என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தனுசு - சோபகிருது வருட பலன்
தனுசு
சோபகிருது வருட பலன் 2023
அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!
ஆன்மீக நாட்டம் நிறைந்த தனுசு ராசியினருக்கு பிறக்கும் சோப கிருது வருட புத்தாண்டு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். திருக்க ணித பஞ்சாங்கப்படி ஆண்டின் துவக்கத்தில் குருபகவான் ஏப்ரல் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்கிறார். ஜனவரி 17ல் நடந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் மூன்றாமிடம் எனும் முயற்சி, சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார். தற்போது ராசிக்கு 5,11ல் நிற்கும் ராகு கேதுக்கள் அக்டோபர் 30 முதல்4,10மிடம் செல்கிறார்கள்.
எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும்.எதையும் தீர்க்கமாக முடி வெடுத்து சிந்தித்து செயல்ப டுவீர்கள். தனித்த அடையா ளத்துடன் மற்றவர்க ளுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டுவீர்கள்.ஏழரைச் சனியால் சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்து விடுவீர்கள்.
இதுவரை சொத்து வாகன வசதி இல்லாத வர்களுக்கு புதிய சொத்துகள் மற்றும் வாகனங்கள் கிடைக்கும்.கவுரவப் பதவிகள் தேடி வரும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு அதிக தொழில் முதலீடு செய்யக் கூடிய தொழில் பார்ட்னர்கள் கிடைப்பார்கள்.
அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலைமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.3ல் சனி இருப்பதால் ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் தேடி வரும். புத்திர பாக்கியம் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.
குடும்பம், பொருளாதாரம் : உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். விட்டுப் பிரிந்த உறவுகள் எல்லாம் தேடி வருவார்கள். சில உறவினர்களிடம் எதிர்பார்த்த, எதிர்பார்க்காத உதவிகள் கிடைக்கும். நல்லோர் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும்.
தீட்டிய திட்டங்களில் வெற்றி பெற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவுவார்கள்.சிலருக்கு வாழ்க்கைத் துணையின் மூலம் சில பொருள் வரவுகள் ஏற்படும். தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். தேக ஆரோக்கியம், மன அமைதி, பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும்.
பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும்.உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாட்டால் பாகப்பிரிவினை தள்ளிப்போகும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தொடர் கதையாக, இழுபறியாக இருக்கும்.
பெண்கள் : பெண்களுக்கு இந்த புத்தாண்டில் நன்மைகள் அதிகமாக இருக்கும் குடும்பத்திலுள்ள வர்களிடம்உங்களின் பேச்சு எடுபடும். உங்களின் கௌரவம் அந்தஸ்து உயரும். உங்கள் கணவர்நீங்கள் மனதில் நினைப்பதையும்நடத்துவார். மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள் .பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பணவரவு சரளமாக இருக்கும். சொந்த வீட்டு ஆசை அதிகரிக்கும்.
மூலம் : நெருக்கடி நிலை மாறும் காலம். தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும். தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும்.திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
போட்டி, பகை, கடன்தொல்லை, வேலை, தொழில் பாதிப்பு குறையும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம், அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். பெண் வழிப் பிரச்சனைகள் அகலும். சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்பிற்காகவெளியேறலாம்.பங்கு சந்தை ஆதாயம் மகிழ்விக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் இணைந்துபடிக்கும் வாய்ப்பு உள்ளது. சம்பந்திகள் சண்டை முடிவிற்கு வரும்.வேலையாட்களால் உருவாகிய பிரச்சனை சீராகும்.ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தினமும் தட்சிணாமூர்த்தி காயத்திரி மந்திரம் படிக்கவும்.
பூராடம் : ஆதாயம் நிறைந்த காலம். கண் திருஷ்டி, போட்டி, பொறாமை பாதிப்புகள் அகலும். பங்குச் சந்தை, திடீர் அதிர்ஷ்ட ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், தொழில் முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும்.
வீட்டில் மேளச் சத்தம் கேட்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி ஆனந்தம் அடைவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். பூர்வீகம்தொடர்பானபிரச்சனைகள் குறையும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றஏற்ற காலம். பருவ வயது பிள்ளைகள் பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். தினமும் தட்சிணாமூர்த்தி மூல மந்திரம் படிக்கவும்.
உத்திராடம் 1 : மனோதிடம்கூடும் காலம்மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். இழுபறி நிலைமாறி துரிதமாக காரியங்கள் நடைபெறும். திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பீர்கள்.யாரும் செய்யத் தயங்கும் செயல்களை துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும். தாய் மாமா அல்லது தாய்வழி தாத்தா உங்களுக்கு நிதி உதவி செய்யலாம். வெவ்வேறுஊர்களில்பிரிந்துவாழ்ந்ததம்பதிகள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும்நல்ல நேரம்.உங்களின் முயற்சிக்கு பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பரத்தை, அந்தஸ்த்தைதக்க வைத்துக் கொள்ள அதிக செலவு செய்ய நேரும். வெளிநாட்டிற்கு இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். தினமும் தட்சிணாமூர்த்தி அஷ்டோதாரம் படிக்கவும்.
பரிகாரம் : கற்பக விநாயகா் கோவில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றாகும். இது காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. தனுசு ராசியினர் இங்கு சென்று வர சுப பலன் கூடும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
சுபகிருது வருட பலன் - 2023
வில்லை போல் வளைந்து கொடுக்கும் தன்மை மிகுந்த தனுசு ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் அனைத்து விதமான பாக்கியங்களும் கிடைக்க நல் வாழ்த்துக்கள்.
உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் ராகுவும், 11ம் இடத்தில் கேதுவும் நிற்கிறார்கள். குருபகவான் 4ம் இடத்திலும், சனி பகவான் 2, 3ம் இடங்களிலும் சஞ்சரிக்கிறார்கள். 5ம்மிட ராகுவால் மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். மனம் பற்றற்ற நிலையை விரும்பும். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரின் நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.
பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். உங்கள் இன, மத இயக்கங்களில் முதன்மைப் பதவியும், கௌரவமும் தேடிவரும். 11ம்மிட கேதுவால் சிலருக்கு கலப்பு திருமணம் நடக்கும். சிலரின் மறுமண முயற்சி கைகூடும். வாழ்க்கை துணையால் செலவுகள் அதிகமாகும். சிலருக்க எதிர் பாலினத்தினரால் மனச்சுமை அதிகரிக்கும். 4ம்மிட குருபகவானால் ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், சேர்ப்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும். வீடு கட்டும் எண்ணமும் நிலபுலன் வாங்கும் எண்ணமும் பலிதமாகும். தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் தாய் மாமன் ஆதரவால் தீரும். இரண்டாமிட சனி பகவானால் வேலைப் பளுவினால் நேரத்திற்கு சாப்பிட முடியாது. திட்டங்கள் பலிதமாகாமல் நினைப்பது ஒன்று- நடப்பது வேறு மாக ஏமாற்றத்தை சந்தித்த நிலை மாறும்.
குடும்பம்:லாபகரமான நேர்மறையான பலன்கள் அடுக்கடுக்கான அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சமுதாயத்தில், உற்றார், உறவினர்களிடம் நல்ல வரவேற்பு, உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவுகள் நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.குலதெய்வம், பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசுவழி ஆதாயம் மிகும். குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும்.தாயின் நல்லாசியும் ஆஸ்தியும் கிடைக்கும். இதுவரை பாராமுகம் காட்டிய உங்களின் மூத்த சகோதரர் உங்கள் வீட்டின் சுப நிகழ்விற்கு முன் வந்து நின்று உங்களை கவுரவிக்கலாம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். வெளிநாட்டுப் படிப்பு அல்லது வேலைக்கு முயற்ச்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டும்.
ஆரோக்கியம்: ஆயுள்,ஆரோக்கியம் சிறப்படையும். உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாகஎன்னவென்றே தெரியாத நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும். நீண்ட நாள் நோய்க்கு அல்லது பரம்பரை நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை நல்ல பலன் தரும்.
திருமணம்:குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி நின்று 7ம் பார்வையாக 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தைப் பார்ப்பதால் கோட்சார ரீதியாக திருமணம் தடைபட்டது. குரு மீனத்திற்கு பெயர்ச்சி ஆகுவதால் 8ம் இடத்திற்கு குருப் பார்வை கிடைக்கும். திருமணத் தடை அகலும்.
பெண்கள்: தங்க நகைகள், சொத்துக்களை அடமானம் வைத்து பிழைப்பு நடத்திய நிலை முற்றிலும் மாறும். நீண்ட காலமாக தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். தாய் வழி உறவுகளால் அதிக நன்மையும், ஆதாயமும் உண்டாகும். மகளிர் சுய உதவிக் குழு, மாதர் சங்கம் போன்ற முக்கியமான அமைப்புகளில் உயர் பதவிகள் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.
மாணவர்கள்:பொழுதுபோக்கில் நாட்டத்தைக் குறைத்து கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 5ல் ராகு இருப்பதால் கெட்ட சகவாசங்களை தவிர்க்க வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்களை முக்கியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்.
உத்தியோகஸ்தர்கள்:உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட கணக்கமற்ற சூழல் மாறும். 5ல் ராகு இருப்பதால் அரசு அதிகாரிகள் லஞ்ச விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு வேலையை மாற்றலாம். சிலர் ஒப்பந்த வேலைக்காக குறுகிய காலம் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். சிலர் அதிக சம்பளத்திற்குஆசைப்பட்டு பார்க்கும் வேலையை நழுவ விடுவார்கள்.புதிய வேலைக்கான பணி நியமன உத்தரவை வாங்கிய பிறகே பழைய வேலையை விட வேண்டும்.
முதலீட்டாளர்கள்:வியாபாரிகள், முதலீட்டாளர்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகள் நடைபெறும் நல்ல நேரம். சிறுதொழில், சில்லறை வணிகர்கள் மொத்த வியாபாரிகளாக தொழிலை உயர்த்துவீர்கள். சமூக அந்தஸ்து, பொருளாதார நிலை, தொழில் முன்னேற்றம் போன்ற அனைத்தும் மனதிற்கு முழு நிறைவு அளிக்கும். நல்ல நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள். வேலையாட்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான கடன் தொகை தாய்மாமன் மூலம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்:5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் தனுசு ராசி அரசியல் பிரமுகர்கள் வைத்ததுதான் சட்டம். உங்களைச் சுற்றி எப்பொழுது தொண்டர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதால் மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவீர்கள்.
கலைஞர்கள்:திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் உயரிய பதவி கிடைக்கும். சின்னத்திரை, பெரிய திரை, நாடக துறையினர் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் என அனைத்துப் பிரிவினருக்கும் இது பொற்காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது.
விவசாயிகள்:வேளாண் பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுபடுவீர்கள் பச்சைபசேல் என்று விளைந்த வயல்களைப் பார்த்து பூரிப்படை வீர்கள். செவ்வாய் உங்களின் 5 ம் அதிபதி என்பதால் மண்ணை நம்பி உழைத்த உழைப்பிற்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். பூ உற்பத்தியாளர்களுக்கு விளைச்சலும், விற்பனையும் அமோகமாக இருக்கும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்.
ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 5-11ம் இடத்தில் ராகு/கேதுக்கள் சஞ்சரிப்பதால் குறுக்கு சிந்தனைய பயன்படுத்தி சம்பாதிக்க வைத்து குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதிக்க வைப்பார். பணத்தின் சுவையை அனுபவிக்கும்முன்பு அதை பிடுங்குவார். அல்லது சட்டச் சிக்கலில் மாட்ட வைப்பார். ஒரு சிலருக்கு தீடீர் பக்தியை கொடுப்பார். பக்திக்கு பின் பெரிய பதவி ஆசையைபுகுத்துவார். பதவியை கொடுப்பார். பதவி எப்பொழுது பறிபோகுமோ என்ற பயத்துடன் பதவியில் பல தவறுகளை செய்து பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவார்.
இது போன்ற பின்விளைவுகள் மிகுதியாக இருக்கும்.குரு: 29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் கோட்சார சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் உங்களுக்கு ஏற்படும் நல்லது கெட்டது இரண்டிற்கும் நீங்களே காரணமாக இருப்பீர்கள். நீங்கள் பிறரின் நலத்திற்காகசெய்த செயல் கூட உங்களை பதம் பார்க்கும். மந்தத் தன்மை, தயக்கம்இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். சிலர் கடன் பெற்று வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு வீடு, வாகன வகையில் ரிப்பேர் செலவு கையை கடிக்கும்.
பரிகாரம்:வியாழக்கிழமை கோவில் யானைக்குகரும்பு, பழங்கள் இயன்ற உணவு தானம் வழங்க மகத்தான வாழ்வு உண்டு.
வாழ்க்கைத் தரம் உயரும்
ஐந்தாமிட ராகு மிகுதியான பொருளாசையைக் கொடுப்பார்.அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும். பொன், பொருள் கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்ட பணம் கிடைக்கலாம். பலகாலமாக விற்காமல் கிடந்த சொத்து விற்பனையில் பெரிய பணம் கிடைக்கலாம். முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையிலான தொழில் புரிபவர்கள், ஆன்லைன் வர்த்தகர்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும். பேச்சை மூலதனமாக கொண்ட ஆசிரியர்கள், விற்பனை பிரதிநிதிகள், ஜோதிடர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு தொழிலால் வருமானம் பெருகும். வாழ்க்கைத் தரம் உயரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
நாளை மாலைக்குள் மழை நீர் அகற்றும் பணிகள் நிறைவடையும்- அமைச்சர் கே.என்.நேரு
வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்
மிச்சாங் புயல் பாதிப்புகளை பார்வையிட சென்னை விரைகிறது மத்திய குழு
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
