search icon
என் மலர்tooltip icon

    துலாம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    அன்பும் காதல் உணர்வும் மிகுந்த துலா ராசியினரே உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 4, 5ம் இடத்திலும், ராகு பகவான் 7ம் இடத்திலும் கேது பகவான் ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். இதுவரை ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்த குருபகவான் ஆறாமிடமான ருண ரோக, சத்ரு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். துலாம் ராசிக்கு 3, 6ம் அதிபதியான குரு 6ல் ஆட்சி பலம் போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

    எதிரிகள் விலகுவார்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைப்பீர்கள். உற்றார், உறவினர்கள் அல்லது தொழில், உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றும். உடன் பிறந்தவர்களுடன் பாகப் பிரிவினையில் முரண்பாடான கருத்துக்கள் தோன்றும். பத்திரப் பதிவு காலதாமதமாகலாம். இந்த பிரச்சனையில் தாயின் ஆதரவு உடன் பிறந்தவர்களுக்கு இருக்கும், அல்லது விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். சிலர் உடன் பிறந்தவர்களின் கடனுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். முக்கிய தேவைகளுக்கு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெறாமல் அரசுடைமை , அரசு அங்கீகாரம் பெற்ற வங்களில் கடன் பெறுவது சிறப்பு.

    உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை மிகுதியாக இருக்கும். குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும். சக ஊழியர்களுடன் மனக் கசப்பு உருவாகும். சிலருக்கு விருப்பம் இல்லாத ஊருக்கு வேலை மாற்றலாகும். அரசு ஊழியர்கள் இந்த ஓராண்டு காலம்கொடுக்கப்பட்ட வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். முதலாளிகளுக்கு புதிய தொழில் முதலீடுகள் கிடைக்கும். வேலையாட்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையான விசுவாசமான வேலையாட்கள் விலகலாம். 7ல் ராகு இருப்பதால் நல்ல தொழில் திறமையும், அனுபவமும் நிறைந்த நம்பிக்கையான தொழில் கூட்டாளிகள் விலகலாம். வெளிப்பார்வைக்கு அனுபவம்மிகுந்தவர் போலவும் தொழில் தந்திரம் தெரியாத புதிய கூட்டாளியுடன் நட்பு ஏற்படலாம்.

    யாரையும் நம்பி பணம் சம்பந்தபட்ட விஷயங்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. தன விரயம் மிகுதியாக இருக்கும் என்பதால் எந்த விசயத்தையும் அனுபவஸ்தர்களின் ஆலோசனை கேட்டு செய்ய வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். பழக்கமில்லாத அறிமுகமில்லாத நபர்களுக்கு கடன் கொடுப்பதையும், கடன் பெறுவதையும் தவிர்க்க வேண்டும். அலைச்சல் அதிகரிக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் என இடப்பெயர்ச்சி செய்ய நேரும்.அமைதியாக நிதானமாக திட்டமிட்டு செயல்பட்டால் இந்த ஒரு வருட காலத்தை எளிதில் கடக்க முடியும். சிலர் உயில் எழுதலாம் அல்லது எழுதிய உயிலில் திருத்தம் செய்யலாம். 6ல் குரு ஊரில் பகை என்ற பழமொழி இருந்தாலும் குருவின்பார்வையால் தொழில் ஸ்தானம் , விரய ஸ்தானம் . தன ஸ்தானம் பலம் பெறும். அபரிமிதமான சுப பலன்கள் உண்டு.

    குருவின் 5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 10ம்மிடமான கர்ம ஸ்தானத்தில் பதிகிறது. வாரிசு இல்லாதவர்களுக்கு கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். 10ம்மிடம் தொழில் ஸ்தானம் என்பதால் ஏற்கனவே வியாபாரத்தில் உள்ளவர்கள் தொழிலை விரிவு செய்ய புதிய தொழில் கிளைகள் உருவாக்க ஏற்ற காலம். அதற்கு தேவையான நிதி உதவிகள் கிடைக்கும்.பரம்பரை குலத்தொழில் செய்பவர்கள் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். தீட்டிய திட்டம் வெற்றி பெற திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டியாளர்கள் விலகுவார்கள். புதிய பாதை புலப்படும்.

    17.1.2023 வரை ராசி, 6, 10ம் இடத்திற்கு சனிப் பார்வை உள்ளது. ராசியில் கேதுவும் 7ல் ராகுவும் உள்ளார் பல புதிய தொழில் ஆர்வலர்கள் உருவாகுவார்கள். நன்கு பரிட்சயமான தொழிலை மட்டும்செய்யவும். புதியதடாலடியான முடிவுகள் எடுக்க கூடாது. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வேலை இழந்தவர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் சந்தர்ப்பம் உண்டாகும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலர் அதிக சம்பளத்திற்கு புதிய வேலையில் சேரலாம். சிலருக்கு ஓய்வு பெற்ற தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும்.

    குருவின் 7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் பதிவதால் சிலர் வாழ்நாள் முன்னேற்றத்திற்கு தொழில் வளர்ச்சிக்கு வெளிநாட்டிற்கு செல்லலாம். சிலர் ஒர்க் பிரம் ஹோமில் வெளிநாட்டு வேலை செய்யலாம். தம்பதிகள் உத்தியோகத்திற்காக வெவ்வேறு ஊர்களுக்கு செல்லலாம். எதிலும் நிதானத்துடன் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய காலம்.நம்பியவர்களே எதிரியாக, துரோகியாக மாறும் வாய்ப்பு உள்ளதால் அதீத விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முயற்சிகள் கால தாமதமாக பலிதமாகும்.சிலருக்கு வீடு கட்டும் வாய்ப்பு அல்லது வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் பழைய வீட்டை புதிப்பிக்கலாம். சிலருக்கு நின்று போன வீடு கட்டும் பணி தொடரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம். சிலர் கண் அல்லது மூட்டு அறுவை சிகிச்சை செய்யலாம்.

    சிலர் மன நிம்மதிக்காக வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் வீட்டிற்கு சென்று வரலாம். சிலர் பக்தி முத்தி ஆன்மீக தொண்டு, சேவை செய்யலாம். சிலர்கேதார்நாத், பத்ரிநாத் என ஆன்மீகச் சுற்றுலா சென்று வரலாம். சிலர் துக்கம் தாளாமல் சந்நியாசியாகலாம். சிலர் கடனுக்காக தலை மறைவாகலாம். எது எப்படி இருந்தாலும் நிம்மதியான தூக்கம் வரும்.

    குருவின் 9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் எவ்வளவு இழுபறியான நிலை இருந்தால் கூட குடும்ப உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். இதுவரை எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தவர்கள் கூட வேலைக்கு செல்லும் முயற்சியில் ஈடுபடலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும். தந்தை, தாயின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தாய், தந்தையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உற்றார், உறவுகள் சுப விசேஷங்கள் என குதூகலம் நிரம்பி இருக்கும். மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்கள் பகை மறப்பார்கள். கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். ஒருவர் சம்பாத்தியத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகள் சம்பாத்தியத்தால் தலை நிமிரும்.சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டு ஆன்லைனில் இன்னொரு வருமானம் ஈட்டலாம்.இல்லை என்ற நிலை இருக்காது.புதிய உறவுகளான மருமகள், மருமகன் கிடைக்கப் பெறுவீர்கள்.

    குருவின் வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை

    குரு பகவான் சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் நிறைந்த தன லாபம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். சிலருக்கு விரும்பிய ஊருக்கு பணி மாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். எப்பொழுதோ வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும். இட விற்பனையில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். விற்க முடியாத சொத்துக்கள் விற்கும். கடன் தொல்லையிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். அரை குறையாக நின்ற பணிகள் துரிதமாகும். எதிர் காலம் பற்றிய கவலைகள் அகலும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட எல்லைத் தகராறு சுமுகமாகும்.

    பெண்கள்:6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி பலம் பெறுவதால் எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், தெம்பும் அதிகரிக்கும். பற்றாக்குறை பட்ஜெட்டை உபரி பட்ஜெட்டாக மாறும்படி குடும்பத்தை நிர்வகிப்பீர்கள்.பணிபுரியும் இடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.

    பரிகாரம்: தினமும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சக்ரத் தாழ்வாரை வழிபட கடன், எதிரி தொல்லை குறையும். நோய்கள் அண் டாது.வெள்ளிக்கிழமை குத்து விளக்கு ஏற்றி லலிதா சகஸ்ஹர நாமம் படிக்க பொருள் வரவு அதிகமாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×