என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சச்சரவுகள் அகலும் நாள். சகோதர பாசம் கூடும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். நெடுநாளைய பிரச்சினை யொன்று நல்ல முடிவிற்கு வரலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலை துாரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம். வருமானம் போதுமானதாக இருக்கும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். வி.ஐ.பி.க்களின் சந்திப்பால் விருப்பம் நிறைவேறும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வரவும் செலவும் சமமாகும். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன் 30.5.22

    வரவு திருப்தி தரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கை துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தி யொன்று வந்து சேரும். நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன் 28.5.22

    பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை விலகும் நாள். தொலை தூர பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உடல் நலம் சீராகும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன் 27.5.22

    திருமணத்தடை அகலும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். அலைபேசி வழியே அனுகூலத் தகவல் வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    கோரிக்கைகள் நிறைவேறக் கோவிலுக்குச் செல்ல வேண்டிய நாள். கொடுத்த வாக்கைக் கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும்.

    மீனம்

    ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023

    12.4.2022 முதல் 30.10.2023 வரை

    இரண்டாமிட ராகு/எட்டாமிட கேது

    குருவின் ஆசி பெற்ற மீன ராசியினரே ராசிக்கு 2ல் ராகுவும், 8ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். குருபகவான் 1,2 ம் இடத்திலும் சனி பக வான்11, 12ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

    2மிட ராகுவின் பொது பலன்கள்:இரண்டாமிடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் என்பதால் வாக்கில் மாற்றம் தெரியும். பேச்சில் தைரியம், தன் நம்பிக்கை உண்டாகும். அமைதியாக பேசுபவர்கள் கூட அதிகார தோரணையான பேச்சில் அனைவரையும் கட்டிப் போடுவார்கள். சிலர் பேசியே பிறரை வதைப்பார்கள் சிலர் . பேச்சுத் திறமையால் வருமானத்தை அதிகரிக்கப்பர். ஒருவர் சம்பாத்தியத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகளின் வருமானத்தால் நிமிர்ந்து நிற்கும்.வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும். இதுவரை வீட்டு வேலையில் காலத்தை கழித்த பெண்கள் கைத் தொழில் கற்று வருமானம் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவார்கள். கடன் சுமை குறையத் துவங்கும்.

    பண வாசனை வீடு முழுவதும் நிரம்பும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். பணத்தைப் பார்த்த சில போலியான உறவுகள் உண்மையானவர்கள் போல் உருகுவார்கள். ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். மீன ராசியினரின் காட்டில் அடை மழைதான். ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.

    12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சூரியன் மீனத்திற்கு ஆறாம் அதிபதி. இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை இனி இல்லை. பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். உங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் கூட பணத்தை கொடுக்க முன் வருவார்கள். வராக்கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். நோய் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலதிகாரிகளால் முதலாளிகளால் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொந்தரவு அகலும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.

    15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்ரன் மீனத்திற்கு 3 , 8ம் அதிபதி. சுக்ரன் மீனத்திற்கு அஷ்டமாதிபதிஎன்பதால் சுபத் தன்மை குறைவுபடும்.இனம் புரியாத மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். தைரியம் , நம்பிக்கை, ஞாபகசக்தி குறையும். காது வலி, செவித்திறன் குறைபாடு வரும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். இது நாள் வரை முன்னோர்கள் கடைபிடித்து வந்த கொள்கைகளிலிருந்து மாறுபட்டு செயல்பட நேரும். அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். அலைச்சல் மிகுதியாகும். வேலைப் பளு அதிகமாகும். சிலருக்கு உயில் எழுத வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சிலருக்கு ஆவணங்கள் தொடர்பான பிரச்சனையால் வழக்கு உருவாகலாம். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உருவாகும். சிலர் போக மிகுதியால் போக்சோ சட்டத்தில் சிக்கலாம்.

    கோட்சாரத்தில் ராசிக்கு 8ல் சுக்ரனின் வீட்டில் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் கோட்சார ராகு பயணிக்கும் காலம். இதுவரை மறைமுக தொல்லை கொடுத்த சகோதரிகள் நேரடியாக இறந்த தாயின் நகைகள் மற்றும் உடைமைகளில் உரிமைகோரி தகராறு செய்வார்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதால் உடன் பிறந்தவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு அலுவலகத்தில் எதிர் பாலின ஊழியர்களால் வம்பு, வழக்கு ஏற்படலாம். சிலரின் மனைவி வருமானத்திற்கு சம்பந்தமில்லாத ஆடம்பர பொருட்கள் கேட்கலாம். சில பெண்களுக்கு குடும்ப உறவுகளுக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரியாக வீட்டு வேலை செய்து சலிப்பு உண்டாகும். ஆக மொத்தத்தில் எதிர் பாலினத்தவரால் மன உளைச்சல் உருவாகும்.

    21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 8ல் சஞ்சரிக்கும் கோட்சார கேதுவின் நட்சத்திரத்தில் ராகு பயணிக்கும் காலம் என்பதால் எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும்.

    அலைச்சல் மிகுதியாக இருக்கும். பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. பங்குச் சந்தை முதலீடுகள் உங்களை நிலை தடுமாற வைக்கும். வரவு இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை. முதலுக்கே மோசமாக முடியும் என்பதால் கவனம் தேவை.

    8ம்மிட கேதுவின் பொது பலன்கள்: வயோதிகர் களுக்கு ஆயுள் பற்றிய சிந்தனை மிகுதியாகும். எந்த வேலை செய்தாலும் மன நிறைவு இருக்காது. பொய்யான வதந்திகளால் பெயர் கெடும். அவமானம் தேடி வரும். நேரத்திற்கு உண்ண உறங்க முடியாமல் வெறுமை உணர்வு உங்களை ஆட்டுவிக்கும்.

    சுக போகத்தை கூட மனக் கஷ்டத்துடனேயே அனுபவிக்க நேரும்.வாழ்வின் நடந்த பல்வேறு அவமானங்களை நினைத்து மனம் வெறுத்து சிலர் இல்வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சந்நியாச மனநிலைக்கு தள்ளப்படுவார்கள். தனியாக அமைதியாக இருப்பதையே மனம் விரும்பும். புதிய கோர்ட், கேஸ் பிரச்சனை உருவாகலாம்.ஆக மொத்தத்தில் கேது பகவான் உங்களை சந்நியாச நிலைக்கு தள்ளுவதில் மிகவும் கவனமாக இருப்பார். மனிதன் பிறக்கும் போது பிரச்சனையும் உடன் பிறந்தது என்பதால் கடவுள் நம்பிக்கையுடன் சந்தோசமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்/

    12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு மீனத்திற்கு ராசி அதிபதி மற்றும் 10ம் அதிபதி. பத்தாமிடம் என்பது கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம். ஜனன கால ரீதியாக கேது தசை இல்லாதவர்களுக்கு தொழில் பெருகும். கோட்சார குரு ராசியில்நின்று 5,9ம் இடத்தை பார்ப்பதால் நியாய தர்மத்திற்கு கட்டுப்பட்டு சம்பாதித்து புகழடைவீர்கள். மேலும் குரு ஏப்ரல் 2023க்கு பிறகு தன ஸ்தானத்தில் ராகுவுடன் இணையும் காலத்திலும் தொழிலால் புகழ் அந்தஸ்து கவுரவம் உயரும். குறுக்கு வழியை கையாண்டால் எட்டாமிட கேது சட்ட சிக்கலில் மாட்டி விடுவார் என்பதால் கவனம் தேவை.

    18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கோட்சார கேது பயணிக்கும் காலத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகளே உங்களை கட்டம் கட்டி நிற்க வைக்கும் என்பதால் வாக்கில் நிதானம் தேவை. உங்களின் கவனக் குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பியவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்ப தால் ஒதுங்கி நிற்பது நல்லது.

    27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் மீனத்திற்கு 2,9ம் அதிபதி என்பதால் இது வரை நடக்காமல் தடை தாமதமாக இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். குல தெய்வ அருளும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். கடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப்பெறுவீர்கள். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம். உறவினர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்கள் சிறு சண்டைகள் வரலாம். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் உங்களை தேடி வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் இழுபறியாக இருக்கும்.

    பெண்கள்:பெண்களுக்கு வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான நிலை நீடிக்கும். வீட்டுப் பெரியவர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தங்கம், வெள்ளி பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ நேரும்.

    உத்தியோகஸ்தர்கள்:நேர்மையான வழியில் உழைப்பவர்களுக்கு 8 மிட கேது உபரி வருமானம் பெற்றுத் தருவார்.ஊதிய உயர்வு நிச்சயம் உண்டு. முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் மேல் வீண் பழி சுமத்தப்படலாம். அவப் பெயர் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    உண்மையாக உழைப்பவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த அசுபமும் நடைபெறாது. ஆனால் குறுக்கு வழியை நாடுபவர்களுக்கு அதற்கான பலன் கிடைக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    வெளிநாட்டுமோகம் மிகுந்த மீன ராசியினரே ராசியில் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார்.

    சனிபகவான் 11,12ம் இடத்திலும், ராகு பகவான் 2ம் இடத்திலும், கேது பகவான் 8ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதுவரை ராசிக்கு 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ராசிக்குள் அடியெடுத்து வைக்கிறார். ராசி அதிபதி குரு ராசியில் ஆட்சி பலம் பெறுவது சிறப்பு அவரே கேந்திராதிபதி என்பதால் கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படுமோ? என்ற பயமும் மீன ராசியினருக்கு உண்டாகும். குரு உங்களுடைய ராசி அதிபதி என்பதால் எந்த கெடுதலும் செய்ய மாட்டார் என்பதை உறுதியாக நம்பலாம். அத்துடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்சனியின் பார்வையும் 17.1.2023 வரை ராசிக்கு இருப்பதால் சுப பலன் மிகுதியாகும். ராசி அதிபதி குரு 12ல் மறைந்ததால்அவதிபட்ட மீன ராசியினருக்கு இந்த குருப் பெயர்ச்சி புத்துணர்வு தரும். இழந்த பாக்கிய பலன்கள்களைகிடைக்கப் பெறுவீர்கள். எனவே ராசி, 5 எனும் பூர்வ புண்ணியம் 9 எனும் பாக்கிய ஸ்தானம் குருவின் கருணையால் உங்களை அப்பழுக்கற்ற புது மனிதனாக வலம் வரச் செய்யப் போகிறார்கள்.

    உங்களை ஏளனம் பேசியவர்கள் எல்லாம் புகழ்வார்கள். தன் நம்பிக்கையும் தைரியமும் மிகுதியாகும். இந்த பிறவியில்உங்களின் பாக்கிய ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும்ஒருங்கேஇணைந்து பலன் தரும் காலம். இந்த குருப் பெயர்ச்சி மீன ராசியினரைமகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.உங்களின் தோற்றம்பொழிவு பெறும். மனதில் அமைதி குடிகொள்ளும். அழகான ஆடம்பரமாகஉங்களை அலங்கரிக்க தனி கவனம் செலுத்துவீர்கள். தன ஸ்தானமாகிய2ம் இடத்தில் ராகு நிற்பதால்பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியும் உருவாகும் . பணவரவு அதிகரிக்கும்.

    உங்கள் வாழ்நாளில் இதுவரை பார்க்காத மிகப் பெரிய தன வரவு கிடைக்கும். குரு, ராகு கொடுக்கும் பணத்தை எப்படி சேர்த்து வைத்து பிற்கால தேவைக்கு பயன்படுத்துவது என்ற ஞானமும் கிடைக்கும். ஜனவரியில் ஏழரைச் சனி ஆரம்பமாகப் போவதால் சிலருக்கு வலது கண், பல், முகம், காது தொடர்பான சிகிச்சை செய்ய நேரும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக அக்கறை கொள்ள வேண்டும். கடுமையான வார்த்தைகள் பிரயோகம் பண்ணுவதை தவிர்த்தல் நலம். அண்டை அயலாரிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.

    5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வைபஞ்சம ஸ்தானம் என்ற புத்திர, பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் கட்டுப்பாடு இல்லாதுஅலைந்த மனம் கட்டுப்படும். எவை நல்லவை, எவை தீயவை என மனதால் பகுக்க முடியும். ஆன்மீக நாட்டம்மிகும். பொருளாதாரத்தில் மிகுதியான ஏற்றம்இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும். பங்குச் சந்தை முதலீடு பல மடங்கு லாபம் பெற்றுத்தரும். தொழில் நிலை சாதகமாக உள்ளது. புதிய தொழில் முயற்சி பலிதமாகும். வட்டித் தொழில் சீட்டுக் கம்பெனி, ஏலச் சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும்தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு அபரிமிதமான தொழில் வளர்ச்சி உண்டு. தொழிலாளி, முதலாளி கருத்து வேறுபாடு குறையும். வழக்கறிஞர், நீதித்துறை, ஆடிட்டிங், நாட்டு மருந்துக் கடை, மருத்துவமனை சார்ந்த தொழில், ஆன்மீக, பக்தி மார்க்க தொழிலில்கள் சீராக நடக்கும்.

    புத்திர பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். செயற்கை கருத்தரிப்பை நாடி மன வேதனை அடைந்தவர்கள் இயற்கையாக பூர்வ புண்ணிய பலத்தால்ஆண் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். மகன், மகளுக்கு திருமணம் ஆகி வம்ச விருத்தியின்மையால் மனம் வருந்திய மீன ராசியினர். பேரன், பேத்தியை கொஞ்சி விளையாடும் காலம் வந்து விட்டது. குழந்தைகள் ஏற்பட்ட மனக் கவலைமறையும்.குழந்தைகளின் நலனில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். குழந்தைகளால் நற்பலன்கள் மிகும். இதுவரை வீடு, வாகனம் இல்லாதவர்களுக்கு வீடு வாகன யோகம் உண்டாகும். ஏற்கனவே சொத்து இருப்பவர்களுக்கும் புதிய சொத்துக்கள் சேரும்.

    7ம் பார்வை பலன்கள்:ராசிக்கு 7ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே நல்லிணக்கம். நீடிக்கும். தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள்.

    9ம் பார்வை பலன்கள்:9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் நாத்திகராக இருந்தவர்களுக்கு கூட தெய்வ வழிபாட்டில் ஆர்வம் மிகும். இது வரை கடவுளே இல்லை என்று கூறியவர்கள் கூட ப்ரபஞ்ச சக்தியை உணர்வார்கள். சாஸ்த்திர ஈடுபாடு ஆன்மீகநாட்டம் ஏற்படும். பலருக்கு மத நம்பிக்கை அதிகரிக்கும். ஒரு சிலர் வேற்று மதத்தில் நாட்டம் ஏற்பட்டு மதம்மாறுவார்கள். அந்நிய மதத்தவர் அல்லது அந்திய மொழி பேசுபவரால் ஆதாயம் உண்டு.குல தெய்வ, பித்ருக்கள் வழிபாட்டில்ஆர்வம் மிகும்.பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தைசரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம்.புனித நீராடல், புனித தல யாத்திரை சென்று வர வாய்ப்பு கிடைக்கும்.கோவில் திருப்பணிகள் செய்து மகிழ்வீர்கள்.

    சொந்தமாக கோவில் கட்ட விருப்பம் உள்ளவர்கள் கோவில் கட்ட உகந்த காலம். ஏற்கனவே கோவில் வைத்து இருப்பவர்கள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யமூலவரின் சக்தி கூடும்.

    அரசியலில் முக்கிய பங்கு, பதவி வகிப்பீர்கள். நீங்கள் விரும்பிய பதவி உங்களைத் தேடி வரும். பட்டங்களும், பதக்கங்களும் வந்து குவியும். எதிர் கட்சியினர் உங்களுக்கு அடங்கி போவார்கள். அரசின் உதவியில்லாமல் பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு அரசின் நிதியுதவி கிடைக்க பாடுபடுவீர்கள்.துறவு மனப்பான்மை மிகும்.அரசு வழி ஆதாயம் மிகும் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப தந்தையின் கட்டளைக்கு இணங்குவீர்கள். தந்தை மகன் உறவு சிறக்கும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பணியாளர்கள் ஒய்வெடுக்க நேரமில்லாது உழைக்க வேண்டியது இருக்கும். பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்தபிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு.

    குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் தொழில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன்பேச வேண்டும். நண்பர்களுடன் வீண் வாக்கு வாதம் ஏற்படலாம். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு வரும அல்லது தொழில் நிமித்தமான பிரிவைத் தரும். காதல் விவகாரங்கள் ஒத்திப்போடுவது நல்லது.

    பெண்கள்:குடும்ப உறுப்பினர்களிடையேஒற்றுமை பெருகி அன்பும், பாசமும் பெருகக் கூடிய அற்புதமான காலம். உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் தாய் வழி ஆதாயம் உண்டு.உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் நலனில் நீங்கள் அதிக கவனம்செலுத்தினாலும் இளைய சகோதரர் மட்டும் உங்களுக்கு எதிராகவே செயல்படுவார். 1,5,9ம்மிடங்கள் குருவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எந்த வழியிலாவது பணத்தை, ஆடம்பரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

    பரிகாரம்: பிரதோஷ காலங்களில் சிவனுக்கு கரும்புச்சாறு அபிசேகம் செய்து வழிபட பாக்கிய பலம் அதிகரிக்கும்.அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபடவும். பௌர்ணமியில் குல தெய்வத்தை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    சுபகிருது வருட பலன் - 2023

    வெளிநாட்டு மோகம் நிறைந்த மீன ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டுசகல சௌபாக்கியங்களும் வழங்க நல் வாழ்த்துக்கள்.

    ராசிக்கு 2ல் ராகுவும், 8ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். குருபகவான் ராசியிலும் 11,12ம் இடத்தில் சனி பகவானும் உலா வருகிறார்கள்.ராசி அதிபதி குரு ராசியில் ஆட்சி பலம் பெறுவதால் தங்களின் தோற்றம் மற்றும் செயல்களில் மாற்றம் ஏற்படும். பொது நலமான சிந்தனை தோன்றி அதன் படி செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும் . பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும். உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்கு தெரிய வரும்.

    எண்ணிய எண்ணம்பலிதமாகும். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற தாய், தந்தை பக்கபலமாக இருப்பார்கள். 2ம்மிடத்தில் ராகு பகவான் நிற்பதால் சம்பந்தமில்லாத நபர்கள் உங்கள் குடும்ப பிரச்சனையில் தலையிட்டு உங்களை மனசஞ்சலப்படுத்தலாம் என்பதால் கவனம் தேவை. 8ம்மிட கேதுவால், வெகு சிலருக்கு எட்டாம் பாவக பலன்களான அவமானம், கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். . ஆயுள் பலம் உண்டு. தீடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராததன வரவு வரும் வாய்ப்பு உள்ளது. 11ம்மிட லாபச் சனியால் தங்கு தடையில்லாத பொருளாதார முன்னேற்றம் ஏற்படவுள்ளது. வழக்குகள் சாதகமாகும்.

    குடும்பம்:குடும்ப வாழ்க்கை மனநிறைவு தரும். உற்றார் உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போகும். திருமண வயதில் உள்ள மகள், மகனின் திருமணத்தை தடபுடலாக நடத்துவார்கள். லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும். வீடு வாகன யோகம் உண்டாகும்.

    ஆரோக்கியம்: ராசி அதிபதி குரு ராசியில் ஆட்சி பலம் பெறுவதால் நோய் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இல்லை.ஆரோக்கியத்தை அதிகரிக்கும் யோகா, தியானம் போன்ற வற்றில் ஆர்வம் அதிகரிக்கும்.

    திருமணம்:2ல் ராகுவும் 8ல் கேதுவும் இருப்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தால் திருமணம் தடைபடலாம். மேலும் ராசி அதிபதி குருஆட்சி பலம் பெற்று 7ம் இடத்தை பார்ப்பதால் ஜனன கால தசாபுத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். மேலும் 2023 ஏப்ரலில் குரு மேஷத்திற்குள் வந்து 8 ல் உள்ள கேதுவைபார்க்கும் போதுகோட்சார ராகு கேதுவால் ஏற்படும்திருமணத் தடை முற்றிலும் அகலும். 2023 ஜனவரியில் ஏழரைச் சனி ஆரம்பிப்பதால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும்.

    பெண்கள்: பெண்களுக்கு வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான நிலை நீடிக்கும். வீட்டுப் பெரியவர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தங்கம், வெள்ளி பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ நேரும். சிலர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் பிரார்த்தனை மற்றும் வேண்டுதலுக்கு கடவுளின் அருள் கிடைக்கும் காலம்.

    மாணவர்கள்:ராசிக்குள் குரு வந்து ஆட்சி பலம் பெறுவதால் உங்கள் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். படிக்கும் பாடம் நன்கு புரியும். வேற்று மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். பேச்சுப் போட்டி, பட்டிமன்றங்களிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

    உத்தியோகஸ்தர்கள்: நேர்மையான வழியில் உழைப் பவர்களுக்கு 8 மிட கேது உபரி வருமானம் பெற்றுத் தருவார்.ஊதிய உயர்வு நிச்சயம் உண்டு. முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் மேல் வீண் பழி சுமத்தப்படலாம். அவப் பெயர் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

    முதலீட்டாளர்கள்:சுய தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். நீண்ட காலமாக தடைபட்ட பணவு வரவு இப்பொழுது வந்து சேரும். கடன் வாங்காமலேயே உபரி வருமானத்தில் தொழிலை விரிவு படுத்துவீர்கள்.சிலர் தொழிற்சாலையை இட மாற்றம் செய்ய நேரும். தொழில் தர்மத்தை கடைபிடித்து நியாயமான முறையில் சம்பாதித்து புகழடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். தொட்டது துலங்கும். வழக்கத்தை விட அதிகமான பணம் சம்பாதிப்பீர்கள். வாடிக்கையாளர்கள் உங்களுக்கு முழுஆதரவு வழங்குவார்கள்.

    அரசியல்வாதிகள்:இரண்டாம் இடத்தில் நிற்கும் ராகு பகவான் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்கை கொடுக்க வைத்து எட்டாம் இட கேது மூலம் வம்பு வழக்கை விட்டு வாசலில் நிறுத்துவார்.கொள்கை கோட்பாடுடன் தூய்மையாக செயல்பட்டால் நிலைக்கலாம். நீடிக்கலாம். சந்தர்ப்பவாதியாக செயல்பட்டால் வீழ்ச்சியை சந்திப்பதில் சந்தேகம் இல்லை.

    கலைஞர்கள்:கலைத்துறையின் அனைத்து பிரிவினருக்கும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 2ம் இடத்தில் ராகு என்பதால் பிற மொழி படங்களில் அதிக வாய்ப்பு கிடைக்கும். பல மொழிகள் கற்கும் ஆர்வம் உண்டாகும். உங்கள் நடிப்பு திறமைக்கு புது ரசிகர் கூட்டம் உருவாகும்.

    விவசாயிகள்:உங்களின் உழைப்பு பணமாக காய்க்கும் நேரம். பணத்தை, பயிரையும் சேர்த்து அறுவடை செய்வீர்கள். அமோக விளைச்சல் அக்கம் பக்கத்து நிலத்தினரை பொறாமைப்பட வைக்கும். கண் திருஷ்டி உருவாகும். சிலருக்கு புதிய நிலம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். உண்மையாக உழைப்பவர்களுக்கு இந்த புத்தாண்டு வெற்றிகரமான திருப்புமுனையைத் தரும்.

    கவனமாக செயல்பட வேண்டிய காலம்

    ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில்வாக்கில் நிதானம் தேவை. உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும்.அலைச்சல் மிகுதியாக இருக்கும்.பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. பங்குச் சந்தை முதலீடுகள் உங்களை நிலை தடுமாற வைக்கும். வரவு இல்லாமல் இருந்தால் இருந்தால் கூட பரவாயில்லை. முதலுக்கே மோசமாக முடியும் என்பதால் கவனம் தேவை. லௌகீக நாட்டம் குறையும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையில் தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அதிகமாகும்.

    குரு:29.7.2022 முதல் 23.11. 2022 வரை ராசிக்கு 11ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பியவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது. எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.

    பரிகாரம்:மீன ராசியினர் அடிக்கடி புண்ணிய தீர்த்தங்களில் உடலும், உள்ளமும் குளிர புனித நீராட வரலாறு படைப்பீர்கள்.

    அதிர்ஷ்டம் கதவை தட்டும்

    தன ராகுவாலும், 11ம்மிடமான லாப ஸ்தான சனியாலும் தொழிலில் பல வருடமாக உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் நேரம். லாபம்வீடு தேடி வந்து கதவை தட்டும். ஜனன கால ஜாதகத்தில் சனி சுப வலு பெற்றவர்களுக்கு அதிக முயற்சி இல்லாமலே கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். மனைவிக்கு தாய் வழி சொத்து கிடைக்கும். அதிர்ஷ்டம் தொழில், பதவிரூபத்தில் வந்து கதவைத் தட்டும். புதிய தொழில் சந்தர்ப்பம் தேடி வரும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை இனி இல்லை. பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். உங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் கூட பணத்தை கொடுக்க முன் வருவார்கள். வராக்கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×