search icon
என் மலர்tooltip icon

    சிம்மம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

    சிம்மம்

    குருபெயர்ச்சி பலன்-2024

    சிம்மம்- தொழில் குரு 60%

    எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் சிம்ம ராசியினரே!

    இதுவரை 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் நின்று பாக்கிய பலன்களை வழங்கிய குருபகவான் மே1, 2024 முதல் 10ம்மிடமான தொழில் ஸ்தானம் செல்கிறார்.2ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார். சனி பகவான் ராசிக்கு 7ல் சம சப்தமாக நின்று கண்டகச் சனியின் பலனை வெளிப்படுத்துகிறார்.

    தொழில் குருவின் பொதுபலன்கள்:

    10ல் குருவந்தால் பதவி பறிபோகும் என்பது ஜோதிட பழமொழி. 10ம்மிடத்தில் குரு வருவதால் பதவி தொழில் பற்றிய மனக் கலக்கம் சிம்ம ராசியினருக்கு ஏற்படத்தான் செய்யும். சிம்ம ராசியினருக்கு குரு 5,8ம் அதிபதி. அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. 5ம் அதிபதி குரு 10ல் வருவது சுபம். அதே நேரத்தில் அஷ்டமாதியான குரு 10ல் வருவது சில அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதியாகக் கூறலாம்.தொட்டது துலங்கும்.நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.

    இக்கால கட்டத்தில் தடைபட்ட குல தெய்வ வழிபாடு, ஆன்மீக சுற்றலா மேற்கொள்ள ஏற்ற காலம். ஒப்பந்த அடிப்படையிலான புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். வீடு, வாகனயோகம், குழந்தைப்பேறு, திருமணம் போன்ற பாக்கிய பலன்கள் கைகூடும். தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். சிந்தனைகள் பெருகும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

    தொழில் ஸ்தானத்தில் நிற்கும் குருவின் 5ம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. அங்கே கேதுவும் நிற்கிறார் என்பதை மறக்கக்கடாது. சில கிரகங்கள் சாதகமாகவும் சில கிரகங்கள் பாதகமாகவும் உள்ளதால் சாதகங்களும், பாதகங்களும் சேர்ந்தே நடக்கும். அதனால் சிறு பொருள் விராயங்கள் தடை தாமதம் ஏற்படும். மற்றபடி பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியும் உருவாகும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு.

    பல வருடங்களாக தீராத தீர்க்க முடியாத பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தடைபட்ட நிலுவையில் உள்ள சம்பளபாக்கி மொத்தமாக வந்து சேரும். குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். பொருள் கடன் மற்றும் பிறவிக் கடனில் தத்தளித்த உங்களுக்கு கர்மவினைத் தாக்கம் குறையும் காலம் வந்துவிட்டது. அடமானச் சொத்துக்கள் மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். கண்டகச் சனியின் தாக்கம் இருப்பதால் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிப்பது முக்கியம்.

    குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

    தொழில் குருவின் சம சப்தம பார்வை 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் பதிகிறது. வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். இது வரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடிபுகும் ஆர்வம் மிகும் .உங்கள் எண்ணம் போல் வீடு அமையும். சிலர் வீட்டை திருத்தி அமைக்கலாம். பழைய வாகனத்தை கொடுத்து புதிய 2, 4 சக்கர வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். நீங்கள் வாங்கும் வீடு, மனை இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையா சொத்துக்கள் வாடகைக்கு போகும். அதன் மூலம் வருமானம் உருவாகும்.

    தாயாருக்கு ஏற்பட்ட சிறு, சிறு உடல் நலக் குறைவு செம்மையாகும். குடும்பத்தில் எல்லோரும் அனுசரணையாக இருப்பார்கள்.உடல் உபாதைகள் அகலும். வைத்தியம்பலன் தரும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். மாமனாரின் ஆதரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்பு முனையான சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும்

    குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

    ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் குருவின் 9ம் பார்வை பதிகிறது. மறைமுக எதிர்ப்புகள் சூரியனைக் கண்ட பனி போல் விலகும்.புகழ் கொடிகட்டிப் பறக்கும். மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும். விரோதிகள் நண்பர்களாவார்கள்.

    தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. தொல்லை கொடுத்த வாழ்க்கை துணையிடமிருந்து விவாகரத்து கிடைக்கும்.

    வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்.தொழில் உத்தியோகம் தொடர்பான விசயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். நோய் தாக்கம் குறையும்.சிலர் குடும்ப உறவுகளுக்காக கடன்பட நேரும்.

    உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் நலனில் அதிக அக்கறை காட்டினாலும் இளைய சகோதரர் உங்களுக்கு எதிராகவே செயல்படுவார்.

    குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை):

    ராசி அதிபதி சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் வாழ்வில் நிலவிய இடையூறுகள் தடை, தாமதங்கள் அகலும். இதுவரை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த உங்கள் புகழ், அந்தஸ்து, கவுரவம், செல்வாக்கு, சொல்வாக்கு வளரும். சோதனைகள் சாதனைகளாகும். முயற்சிகள் பலிதமாகும். தைரியம், தெம்பு அதிகரிக்கும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். பிள்ளைகள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள்.

    அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். ஆயுள் ஆரோக்கியம் சீராகும். சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். பொருளாதார முன்னேற்றத்தால் குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம்.

    குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024 வரை):

    விரயாதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படும். மன சஞ்சலத்தால் தூக்கம் குறையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனையாக உருவாகும். முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம். புதிய கடன் உருவாக வாய்ப்புகள் அதிகம். அதனால் மன வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும்.

    குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள் (21.8.2024 முதல் 8.10.2024 வரை 5.2.2025 முதல் 15.5.2025 வரை):

    சிம்ம ராசிக்கு 4, 9ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் நன்மைகள் மிகுதியாகும். தடைபட்ட அரைகுறையாக நின்ற பணிகள் துரிதமாக நடைபெறும்.குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

    சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். உங்கள் மீது பதிந்த வீண் சங்கடங்கள் அவமானங்கள் பழிச் சொற்கள் நீங்கும். புதிய நம்பிக்கை பிறக்கும் புதிய சிந்தனைகள், எண்ணங்கள் உதயமாகும். எதிர்கால தேவைக்கு இப்பொழுதே சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறக்கும்

    குருவின் வக்ர காலம்(சிம்ம ராசிக்கு 4, 9ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

    வக்ரமடையும் இந்த காலத்தில் எண்ணியதை குறித்த நேரத்தில் முடிப்பது சிரமம், சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்காமல் போகலாம். கணவன்-மனைவி உறவுக்குள் இருந்த நல்லிணக்கம் குறையும்.தாய், தந்தையை அனுசரித்து செல்ல வேண்டிய நேரம்.

    விரயாதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2.2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் அரசியல் பிரமுகர்கள், அரசாங்க ஊழியர்கள் வம்பு, வழக்கு, சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும். ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு கடனுக்கு பொருள் கொடுக்கக் கூடாது. வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டு உடல் நலனை பாதுகாக்க வேண்டும்.

    மாணவர்கள்:

    குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும்.சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும். ஆசிரியர், மாணவர்களுக்குள் நல்லுறவு ஏற்படும். விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மாநில, மாவட்ட அளவிளான போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகளும் பதக்கங்களும் வாங்கி குவிப்பார்கள்.

    பெண்கள்:

    பணிபுரியும் பெண்கள் கடமை உணர்வுடன் செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழிலில் புதுமை புகுத்தி நன்மதிப்பை பெறுவீர்கள். 2ல் கேது, 8ல் ராகு இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தலை தூக்கும். அரசு உத்தியோகம் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். திருமணமான பெண்கள் சஷ்டி திதியில் முருகனுக்கு சந்தன அபிசேகம் செய்து வழிபட ஆண் வாரிசு உண்டாகும்.

     பரிகாரம்:

    தொழில் ஸ்தான குருவின் சுப பலன்களை அனுபவிக்கவும் 2ம்மிட கேது 8ம்மிடராகுவின் சங்கடங்களில் இருந்து விடுபடவும் செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கை, காளி போன்ற ராகு அம்சம் நிறைந்த தெய்வங்களுக்கு குங்கும அபிசேகம் செய்து வழிபட வேண்டும்.

    சிம்மம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

    கம்பீரமான சிம்ம ராசியினரே இதுவரை ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் இனி ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானம் செல்கிறார்.அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

    பாக்கிய குருவின் பொது பலன்கள்:

    சிம்ம ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான குரு பகவான் ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானம் செல்கிறார். இதனால் அஷ்டம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் அவமானம் விலகும். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு புதுமை படைப்பீர்கள். உங்கள் மனதிலும் உள்ளத்திலும் நேர்மறை சக்தி குடிபுகும். தெய்வீக ஆற்றல் நிரம்பப் பெற்று உத்வேகத்துடன் செயல்படுவீர்கள்.உங்களைப் பற்றிய அவதூறு வார்த்தைகள் பேசியவர்கள் உண்மையை உணர்ந்து வருந்துவார்கள். சம்பந்தமில்லாமல் உங்கள் மேல் பதிந்த நீதி மன்ற வழக்குகளில் திருப்புமுனையான தீர்ப்புகள் உங்களை மகிழ்விக்கும்.

    பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குரு பாக்கிய ஸ்தானம் செல்வதால் அபரிமிதமான பாக்கிய பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். வாழ்க்கையின் சூழ்நிலை மாற்றத்தை எண்ணி வியப்பீர்கள். அதிர்ஷ்டத்தை நாம் தேடிச் செல்லக்கூடாது, அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வர வேண்டும் என்பதை உணர்வீர்கள். வேலைப் பளுவினால் ஏற்பட்ட அழுத்தம் விலகும். குறைவான உழைப்பில் நிறைவான வருமானம் கிடைக்கும்.மிகச் சிரமமான பணிகளைக் கூட மிகச் சாதாரணமாக நிகழ்த்திக் காட்டுவீர்கள். வாழ்வில் தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் இந்த ஓராண்டுக்குள் நடந்து முடியும். ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம், முயற்சி ஸ்தானம் பலம் பெறுவதால் கண்டகச் சனியின் அசுப பலன்கள் மட்டுப்படும். வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்கும் அற்புதமான காலமாக இது அமையும் என்றால் அது மிகையாகாது.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

    மேஷ ராசியில் நிற்கும் குருவின் ஐந்தாம் பார்வை ராசியில் பதிகிறது. சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தோற்றம் பொழிவு பெறும். சாதனை புரியக்கூடிய வகையில் திறமைகள் கூடும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் வசந்தம் வீசும்.மனக்குழப்பத்தோடு இருந்தவர்கள் தெளிவோடு சிந்திப்பீர்கள். பிறருக்கு பயன்தரும் ஆலோசனை சொல்லக் கூடிய வகையில் உங்கள் திறமைகள் அதிகரிக்கும். தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். உங்களின் செயல்பாட்டில் பிறரின் குறுக்கீடுகள் இருக்காது. ஆழ்ந்த சிந்தனையால் பிரபஞ்சத்தின் அதிர்வலைகளால் நாளை நடக்கப் போவதை இன்றே உணரும் பேராற்றல் உருவாகும்.ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு என்பதால் சுய ஜாதகத்தில் பலவீனமான தசை, புத்தி நடந்தால் தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலம் நோக்கிச் செல்வார்கள்.

    ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கப் போகிறது. குருவின் ஏழாம் பார்வை பலன்கள் ராசிக்கு மூன்றாமிடமான தைரிய வீரிய, சகோதர ஸ்தானத்தில் குருவின் ஏழாம் பார்வை பதிகிறது.புதிய புதிய சிந்தனைகள், யுக்திகள் தோன்றும். தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள்.உயரிய சிந்தனைகள் வெற்றியைக் கொடுக்கும்.சிலருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைக்கும்.சகோதர சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். உடன் பிறந்தவர்களின் குடும்ப பிரச்சனைகளை சீராக்குவீர்கள் காது, மூக்குத் தொண்டை தொடர்பான நீண்ட நாள் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். அடமானத்தில் இருந்த அசையாச் சொத்துக்கள் மற்றும் நகைகளை மீட்பதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

    குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

    ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருவின் ஒன்பதாம் பார்வை பதிவதால் பூர்வ புண்ணிய பாக்கிய பலத்தால் இந்த ஜென்மத்தில் அடைய வேண்டிய அனைத்து சுப பலன்களும் உங்களை நாடி வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகளும் தலைமைப் பதவிகளும் தேடி வரும். கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் ஓடி வந்து நிற்கும். புண்ணிய காரியங்களுக்கு பொருள் உதவி செய்வீர்கள். புகழ் அந்தஸ்து, கவுரவம் உயரும். புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்புகள் உள்ளது.வாகன வசதிகளை பெருக்கி கொள்வீர்கள்.இளம் பருவத்தினருக்கு புத்திர பேறு கிடைக்கும். வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி பிறப்பார்கள். பிள்ளைகளுக்கு சுப காரியம் செய்து மகிழ்வீர்கள்.சிலருக்கு புதியதாக காதல் எண்ணம் மலரும்.மனதை மகிழ்விக்கும் அனைத்து சுபநிகழ்வுகளும் நடக்கும்.

    அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.4.2023 முதல் 21.6.2023 வரை

    கோட்சாரத்தில் ராசிக்கு மூன்றில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் விடா முயற்சியும் தைரியமும் மேலோங்கி அனைத்து பிரச்சனைகளையும் நீங்கள் ஒருவராகவே தனியாக நின்று சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும்.இடப்பெயர்ச்சி செய்ய நேரும். ஆவணங்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் சீராகும். காணாமல் போன அல்லது கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். உயில் எழுதலாம். உயில்களில் திருத்தம் செய்யலாம்.

    பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை

    சிம்ம ராசிக்கு மூன்று, பத்தாம் அதிபதியான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் புதிய வங்கி கணக்கு துவங்கலாம். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.பல புதிய தொழில் முதலீட்டாளர்கள் உருவாகுவார்கள். இந்த குருப்யெர்ச்சியால் தொழில் தொடர்பான அனைத்து இடர்பாடுகளும் நீங்கி நிம்மதி பெறும் சாதகமான நேரம். முன்னோர்களின் பரம்பரை தொழிலை நடத்துபவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி உண்டு. தொழிலை விரிவு படுத்த தேவையான நிதி உதவி கிடைக்கும்.

    கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

    ராசி அதிபதி சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் செய்வினை, கண் திருஷ்டி தோஷங்கள் அகலும். உற்றார் உறவுகளின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். நல்ல வாழ்வியல் முன்னேற்றம் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும். வேலைக்காக இடம் விட்டு இடம் அல்லது ஊர் விட்டு ஊர் மாற நேரும். வீட்டிலும், வெளி இடத்திலும் உங்களை ஓரம் கட்டியவர்கள் இனிமேல் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு அந்தஸ்து எல்லாம் உயரும்.

    குருவின் வக்ர பலன்கள்:

    4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் எதிர்பார்ப்புகள் ஒன்றிரண்டு நிறைவேறாமல் போகலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். மன அமைதி குறையும் சம்பவங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளதால் திட்ட மிட்டு செயல்படுவது நல்லது.

    பெண்கள்:

    ஆரோக்கியத் தொல்லைகள் சீராகும். அறுவை சிகிச்சை வரை சென்ற கருப்பைத் தொல்லை மாற்று முறை வைத்தியத்தில் சீராகும்.சகோதர, சகோதரி உறவில் மறுமலர்ச்சி உண்டா கும். தாய் வழிச் சொத்தும், சீதனமும் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். சுய தொழில் புரியும் பெண்களுக்கு பிரமாண்ட தொழில் வளர்ச்சி உண்டு. உங்கள் முயற்சிக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டினரின் ஒத்துழைப்பு இருக்கும்.

    மாணவர்கள்:

    ஆசிரியர்கள் வகுப்பில் நடத்தும் அன்றைய பாடத்தை அன்றே படிப்பதால் சுமையாக இருக்காது. ராசி, மூன்றாமிடம், ஐந்தாமிடத்தை குரு பார்ப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். கல்வி தடை ஏற்பட்ட மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர வாய்புகள் உள்ளது. அன்பும், பொறுமையும், நிதானமும் கல்வியில் உள்ள பற்றும் உங்கள் எதிர்கால வாழ்க்கையை வளமாக்கும்.

    உத்தியோகஸ்தர்கள்:

    இதுவரை வேலையின்மையால் அவதிப்பட்ட வர்களுக்கு அரசு, தனியார் துறையில் விரும்பிய வேலை கிடைக்கும். உத்தியோக உயர்வை எதிர் பார்த்தவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு .அரியர்ஸ் சம்பளம் கிடைக்கும். உழைத்த உழைப்பிற்கு கைமேல் பலன் கிடைக்கும். உடன்வேலை பார்த்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனை ,கெளரவக் குறைவு போன்ற பிரச்சனைகள் அகலும்.

    பரிகாரம் : விடா முயற்சியோடு செயல்பட்டால் வெற்றி தேடி வரும் என்ற அனுப உண்மையை இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு உணர்த்தும். காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் ஆத்மார்த்தமான முன்னோர்கள் வழிபாடு உங்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஜென்ம நட்சத்திர நாளில் வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவ பாக்கிய பலம் பெருகும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கடகம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    நிர்வாகத் திறன் மிகுந்த சிம்ம ராசியினரே ராசிக்கு 8ல் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார். 3ல் கேது,9ல் ராகுவும், சனி பகவான் 6,7ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

    8ம்மிட குருவின் பொதுபலன்கள்: சிம்ம ராசிக்கு குரு 5,8ம் அதிபதி. 5ம்மிடம் என்பது பூர்வ ஸ்தானம், புகழ், கீர்த்தி, அந்தஸ்து, கவுரவம் குழந்தைகள் பற்றிக் கூறுமிடம். பூர்வ புண்ணியாதிபதி குரு ஆட்சி பலம் பெறுவது சிறப்பு. எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஆன்ம பலம் பெருகும். மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்முன்னோர்களில் நல் ஆசிகள் உங்களை சிறப்பாக வழி நடத்தும். குல தெய்வ அனுகிரகம் உண்டாகும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் கருத்தரிப்பார்கள்.பிள்ளைகள் தொழில், ஊத்தியோகத்திற்காக குடும்பத்தை விட்டு வெளியூர் செல்வார்கள். செய்யும் தொழிலில் முன்னேற்றம், தாராள பணப் புழக்கம், பெரிய மனிதர்களின் ஆதரவு உண்டாகும். குல தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும்.

    8ம்மிடம் என்பது ஆயுள் வம்பு, வழக்கு ஆகியவை பற்றிக் கூறுமிடம். அதனால்அஷ்டமாதிபதி வலுக்கக் கூடாது என்ற பயமும் இருக்கத்தானே செய்யும். 8ம் இட குருவிற்கு சனி பார்வையும் இருப்பதால்எட்டாம் பாவக பலன்களான அவமானம், கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும்.

    உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிறர் பணம், அன்பளிப்பு, சீதனம் எதிர்பாராத தன லாபம், லாட்டரி, ஆயுள் காப்பீடு, திடீர் அதிர்ஷ்ட உயில் சொத்து போன்ற எதிர்பாராத தன வரவு குடும்பத்திற்குகிடைக்க வாய்ப்பு உள்ளது. உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். சிலருக்குநீண்ட காலம் மருந்து சாப்பிட வேண்டிய நோயால் சிறு அவஸ்தைகள் இருந்தாலும்நித்திய கண்டம் பூரண ஆயுள் . ஆயுள் தீர்க்கம் .எவ்வளவு நோய் தாக்கம் இருந்தாலும் ஆயுளுக்கு பங்கம் இல்லை. நடப்பதெல்லாம் கனவா? என்று நினைக்க தோன்றும் வகையில் முன்னோர் வழி சொத்தில் இருந்த வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

    ஜனன கால ஜாதகத்தில் 8ம்மிடத்துடன் சம்பந்தம் பெறும்தசை நடப்பவர்கள் தனிமையாக, வெளிநாட்டிற்கு சென்று கஷ்டப்படும் நிலை ஏற்படும். சிலர்தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு செல்வார்கள். சிலர்கற்பனையில், கனவில் வாழ்வார்கள். நடந்ததை நினைத்து மனம் வருந்துவார்கள் அல்லது நடக்காததை நடப்பது போல் நினைத்து பயப்படுவார்கள். சிலரின் பெயர் புகழுக்கு களங்கமும் உண்டாகளாம். பூர்வீகம்தொடர்பானபிரச்சனைகள் தலை தூக்கும். உங்களின் சகோதர, சகோதரி வழியில்சொத்து தொடர்பான வில்லங்கம் ஏற்பட்டு மன உளைச்சல் உண்டாகலாம். சிலருக்கு பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம்.

    5ம் பார்வை பலன்கள்: குருவின் 5ம் பார்வை 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் பதிகிறது. வீட்டில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும். இல்லத்து விசேஷம் மற்றும் குழந்தைகளின் நலனுக்காககடன் வாங்க நேரலாம். பழைய கடனை அடைக்கபுதியகடன் வாங்க நேரும். முறையான அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளில்கடன் வாங்குவது சிறப்பு . உடனடியாகபணம் கிடைக்கிறது என்பதற்காக நீட்டியஇடங்களில் கையெழுத்து இட்டு முறையற்ற நிதி நிறுவன வங்களிடம் கடன் வாங்குவது வீண் அவமானத்தை தேடித் தரும்.

    "பதறாத காரியம் சிதறாது " முறையான திட்டமிடல் சங்கடங்களை தீர்க்கும்.யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். ஆவணங்களை படித்து பார்த்து கையெழுத்துப்வேண்டும். வெற்றுப் பத்திரம், வெற்று காசோலைகளில் கையெழுத்து இடுவதை தவிர்த்தல் நலம்.முன்னோர்கள் சொத்து அடமானத்தின் பேரில் கடன் பெறநேரும். எவ்வளவுமன அழுத்தம் இருந்தாலும் படுத்தவுடன் தூக்கம்வரும். படுத்தவுடன்தூக்கம்பெரிய வரப்பிரசாதம்.நிம்மதியான தூக்கத்தை குருபகவான்இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு வழங்கும்.

    7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 2ம்மிடமான தன ஸ்தானத்திற்கு இருப்பதால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் வலுப்பெறுகிறது. தன வரவில் ஏற்பட்ட தடைகள் அகலும். முக்கிய குடும்ப தேவைகள் நிறைவடையும். இல்லை என்ற நிலை இனி இல்லை. உழைப்பிற்கு ஏற்றவருமானம்நிச்சயம் உண்டு. அதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகஇருக்கும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். பொருள் தேடுவதற்காக ஆளுக்கொரு திக்கில் சிதறிய குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் நெருங்கிய ரத்த பந்த உறவுகளைக் கண்டவுடன் மனம் லயிக்கும்.உங்களின் 2ம் அதிபதி புதன் என்பதால் இயல்பிலேயே நகைச்சுவை பேச்சுத்திறன் கொண்ட உங்களைதர்க்க வாதங்களில் யாரும் வெல்ல முடியாது. பேச்சாற்றலால்உங்களின்காரியங்களை சாதிக்க முடியும். சுவையான உணவு வகைகளை உண்பதில் விரும்பம் மிகும்.

    9ம் பார்வை பலன்கள்:குருவின் 9ம் பார்வை ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் பதிகிறது. பூமிகாரகனான செவ்வாயின் தொழிலான ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும்.கட்டுமானத் துறையில் உள்ளவர்களின் திறமை பாராட்டப்படும். கால்நடைகளான ஆடு, மாடு, கோழி மற்றும் உயிரினம் வளர்ப்பவர்கள் பண்ணையாளர்கள் தொழிலில் சாதனை படைப்பார்கள். தொட்டது துலங்கும்.

    என்றோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும். புதிதாக சொத்து வாங்குபவர்களுக்கு எதிர்காலத்தில் பல மடங்கு மதிப்பு உயரக்கூடிய இடத்தில் சொத்து அமையும். இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த சொத்திற்கு நல்ல வாடகைதாரர் கிடைப்பார்.தொல்லை கொடுத்த பழைய வாடகைதாரர் இடத்தை காலி செய்வார். பலருக்கு வாகன யோகம் பலிதமாகும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாடகை வீட்டில் இருந்தவர்கள்சொந்த வீட்டிற்கு மாறுவார்கள். வீடு,வாகன யோகம் பலிதமாகும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம்கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை விற்க முடியாமல் கிடந்தஅசையாச் சொத்துக்கள் விற்று விடும். பல தலைமுறையாகவிற்காமல் கிடந்த குடும்ப சொத்து கூட விற்று விடும்.

    வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் 6ம் அதிபதி சனியின் பார்வையும் 8ம் இடத்திற்கு இருப்பதால் குருவின் வக்ர காலத்தில்தொழில் உத்தியோகம் தொடர்பான வம்பு வழக்குகள் ஏற்படலாம். முடிந்த வரைவம்பு வழக்கை தவிர்க்க வேண்டும். ஏதேனும்காரணத்திற்காககோர்ட் கேஸ் பிரச்சனை வந்தால்வழக்கை நிலுவையில் வைக்க வேண்டும் அல்லது மத்தியஸ்தர்களிடம் சென்றுசமாதானம்பேச வேண்டும். ஏற்கனவே உங்களுக்கு எதிராக உள்ள வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு எதிராக வரலாம். குரு இந்த காலகட்டத்தில் உங்களின் நண்பன் யார்? எதிரி யார்? என்பதை அடையாளம் காட்டி விடுவார். தனிமையை விரும்ப செய்வார்.

    பெண்கள்:2ம்மிடமான குடும்ப ஸ்தானத்திற்கும் 12ம்மிடமான அயன சயன ஸ்தானத்திற்கு குருப்பார்வை இருப்பதால் கணவர் உங்கள் மேல் அன்பை பொழிவார்.தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். கோட்ச்சாரத்தில் உங்களின் 9ம் அதிபதி செவ்வாய் பலம் பெறும் காலத்தில் மாங்கல்ய சரடு மாற்றினால் கணவரின் ஆயுள், மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும்.கணவர் மற்றும் புகுந்த வீட்டாருடன் வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும்.

    பரிகாரம்: வெற்றிலை, பாக்குடன் கல்கண்டு வைத்து வெள்ளி கிழமை இஷ்ட, குலதெய்வம், மகாலட்சுமி வழிபாடு செய்தால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் மகான் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரை வழிபட மனக் குறை நீங்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×