search icon
என் மலர்tooltip icon

    துலாம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

    துலாம்

    சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

    ஐந்தில் வந்தது சனி! அதிர்ஷ்ட நேரம்தான் இனி!

    சனியின் வக்ர காலம்!

    19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். வீண் பழிகள் ஏற்பட்டு மனக்கவலையை அதிகரிக்கச் செய்யும். வீடு கட்டுவதில் தடைகள் ஏற்படும். வெகுதூரத்திற்கு செல்லும் யோகம் கைகூடி வருவது போல் தோன்றி, பிறகு கை நழுவிச் சென்றுவிடும். பிள்ளை களாலும் பிரச்சினைகள் வந்து சேரும். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. எதையும் துணிந்து செய்ய இயலாது.

    துலாம் ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 அன்று 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்!

    டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திற்கு வந்து சேரும் சனி பகவானால் நல்ல மாற்றங்கள் வரப்போகின்றது. இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும். பிரிந்து சென்ற உறவினர்கள் பிரியமுடன் வந்திணைவர். செய்தொழில் எதுவாக இருந்தாலும் முன்னேற்றம் கூடும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். அவர்களின் கல்வி முன்னேற்றமும், கடல் தாண்டிச் செல்லும் வாய்ப்பும் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. இனிமை தரும் விதத்தில் இட மாற்றம் அமையும்.

    சனியின் பார்வை பலன்!

    உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 2, 7, 11 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கப் போகின்றார். இதன் விளைவாக பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பாராட்டும், புகழும் கூடும். மனதிற்கினிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். குடும்பத்தில் கெட்டிமேளம் கொட்டும் வாய்ப்பும், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. அதிகாரப் பலம் பெற்றவர்கள் நட்பாவதால் சில காரியங்கள் கைகூடும்.

    சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் தம்பதியர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு அகலும். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை விலகும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள், படித்து முடித்தவர்கள் பட்ட மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு போன்றவை இக்காலத்தில் கைகூடும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்களும் உண்டு.

    சனியின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. தொழில் வெற்றிநடை போடும். பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பர். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக அகலும். புதிய வாகனங்கள் வாங்கிப் பயணிக்கும் வாய்ப்பு கைகூடும்.

    சனியின் பாதசாரப் பலன்கள்!

    செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (20.12.2023 முதல் 21.2.2024 வரை) சுபச்செலவுகள் அதிகரிக்கும். கைநழுவிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். வீடு கட்டிக் குடியேற வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். சகோதர வர்க்கத்தினரின் ஆதரவு திருப்தி தரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உண்டு. பணிபுரிபவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

    உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு. பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு வங்கிகளின் ஒத்துழைப்பு கிட்டும். புதிய வாகனம் வாங்க, கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும் நேரமிது. உறவினர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். சொத்துப்பிரச்சினை சுமுகமாக முடியும்.

    குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

    உங்கள் ராசிக்கு அதிபதியானவர் சுக்ரன். அவருக்கு பகை கிரகமான குருவின் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது எதையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது. விரயங்கள் அதிகரிக்கும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கரங்களில் புரளும். நிம்மதி குறையும். நேசித்தவர்களோடு கூட யோசித்துப் பேசும் சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத் தொல்லை அகல, ஒரு சிறு தொகையை செலவிட நேரிடும்.

    குருப்பெயர்ச்சிக் காலம்!

    சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அது மட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கும் குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆதாயம் திருப்திகரமாக இருக்காது. 'உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று வருத்தப்படுவீர்கள். ஊர் மாற்றம், இட மாற்றம், வீடு மாற்றம் என்று மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் பிரச்சினை அதிகரிக்கும்.

    மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச்சிறந்த பலன்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்விக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். விலகிச்சென்ற தொழில் கூட்டாளிகள் மீண்டும் வந்திணைவர்.

    கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பதவி மாற்றம் வரலாம். 'நிலையான வருமானம் கிடைக்கவில்லையே' என்று வருத்தப்படுவீர்கள்.

    ராகு- கேது பெயர்ச்சிக் காலம்!

    26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகின்றது. படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலைக்கான ஏற்பாடு செய்திருந்தால் அது கிடைக்கும். திருமணத்திற்காக முயற்சிகள் செய்தால் அதுவும் கைகூடும். நல்ல சந்தர்ப்பங்கள் வருவதை நழுவ விட வேண்டாம். 11-ம் இடத்திற்கு வரும் கேதுவால் எதிரிகளின் பலம் குறையும். என்றைக்கோ வாங்கிப் போட்ட சொத்துக்களால் அதிக லாபம் கிடைக்கும். சர்ப்ப ப்ரீதிகளைச் செய்வதன் மூலம் சந்தோஷ வாய்ப்புகள் அதிகம் வந்து சேரும்.

    வெற்றி பெற வைக்கும் வழிபாடு!

    ஒவ்வொரு சனிக்கிழமையும் வயதிற்கேற்ற வெற்றிலை மாலையை அனுமனுக்கு அணிவித்து வழிபடுவது நல்லது. சிறப்பு வழிபாடாக நாமக்கல்லில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் செல்வ வளம் பெருகும். செயல்பாட்டிலும் வெற்றி கிடைக்கும்.

    துலாம்

    சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    வசீகரமான தோற்றம் கொண்ட துலாம் ராசியினரே இதுவரை ராசிக்கு 4ம் இடமான சுகஸ்தானத்தில் நின்று அர்தாஷ்டம சனியாக பலன் வழங்கிய சனி பகவான் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்கிறார். தனது 3ம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் 11மிடமான லாப ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் தன ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

    பஞ்சம ஸ்தான சனியின் பலன்கள்: துலாம் ராசிக்கு 4, 5ம் அதிபதியான சனி பகவான் 5ம் மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானம், பதவி ஸ்தானம், புத்திர ஸ்தானம் சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார். உங்களின் ஐந்தாம் அதிபதி சனி ஐந்தில் ஆட்சி பலம் பெறுவதால் நடக்குமா? நடக்காதா? என உங்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல விசயங்கள் நல்ல முடிவிற்கு வரும்.உங்களின் துன்பங்கள், துயரங்களுக்கு விடிவு கிடைக்கும் காலம் வந்துவிட்டது. இதுவரை நிலவி வந்த தடை தாமதங்கள் நீங்கி கிடைத்தற்கரிய பல நற்பலன்கள் உண்டாகும்.

    இந்த இரண்டரை ஆண்டு காலம் சனி பகவான் உங்களுக்கு ராஜயோகத்தை வழங்கப் போகிறார். பல வருடத்திற்கு முன் வருமானம் திரட்ட பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகுவார்கள். இதுவரை சொந்த ஊரில் வாழ்ந்தவர்கள் உத்தியோகம், தொழில் நிமித்தமாக இடம்பெயர நேரும்.கூப்பிட்ட குரலுக்கு உங்களின் குல தெய்வம் ஓடி வரும். புத்திர பாக்கியம் உருவாகப் போகிறது. பூர்வீகம் தொடர்பான சொத்துப் பிரச்சனைகள் இழுத்தடித்த நீதிமன்ற வம்பு, வழக்குகளிலிருந்து சாதகமான தீர்ப்பு வரும். அங்காளி, பங்காளி உறவில் நல்லிணக்கம் ஏற்படும்.

    தொழில் சிறப்பாக முன்னேற்றம் அடையும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் முதலீட்டிற்கு தேவையான பணம் கிடைக்கும். வீடு, வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உருவாகும்.

    3ம் பார்வை பலன்கள்: சனியின் 3ம் பார்வை 7மிடமான களத்திர ஸ்தானத்தில் பதிவதால் திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணமான தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். தம்பதிகளிடம் ஒற்றுமையும் அன்னியோன்யமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தம்பதியினர் தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தால் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம்.

    விவகாரத்து ஆன தம்பதிகள் கூட மறுபடியும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். மனக்கசப்பு மாறும். கூட்டுத் தொழில் சிறப்படையும். தொழில் கூட்டாளிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.நண்பர்களுடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சம்பந்திகளுடன் ஏற்பட்ட மன பேதம் மறையும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

    7ம் பார்வை பலன்: சனியின் 7ம் பார்வை 11ம்மிடமான லாபஸ்தானத்திற்கு இருப்பதால் கால்நடை வளர்ப்பவர்கள் விவசாயிகளுக்கு வசந்த காலம். விவசாயம் செழிப்படையும். அரசின் மானியம் உதவிகள் கிடைக்கும். இது வரை கட்ட முடியாமல் திணறிய அசல் தொகை, வட்டியை திரும்பவும் கட்டக் கூடிய சந்தர்ப்பம் உண்டாகும். வராகடன் ஏற்பட்டு வராது என்று நினைத்த தொகை வசூலாகும். புதிய தொழிலில் கிளைகள் உருவாக்க அற்புதமான நேரம். இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்வார்கள். புதிய தந்திரங்களை பயன்படுத்தி வருமானத்தை அதிகப்படுத்துவார்கள். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும்.

    கடன் இல்லா நிம்மதியான வாழ்விற்கு சனி பகவான் உங்களை அழைத்துச் செல்லும் நல்ல நேரம். போட்டி, பந்தயங்கள் உங்களுக்கு பெரும் வெற்றி பெற்றுத் தரும். அரசாங்க ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். மூத்த சகோதர, சகோதரிகள் சித்தப்பாவுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.

    10ம் பார்வை: சனி பகவானின் 10ம் பார்வை ராசிக்கு 2ம் இடமான தன ஸ்தானத்திற்கு இருப்பதால் தன வரவு மகிழ்வைத் தரும்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கருத்து வேறுபாட்டால் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி மகிழ்வார்கள். உங்கள் வாக்கிற்கு குடும்ப உறவுகள் மதிப்பு கொடுப்பார்கள். விருந்து உபசாரங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வதன் மூலம் பல மகிழ்ச்சியான அனுபவங்கள், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

    பேச்சில் நிதானம், தைரியம் தெம்பு இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக சிரமம் எடுக்க நேரும் என்றாலும் உங்கள் பேச்சுத் திறமையால் பாதகத்தையும் சாதகமாக மாற்றி விடுவீர்கள் ஒரு சிலருக்கு வலது கண்ணில் சிறு பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய நேரும்.தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்த தடைகள் விலகும். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பலர் புதிதாக சில்லரை வியாபாரம் துவங்குபவர்கள் சில்லரை வியாபாரிகள் பலர் மொத்த விற்பனையில் ஆர்வம் காட்டுவார்கள்.

    சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை

    ராசிக்கு 2,7ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் இரண்டாமிடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் என்பதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சேமிப்பு உயரும். கடன் தொல்லை குறையும். குடும்ப நலனுக்காக முன்னேற்றத்திற்காக, அதிக செலவு செய்யும் நிலை உருவாகும். புத்திர தோஷம் விலகி குழந்தை பேறு கிடைக்கும். ஓயாத உழைப்பால் அசதி மன உளைச்சல் ஏற்படும். வாக்கால் உறவுகளிடம் மன சங்கடம் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் புரிதல் குறையும். கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல நேரும்.

    சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை

    கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை ராசிக்கு 7ம்மிடத்திலும் அதன் பிறகு ராசிக்கு 6ம் மிடத்திலும் சஞ்சரிக்கும் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் புகழ், அந்தஸ்து, ஆளுமை அதிகரிக்கும் நீண்ட கால கனவுகள், திட்டங்கள் நிறைவேறும். உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும். உங்களுக்குள் புதைந்த கிடந்த திறமைகள் வெளிப்படும். 7,6 மிட ராகுவால் வாக்கால், வாக்கு வாதத்தால் குடும்பத்தில் நிம்மதி குறையும். சில தம்பதிகள் மத்தியஸ்தர்களிடம் பேசி பிரிந்து கொள்வார்கள். ஆணவத்தால், அவசரத்தால் எடுக்கும் முடிவுகள் தொல்லை தரும் என்பதால் கவனம் தேவை. உடன் பிறந்தே கொன்ற வியாதிக்கு முற்று புள்ளி வைப்பீர்கள். எளிதான EMI முறையில் கடன் வசதி கிடைக்கும். சிலருக்கு வட்டி இல்லாத கைமாற்றுக் கடனும் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் வைத்தியத்தில் கட்டுப்படும்.

    17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் ஆத்ம ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆலயத் திருபணிகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும் . பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்வர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும். ஒரு சிலருக்கு கவரவப் பதவிகள் தேடி வரும். இது வரை பணம் சம்பாதிக்கும் ஆர்வம் மிகுந்த அரசியல் வாதிகள் கூட தியாக மனப்பான்மை மிகுந்தவராக மாறுவார்கள். வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலர் வாய்ப்பு கிடைத்தாலும் குடும்ப உறவுகளை பிரிய விருப்பமின்றி கிடைத்த வாய்ப்பை தவற விடுவார்கள்.

    பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை

    துலாம் ராசிக்கு 3,6ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அண்டை அயலாருடன் சுமூகமான நிலை நீடிக்கும். சிலருக்கு வேலை மாறும் சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் மிகுதியாக இருக்கும். இடமாற்றம் அல்லது வெளிநாட்டு பயணம் ஏற்படும். கலைத் துறையினர் அதிக நற்பலன் அடைவர். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து, பணம் வரும். தீர்வு காண முடியாமல் இருந்த பல வருட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொருளாதாரா முன்னேற்றம் ஏற்படும்.

    30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் முறையான திட்டமிடல் மன சஞ்சலத்தை குறைக்கும். ஆரோக்கிய குறைபாடு அதிகரிக்கும். அலைச்சலும் மந்த தன்மையும் இருக்கும். லாட்டரி, ரேஸ், பங்குச் சந்தையில் எதிர்பாராத திடீர் மாற்றம் உங்களை நிலை தடுமாற வைக்கும். உற்றார் உறவினரிடம் பகையை வளர்க்க கூடாது. பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். உங்களின் விரோதிகள் உங்களை வம்பில் மாட்ட தயராக இருக்கிறார்கள் என்பதையும் மறக்க கூடாது.

    திருமணம்: சனியின் 3ம் பார்வை 7ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு இருப்பதாலும் ஏழாமிடத்தில் அக்டோபர் 30, 2023 வரை ராகு இருப்பதாலும் ராகு ஏழாமிடத்தை விட்டு நகர்ந்த பிறகு திருமணத் தடை அகலும். திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும்.இது வரை வரன் தேடி அலைந்து அலுத்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.உங்கள் மனம் விரும்பிய வாழ்க்கைத் துணை அமையும்.

    பெண்கள்: பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகமாக நடக்கும். குடும்பத்தில் உங்களின் பேச்சு எடுபடும். கவுரவம் அந்தஸ்து உயரும். உங்களின் கணவர் நீங்கள் மனதில் நினைப்பதையும் நினைக்காததையும் நடத்துவார். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்த படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள். மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும்.

    பரிகாரம்: இந்த சனிப்பெயர்ச்சியில் ராசி, ஏழாமிடத்தை விட்டு கேது, ராகுவும் விலகிய பிறகு பெரும் வாழ்வியல் மாற்றம் நிகழ்வது திண்ணம். குல இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை சிறப்பாக வழிநடத்தும். சனிக்கிழமை ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் காப்பகங்கள் , ஊன முற்றோருக்கு இயன்ற உதவிகளை செய்தால் நன்மைகள் மிகுதியாகும். சனிக் கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    சனிப்பெயர்ச்சி பலன்கள்

    ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை

    நான்காமிடத்தில் சனி, நல்ல விரயங்கள் இனி!

    துலா ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று நான்காமிடத்திற்கு செல்கின்றார். இதை 'அர்த்தாஷ்டமச்சனி' என்று சொல்வது வழக்கம். அஷ்டமத்துச் சனி நடைபெறும் பொழுது, ஏற்படும் கெடுபலன்களில் சரிபாதி அளவு இக்காலத்தில் உருவாகும் என்பர். ஆனால் உங்கள் ராசிக்கான அதிபதி சுக்ரன், சனி பகவானுக்கு நட்பு கிரகமாவார். எனவே பெரிய அளவில் கெடுபலன்களைக் கொடுக்கமாட்டார். மேலும் கும்பம் அவருக்குச் சொந்த வீடு. உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், சுக ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப் போவதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவான் சேர்வதால் 'நீச்ச பங்க ராஜயோகம்' உருவாகின்றது. எனவே குடும்ப முன்னேற்றம் கூடும். சுகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும்.

    தேவைக்கேற்ற பணம் வரும்

    டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப்போகின்றார். இது தாய், சுகம், கல்வி விருத்தி, வீடு, இடம், வாகனம் போன்றவற்றைக் குறிப்பதாகும். அந்த இடத்தில் அடியெடுத்து வைக்கும் சனி பகவான் நல்ல பலன்களை வழங்குவார். மகர ராசி அவருக்கு சொந்த வீடாகும். ஆயுள்காரகன் என்று சனியை வர்ணிப்பதால், உங்களுக்கும், உங்கள் தாய்க்கும், உடன்பிறப்புகளுக்கும், உடன் இருப்பவர்களுக்கும் உடல்நிலையில் சிறுசிறு தொல்லைகள் வந்து விலகும். பொருளாதாரத்தில் தேவைக்கேற்ற பணம் வரும். எதிலும் கூட்டு முயற்சி உகந்தது. கல்வி, கட்டிடப்பணி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடிவரும்.

    சனியின் பார்வை பலன்கள்

    உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், உங்கள் ராசியையும் 6, 10 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். உடல் ஆரோக்கியம், செயல்திறன், கவுரவம், எதிர்ப்பு, வியாதி, கடன் சுமை, மனக்குழப்பம், பங்காளிப் பகை, தைரியம், தொழில், ஜீவனம், அரசுப்பணி, வணிகம், போன்றவற்றை எடுத்துரைக்கும் இடங்களில் எல்லாம் சனியின் பார்வை பதிவதால், அதற்கு ஏற்ப பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். குறிப்பாக உங்கள் ராசியைச் சனி பார்ப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் மிகவும் கவனம் தேவை. அலைச்சலை குறைத்துக்கொள்ளுங்கள்.

    சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால், உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் வாக்குவாதங்கள் வந்து அலைமோதும். இருப்பினும் சனி உங்கள் ராசிநாதனுக்கு நட்பு கிரகம் என்பதால் கடைசியில் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். 'உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று ஒருசிலர், உத்தியோக மாற்றத்திற்கு ஏற்பாடு செய்யலாம். விருப்ப ஓய்வு பெற்று வெளிவந்து கூட்டுமுயற்சியில் சுயதொழில் தொடங்கவும் வாய்ப்புகள் கைகூடி வரும். கூட்டாளிகள் ஜாதகத்தில் சஷ்டாஷ்டம தோஷம் இல்லாமல் இருப்பதை கவனித்துக் கொள்வது நல்லது.

    சனியின் பார்வை பத்தாமிடத்தில் பதிவதால் தொழில் ஸ்தானம் புனிதமடைகின்றது. பழைய தொழிலில் சில மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள்.

    சனியின் பாதசாரப் பலன்கள்

    27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். சூரியன் உங்களுக்கு லாபாதிபதியாகவும் விளங்குவதால் தொழில் சீராகவும், சிறப்பாகவும் நடைபெறும்.

    28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும்.

    27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபகாரியங்கள் மிகவிரைவில் முடியும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி என்பதால், குடும்ப ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். 'வீடு கட்டி வைத்தும் வாடகைக்கு ஆள் வரவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் வரப்போகின்றது. இக்காலத்தில் சனியும் கும்ப ராசிக்கு வருகின்றார். பஞ்சம ஸ்தானம் புனிதமடைவதால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடை பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவி எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

    குருப்பெயர்ச்சிக் காலம்

    கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 5-ம் இடத்திற்கு குரு வருகின்றார். அப்பொழுது குரு உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். எனவே திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 'ஆறில் குரு ஊரில் பகை' என்பதால் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச்சிறந்த பலன்கள் வந்து சேரும். குருவின் நேரடிப்பார்வை பதிவதால் தொட்டது துலங்கும், தொல்லைகள் அகலும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

    ராகு-கேது பெயர்ச்சிக்காலம்

    21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சப்தம ராகுவின் ஆதிக்கத்தால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

    8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். மறைந்த ராகுவால் நிறைந்த பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், சலுகைகளும் கிடைக்கும்.

    வெற்றி பெற வைக்கும் வழிபாடு

    சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்து பூஜை அறையில் பஞ்சமுக அனுமன் படம் வைத்து, அனுமன் கவசம் பாடி வழிபடுவது நல்லது. ராமதூதன் வழிபாடு சேமிப்பை உயர்த்தும்.

    ×