். விரயாதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வரும்பொழுது சுப விரயங்கள் அதிகரிக்கும். இடமாற்றம், வீடு மாற்றங்களைச் சந்திப்பீர்கள். கல்யாணம், கட்டிடப் பணி போன்றவை நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். ஒருசிலருக்கு வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து பணிபுரிய வாய்ப்புகள் வரலாம். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். தொழில் வளர்ச்சி உண்டு.

    துலாம் - புதன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு அஷ்டம, லாபாதிபதியானவர் புதன். அவர் ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். 8-க்கு அதிபதி 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தெய்வீகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நல்ல தகவலைக் கொடுப்பர். பயணங்கள் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, எதிர்பார்த்தபடியே இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கலாம்.

    மிதுன - செவ்வாய் வக்ரம்

    ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் வக்ரம் பெறுவதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதே நேரம் செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிகிறது. எனவே மனக்குழப்பம் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். உடன்பிறப்புக்காகவும், உடன் இருப்பவர்களுக்காகவும் செலவிட நேரிடும். 6-க்கு அதிபதியாக விளங்கும் செவ்வாய், அஷ்டமத்தில் வரும் பொழுது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். இதனால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் திடீர் உயர்வு ஏற்படும்.

    விருச்சிக - புதன் சஞ்சாரம்

    ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 8, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது அந்த ஸ்தானத்திற்குரிய ஆதிபத்யத்தை நடத்து வார். எனவே செல்வ நிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

    விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

    ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பயணங்கள் அதிகரிக்கும். வீடுமாற்றம், வேலை மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட தூரத்தில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். பொருளாதார நிலை உயரும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரலாம். பெண் பிள்ளைகளின் கல்யாண சீர்வரிசைப் பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் கைகூடும்.

    குரு வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், மாதத் தொடக்கத்தில் வக்ரமாக இருக்கிறார். இவர் ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுவதால், அவரது பார்வைக்கு வலிமை அதிகரிக்கும். அவர் உங்கள் ராசியை தற்சமயம் பார்ப்பதால் வக்ர நிவர்த்திக்குப் பிறகு வளர்ச்சி கூடும். வருமானம் பெருகும். தளர்ச்சி அகலும். தன்னிச்சையாகச் செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 17, 18, 20, 24, 25, 30, 31, நவம்பர்: 3, 4, 14, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    விருச்சகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    18.9.22 முதல் 17.10.22 வரை

    நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்க நினைக்கும் விருச்சிக ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்க்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரியனும், லாபாதிபதி புதனும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார்கள். எனவே நிதிநிலை உயரும். நினைத்த காரியம் நிறைவேறும்.

    கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

    புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான். விரயாதிபதி நீச்சம் பெறுவதால் விரயங்கள் குறையும். வீடு மாற்றம், நாடு மாற்றத்திற்கான அறிகுறி தென்படும். மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வர். அதே நேரம் சப்தமாதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். இது ஒரு பொற்காலமாகும். லாபாதிபதி புதன் உச்சம்பெற்று தொழில் ஸ்தானாதிபதி சூரியனுடன் இணைந்திருக்கிறார். குருவின் பார்வை அவர்கள் மீது பதிவதால், தொட்ட காரியங்கள் வெற்றியாகும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு ஏற்படும். தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் மற்றும் 6-ம் இடத்திற்கு அதிபதியாக விளங்குபவர் செவ்வாய். 6-க்கு அதிபதி 8-ல் சஞ்சரிக்கும்பொழுது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். குரு பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

    இக்காலத்தில் சனியை செவ்வாய் பார்க்கும் சூழல் ஏற்படுவதால், எதிர்மறைச் சிந்தனைகள் அடிக்கடி வந்து அலைமோதும். மனக்குழப்பம் உருவாகும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக்கிக் கொள்ளலாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள்.

    சனி வக்ர நிவர்த்தி

    புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலம் ஒரு இனிய காலமாகவே அமையும். சகாய ஸ்தானாதிபதி பலம்பெறுவதால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லம் தேடி இனிய தகவல் வந்து சேரும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். மனை கட்டுவது, இடம் வாங்குவது, வாகனங்கள் வாங்குவது, ஆபரண சேர்க்கை போன்றவற்றில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    இம்மாதம் சரஸ்வதி வழிபாட்டால் சந்தோஷங்கள் வந்து சேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 21, 22, 26, 27, அக்டோபர்: 1, 2, 3, 7, 8, 9.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் உங்கள் ராசியில் குருவின் பார்வை பதிவதால் சுபச்செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு மேலிடத்து ஆதரவு அமைவதோடு, கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.

    விருச்சகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.8.2022 முதல் 17.9.2022 வரை

    சொல்லும் சொற்களை எல்லாம் வெல்லும் சொற்களாக மாற்றும் விருச்சிக ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். குருவின் பார்வை ராசியில் பதிவதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    சிம்ம - சூரியன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு அதிபதி சூரியன், தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது யோகம்தான். தொழில் முன்னேற்றம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். முன்னோர் சொத்தில் பங்கீடு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் ஏற்படலாம். பொதுவாழ்வில் புதிய பதவி கிடைக்கும்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    ஆவணி 8-ந் தேதி, கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம- லாபாதிபதியான புதன், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது லாபம் இருமடங்காகும். பாக்கிகள் வசூலாகும். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வும், உயர் அதிகாரிகளின் ஆதரவும் உண்டு. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்வீர்கள்.

    வக்ர புதன் சஞ்சாரம்

    ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறாா். அஷ்டமாதிபதியாக விளங்கும் புதன், வக்ரம் பெறுவது நன்மைதான். தடையாக இருந்த சில காரியங்கள் தானாக நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சில காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். பணப்புழக்கம் சரளமாகும். 11-ம் இடத்திற்கும் அதிபதி புதன் என்பதால், மனநிம்மதி குறையும். குருவின் பார்வையால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

    சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

    ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். எனவே குடும்ப வருமானம் உயரும். வாழ்க்கைத் துணைக்கு தொழில் அல்லது வேலை அமைந்து அதன் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கலாம். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். புதிய தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

    குரு வக்ரமும், சனி வக்ரமும்

    மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ரமாக இருக்கிறார்கள். குருவின் வக்ர காலத்தில் ஒருதொகை செலவழிந்த பிறகே, மற்றொரு தொகை உங்கள் கரங்களில் புரளும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. சொத்துக்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். சனியின் வக்ர காலத்தில் எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செய்யுங்கள். வழிபாடுகள் வளர்ச்சியை நல்கும்.

    இந்த மாதம் வியாழக்கிழமை தோறும் கலை வாணியை வழிபடுவதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 24, 25, 26, 29, 30, 31, செப்டம்பர்: 5, 6, 7, 10, 11

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் கொடுக்கல் -வாங்கல்கள் திருப்தி தரும். கூடுதல் வருமானம் வந்து சேரும். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பணிபுரியும் பெண்களுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த இலாகா மாற்றம், பதவி உயர்வும் உண்டு.

    விருச்சகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17-07-2022 முதல் 16-08-2022 வரை

    விடாமுயற்சியே வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கும் வழி என்று சொல்லும் விருச்சிக ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சொந்த வீட்டில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே நற்பலன்கள் அதிகம் நடைபெறும்.

    ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதியான அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் போது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், உயர்ந்த பொறுப்புகளும் கிடைக்கும். நினைத்த காரியங்களை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். குடும்பத்தில் உதிரி வருமானம் கிடைக்கும்.

    ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் சில காரியங்கள் வெற்றி யாகும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

    ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். தன் சொந்த வீட்டிலேயே குரு வக்ரம் பெற்றிருப்பதால் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு தனாதிபதியானவர் குரு என்பதால், ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கைக்கு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். சுபகாரியங்கள் முடிவாகும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் குரு பகவான் அதிபதி என்பதால், அதன் வக்ர காலத்தில் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பாகப்பிரிவினை உங்களுக்குச் சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள், சுயதொழில் தொடங்க முயற்சி செய்வர்.

    ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பது யோகம்தான். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் உண்டு. எப்போதோ வாங்கிப் போட்ட இடம் பல மடங்கு விலை உயரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் செல்வ நிலை உயரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 17, 18, 29, 30, ஆகஸ்டு: 2, 3, 4, 9, 10, 13, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் குரு பார்வை உள்ளதால் பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் பக்க பலமாக இருப்பர். கணவன் - மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளை களின் எதிர்காலக் கனவை நனவாக்குவீர்கள். உங்கள் பெயரிலேயே இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு. அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். சம்பள உயர்வு எதிர்பார்த்த படியே வந்துசேரும்.

    விருச்சகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை

    புகழ்பெற்ற மனிதராக வாழ வேண்டும் என்று விரும்பும் விருச்சிக ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், குருவோடு இணைந்து 'குருமங்கள யோக'த்தை உருவாக்குகிறார். மேலும் குருவின் பரிபூரண பார்வை விருச்சிக ராசியில் பதிகிறது. எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், குருவோடு இணைந்து 'குருமங்கள யோக'த்தை உருவாக்குகிறார். மேலும் குருவின் பரிபூரண பார்வை விருச்சிக ராசியில் பதிகிறது. எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் இருந்துகொண்டு உங்கள் ராசியைப் பார்ப்பது யோகம்தான். சுபகாரியங்கள் நடைபெறும். அக்கறை செலுத்தாத காரியத்தில் கூட ஆதாயம் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு.

    ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம, லாபாதிபதியான புதன், அஷ்டமத்தில் சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால் கலை, கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் புதிய பொறுப்பு கிடைக்கும். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு என்பதற்கேற்ப, தொழிலில் கூடுதல் லாபம் வரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

    ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். மேஷம் செவ்வாய்க்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிநாதனாக விளங்கும் செவ்வாய், தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது உடல்நலம் சீராகும். 'விபரீத ராஜயோக' அடிப்படையில் செவ்வாய் சஞ்சரிப்பதால், எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

    ஆனி மாதம் 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதியாக விளங்கும் புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். பெற்றோர் வழிப் பிரச்சினை சமரசத்திற்கு வரும். மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை கொடுக்க முன்வருவர். பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

    ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள தொழில் ஸ்தானாதிபதி சூரியனோடு இணைவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். செல்வநிலை உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், சுய தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பார்கள். பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும் விதத்தில் பல நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

    இம்மாதம் வராஹி அம்மன் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 15, 16, 17, 20, 21, ஜூலை: 1, 2, 7, 8, 12, 13, 14 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கணவன் - மனைவிக்குள் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் சம்பளமும் கிடைக்கும். ஆன்மிகப் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

    விருச்சகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் விருச்சிக ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், மாதம் முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 6-க்கு அதிபதியாகவும் விளங்கும் செவ்வாய், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லும் போது, புதிய பொறுப்புகள் கிடைக்கும். அங்குள்ள குருவோடு செவ்வாய் சேர்ந்து 'குருமங்கள யோக'த்தை உருவாக்குவதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். ஆகாரத்தில் அக்கறை செலுத்துங்கள்.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப்போகிறார். அதாவது உங்கள் ராசிநாதன் செவ்வாயை சகாய ஸ்தானாதிபதி சனி பார்ப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகள் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறும் நேரம் இது.

    புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம-லாபாதிபதியான புதன், வக்ர நிவர்த்தியாவது நன்மைதான். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். சேமிப்பு உயரும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். இக்காலம் இனிய காலமாக அமையப் போகிறது. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி 6-ல் வரும்போது, 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் வெற்றியாகும் நேரம் இது.

    மகரச் சனியின் வக்ர காலம்

    வைகாசி 11-ந் தேதி மகரத்தில் இருக்கும் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி வக்ரம் பெறும்போது, ஆரோக்கியத் தொல்லை ஏற்பட்டு அகலும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. வீடு மாற்றம், இடமாற்றம் அமையலாம். உயர்பதவியில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். இதுபோன்ற காலங்களில் குலதெய்வ, இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.

    இம்மாதம் ராஜ அலங்கார முருகனை இல்லத்தில் வைத்து வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 19, 20, 23, 24, ஜூன்: 3, 4, 5, 8, 9, 10, 14 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாகப்பிரிவினை சுமுகமாகும். குடும்ப ஒற்றுமை பலப்படும். குரு பார்வை இருப்பதால் கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். அசையாச் சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியால் பெருமை வந்துசேரும். பணி யில் கேட்ட சலுகை கிடைக் கும். ஊதிய உயர்வால் மகிழ்ச்சியடைவீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

    ×