என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
எடுக்கும் முயற்சிகள் இனிதே வெற்றி பெறும் நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பொதுவாழ்வில் புகழ் கூடும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டினால் வளர்ச்சி காண வேண்டிய நாள். காலை நேரத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. பிறருக்கு பொறுப்புச் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரலாம். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமூகமாக முடியலாம். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவு திருப்தி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன் 30.5.22
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். கொடுக்கல் - வாங்கல்கள் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவலால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் முன்னேற்றம் உண்டு. பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன் 28.5.22
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகவே இருக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன் 27.5.22
வளர்ச்சி கூடும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். பொருளாதார நிலை உயரும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி உண்டு. வருமானம் திருப்தி தரும். வரன்கள் வாயில் தேடி வரும்.
விருச்சகம்
ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023
12.4.2022 முதல் 30.10.2023 வரை
ஆறில் ராகு/பனிரென்டில் கேது
வீரம் நிறைந்த விருச்சிக ராசியினரே ராசிக்கு 6ல் ராகுவும், 12ல் கேதுவும் 5, 6ம் இடத்தில் குரு பகவானும், சனிபகவான் 3 , 4ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
6ம்மிட ராகுவின் பொதுபலன் கள்:6ம்மிடம் என்பது மறைவு ஸ்தானம். பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வருவது நன்மைதான். அதுவும் உப ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்திற்கு வரும் அசுப கிரகம் சுபத்துவத்தை அதிகப்படுத்தும். தொட்டது துலங்கும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் பற்றிய கனவுகள் பலிதமாகும். உங்களின் சோதனைகள் சாதனைகளாக மாறும் .ஆன்ம பலம் பெருகும்.
பல வருடங்களாக தடைபட்ட விஷயங்கள் சுலபமாகவும் விரைவாகவும் நடந்து முடியும். விருச்சிக ராசியினரின் திறமைகளை வெளிக்காட்ட கிடைத்த அரிய சந்தர்ப்பமாக இந்த ராகு/கேது பெயர்ச்சி இருக்கும். உங்களை வம்பில் மாட்டிய எதிரிகள் இருந்த இடம் தெரியாது. நல்ல நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள். வேலையாட்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான கடன் தொகை தாய்மாமன் மூலம் கிடைக்கும். வாழ்க்கைத் தரம் உயரும்.
உடல் பெருக்கம் ஏற்படும். சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். சகோதர சகோதரி மேல் அன்பு அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது. ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.
12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:
கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். சூரியன் விருச்சிகத் திற்கு 10ம் அதிபதி. மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரிடமும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கௌரவம் உயரும். கௌரவ பதவி தேடிவரும். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். தொழிலில் நிலவிவந்த மந்தநிலை மாறி, தொழிலை விரிவுபடுத்த வாய்ப்பு உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.
கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்றுக் கருத்து மறையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:
பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்ரன் விருச்சிகத்திற்கு 7,12ம் அதிபதி. சிலருக்கு கலப்புதிருமணம் நடக்கும். சிலரின் மறுமண முயற்சி கைகூடும். வாழ்க்கை துணையால் செலவுகள் அதிகமாகும். சிலருக்கு எதிர் பாலினத்தினரால் மனச்சுமை அதிகரிக்கும். சில தம்பதிகள் வியாபாரம் அல்லது வேலைக்காக குடும்பத்தை பிரிந்து வாழ்வார்கள். சில தம்பதிகளின் விவாகரத்து வழக்கு சாதகமாகும். வெளிநாட்டில் அந்நிய மொழி பேசுபவர்கள் மத்தியில் குடியிருக்கும் நிலை ஏற்படும். சிலர் வயது மூப்பு காரணமாக வீட்டில் தனிமையில் ஓய்வு எடுப்பார்கள். சிலரின் வாழ்க்கை துணை பணியிலிருந்து ஒய்வு பெறலாம். திருமண பட்ஜெட் எகிறும். சம்பந்திகளுக்குள் வரதட்சணை தகராறு அதிகமாகும்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:
அசுவினி கேதுவின் நட்சத்திரம். கோட்சாரத்தில் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு பயணிக்கும் காலம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பொன், பொருள் பற்று குறையும். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூட எளிமையான உணவு சாப்பிடவும் எளிய உடை உடுத்தவும் துவங்குவார்கள். வெகு சிலர் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மனைவி, குழந்தைகள், நண்பர்களின் ஆதரவில் ஜீவனம் செய்ய நேரும். கேது ராசியை கடக்கும் முன்பு உங்களின் மேல் அக் கறை மதிப்பு மரியாதை உள்ளவர் யார் என்பதை புரிந்து கொள்ள கடவுள் வழங்கும் சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொண்டு வாழ வேண்டிய காலம்.
12-ம்மிட கேதுவின் பொதுபலன்கள்:
12--ம் இடம் என்பது மோட்சம் தனிமை, வெளிநாட்டு வாழ்க்கை, தூர தேசப் பயணம் ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம்.
மனம் பற்றற்ற நிலையை விரும்பும். எதிர்மறை எண்ணங்கள் சீராகும். தீய, கெட்ட சிந்தனைகள் நீங்கி தெளிவு பிறக்கும். சிலருக்கு தனிமையில் வாழ வேண்டும் என்ற உணர்வு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.மனம் எளிமையை விரும்பும்.சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் குறுகிய காலம் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்று வரலாம். சிலர் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் பக்தி மார்க்க இயக்கத்தில் சேரலாம். சிலர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லலாம். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம். சிலர் ஒப்பந்த வேலைக்காக குறுகிய காலம் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். திருமண முயற்சிகள் இழுபறியாகும். சிலர் இரண்டாவது தொழில் தொடங்கலாம். பண விஷயத்தில் சற்று நெருக்கடி இருக்கும் அல்லது விரையச் செலவு அதிகமாகும். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:
விசாகம் குருவின் நட்சத்திரம். குரு விருச்சிகத்திற்கு 2,5ம் அதிபதி. இதுவரை பங்கு சந்தை பற்றி யோசிக்காதவர்களுக்கு கூட அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் ஏற்படும். சிறிய பங்குச் சந்தை முதலீட்டில் பெரிய லாபத்தை கொடுத்து பெரிய முதலீட்டிற்கு உங்களை தயார்படுத்தி பெரிய இழப்பை சந்திக்கச் செய்வார் என்பதால் பெரிய முதலீட்டை தவிர்க்க வேண்டும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்பார்கள் அல்லது பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை உண்டாகும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களுக்கு தொழிலில் திருப்புமுனை உண்டாகும். பிள்ளைகள் கல்வி, உத்தியோகத்திற்காக இடம் பெயரலாம். சிலருக்கு வாலிபக் கோளாறால் தேவையற்ற வம்பு உருவாகும்.
18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:
ராசிக்கு 6ல் சஞ்சரிக்கும் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கோட்சார கேது சஞ்சரிக்கும் காலம் என்பதால் குறுக்கு சிந்தனைய பயன்படுத்தி சம்பாதிக்க வைத்து குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதிக்க வைப்பார். பணத்தின் சுவையை அனுபவிக்கும் முன்பு அதை பிடுங்குவார். அல்லது சட்டச் சிக்கலில் மாட்ட வைப்பார். ஒரு சிலருக்கு திடீர் பக்தியை கொடுப்பார். பக்திக்கு பின் பெரிய பதவி ஆசையை புகுத்துவார். பதவியை கொடுப்பார். பதவி எப்பொழுது பறிபோகுமோ என்ற பயத்துடன் பதவியில் பல தவறுகளை செய்து பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவார். இது போன்ற பின்விளைவுடன் கூடிய பலனே கேது வழங்குவார். இது போன்ற காலகட்டத்தில் எது சரி? எது தவறு? என்று பகுத்தாயும் தன்மை மற்றும் நிதானம் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:
சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் விருச்சிகத்திற்கு ராசி அதிபதி 6ம் அதிபதி. ராசி அதிபதியின் நட்சத்திரத்தில் கேது செல்வதால் செயல் பாடுகளில் மந்தத் தன்மை, தயக்கம் இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். சிலர் கடன் பெற்று வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு வீடு, வாகன வகையில் ரிப்பேர் செலவு கையை கடிக்கும். சிலர் ஜாமீன் போட்டு ஏமாறலாம். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடுகள் அகலும். நீண்ட நாள் நோய்க்கு அல்லது பரம்பரை நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை நல்ல பலன் தரும். சட்ட விரோத செயல்களால் சிலருக்கு அரச தண்டனையும் கிடைக்கும்.
எந்த கிரகங்கள் எங்கு இருந்தாலும் சரி, தெய்வ சக்தியை அடி பணியுங்கள். அனைத்தும் சுபமான மாற்றங்களாகவே இருக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023
கோபத்தால் எதையும் சாதிக்க துடிக்கும் விருச்சிக ராசியினரே ராசிக்கு 5ல் சனி பகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சனிபகவான் 3, 4ம் இடத்திலும் ராகு பகவான் 6ம் இடத்திலும், கேது பகவான் 12ம் இடத்திலும் பயணிக்கிறார்கள். இதுவரை ராசிக்கு 4ம் இடத்தில் சஞ்சரித்த குருபகவான்5ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று பலசுப பலன்களை வாரி வழங்கவுள்ளார்.விருச்சிகத்திற்கு குரு தனாதிபதி, பஞ்சமாதிபதி. 5ம் அதிபதி குரு தன் வீட்டில் ஆட்சி பலம் பெறுவது மிகச் சிறப்பு.
5ம்மிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். இந்த பொற்காலம் மீண்டும் 12 வருடம் கழித்து தான் விருச்சிக ராசிக்கு கிடைக்கும். இது நாள்வரை நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு நிவர்த்தி கிடைக்கும் காலம். ஆன்ம பலம் பெருகும். உடல் பொழிவுஏற்படும். தோற்றம் மற்றும் செயல்களில் மாற்றம் ஏற்படும். பொது நலச் சிந்தனை தோன்றும். சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும். உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்குதெரிய வரும். அரசியல்வாதிகளுக்கு பொற்காலம். தொழிலை தொடர்ந்து நடத்தலாமா அல்லது இழுத்து மூடிவிட்டு ஓடிவிடலாமா என்று பயந்து, பயந்து வாழ்ந்தவர்களுக்கு தொழிலில் புதிய மாற்றம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. புதிய முதலீடுகள்செய்யலாம்.
வேலை இல்லாமல் எப்படி வாழ்வது என்று வருத்தப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். சிலருக்கு பணியிட மாற்றத்துடன் கூடிய பதவி, ஊதிய உயர்வுகிடைக்கும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.அலுவலகத்தில் மதிப்பு மரியாதைஅதிகரிக்கும். வேலையிலிருந்த கெடுபிடிகள் குறையும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. சக ஊழியர்களிடையேநல்லிணக்கம் ஏற்படும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். உங்கள்அலுவலக வேலை தொடர்பாக வெளிநாடு சென்று வருவீர்கள்.
நிதி நிர்வாகம், நீதித்துறை, வழக்குரைஞர்கள், நீதிபதிகள், ஆடிட்டர்கள் அதிக அளவிலான நன்மை அடைவார்கள்.இவர்களுக்கு தொழில் வளர்ச்சிஆமோகமாக இருக்கும். அரசு தரப்பில் செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் பட்ட மன வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். கடன் தொல்லையால் பட்ட அவமானம் தீரும். அதிலிருந்து தொல்லைகளிலிருந்து மீளும் மார்க்கம் தென்படும். குரு நின்ற இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம். அந்த வகையில் குருவின் பார்வை பதியும் 1,9,11ம் இடங்கள் மூலம் மேலும் அதிக நற்பலன்கள் நடக்க உள்ளது.
5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால் கருத்தரிக்காத பெண்களுக்கு கரு உருவாகும். செயற்கை முறை கருத்தரிப்பிற்கு உகந்த காலம். தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் முறையான பாகப் பிரிவினை நடக்கும். சொத்து விசயத்தில் தாய், தந்தை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நீங்கள் விரும்பிய பாகம் அப்படியே முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். பல தலைமுறையாக விற்காத பூர்வீக சொத்துகள் கூட நல்ல விலைக்கு விற்கும். வரும் பணம், சொத்தை மறு முதலீடு செய்து உங்களின் சந்ததியினருக்கு பயன்படும் வகையில் சேமிப்பு உயரும்.
9ம் இடத்திற்கு சனிப் பார்வை இருப்பதால் தொன்மையான பொருட்களை ஆராய்ச்சி செய்தல் மற்றும் பழமையான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் இருக்கும்.
குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குழந்தைகளின் கல்வி ஆர்வம் மன நிம்மதி தரும். பள்ளி கல்லூரி பிள்ளைகளுக்கு தங்களை அழகு படுத்துவதில் நாட்டம் மிகும். 5ல் குரு இருப்பதால் இயல்பிலேயே அறிவாளியான நீங்கள் மேலும் நன்றாகப் படித்து உங்கள் பள்ளி கல்லூரிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்ப்பீர்கள். வழக்கத்தை விட அதிக நேரம் ஒதுக்கி படித்தால் பொதுத் தேர்வில் சாதனை படைப்பீர்கள். சிலர் உயர் கல்விக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது.
7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 11ம் இடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. தன வரவு திருப்தி தரும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். சகலவிதமான சௌபாக்கியங்களும் உண்டாகும்.மாற்றங்களும் ஏற்றங்களும் வீடு தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். வங்கி சேமிப்பு உயரும். செல்வ செழிப்பில் மிதப்பீர்கள். பணவசதி சிறப்பாக இருக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும்.
மூத்த சகோதர சகோதரிகளுடன் சொத்து பிரச்சனையால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறையும்.
ஆனாலும்வம்பு, வழக்கை குறைக்க அமைதி காத்தல் நலம். முதல் திருமணம் முறிவுஏற்பட்டவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். கடனுக்காக வீட்டை விற்றவர்கள் சொத்தை இழந்தவர்கள், அடமானம் வைத்தவர்களின் மனக் குமுறல் தீரும். அடமானச் சொத்தை, நகைகளைமீட்கும் விதத்தில் பொருள் வரவு இருக்கும். கடனால் சொத்தை இழந்தவர்களுக்கு இழந்ததை விட அற்புதமான புதிய சொத்துக்கள் உருவாகும். இது வரை சொத்து சேர்க்கை இல்லாதவர்களுக்கு வீடு, வாகன யோகம் ஏற்படும்.அந்தஸ்து உள்ள சொகுசு வாகனத்தில் குடும்பத்தாருடன் சென்று ஆனந்தம் அடைவீர்கள். தாய் வழிச் சொத்து ,தாய் வழி உறவினர்களின்அன்பும் ஆதரவும் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். நஞ்சை, புஞ்சைகள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய அணிகலன்கள் ,அழகு,ஆடம்பரப் பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள்.
9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை ராசியில் பதிகிறது. மனதாலும், உடலாலும் புனிதமடைவீர்கள். நீண்ட காலமாக தடைபட்டசெயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எந்த செயலிலும் தைரியமாகமுடிவு எடுப்பீர்கள். மனத் தடுமாற்றம் மன சஞ்சலம் , மனக்குழப்பம் நீங்கும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.மன வேதனையை பிறரிடம் பகிர முடியாத நிலை மாறும்.உங்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் சிற்சிலமாற்றங்கள் ஏற்படும். ஆயுள் தீர்க்கம். முன்னோர்களின் பரம்பரை வியாதிகளான மூட்டு வலி, வாதம், பிரஷர், சுகர் போன்ற கர்ம வினை நோய்க்கு வைத்தியம் செய்பவர்கள் இயற்கை வைத்தியத்தை நாடினால் நோய் தாக்கம் விரைவில் கட்டுப்படும். சிலருக்குஉடல் பெருக்கம் ஏற்படும். தாய்மாமன் வழி ஆதாயம் உண்டு.
குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் 5ம் இடத்திற்கு சனிப்பார்வையும் இருப்பதால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாட்டை , வாக்குவாதங்களை தவிர்ப்பதுநல்லது. ராசிக்கு சனிப் பார்வை இருப்பதால் வட்டித் தொழில் , சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்களுக்கும் மிகப் பெரியமுதலீட்டில் தொழில் நடத்துபவர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து பிரச்சனை, கடன் கொடுத்து மாட்டிய பிரச்சனை, செக் மோசடி பிரச்சனைகள் 17.1. 2023 அன்று ஏற்படும் சனி பெயர்ச்சிக்குபிறகு முடிவுக்கு வரும்.
பெண்கள்: அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் முன்னேற்றமும் உங்களை சிறப்பாக வழி நடத்தும் காலம்.பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமிதம் அடைவீர்கள். பிள்ளைகளுக்கு சடங்கு, வளைகாப்பு, திருமணம் என அனைத்து விதமான சுப காரியங்களும் நடத்தி மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.
பரிகாரம்: பௌர்ணமி அன்று குல தெய்வத்திற்கு சர்க்கரை பொங்கல் படைத்து, ரோஜா மாலை அணி வித்து வழிபடவும். அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






