என் மலர்
மீனம்
2026 பங்குனி மாத ராசிபலன்
கருணை உள்ளம் கொண்ட மீன ராசியினரே
ராசியில் சூரியன், செவ்வாய், சனி, புதன் சேர்க்கை உள்ளது. வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் வரப்போகிறது.மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சோதனைகள் முடிவிற்கு வரும். தன்னம்பிக்கை தைரியம் கூடும். பல விதமான மாற்றங்கள் , ஏற்றங்கள் ஏற்படும். விருப்பமும் கனவுகளும் நிறைவேறும். குடும்ப உறவுகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு ஆனந்தமாக இருப்பீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். தடைபட்ட சொத்துக்கள் மீதான வாடகை மற்றும் குத்தகை பணம் கிடைக்கும். சகோதர வழியில் நிலவிய கருத்து வேறுபாடு மறைந்து ஆதாயம் ஏற்படும்.
வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என அவரவரின் தசாபுத்திக்கு ஏற்ப இடமாற்றம் ஏற்படும். தகவல் தொடர்புகள் மூலம் ஆதாயம் ஏற்படும். தொலைந்த கை மறதியாக வைத்த ஆவணங்கள், முக்கிய பொருட்கள் கிடைக்கும்.செய்தொழில் விருத்தியாகும். தொழில் நிமித்தமான வெளிநாட்டுப் பயணம் திருப்திகரமாக அமையும். சிலர் முன்னோர்கள் செய்த தொழிலையே சீர்திருத்தி செய்யலாம். ஜென்ம ராசியில் சனி என்பதால் மிகப் பெரிய முதலீட்டில் மிகக் குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்கள் தங்கள் சுய ஜாதகத்தை பரிசோதித்து அதில் உள்ள தசாபுத்தி மற்றும் கோட்ச்சார கிரகங்களின் சாதக பாதகம் அறிந்து தொழிலை நடத்தினால் சிறப்பாக இருக்கும்.
தசாபுத்தி சரியாக இல்லாத போது தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். புதிய வேற்று மத நண்பர்கள் நண்பிகள் கிடைப்பார்கள்.குடும்பத்துடன் விருந்து உபசாரங்கள், கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரப் பொருள் சேரும்.சொத்துக்கள் சேரும்.மனக் கவலைகள் அகலும்.உங்க ஆலோசனையை குடும்பத்தினர் ஏற்பார்கள்.
சிலர் உயில் எழுதலாம் அல்லது குடும்பத்தில் பாகப்பிரிவினை நடக்கும். நிலுவையில் உள்ள வாடகை வருமானம் வரும்.நோய்,நொடிகள் நிவர்த்தியாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஒரு சிலர் வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் செய்ய நேரும். மனைவி வழிச் சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும். நீண்ட காலமாக தடைபட்ட அனைத்து மங்கல நிகழ்வுகளும் நடைபெறும்.பாக்கிய பலன்களும், புண்ணிய பலமும் கூடும். குல தெய்வ, குடும்ப தெய்வ, முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.தடைபட்ட திருமணம் நடக்கும். காதல் கலப்புத் திருமணம் அதிகரிக்கும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு இரண்டாம் திருமணத்திற்கு வரன் அமைந்து திருமணம் நடைபெறும். 40 வயதைக் கடந்தும் திருமணமாகாத பல ஆண்கள், பெண்களுக்கும் திருமணம் நடக்கும்.
குருமங்கள யோகம்
மீன ராசிக்கு ராசி அதிபதி மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவானுக்கு செவ்வாயின் 4ம் பார்வை உள்ளது. இது குருமங்கள யோகமாகும்.குரு பகவானின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக கஷ்டத்தில் தவித்த மன ராசியினருக்கு பங்குனி மாதம் நிம்மதியும் சந்தோஷமும் தரக்கூடிய மாதமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மனக் கட்டுப்பாடு கூடும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். உடல் நலக் கோளாறுகள் சீராகும்.இறை வழிபாட்டில் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளினால் நன்மைகள் நடைபெறும். சொத்துக்களினால் வருமானம் உண்டு. தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.தொலைத்து போன, கை மறதியாக வைத்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் திரும்பவும் கிடைக்கும். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும்.வர வேண்டிய பணம்வரும்.
பொருளாதாரம்
ஜென்ம சனி காலத்தில் தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு இனி நிம்மதியான தூக்கம் வரும். இழந்த பணத்தை திரும்ப பெறப்போகிறீர்கள். அசையும், அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டு.பண விசயத்தில் நிலவிய கெட்ட பெயர்கள் நீங்கப்போகிறது. எவ்வளவு வருமானம் வந்தாலும் வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். விரயத்தை சுப செலவுகளான சொத்து, நகை வாங்கவும், குடும்பத்திற்கு சுப நிகழ்வு நடத்தவும் பயன்படுத்தினால் சிறப்பான வெற்றிகள் தேடி வரும்.
உத்தியோகஸ்தர்கள்
வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் இருந்த வேற்றுமை மறையும்.ஊடகங்களில் பணி புரிவர்களின் தனித்திறமை வெளிப்படும்.அரசு போட்டி தேர்வு எழுதியவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும் அல்லது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது . சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கும் நிலை இருக்கும். வேலையை தக்க வைக்க அடிமட்ட ஊழியர்களை இது பாதிக்காது.அரசுப் பணியாளர்களின் உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் திருப்பம் ஏற்படும்.
பெண்கள்
சுய ஜாதக தோஷத்தாலும் கோட்சார கிரகங்களாலும் தடைபட்ட திருமணம் குருவருளாலும் பெரியோர்களின் நல்லாசியாலும் இனிதே நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகழ்ச்சி தரும். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முழு தைரியத்தோடு வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள்.புதிய அணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவனுக்கோ, மனைவிக்கோ திடீர் அதிர்ஷ்டமாக தாத்தா பாட்டி வீட்டுச் சொத்து பெரும் பணம் போன்றவை கிடைக்கும். லாட்டரி, பங்குச் சந்தை, புதையல், உயில் மூலம் ஆதாயம் கிடைக்கலாம்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை ஜென்ம ராசியில் உள்ள சனியுடன் 2,9ம் அதிபதியான செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார். பெரிய பணப் பரிவர்த்தனைகளை தவிர்க்கவும். குடும்பத்தினரின் அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். முக்கிய வழக்குகளை ஒத்தி வைக்கவும். பூர்வீகத்தை விட்டு தொழில், உத்தியோகத்திற்கு வெளியூர் சென்றவர்கள் நல்ல பொருளாதாரத்துடன் பூர்வீகத்தில் வந்து செட்டிலாவார்கள்.சிலருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. அதீத வேலை பளுவினால் சோர்வு, உடல் ரீதியான சில பாதிப்புகள் ஏற்படலாம். யாருக்கும் பணத்தை கடனாக கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். கை விட்டு போன சொத்துக்கள் வீடு தேடி வர வாய்ப்புள்ளது. விற்று விட்ட பூர்வீக சொத்துக்களை திரும்ப வாங்க முயற்சி செய்வீர்கள்.
பரிகாரம்
பங்குனி உத்திர நாளில் இளநீர் அபிசேகம் செய்து குல தெய்வத்தை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






