search icon
என் மலர்tooltip icon

    சிம்மம் - ஆண்டு பலன் - 2024

    சிம்மம்

    புத்தாண்டு ராசிபலன்கள்-2024

    ஆளுமைத் திறன் நிறைந்த சிம்ம ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இந்தப் புத்தாண்டு துவக்கத்தில் குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் நின்று ராசியைப் பார்க்கிறார். ஏப்ரல் 21 முதல் தொழில் ஸ்தானம் செல்கிறார். ராகு பகவான் அஷ்ட ஸ்தானத்திலும் கேது பகவான் தன ஸ்தானத்திலும் நிற்கிறார்கள். சனி பகவான் ராசிக்கு ஏழில் சப்தம ஸ்தானத்தில் நின்று கண்டகச் சனியாக செயல்படுகிறார். சனி ராகு, கேதுக்களின் சஞ்சாரம் சற்று சுமாராக இருந்தாலும் குரு பார்வை படும் இடங்களால் எத்தனை இடர் வந்தாலும் சமாளிக்க முடியும். தொட்டது துலங்கும். பட்டது பூக்கும்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    ஏப்ரல் 21, 2024 வரை பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் குருபகவான் புத்திர பிராப்தம் குல விருத்தி, உயர் கல்வி யோகம், வெளிநாட்டு உத்தியோகம், அரசு உத்தியோகம், புண்ணிய காரியம் செய்யும் வாய்ப்பு என சுப பலன்களை வாரி வழங்குவார். ஏப்ரல் 21-க்குப் பிறகு தொழில் ஸ்தானத்திற்குச் செல்கிறார். குருவின் 5-ம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திலும், 7-ம் பார்வை சுக ஸ்தானத்திலும் 9-ம் பார்வை ருண, ரோக ஸ்தானத்திலும் பதிகிறது. பேச்சுத் திறமை கூடும். அரிவாற்றலால் சாதுர்யமாக செயல்படுவீர்கள். இதனால் குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து கலகலப்பு மிகுதியாகும்.

    குடும்பத்தில் விருந்துகள், விழாக்கள், விசேஷங்கள் என மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். பொருளாதாரத்தில் நிலவிய மந்த நிலை மாறும். வீடு, வாகன யோகம் உண்டாகும். வாடகை வீட்டில் வசதித்தவர்கள் புதிய வீடு வாங்குதல், கட்டுதல், பராமரித்தல் என சுப பலன்கள் கூடும். தேக சுகம் கூடும். பழைய கடன்களை அடைக்கலாம். புதிய கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்தலாம். விவசாயிகள் வாழ்வில் திருப்புமுனையான சம்பவங்கள் நடைபெறும்.குருவின் அருளால் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவீர்கள். அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    இந்த ஆங்கிலப் புத்தாண்டு முழுவதும் ராசிக்கு 7-ல் நின்று கண்டகச் சனியாக செயலாற்றுகிறார். தனது 3-ம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் ராசியையும் 10-ம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். சனி பகவான் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால் செல்வாக்கு அந்தஸ்து யாவும் உயரும். நினைத்ததை அடைய முடியும். உங்களுக்குள் வேகமும் தைரியமும் கூடும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

    இந்த புத்தாண்டில் எதிர்பார்த்த பதவியை அடைய முடியும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். பூர்வீகச் சொத்தில் நிலவிய இழுபறி நிலை மாறும். பெற்றோர்களின் ஆதரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை பராமரிப்புச் செலவு அதிகமாகும். வீடு, இடம், வாகனம் வாங்குவீர்கள். நோய்கள், கடன்கள் தீரும் காலமாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். எண்ணங்கள் நிறைவேறும் காலம்.ராசியை சனி பகவான் பார்ப்பதால் கண்டகச் சனியின் பாதிப்பால் சிறு சோர்வு, அசதி அலுப்பு அவ்வப்போது தோன்றி மறையும்.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

    2024 புத்தாண்டு முழுவதும் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் நிற்கிறார்கள். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.குடும்பம் குதூகலமாக இருக்கும். உற்சாகமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். தொழில் சீரான சிறப்பான முன்னேற்றம் உண்டு.பேச்சை மூலதனமாக கொண்ட தொழில், கமிஷன் அடிப்படையான தொழில் புரிபவர்களுக்கும் மிக மிக சாதகமான காலம். சிலருக்கு விபரீத அதிர்ஷ்ட யோகமான உயில் சொத்து அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.

    வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.எதிரிகளிடம் இருந்து வந்த போட்டி பொறாமைகள் மறையும். பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும்.சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழலாம். தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்.கெட்டவன் ராகு மறைவு ஸ்தானத்தில் நிற்பதால் சிலருக்கு விபரீத ராஜ யோகம் உண்டாகும். எனினும் முக்கியமான பணிகளை பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க கூடாது.

    மகம்

    புத்திக் கூர்மையுடன் புதிய திட்டம் தீட்டி வெற்றி பெறுவீர்கள். மகிழ்ச்சியும், சந்தோஷமும் தொடரும். அனுபவப் பூர்வமாக பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு கரு உருவாகும்.பிள்ளைகளால் பெருமையும் நன்மையும் உண்டாகும்.எதிர்காலம் பற்றிய பயம் விலகும்.பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

    அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.வீடு வாகன செலவுகள் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும்.திருமணம் கூடி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.பூர்வீகச் சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள். நோய் நொடி சீராகும். சங்கடஹர சதுர்த்தியன்று அருகம்புல் சாற்றி விநாயகரை வழிபடவும்.

    பூரம்

    புதிய அனுபவம் உண்டாகும். உங்களை தவறாகப் புரிந்து கொண்ட உறவினர்கள், தவறை உணர்ந்து உறவு பாராட்டுவார்கள். தம்பதிகளிடம் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக் கூடும்.வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.சகோதரர்களால் பயனடைவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்பனை செய்து, புதிய வீடு, மனை வாங்குவீர்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

    சக வியாபாரிகளின் ஒத்துழைப்பு ஆறுதலாக இருக்கும்.பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள்.ஜாமீன் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற அலைச்சல் மிகுந்த பிரயாணத்தால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு ஏமாறாதீர்கள். சங்கடஹர சதுர்த்தியன்று தேன் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.

    உத்தரம் 1

    புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள்.உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த பணிகள் முடியும்.கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும்.

    திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், தொழில் முன்னேற்றம் போன்ற எல்லாவிதமான நன்மைகளையும் இக்காலத்தில் அடைய முடியும்.சுப நிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். மருத்துவ உதவியால் உடல் நிலை தேறும். பிரதோஷ காலங்களில் நந்தியம் பெருமானை வழிபடவும்.

    திருமணம்

    திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். கண்டகச் சனிக்கும் திருமணத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் கேதுவும் அவமானம், வம்பு, வழக்கு, விபத்து, கண்டம், சர்ஜரி பற்றிக் கூறும் எட்டாமிடத்தில் ராகுவும் நிற்பதால் சுய ஜாதகத்தில் ராகு புத்தி, கேது புத்தி சனி புத்தி நடப்பவர்கள் அவசியம் சுய ஜாதகத்தை சரிபார்த்து திருமணம் நடத்த வேண்டும்.

    பெண்கள்

    பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலைப்பளு பொறுப்புகள் அதிகரிக்கும். எட்டாமிடம் என்பது பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால் சிம்ம ராசிப் பெண்கள் எட்டாமிடத்தை ராகு கடக்கும் வரை செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை மற்றும் காளியை வழிபட வேண்டும்.தாய்வழி வழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நீடிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரிகள் ராகு கத்தரி, கேது ஊசி.

    ராகு கேதுவின் வெட்டுதல், தைத்தல் தொழிலை செய்பவர்களுக்கு தொழில் கொடி கட்டி பறக்கும். தறி ஓட்டுபவர்கள், கயிறு திரிப்பவர், டெக்ஸ்டைல் தொழில், மருத்துவர்கள் போன்றவர்களுக்கு பொன்னான நேரம். பூமி தொடர்பான ரியல் எஸ்டேட் கட்டுமானப் பணி, சுரங்கத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இவர்களுக்கு அரசின் சலுகைகள், மானியங்கள் எளிதில் கிடைக்கும். கண்டகச் சனியின் காலம் என்பதால் கூட்டுத் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    உத்தியோகஸ்தர்கள்

    ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனை முடிவுக்கு வரும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு , ஊதிய உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம் போன்ற இடப்பெயர்ச்சிகள் நடைபெறும்.

    அரசியல்வாதிகள்

    எட்டாமிடம் என்பது அதிர்ஷ்டம் பற்றிக் கூறுமிடம் என்பதால் அரசியல் பிரமுகர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. அதே நேரத்தில் 2-ல் கேது இருப்ப தால் இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும். நிறைவேற்ற முடியாத வாக்குறுதி கொடுத்தால் பின்நாட்களில் அவஸ்தையை சந்திக்க நேரும்.

    பரிகாரம்

    வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் கோதுமை அல்வா வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட குலதெய்வம், சிவனை வழிப்பட்டால் கஷ்டம் விலகும்.

    சிம்மம்

    ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

    ஆன்மபலம் நிறைந்த சிம்ம ராசியினருக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு சகல ஐஸ்வர்யங்களும் பெற்றுத் தரும் ஆண்டாக அமைய நல் வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடிய வில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். குருவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக இருப்பதால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். சனி பகவான் கண்டகச் சனியாக அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் சிறு மன சஞ்சலம் இருக்கும். ராகு/கேதுக்களின் சஞ்சாரத்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது. இனி விரிவான பலன்களைப் பார்க்கலாம்.

    குருவின் சஞ்சார பலன்கள்:

    சிம்ம ராசிக்கு 5,8-ம் அதிபதியான குருபகவான் ஏப்ரல் 22, 2023 வரை ராசிக்கு 8-ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். அதன் பிறகு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானம் சென்று ராகுவுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார்.இதுவரை தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் சித்திக்கும்.

    குடும்பத்தில் சுப காரியங்கள் துரிதமாகும்.திருமணத்தடை அகலும். முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அருளும் உண்டாகும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திர பிராப்தமும் கிடைக்கும்.பல வருடங்களாக புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும்.

    தொழில் நிறுவனத்திற்கு நம்பிக்கையும், நன்றியும் உள்ள புதிய வேலையாட்கள் அமைவார்கள். சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும். அரசு உத்தியோகத்திற்கு முயற்சித்தவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். இது வரை நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.சிலர் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். சிலர் பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவில் சென்று குடியேறுவார்கள். சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், போன்ற பாலிசி எடுப்பார்கள்.

    சனியின் சஞ்சார பலன்கள்:

    சிம்ம ராசிக்கு சனி பகவான் 6,7ம் அதிபதி. இதுவரை ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரித்த சனி பகவான் ஜனவரி 17, 2023 முதல் 7ம் இடத்தில் கண்டகச் சனியாக அமர்வதால் கணவன், மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடு வந்து மறையும். பல நேரங்களில் சம்பந்திகள் சண்டையாகவும் மாற வாய்ப்பு உள்ளது. சிலருக்கு விவாகரத்து வரை செல்லும். சிலருக்கு கூட்டுத் தொழில் அல்லது கூட்டுக் குடும்பம் பிரியும். சில பிள்ளைகள் தவறான திருமணத்தால் குடும்பத்தை விட்டு பிரிவார்கள் . உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறுபாடுக்கு காரணமாக அமையும். தொழில் கூட்டாளிகள் இடையே முறையான ஒப்பந்தம் போட்டு தொழில் நடத்த வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும்.

    பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். புதிய கடன் பெற்று பழைய கடனை அடைப்பீர்கள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்பவர்களுக்கு கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும்.

    ராசியை சனி பகவான் பார்ப்பதால் சிறு சோர்வு, சதி அலுப்பு அவ்வப்போது தோன்றி மறையும். அடிக்கடி கை கால்களில் உடம்புகளில் வலி இருந்து கொண்டே இருக்கும். நேரத்திற்கு உண்ண,உறங்க முடியாமல் வெறுமை உணர்வு இருக்கும்.மன நிறைவு இருக்காது. தனியாக அமைதியாக இருப்பதை மனம் விரும்பும்.

    ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

    அக்டோபர் 30, 2023 வரை ராகு பகவான் 9ம் இடத்திலும் கேது பகவான் 3ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். அதன் பிறகு ராகு பகவான் எட்டாம் இடத்திற்கும், கேது பகவான் 2ம் இடத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.நேர்வழி, குறுக்குவழி என பணம் பல வழிகளில் பணம் பையை நிரப்பும். சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. வீடு , வேலை, தொழில் மாற்றம் செய்ய நேரும் .நீண்டகாலமாக தொல்லை கொடுத்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும். நண்பர்களால் சில அசவுகரியங்கள் ஏற்பட்டாலும் ஆதாயமும் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள்.

    திருமணம்: ராசிக்கு ஏப்ரலில் குருப் பார்வை கிடைக்கும். ராசிக்கு 7ம் இடத்தில் சனி பகவான் கண்டகச் சனியாக அமர்வதால் இழுபறிக்குப் பிறகு திருமண வாய்ப்பு கூடி வரும். தசா புத்தி சாதகமற்றவர்களுக்கு திருமண வாய்ப்புகள் தள்ளிப்போகும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது.சிலருக்கு மறு விவாகம் ஏற்படும்.

    பெண்கள்: பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். அதற்குக் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலைப்பளுவும் கூடும். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். தேவையற்ற எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம். தொழில் உத்தியோகத்தில் நிதானம் தேவை உடல் ஆரோக்கியத்தில், உணவு விசயத்தில் அக்கறையும் கவனமும் தேவை.

    மாணவர்கள்: பிள்ளைகள் கல்வியில் நல்ல நாட்டமும், ஆர்வமும் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண் பெறுவார்கள். சிலருக்கு உயர் ஆராய்ச்சி கல்வி படிக்க வாய்ப்பு உள்ளது.விரும்பிய கல்வியை கற்க வெளியூர், வெளிநாடுகளில் உள்ள விரும்பிய கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும்.

    மகம்: வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும் . தன வரவு சிறக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.குடும்பம் மகிழ்சியாக இருக்கும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும்.வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். போட்டி பொறாமைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி போடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

    பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் ப்ரத்யங்ஹரா தேவிக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபட அவமானம், தீராத நோய், கடன், வம்பு வழக்ககுகள் அண்டாது.

    பூரம்: திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குறைந்த விலைக்கு பொருள் வாங்கி அதிக விலைக்கு விற்பதில் கைதேர்ந்தவர்களாகி விடுவீர்கள்.பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள்.விவசாயிகளுக்கும், கால்நடை வளர்பவர்களுக்கு ஏற்ற காலம்.

    தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம். திறமைக்கும், தகுதிக்கு ஏற்ப வேலையில் முன்னேற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலதிகாரிகளின் தொல்லைகள், பிரச்சினைகள் நீங்கும். பணிச் சுமை அதிகமாக இருப்பதால் ஒய்வு நேரம் குறையும்.

    பரிகாரம்: வயதான சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம் தந்து ஆசி பெறவும்.

    உத்திரம் 1: உங்களின் எண்ணங்கள் , திட்டங்கள் நிறைவேறும்.பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். துணிச்சல் அதிகரிக்கும். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடை போடுவீர்கள்.பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம்.

    கணவன் மனைவி இடையை சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. காதலர்கள் விட்டுக்கொடுத்து செல்லவும். வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம்.

    பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வர சிறப்பான யோகங்கள் அதிகரிக்கும்.

    சிம்ம ராசியினர் புத்தாண்டில் சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் அருள்மிகு சனீஸ்வரர் கோவில். கண்டக சனியின் ஆதிக்கம் இருப்பதால் சிம்ம ராசியினர் இங்கு சென்று வழிபட ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும்.

    கடகம்

    ஆங்கில ஆண்டு பலன் - 2022

    சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசி வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் உங்களுக்கு ராஜயோக வாழ்க்கையைத் தர உள்ளது. வருட கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இது வரை பொது நலமுடன் ஊருக்காக உழைத்த உங்களுக்கு மனைவி, மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதற்கான வாய்ப்பும், திட்டங்களும், சந்தர்பங்களும் தானே அமையும். வருங்காலம் பற்றிய நம்பிக்கையும் தைரியமும் பெருகும். செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும். ஓடி ஓளிந்த நிலையில் இருந்து மாறி பூர்வ புண்ணிய பலத்தால் நிச்சயமாக அனைத்து விதமான நற்பலன்களும் இந்த புத்தாண்டில் காண முடியும். இனி புத்தாண்டிற்கான விரிவான பலன்களை காணலாம்.

    குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் 13, ஏப்ரல் 2022 வரை குருபகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த காலத்தில் உங்களை பணவசதியின்மையால் ஏளனப்படுத்தியவர்கள், தேவைக்கு பயன்படுத்தியவர்கள் உங்களின் அருமை பெருமையை உணர்வார்கள். 7ல் உள்ள குருவால் திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். சிலருக்கு காதல் மலரும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்.

    தம்பதியினர் தொழில் நிமித்தமாகவோ வேறு ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்துவார்கள். மனக்கசப்பு மாறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைக்கலாம். பழைய கூட்டாளிகள் விலகலாம். நண்பர்களுடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள் ளும் வாய்ப்பு ஏற்படும். இன்பச் சுற்றுலா சென்று வர வாய்ப்பு ஏற்படும்.

    ஏப்ரல் 13, 2022ல் குரு பெயர்ச்சியாகி அஷ்டம் ஸ்தானமாகிய மீனத்திற்கு செல்லும் போது சில பழைய பிரச்சனைகள் தலை தூக்கும். சிலருக்கு தொழில் விருத்தியால் அளவிற்கு அதிகமான கடன் உருவாகலாம். வெகு சிலர் கடனுக்காக வம்பு வழக்கை சந்திக்க நேரும். சிலரின் குழந்தை களுக்கு ஆரோக்கிய குறைபாடு உண்டாகும். சிலருக்கு குழந்தைகளால் மன வேதனை உண்டாகும். சிலர் தொழில் உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்லலாம். சிலருக்கு பங்காளிகளால் பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கு உருவாகலாம்.

    அனைத்து செயல்களும் இழுபறியாக இருக்கும். ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைப்பீர்கள். சிம்ம ராசியினர் நம்பிக்கை தளராமல் தேவையற்ற பேச்சை தவிர்த்தால் இந்த குருப்பெயர்ச்சியை எளிதாக கடக்க முடியும். இந்த காலகட்டத்தில் ஆறுதலான விசயம் என்னவென்றால் உறவுகளின் ஆதரவு குறைந்தாலும் அறியாத அந்நிய புதிய உறவுகளால், புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

    சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் 6ம் அதிபதி சனி 6ல் ஆட்சி பலம் பெறுகிறார். மறைவு ஸ்தான அதிபதிகள் வலுப்பெறக்கூடாது. கெட்டவன் கெட்டால் தான் ராஜ யோகம். ருண, ரோக, சத்ரு ஸ்தானதிபதி சனி வலுப்பெறுவதால் ருணம், ரோகம், சத்ரு இந்த மூன்றும் உங்களை ஆட்சி செய்யப் போகிறது.

    அதனால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கேட்ட இடத்திலும் கேட்காத இடத்திலும் கூட கடன் கிடைக்கும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க உங்கள் வீட்டு வாசலில் காத்து இருப்பார்கள். இயன்றவரை கடன் வாங்காமல் இருந்தால் அடுத்த சனிப்பெயர்ச்சிக்கு முன் கடன் இல்லாத வாழ்வு உறுதி. அதே நேரத்தில் நோய் தாக்கமும் மிகுதியாக இருக்கும். பரம்பரை வியாதிகள் உங்களை ஆட்சி செய்ய ஆரம்பமாகும். வாயுத் தொல்லை, வாதம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய், இருதயம், வயிறு தொடர்பான நோய்கள் மிகும். சிலருக்கு நோயின் தன்மை புரியாது. பலருக்கு நோய் முற்றிய பிறகு நோயின் தன்மை புரியும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.

    26. 2. 2022 முதல் 6. 4. 2022 வரை சனி பகவானுடன் 4,9ம் அதிபதியான செவ்வாய் 6ம் அதிபதி சனியுடன் 6ம் இடத்தில் இணைகிறார்கள்.அதீத கடனும் மிகைப்படுத்தலான விரையமும் உண்டாகும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் பட்டு சொந்த வீடு, வாகன கனவை நிறைவேற்றுவீர்கள். வீடு கட்டும் பணியில் பட்ஜெட் எகிறும். சிலருக்கு வீடு, வாகனம் பழுதாகி அதிக செலவு வைக்கும் அல்லது மின்சார உபகரணங்களான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி புதியதாக வாங்க நேரும்.

    அசையாச் சொத்தில் உள்ள குடியிருப்பு தாரர்களால் தொந்தரவு வரும் அல்லது குடியிருப்புதாரர்கள் மாறலாம். பூர்வீகச் சொத்தால் உடன் பிறந்தவர்களுடன் வம்பு, வழக்கு, பகை உருவாகும். சிலருக்கு பூர்வகச் சொத்து கை விட்டுப் போகும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு வாடிக்கையாளர்களால் வம்பு, வழக்கு உருவாகும். தாய், தந்தையின் ஆரோக்யம் சீராகும். கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல நேரும். சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்புக்காக வெளியூர் செல்லநேரும்.

    ராகு/கேது சஞ்சார பலன்: பத்தில் ராகு நான்கில் கேது இருப்பதால் தாய்க்கு ஆரோக்கிய குறைபாடு நீங்கும். தாய், தந்தை கருத்து வேறுபாடு அகலும்.ராசி அதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் ராசிக்கு10ல் கோட்சார ராகு சஞ்சாரம் செய்கிறார். தொழில் தொடர்பான மன உளைச்சல் நீங்கும். தொழிலில் வளர்ச்சியும் பெரும் ஏற்றத்தையும் லாபத்தை கொடுத்து திணறச் செய்வார். சூரியனும் ராகுவும் கடும் பகை கிரகம் என்பதால் இதுவரை நியாயம் தர்மத்திற்கு கட்டுப்பட்டு தொழில் நடத்தியவர்களை கூட தொழில் தர்மத்தை கடைபிடிக்க விடமாட்டார். பண வாசனையின் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுதியாகும். தனவரவு மன மகிழ்வை தரும். பல்வேறு தொழில் தந்திரங்களை கற்பீர்கள்.

    ஆயுள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உடல் உபாதைகள் கட்டுப்படும். தனிமையில் காலம் தள்ளியவர்களுக்கு பொழுதை கழிக்க நல்ல நட்பு கிடைக்கும். பய உணர்வு நீங்கும். தைரியம், தெம்பு ஏற்படும். தன்னை அழகு படுத்துவதில் ஆர்வம் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் தாமாகவே நடக்கும். உங்களை ஏளனம் செய்தவர்கள் மதிப்பு மரியாதை தருவார்கள். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம், அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும்.மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.

    குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கமான சூழ்நிலை நிலவும் ஏப்ரல் 12, 2022ல் ராகு/கேது பெயர்ச்சிக்குப் பிறகு 3ல் கேதுவும் 9ல் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ஆன்ம பலம் பெருகும். சூரியனே ஆத்மகாரகன். தந்தைக்கும் காரகனாவார். எண்ணங்கள் மற்றும் முன்ஜென்ம பூர்வ புண்ணியத்துக்கு காரகன் சூரியனே என்பதால் முன்னோர்களில் நல் ஆசிகள் உங்களை சிறப்பாக வழி நடத்தும். விபரீத ராஜ யோகம் உண்டாகும்.

    சில குழந்தைகள் தந்தையை பிரிந்து தாத்தா வீட்டிற்கு செல்ல நேரும் அல்லது தந்தை குறுகிய காலத்திற்கு தொழில் நிமித்தம் அல்லது ஏதேனும் காரணத்திற்காக தந்தை குழந்தையை பிரிந்து வாழ நேரும். கற்பனையில், கனவில் வாழும் நிலை ஏற்படும். உடன் பிறந்தவர்களின் மனஸ்தாபம் நீதி மன்றம் வரைச்செல்லும். உறவுகளுக்காகசூழ்நிலைக் கைதியாக வாழும் நிலை இருக்கும். இன்னல்களை தவிர்க்க முன்னோர்களின் முறையான வழிபாடு அவசியம்.

    திருமணம்: ஏழாம் அதிபதி சனி கோட்சாரத்தில் 6ல் ஆட்சி பெற்று இருப்பதால் வெகு சிலருக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தடை இருக்கலாம். தற்போதைய கோட்சார குரு கும்பத்தில் இருப்பதால் ஏப்ரல் 2022க்குள் திருமணம் நிச்சயமாகிவிடும். பலருக்கு விருப்ப விவகாகமாகவோ, நெருங்கிய உறவுகளிலோ திருமணம் நடக்கும்.

    பெண்கள்: பெண்களுக்கு சுமாரான நேரம். பெண்களுக்கு மாமனார், மாமியார் நாத்தனார் வகையில் அதிக தொந்தரவு உண்டாகும். வயது முதிர்ந்த பெண்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும்.முக்கிய ஆவணங்கள், நகைகள் கை மறதியாகவைத்துவிடுவீர்கள்.காது கேளாமை அல்லது ஞாபக சக்தி குறைவு உண்டாகும்.தந்தையின் ஆரோக்கிய பாதிப்பு மன வருத்தத்தை தரும்.

    விவசாயிகள்: வட்டிக்கு வட்டி கட்டி சமாளிக்க முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். சிறிய விளை நிலத்தையும் அடமானம் வைத்து விட்டு வாழ வழி தெரியாமல் தடுமாறிய விவசாயிகள் கடன் பிரச்சனையிலிருந்தும் மீண்டு வருவீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள்:தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தர பணி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிட்டும். அரசுப் பணிக்கு தேர்வு எழுதும் சிம்ம ராசியினருக்கு பெற்றி கிடைக்கும். அலுவலகமே வியக்கும் வகையில் உங்கள் திறமைகள் வெளிப்படும்.

    முதலீட்டாளர்கள் / வியாபாரிகள்: சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும் வழி புலப்படும்.

    அரசியல்வாதிகள்: அரசியல் பிரமுகர்கள் பதவியை தக்க வைப்பதில் சிரமம் இருக்கும். சிலர் அரசியலில் கட்சிவிட்டு கட்சி மாறி தன் எதிர்காலத்தை அதிர்ஷ்டமாக்கி தக்க வைத்துக் கொள்ளலாம். கௌரவம், அந்தஸ்தை நிலை நிறுத்த போரட நேரும். எந்தப் பிரச்சனையையும் நேருக்கு நேர் நின்று போரிட்டு சமாளிப்பீர்கள். தன்னை நம்பி வருபவர்களுக்கு யாரும் சொல்ல முடியாதபடி நியாய தீர்ப்பு கிடைக்க பாடுபடுவீர்கள்.

    மாணவர்கள்: உயர் கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பைத் தொடரும் வாய்ப்பு உண்டாகும். தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகள் அதிகம் சிரமம் எடுக்க வேண்டும்.

    மகம்: சுறுசுறுப்போடு செயல்பட்டு பெயர், புகழ், பெருமை அடைய முடியும். பெயர் புகழ் உண்டாகும். கோவில் பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள். சிலர் வீடு மாற்றம் செய்ய நேரும். நிம்மதியை அதி தரிக்க கால பைரவரை வணங்குவது சிறப்பு.

    பூரம்: திட்டமிட்ட காரியம் கைகூடும். பிரிந்த உறவுகள் இணைவார்கள் விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன் செய்வார்கள். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து தங்கு தடையில்லாத காரிய அனுகூலம் உண்டாகும். ஆண்டாள் வழிபாடு செய்வதால் சுப பலன்கள் மிகுதியாகும்.

    உத்திரம் 1ம் பாதம்: அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகி கடன் குறையும். ஞாயிற்று கிழமை ஜேஷ்டா தேவியை வழிபட இன்னல்கள் நீங்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×