search icon
என் மலர்tooltip icon

    துலாம் - குரோதி வருடம் வருட பலன்

    துலாம்

    தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    முன்னேற்றமான வருடம்! நேர்மையான துலாம் ராசியினருக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டு, மனதை மகிழ்விக்கும் முன்னேற்றமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்

    அஷ்டம குருவின் பலன்கள்

    துலாம் ராசிக்கு 3, 6ம் அதிபதியான குருபகவான் மே 1, 2024 முதல் அஷ்டம ஸ்தானம் செல்கிறார். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்.ஒரு மறைவு ஸ்தான அதிபதி மற்றொரு மறைவு ஸ்தானத்தில் மறைவது உன்னதமான அமைப்பு. துலாம் ராசிக்கு கெட்டவனான குரு மறைவு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வந்து விடும்.

    அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் குருவின் 5ம் பார்வை அயன, சயன, விரய ஸ்தானத்தில் பதிகிறது. இதனால் வெளியூர் வெளிநாட்டு பயணம் ஏற்படும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். பணவசதி சிறப்பாக இருக்கும். சுப கோள்கள் மறைவு ஸ்தானத்தை பார்த்தால் சுப விரயங்கள் கூடும்.

    வரவிற்கு ஏற்ற விரயமும் இருக்கும். வீடு வாகன யோகம், திருமணம், பிள்ளைகளின் கல்வி என விரயத்தை புத்தி சாதுர்யத்தால் சுபமாக மாற்ற முடியும். சுகமான சொகுசான படுக்கையில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள்.

    குருவின் 7ம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் குடும்பத்தில் குதூகலமான சம்பவங்கள் ஆடம்பர விருந்து உபசாரங்கள் நடக்கும். இது வரை பேசாமல் இருந்த உறவுகள் அன்பு காட்டுவார்கள். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். செல்வ செழிப்பில் மிதப்பீர்கள்.

    வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். சுய ஜாதக ரீதியாக குரு தசை நடப்பவர்களுக்கு வெளிநாட்டு பணம் குவியும். உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

    குருவின் 9ம் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் அறுவை சிகிச்சையில் குணமாக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறிய நோய் கூட எளிய வைத்தியத்தில் சீராகும். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். உங்களின் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவீர்கள். புதிய சொத்துக்கள் உயர் ரக வாகனங்கள் சேரும்.

    பஞ்சம சனியின் பலன்கள்:

    துலாம் ராசிக்கு 4, 5 ம் அதிபதியான சனி 5ல் ஆட்சி பலம் பெறுவது துலாம் ராசிக்கு பலம் சேர்க்கும் அமைப்பாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற சனி பகவான் வாழ்வில் தடைபட்ட அனைத்து இன்பங்களையும் அடையச் செய்வார்.குல தெய்வ கடாட்சத்தை ஏற்படுத்துவார். குல தெய்வம் பூர்வீகம், பூர்வீகச் சொத்து பற்றிய தகவல் தெரியாதவர்களுக்கு குல தெய்வம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    குழந்தை பாக்கியம் ஏற்படும். கருப்பை குறைபாடு காரணமாக குழந்தை பாக்கியம் தாமதமாகிக் கொண்டு இருந்தவர்களுக்கும், செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடியவர்களுக்கும் இயல்பாகவே குழந்தை பிறக்கும். சனி பகவானின் 3ம் பார்வை 7ம்மிடத்தில் பதிவதால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கிட்டும்.

    கோவில் கட்டுதல், கும்பாபிசேகம் செய்தல், அல்லது பொதுக்காரியங்களில் ஈடுபடுதல் ஆகிய நற்பலன்கள் நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் முன்னேற்ற மடையும். சனி பகவானின் 7ம் பார்வை ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.

    உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். கிரகங்களின் இயக்கம் சாதகமாக உள்ளதால் பண வரவு அமோகமாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம்.

    அடமான சொத்துக்கள், பொருட்கள் வீடு வந்து சேரும் அரசியல் வாதிகளுக்கு ஆதாயமான காலம். ஆரோக்கிய தொல்லைகள் சீராகும்.

    சனி பகவானின் 10ம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. சாமர்த்தியமாகப் பேசுவீர்கள். தொழிலை வாக்கு சாதுர்யத்தால் மேன்மைப்படுத்துவீர்கள். குடும்பத்திற்கு மருமகள், மருமகன் பேரன், பேத்தி போன்ற புதிய உறவுகள் வருகை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள்.

    6ல் ராகு 12ல் கேது:

    6ம்மிடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம், உத்தியோகம் பற்றிக் கூறுமிடம். 12ம்மிடம் என்பது அயன, சயன ஸ்தானம், விரைய ஸ்தானம் மற்றும் வெளிநாட்டுப் பயணம், தலைமறைவு வாழ்க்கை பற்றிக் கூறுமிடம். பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது நல்லது. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். இது பலவிதத்தில் உங்ளுக்கு கைகொடுக்கும். ஆனால் இதில் சில அசவுகரியங்களும் உண்டு.

    6ம்மிடத்தில் நிற்கும் ராகு இதுவரை நிலையான நிரந்தரமான வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பார். தொழில், உத்தியோகத்தில் நிலவிய தாமதம், மந்த நிலை அகலும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். அரசு ஊழியர்கள் லஞ்சம் தொடர்பான விசயத்தில் ஆர்வம் குறைப்பது நல்லது. லஞ்சம் கொடுத்து வேலை வாங்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டிய நேரம்.

    தொழிலுக்கு, வீடு, வாகனத்திற்கு, வீட்டில் நடைபெறும் சுப விசேஷத்திற்குத் தேவையான நிதியை கடன் மூலமாக திரட்டித் தருவார்.

    சிலருக்கு தொழில் ஜாமீன், குடும்ப தேவை நிறைவேற்றுதல் போன்றவற்றின் மூலம் கடனை அதிகப்படுத்தலாம். இது வரை நோயால் அவதிப்பட்டவர்களுக்கு நோயின் தன்மையை புரிய வைப்பார். நோய் இல்லாதவர்களுக்கு சிறு நோய் தாக்கத்தை ஏற்படுத்துவார். எந்த விதமான போட்டி பந்தயங்களாக இருந்தாலும் வெற்றி நிச்சயம். 12ம்மிட கேது பாவம், புண்ணியம், முக்தி, மோட்சம் ஆன்மீகம் பற்றி சிந்திக்க வைப்பார்.

    தேவையற்ற எண்ண ஓட்டத்தில் தூக்கம் சற்று குறைவுபடும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு வெளிநாட்டு குடியுரிமை திடைக்கும். சிலருக்கு வரவிற்கு மீறிய செலவினால், தேவையற்ற விரயத்தால் எதிர்காலம் பற்றிய சிந்தனை மற்றும் பய உணர்வு கூடும்.

    வியாபாரம் சார்ந்த விசயத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    சித்திரை 3, 4:

    செவ்வாய் பகவானின் சித்திரை 3, 4ம் பாதம் துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு முன்னோர்களின் நல்லாசியையும், குல தெய்வ அருளையும் பெற்றுத் தரவிருக்கும் ஆரவாரமான வருடம்.நினைப்பதும், நடப்பதும் முரண்பாடாக இருந்த நிலை மாறும். பாக்கிய பலத்தால் நடப்பதை எதிர்கொள்ள முடியும் புதிய தொழில் முதலீட்டிற்கு ஏற்ற நேரம். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு. பிள்ளைகளின் நலனுக்காக அதிக செலவு செய்ய நேரும். காதல் பிரச்சனைகள் அவமானத்தில் முடியும். விற்கப்பட வேண்டிய சொத்துக்கள் இருந்தால் விற்றுத் தீரும்.

    உயில் எழுதுவதற்கு உகந்த காலம். இது வரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல நேரும். மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும்.பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும். மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள். அதனால் சில செலவுகளும் வரும். திருமண முயற்சி சாதகமாகும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. எதிலும் நிதானத்துடன் பெரியவர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். பழநி முருகனை வழிபட நினைத்தது நடக்கும்.

    சுவாதி:

    ராகுவின் சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருடத்தில் நினைப்பதை உடனே நடத்த முடியும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள் வாக்கு வன்மை பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும்.

    அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் சாதகமான பலன் உண்டு. அடிமைத் தொழிலில் இருக்கும் சிலருக்கு சொந்தத் தொழில் ஆர்வம் பிறக்கும்.திரைப்பட கலைஞர்களுக்கு தடைகளைத் தாண்டிய வெற்றி உண்டு.

    பழைய வழக்குகள் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தலை தூக்கும். சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். சிலர் வீட்டை புதுப்பிக்கலாம். காது, மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும்.

    பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். தன வரவில் சாதகமான நிலை உண்டு. நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் சொத்து வாங்க பண உதவி கிடைக்கும்.திருமணம் கூடி வரும். அறிமுகமில்லாத எதிர்பாலின நட்பைக் தவிர்க்கவும். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபட நல்லது நடக்கும்.

    விசாகம் 1, 2, 3:

    குருவின் விசாகம் நட்சத்திரம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அயராத உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வருடமாகும். தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்கள் அகலும். குலத்தொழில் செய்பவர்களின் புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். தந்தையின் அரசு வாரிசு வேலை கிடைக்கும். குடும்ப உறவுகளிடம் நிலவி வந்த சங்கடங்கள் மறையும்.

    புதிய எதிரிகள், நோய் தாக்கம் உருவாகும். வாழ்க்கை துணையின் வேலை நிரந்தரமாகும்.எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும்.

    பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம்.திருமணக் கனவு நினைவாகும். குழந்தை பாக்கியம் கிட்டும்.உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு.அழகு, ஆடம்பர பொருட்கள் அதிகமாக கிடைக்கும்.

    சொத்துச் சேர்க்கை, சொத்துக்களால் வருமானம் உண்டாகும். மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும். குடும்ப நலனுக்காக ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வர திட்ட மிடுவீர்கள். புத்திர பிராப்தம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். தினமும் தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

    திருமணம்:

    திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். 8ல் நிற்கும் குருபகவான் சம சப்தம பார்வையால் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் மாங்கல்ய தோஷம் அகலும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். 5ல் உள்ள சனி பகவானால் காதல் கை கூடும். மறுவிவாக முயற்சி வெற்றி தரும்.

     பரிகாரம்:

    குரு மற்றும் ராகு / கேதுவால் மறைவு ஸ்தானங்கள் அதிக வலுவுடன் இயங்குகிறது. நவகிரகங்களால் ஏற்படும் கெடு பலன்கள் அகல நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் நரசிம்மர். ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் ஒரே நேர்க்கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும்.

    துலாம்

    சோபகிருது வருட பலன் 2023

    புது வசந்தம் வீசப்போகிறது.!

    நியாயத்திற்கு துணை நிற்கும் துலாம் ராசியினருக்கு இந்த சோப கிருது வருட தமிழ் புத்தாண்டு புதிய வாழ்க்கைப்பாதையை காட்டும் புத்தாண்டாக அமைய நல் வாழ்த்துக்கள். ஆண்டின் தொடக்கத்தில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஏப்ரல் 22 முதல் குருபகவான் ராசிக்கு ஏழாமிடம் சென்று உங்கள் ராசியை பார்க்கிறார்.ஜனவரி 17 முதல் சனி பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தற்போது 7, 1ம்மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு கேதுக்கள் அக்டோபர் 30, 2023க்குப் பிறகு 6,12ம்மிடம் செல்கிறார்கள்.

    இந்த தமிழ் புத்தாண்டில் அனைத்து வருட கிரகங்களும் ஓரளவு சாதகமாக உள்ளதால் புதிய முயற்சிகள் கைகூடும். உங்கள் வாழ்க்கை நிலை உயரப்போகிறது. நீங்கள் பிறந்த பலனை அடையப் போகிறீர்கள். உங்கள் புகழ், பெருமையை உற்றார், உறவினர் அறியப்போகிறார்கள். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டவர்கள் வாழ்க்கையில் புதுவசந்தம் வீசப்போகிறது. தோற்றத்தில் மிடுக்கு கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும்.

    உங்கள் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நோய்கள் அகலும். உடலின் ஐம்புலன்களும் மகிழ்ச்சியடையும். சொத்து, வீடு,வாகனம் என உங்கள் ஆழ்மன எண்ணமும் ஆசையும் நிறைவேறும். வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.

    குடும்பம், பொருளாதார நிலை: இதுவரை உங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டு இருந்தீர்களோ அவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு இக் காலம் வசந்த காலமாக இருக்கும்.

    லாபம் பல வழிகளிலும் வரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கேட்ட உதவி கிடைத்து முன்னே ற்றம் காண்பீர்கள். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை குறையும்.பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். வசதியும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

    குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் சுமூகமான நிலை நீடிக்கும். தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்கி அணிவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம்.சிலருக்கு ராஜயோகமாக அடிப்படையில் கைவிட்டுப் போன சொத்துகிடைக்கும்..திருமணத் தடை அகலும்.

    பெண்கள் : பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும்.வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.தாய் வழியில் ஏற்பட்ட மனக்கவலைகள், கருத்து வேறுபாடு அகலும்.உங்கள் சேமிப்புகள் சுப விரயங்களாக மாறும். வேலை செய்யுமிடத்தில் பிரச்சனைகள் குறையத்துவங்கும்.

    சித்திரை 3, 4 : திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் காலம். தொழில் வளம் சிறக்கும் காலம். வாக்கு சாதுர்யத்தால் தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக டென்ஷன் குறையும்.உங்கள் மீது போடப்பட்டவழக்கில் தீர்ப்பு சாதகமாகும் அல்லது தண்டனைக் காலம் குறையும். தாய்மாமனுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு.இளைய மனைவியின் மூலம் சொத்து கிடைக்கும்.ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெறுவார்கள். பாலிசி முதிர்வு தொகை, எதிர்பாராத பண வரவு உண்டு. ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள்.புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும்.ஸ்ரீ லலிதா திரிசதி நாமாவளி படிக்கவும்.

    சுவாதி : மனநிறைவும், நிம்மதியும் அதிகரிக்கும் காலம். செயல் திறனில்மாற்றம் ஏற்பட்டுலகுவாக பணியாற்றி நற்பெயர்பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மருமகன் மகன் ஸ்தானத்தில் நின்று உங்கள் தேவைகளை நிறைவு செய்வார். குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். அரசு வேலை முயற்சி சாதகமாகும். கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். சில காரியங்கள் ஆரம்பிக்கும் போது தோல்வி தருவது போல் இருந்தாலும் முடிவில் வெற்றியைக் கொடுக்கும். தொட்டது துலங்கும்.வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் அல்லது வாபஸ் பெறப்படும். தந்தை வழிச் சொத்துப்பிரச்சனைகள் சித்தப்பா, பெரியப்பாவின் மூலம் தீர்த்து வைக்கப்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும்.ஸ்ரீ குபேர லஷ்மி அஷ்டோத்திரம் படிக்கவும்.

    விசாகம் 1,2,3 : சகாயங்கள் நிறைந்த வருடம். வசீகரமான தோற்றம் ஏற்படும். சாஸ்திர ஞானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். குடும்ப சுமை குறையும். பணம் எனும் தனம்சமூக அங்கீராத்தை பெற்றுத் தரும். ராஜ மரியாதை கிடைக்கும்.

    வெளியூர், வெளிநாட்டு வேலை அல்லது குடியுரிமை பெற்று செட்டிலாவது போன்ற பலன்களை எதிர்பார்க்கலாம். கடன்காரர்களின் கெடுபிடி குறையும். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. அங்காளி பங்காளி வகையில் நிலவிய மனக்கசப்புகள் விலகும். மகாலஷ்மி காயத்திரி மந்திரம் படிக்கவும்.

    பரிகாரம் : துலாம் ராசியினர் சுக்ரனின் அம்சம் பெற்ற சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரை வழிபட ஏற்றமான பலன் உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    சுபகிருது வருட பலன் - 2023

    ஆடம்பர வாழ்வில் நாட்டம் மிகுந்த துலா ராசியினருக்கு தமிழ் புத்தாண்டில் சுப பலன்கள் அதிகரிக்க நல் வாழ்த்துக்கள்.

    ராசியில் கேதுவும், ஏழாமிடத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் 6ம் இடத்திலும் சனி பகவான் 4, 5ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்கள். ராசியில் உள்ள கேதுவால் ஆத்ம ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரிடமும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். 7ல்ராகு நிற்பதால் வெகு சிலருக்கு தவறான எண்ண அலைகள் மிகுதியாகும். நட்பு வட்டாரங்களால் மன சங்கடம் உருவாகும்.

    ஆறாம் அதிபதியாகிய குரு மறைவு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பய உணர்வு அனைவருக்கும் இருக்கும். இந்த கால கட்டத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. சில வளர்ச்சிகள் தடைபடலாம். ஆனால் குரு பார்வை பட்ட இடத்தின் மூலம் நன்மைகள் உண்டாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. 4ம்மிட சனி பகவானால் சுக போக பலத்தால் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். முன்னோர்களின் பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

    குடும்பம்:இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அனுசரித்துச் செல்வார்கள். மன நிம்மதி இருக்கும். வீட்டில் எல்லோரும் எப்போதும்சந்தோசமாக இருப்பார்கள்.குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதர் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார். நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மூத்த சகோதரருடன் இருந்த பிணக்குகள் மாறும். முன்னோர்கள் சொத்தைப் பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்தசொத்துகள் உங்களுக்கு சாதகமாகப் பிரிக்கப்படும்.தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாயமுண்டு. 3,6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீடு மாற்றம் செய்ய நேரும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்யக் கூடும்.

    ஆரோக்கியம்:6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவு செய்ய நேரும்.ஞாபக சக்தி குறையும். மறதி ஏற்படலாம்.

    மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்யும் நேரம்.

    திருமணம்:துலாம் ராசியினருக்கு திருமண வாய்ப்பு கூடி வரும். திருமணமே வேண்டாம் என்றவர்கள் கூட திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். 7ல் உள்ளராகு சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்தி இருப்பதால் சிலருக்கு கலப்பு திருமணம் நடைபெறும். சிலருக்கு ராகு மேஷத்தை கடக்கும் முன்பு ஒன்றுக்குமேற்பட்ட திருமணம் நடக்கும்.

    பெண்கள்:ஜனன கால ஜாதகப்படி தசா புக்தி சாதகமற்றவர்களுக்கு ராகு/கேதுக்களால் சிறு சிறு உடல் பாதிப்பு மனசஞ்சலம் இருக்கும். மற்றவர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் தொடர்ந்து சுபநிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வருகையில் குதுகலம் நிரம்பியிருக்கும். தாய் வழிப்பாட்டியின் நகைகள், அசையாச் சொத்துக்கள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு வலுவாக இருக்கும்.

    மாணவர்கள்:லக்னத்தில் உள்ள கேது கற்றல் ஞானத்தை மிகைப்படுத்துவார். உழைப்பிற்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கும். சில மாணவர்களுக்கு வேற்று மொழி கற்கும் வாய்ப்பும் ஆர்வமும் உண்டாகும். 6ல் குரு ஆட்சி பெறும் காலத்தில் போட்டித் தேர்வில் பெற்றி பெற்று பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள்:அரசு உழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இட மாற்றத்துடன் ஊதிய உயர்வும் கிடைக்கும்.தனியார் துறையினர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு மாறலாம். 6ல் குரு ஆட்சி பலம் பெறுவதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வேலையில் அதிக சம்பளம் கிடைக்கும்.

    முதலீட்டாளர்கள்:தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும்.தன வரவு மகிழ்வை தரும். லாபம் ஒன்றுக்கு இரண்டாகும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள். பல புதிய தொழில் அதிபர்கள் உருவாகுவார்கள். சில உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களுக்கு டிரேட் மார்க் வாங்குவார்கள். சிலருக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

    அரசியல்வாதிகள்:ஏழில் உள்ள ராகு பொது ஜனத் தொடர்பை அதிகப்படுத்தும். மக்களுடன் மக்களாக கலந்து சேவை செய்வீர்கள். அரசியல்வாதி களுக்கு மிகப் பொன்னான காலம்.6ல் குரு ஆட்சிபெறும் காலத்தில் எதிரிகள் விலகுவார்கள். உங்களின் புகழ் பரவும். யாரும் உங்களை அசைக்க முடியாது.

    கலைஞர்கள்:சுக்ரனை ராசி அதிபதியாகக் கொண்ட கலைத்துறையினர் சாதனை படைப்பீர்கள். புதிய படைப்புகள் உலகப் புகழ் பெறும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் உண்டாகும். 6ல் குரு ஆட்சி பெறும் காலத்தில் கடன் வாங்கி படம் எடுப்பதை தவிர்க்கவும். கலைத்துறையின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள்.

    விவசாயிகள்: எதிர்மறை எண்ணங்கள் விலகும். கடன் வாங்கி வயல் தோட்டம் வாங்குவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பால் தரமான பொருட்களை விளைவிப்பீர்கள்.உங்களின் உழைப்பிற்கு அபரிமிதமான பலன் கிடைக்கும். உங்கள் விலை பொருட்களுக்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கும்.

    ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராசியில் கேதுவும் ஏழில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள்.சில தம்பதிகளுக்குள் ஈகோ பிரச்சனை ஆரம்பமாகும். அதனால் கருத்து வேறுபாடு சற்று மிகைப்படுத்தலாக உருவெடுக்கும்.சில தம்பதிகளுக்கு மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் பிரிவினை உண்டாகும். சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசிக்கலாம். வாழ்க்கைத் துணை மூலம் அதிகப்படியான பொருள் வரவு உண்டாகும்.

    குரு: 29.7.2022 முதல் 23.11.2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 4ல் சஞ்சரிக்கும்சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில்தாய் வழி உறவுகளின் வெறுப்பை சம்பாதிக்க நேரும். தாய் வழிப் பூர்வீகச் சொத்துப் பிரிப்பதில் கருத்து வேறுபாடு உருவாகும் அல்லது நீதி மன்றத்தில் வழக்கு பதியலாம். அரசு சார்ந்த ஒப்பந்தங்கள் கை நழுவிப்போகலாம். செவித்திறன் குறைதல், சீழ்வடிதல்போன்ற காது தொடர்பான நோய் பாதிப்பு தோன்றி மறையும். நரம்பு, வாதம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். ஒரு கடன் அடைவதற்குள் மறுகடன் உருவாகும் என்பதால் கவனம் தேவை.

    பரிகாரம்:வெள்ளிக்கிழமை காலை 6 --7 சுக்ர ஓரையில் மல்லிகை மலர் அணிவித்து மகாலட்சுமியை வழிபட சீரான முன்னேற்றம் உண்டாகும்.

    பண வரவு அதிகரிக்கும்

    6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் விரும்பிய கடன் தொகை எளிதில் கிடைக்கும்.ராசிக்கு 2ம் இடமான தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை பதிவதால் வரா கடன்கள் வசூலாகும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும்.சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக பிள்ளை இல்லாதவர்களின் உயில் சொத்து, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. என்றோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×