என் மலர்tooltip icon

    சிம்மம் - வார பலன்கள்

    சிம்மம்

    வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை

    06.4.2025 முதல் 12.4.2025 வரை

    சிக்கனத்தை கடை பிடிக்க வேண்டிய வாரம்.தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு விரும்பிய வேலை கிடைக்கும். இந்த வாரம் வீடு, வாகன யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சையில் மூத்த சகோதர, சகோதரியின் ஆதரவு மகிழ்சியைத் தரும். சிலர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் லாபகரமாக இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச் சுமை கூடும்.

    வரவை விட செலவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து விடுபடலாம். சிலர் ஆரோக்கியத்தை சீராக்க மாற்று மருத்துவ முறையை நாடலாம். தேவையற்ற வாக்குவாதத்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழலாம். எனவே, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிவ வழிபாட்டால் சுப பலன்கள் உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை

    30.3.2025 முதல் 5.4.2025 வரை

    அஷ்டமச் சனி துவங்கி விட்டது. பயம் தான் ஒரு மனிதனுக்கு எதிரி. மனிதனைக் கொல்வது நோயா பயமா என்று ஆய்வு செய்தால் பய உணர்வு தான் முன்னே நிற்கும். வாழ்க்கையை பாதிக்கும் எந்த புதிய முடிவும் எடுக்காமல் இயல்பான வழக்கமான பணியில் ஈடுபட்டால் எந்த பாதகமும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். அதே போல் குறி கேட்பது, வாக்கு சொல்பவரை நாடுவது பத்து ஜோதிடரிடம் அஷ்டமச் சனிக்கு பலன் கேட்பது ஆகியவற்றைத் தவிர்த்தால் நிம்மதியாக இருக்க முடியும்.

    என் அனுபவத்தில் இதுவரை ஜாதகம் பார்க்க வருபவர்களுக்கு அஷ்டமச் சனி, ஏழரைச் சனி என்று பலன் சொன்னதாக எனக்கு நினைவு இல்லை. இந்த காலகட்டத்தில் பிரபஞ்ச சக்தியை ஆத்மார்த்தமாக சரணாகதி அடையுங்கள். உங்களின் சந்தோஷத்தையும், துக்கத்தையும் உறவினர்களிடம் கொட்டித் தீர்க்காதீர்கள். நடந்த கெட்ட விஷயத்தை உடனே மறந்து விடுங்கள். சந்தோஷமான நிகழ்விற்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். 30.3.2025 அன்று மாலை 4.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பேச்சை குறைக்கவும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    30.3.2025 முதல் 05.4.2025 வரை

    அஷ்டமச் சனி துவங்கி விட்டது. பயம் தான் ஒரு மனிதனுக்கு எதிரி. மனிதனைக் கொல்வது நோயா பயமா என்று ஆய்வு செய்தால் பய உணர்வு தான் முன்னே நிற்கும். வாழ்க்கையை பாதிக்கும் எந்த புதிய முடிவும் எடுக்காமல் இயல்பான வழக்கமான பணியில் ஈடுபட்டால் எந்த பாதகமும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். அதே போல் குறி கேட்பது, வாக்கு சொல்பவரை நாடுவது பத்து ஜோதிடரிடம் அஷ்டமச் சனிக்கு பலன் கேட்பது ஆகியவற்றைத் தவிர்த்தால் நிம்மதியாக இருக்க முடியும்.

    என் அனுபவத்தில் இதுவரை ஜாதகம் பார்க்க வருபவர்களுக்கு அஷ்டமச் சனி, ஏழரைச் சனி என்று பலன் சொன்னதாக எனக்கு நினைவு இல்லை. இந்த காலகட்டத்தில் பிரபஞ்ச சக்தியை ஆத்மார்த்தமாக சரணாகதி அடையுங்கள். உங்களின் சந்தோஷத்தையும், துக்கத்தையும் உறவினர்களிடம் கொட்டித் தீர்க்காதீர்கள். நடந்த கெட்ட விஷயத்தை உடனே மறந்து விடுங்கள். சந்தோஷமான நிகழ்விற்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். 30.3.2025 அன்று மாலை 4.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பேச்சை குறைக்கவும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை

    23.3.2025 முதல் 29.3.2025 வரை

    அமைதி காக்க வேண்டிய நேரம். இந்த வாரத்தில் கண்டகச் சனி முடிந்து அஷ்டமச் சனி துவங்கப் போகிறது. பணம் குறைவாக கிடைத்தாலும் மனதிற்கு பிடித்த வேலையை மட்டுமே செய்ய விரும்புவீர்கள்.தொழில் கூட்டாளி அல்லது நண்பர்கள் நடவடிக்கையால் மன அழுத்தம் உருவாகும். போட்டி, பொறாமையை சமாளிக்க திணறுவீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். சிலர் புதிய சொத்துக்களில் முதலீடு செய்யலாம். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும்.சிலர் உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும்.

    சில வாரங்களில் பெற்றோர் வழிச் சொத்துகளை பிரிப்பதில் நிலவிய குழப்பங்கள் அகலும்.இதில் பெற்றோர்களின் அன்பும், ஆசீர்வாதமும் உங்களுக்கு துணையாக இருக்கும். ஜாமீன் போடக் கூடாது. கடன் கொடுக்கக் கூடாது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். 28.3.2025 மாலை 4.47-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் தேவையற்ற கற்பனை, பயங்கள் உருவாகி மறையும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பணி மீண்டும் உங்களை வந்தடையும். அமாவாசையன்று வெண்மையான மலர்களால் அம்பிகையை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை

    16.3.2025 முதல் 22.3.2025 வரை

    சுமாரான வாரம்.ராசி அதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானம் செல்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் 4 கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. ராசியில் சனி பார்வை பதிவது சில நாட்களுக்கு மட்டுமே என்று ஆறுதல் அடைந்தால் அஷ்டமச் சனி துவங்குவது மன பயத்தை ஏற்படுத்தலாம். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் முக்கியமான பணிகளை விரைந்து முடிப்பது சிறப்பு. குடும்ப உறவுகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. அரசு பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு. சொத்து இல்லாத வர்களுக்கு புதியவீடு, வாகன யோகம் உண்டாகும்.

    சிலருக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபரம் தொடர்பான சிறு அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து செயல்பட வேண்டும். சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். சகோதர உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.கடமைகளை சரியாகச் செய்யுங்கள். அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த வாரம் அமையும். தினமும் திருக்கோளறு பதிகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை

    9.3.2025 முதல் 15.3.2025 வரை

    சுமாரான வாரம். கண்டகச் சனி விலகி அஷ்டமச் சனி துவங்கப் போகிறது. ராசி அதிபதி சூரியன் அஷ்டமாதிபதி சனியுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் வேலைப்பளு மிகுதியாகும். உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மறைமுக எதிரிகள் உருவாகலாம். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பங்கு வர்த்தகத்தை தவிர்க்கவும். சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும்.உயர் கல்வி முயற்சி வெற்றி தரும்.

    விண்ணப்பித்த வீடு, வாகன கடன் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் பணத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.பிள்ளைகளின் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். தேவையற்ற பேச்சையும், வாக்கு கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்மாமாவால் வீண் செலவு அல்லது கடன் உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். இளம் பெண்க ளுக்கு கருவுறுதல் நடைபெறும் வாய்ப்புள்ளது. மாசி மகத்தன்று ஆதித்ய ஹிருதயம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை

    02.03.2025 முதல் 08.03.2025 வரை

    கொள்கை பிடிப்போடு செயல்படும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் ஆன்ம பலம் பெருகும். தொழிலில் நினைப்பதொன்று, நடப்ப தொன்றுமாக இருந்த நிலை மாறும். ஏழாம் அதிபதி சனியுடன் சூரியன் இணைவதால் கணவன் மனைவி ஒற்றுமை பெருகும்.

    சிலருக்கு பொதுக் காரியங்களில் ஆர்வம் உண்டாகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். சிலர் பிள்ளைகளின் கல்விக்காக இடப் பெயர்ச்சி செய்ய நேரும்.

    அஷ்டமச் சனி துவங்குவதை நினைத்து கவலைப் படாமல் உங்கள் கடமையில் கவனமாக இருந்தால் நவ கிரகங்களும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். சிலர் மன நிம்மதிக்காக ஆன்மீக சுற்றுப் பயணம் செல்வார்கள்.

    3.3.2025 அன்று மாலை 6.39 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும். பேச்சில் நிதானம் தேவை. அமைதியாக இருப்பது அவசியம். அமைதியால் அனைத்து பிரச்சனைகளும் அடிப்பட்டு போகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆன்மபலம் உயரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை

    23.2.2025 முதல் 01.03.2025 வரை

    விருப்பங்கள் நிறைவேறி முயற்சிகள் மேலோங்கும் வாரம். தன லாப அதிபதி புதன் நீச்ச பங்க ராஜ யோகம் பெறுகிறார். மாத கிரகங்களின் சஞ்சாரம் ஓரளவு சாதகமான நிலையில் உள்ளது. வருட கிரகங்களின் சஞ்சாரம் சுமாராக உள்ளதால் முக்கிய பணிகளை விரைவாக, வேகமாக முடிக்கவும்.

    உங்கள் முயற்சி புகழ், அந்தஸ்தை நிலை நிறுத்த கடின உழைப்பு அவசியம். மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஞாபக மறதி மிகும். நம்மை உதவி செய்து கை தூக்கி விட யாருமில்லை என்ற எண்ணம் மிகைப்படுத்தலாக இருக்கும்.

    சிலர் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை விட்டு விலகி வேறு இடத்தில் வாழும் சூழ்நிலை உண்டாகும். வழக்குகளை வாபஸ் பெற்று மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேசி தீர்ப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் கூடிவரும்.

    வீடு, வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரும். பெண்கள் வீட்டிற்கு தெரியாமல் , நகை சீட்டு , ஏலச் சீட்டு கட்டுவதை தவிர்த்து அரசுடைமை வங்கிகளில் உபரி பணத்தை சேமிக்க வேண்டும். மகா சிவராத்திரியன்று பயறு, கிழங்கு வகைகள் தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை

    16.2.2025 முதல் 22.2.2025 வரை

    விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு சூரியன், சனி, புதன் பார்வை. குடும்பத்தில் ஒற்றுமையும், அன்யோன்யமும் உண்டாகும். திடீர் எதிர்பாராத பணவரவால் தேவைகள் அனைத்தும் நிறைவு பெறும். அஷ்டமச் சனி துவங்க உள்ளதால் உங்களுக்கு எதிராக இருப்பவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.தொழில் சீராக நடந்தாலும் லாபம் நிற்காது.

    கூட்டம் களைகட்டும் கல்லா களை கட்டாது. நம்பிய வேலையாட்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை கடைபிடிப்பது அவசியம். விரலுக்கேற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அகலக்கால் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். தாய்வழிச் சொத்திற்காக தாய் மாமாவுடன் கருத்து வேறுபாடு, பகைமை உருவாகும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை.

    வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது அமைதியாக இருப்பது அவசியம் அமைதியால் அனைத்து பிரச்சினைகளும் அடிப்பட்டு போகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். மாணவர்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பயிற்சியை கடைபிடிப்பது நல்லது.தினமும் சுந்தரகாண்டம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 9.2.2025 முதல் 15.2.2025 வரை

    9.2.2025 முதல் 15.2.2025 வரை

    மாற்றங்களைப்பற்றி சிந்திக்கும் வாரம். வார இறுதியில் ராசிக்கு 7-ல் ராசி அதிபதி சூரியன் 7ம் அதிபதி சனி மற்றும் தனலாபாதிபதி புதனுடன் இணைந்து ராசியை பார்ப்பது மிக உன்னதமான கிரக அமைப்பு. இன்னும் சில நாட்களில் அஷ்டமச் சனி துவங்க உள்ளதால் எதிலும் நிதானம் வேண்டும்.கூட்டுக் குடும்பம், கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகலாம். தொழில் சார்ந்த துறையில் உங்களின் புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இழுபறியாக இருக்கும். பொதுக் கூட்டத்தில் நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுக்கக் கூடாது.

    குழந்தைகளை சொந்த பொறுப்பில் கண்காணிக்க வேண்டும்.பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை நகைகளை இரவல் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரும் பணம் புரளும் தொழில் மற்றும் வட்டித் தொழில் செய்பவர்கள் ரொக்க பரிவர்த்தனையை தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைக் கான முறையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அதிக ரொக்க பணம் கையில் வைத்திருக்க கூடாது.தைப்பூசத்தன்று பஞ்சாமிர்த அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை

    2.2.2025 முதல் 8.2.2025 வரை

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் வாரம். லாப ஸ்தான வக்ர செவ்வாயால் அனைத்து எதிர்பார்ப்புகளும் ஈடேறும். வியாபாரம், தொழிலில் நிலவிய மந்த நிலை மாறும்.மன உளைச்சல் தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். பற்றாக்குறை பட்ஜெட் என்ற பேச்சிற்கே இடமில்லை. நீண்ட காலமாக எதிர்பார்த்த அரசு உத்தி யோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    சிலருக்கு பணி நிரந்தரமாவதில் தாமதம் ஏற்படலாம். வீண், விரயங்கள் இழப்புகள் நஷ்டங்கள் குறையத் துவங்கும். மூத்த சகோதரம், சித்தப்பா, தாய், தந்தை ஆதரவு உண்டு. வீடு வாங்கும் முயற்சியில் இருந்த குழப்பங்கள் அகலும். புதுவிதமான ஆடம்பர பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் அதிகமாகும்.எதிர் பாலினத்தவரிடம் தேவையற்ற சகவாசத்தை தவிர்க்கவும். 3.2.2025 அன்று இரவு 11.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிட்ட காரியங்களில் பின்னடைவு இருக்கும்.எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பழகக் கூடாது. விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை

    26.1.2025 முதல் 1.2.2025 வரை

    தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியனும், தன லாப அதிபதி புதனும் ராசிக்கு 6-ல் மறைவு பெற்றுள்ளார்கள். எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும்.குடும்ப பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான நிலை நிலவும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள்.பணிபுரியும் இடத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஊர் மாற்றம், இடமாற்றம் செய்ய நேரும். கணவன், மனைவி தொழில் உத்தியோக நிமித்தமாக ஆளுக்கொரு ஊரில் பணிபுரிய நேரும்.

    வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் ஏற்படலாம்.பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளின் விசாரணை தாமதமாகும்.வாழ்க்கைத் துணைக்கு தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் அன்பு மிளிரும்.சிறு சிறு உடல் உபாதைகள் மருத்துவத்தில் சீராகும். நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் தொடர்பான திட்டமிடுதலில் ஆர்வம் அதிகரிக்கும். அமாவா சையன்று வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×