என் மலர்
சிம்மம்
வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை
20.4.2025 முதல் 26.4.2025 வரை
காரியத்தடை அகலும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் ராசி அதிபதி சூரியன் உச்சம் பெறுவதால் பிறர் எளிதில் செய்யத் தயங்கும் காரியத்தையும் நீங்கள் வெற்றிகரமாக செய்வீர்கள். அஷ்டமச் சனி முடியும் வரை திருமண முயற்சியை தவிர்க்கவும். வெளி நாட்டு குடியுரிமை முயற்சியில் வெற்றி உண்டாகும். புகழ் அந்தஸ்து உயரும். தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி முயற்சி கூடும்.
திற மைக்கும், தகுதிக்கும். தகுந்த உத்தியோகம் கிடைக்கும். சிலர் வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். சிலர் தொழில் மற்றும் உத்தியோகத்திற்காக அடிக்கடி அலைச்சல் மிதந்த பயணம் செய்ய நேரும். பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். பூர்வீக சொத்து சம்மந்தப்பட்ட முயற்சிகள் இழுபறியாகும்.
செயற்கை முறை கருத்தரிப்பு பலன் தரும். முதியவர்களுக்கு, அரசின் உதவித் தொகை, பென்சன் கிடைக்கும். 25.4.2025 அன்று காலை 3.25 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வேண்டாத வேலையை அடுத்தவர் பிரச்சனையை இழுத்துப் போட்டு வீண் அவமானம், பிரச்சனையை சந்திப்பீர்கள். மேலும் சுப பலன் கிடைக்க மகிஷாசுரமர்த்தினியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






