search icon
என் மலர்tooltip icon

    மிதுனம் - ஆண்டு பலன் - 2024

    மிதுனம்

    புத்தாண்டு ராசிபலன்கள்-2024

    அறிவாற்றல் மிகுந்த மிதுன ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இந்த புதிய வருடத்தில் வருட கிரகமான குரு பகவான் 11, 12ம் மிடத்திலும் சனி பகவான் 9ம்மிடத்திலும், ராகு, கேதுக்கள் 10, 4-ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். சனி மற்றும் ராகு, கேதுவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளதால் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். துன்பங்களும் துயரங்களும் முடிவுக்கு வரப்போகிறது. சனிபகவானும், ராகு கேதுவும் சாதகமாக இருப்பதால் புத்தாண்டை சந்தோஷமாக அனுபவிப்பீர்கள்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டின் துவக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும். ஏப்ரல் 21-ம் அன்று லாப ஸ்தானத்தில் பயணம் செய்த குரு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார்.

    குருவின் 5-ம் பார்வை 4-ம் மிடமான சுக ஸ்தானத்தையும் 7-ம் பார்வை 6-ம் இடமான ருண, ரோக, சத்ரு, ஸ்தானத்தையும் 9-ம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். விரய குருவின் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் புது வீடு கட்டலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். நோய்கள் தீரும். வைத்தியச்செலவு குறையும். கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும்.

    உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். வெளிநாட்டு, அரசு வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும். பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் ஏதாவது செலவு இருந்து கொண்டே இருக்கும்.வழங்குகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆயுள் பயம் அகலும். விரய குரு என்பதால் பண விசயத்தில் யாரையும் நம்பாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    ஆண்டு முழுவதும் 8,9-ம் அதிபதி சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். 3-ம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் முயற்சி ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.இந்த புத்தாண்டில் அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம்.

    திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். செய்த தர்மம் தலை காக்கும். சாதிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் மேலோங்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். தடை பட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும். தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும். தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும்.

    ஆன்மீக, வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் சென்று வரும் சந்தர்ப்பம் உருவாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளை முன் நின்று நடத்துவீர்கள்.உடன் பிறந்தவர்களுடன் பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை, முயற்சி நடக்கும். ஞாபக சக்தி குறைவு சீராகும். காது, மூக்கு தொடர்பான அறுவை சிகிச்சை நடக்கும்.நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

    ராகு கேது சஞ்சார பலன்கள்

    ராகு கேதுக்கள் தொழில் மற்றும் சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் பெருகும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு உயரும். நேர்வழி, குறுக்குவழி என பணம் பல வழிகளில் பணம் பையை நிரப்பும். சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும்.வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம், புதையலை நம்பி கால விரயம் செய்வீர்கள்.தவறான சொத்து அல்லது பயன்படாத சொத்தை கட்டிக்காத்து ஏமாறுவீர்கள்.

    பணியில் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும். உங்களை புண்படுத்திய சகோதர சகோதரிகள் மனம் திருந்துவார்கள்.திருமண வாய்ப்பு தேடி வரும்.தம்பதிகள் ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தால் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தலாம். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், பண்ணையாளர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் கூடும்.

    மிருகசீரிஷம் 3, 4

    உங்களின் கெளரவம், அந்தஸ்து உயரும்.பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும்.

    துணிச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நிலவிய சின்னச் சின்ன தகராறுகள் முடிவிற்கு வரும். வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம். புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.

    திருவாதிரை

    மனம் விரும்பும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள்.பணம் என்பது மனிதனுக்கு வரப்பிரசாதம். நட்சத்திராதிபதி ராகு பகவானால் பணக்கவலை குறையும் பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடை போடுவீர்கள்.

    பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம்.பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும். நீண்ட காலமாக தொல்லை கொடுத்து வந்த குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.அவ்வப்போது சிறு சோர்வு, அசதி அலுப்பு தோன்றி மறையும். அடிக்கடி கை கால்களில் உடம்புகளில் வலி இருந்து கொண்டே இருக்கும். சிவனுக்கு பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து வழிபடவும்.

    புனர்பூசம் 1,2,3

    உடல் ரீதியான மன ரீதியான சங்கடங்கள் மறைந்து பாக்கிய பலன்கள் சித்திக்கும். மற்றவர்களால் மதிக்கக்கூடிய நிலையை அடைவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் துரிதமாகும்.முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அருளும் உண்டாகும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும். தொழில் கூட்டாளிகள் இடையே முறையான ஒப்பந்தம் போட்டு தொழில் நடத்த வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும்.

    பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். புதிய கடன் பெற்று பழைய கடனை அடைப்பீர்கள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்பவர்களுக்கு கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும். வியாழக்கிழமை ஸ்ரீ சாய் பாபாவை வழிபடவும்.

    திருமணம்

    திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். திருமணத்திற்கான நாளை எண்ண வேண்டிய நேரம் வந்து விட்டது. மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். மறு விவாக முயற்சி வெற்றி தரும்.

    பெண்கள்

    பெண்களுக்கு நிம்மதியான சூழல் நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். சிக்னமாக இருக்க முயற்சி செய்வீர்கள். அடமானத்தில் உள்ள நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் கூடி வரும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். கணவன், மனைவி ஒற்றுமை மேம்படும் அற்புதமான நல்ல நேரம். மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து, பணம் வரும்.

    வியாபாரிகள்

    இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்வார்கள். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். வருமானம் பல மடங்கு பெருகும். புதிய தொழில் துவங்கும் விரும்பம் உள்ளவர்கள் .கணிதம் சார்ந்த தொழில்கள், வங்கி தொழில், ஜோதிடம், காலி நில விற்பனை, நடிப்பு தொழில், புத்தக விற்பனை , வெளிநாட்டு பொருள் இறக்குமதி, விஷ மருந்துகள், கமிஷன் தொழில் செய்யலாம். புதிய தொழில் தந்திரங்களை பயன்படுத்தி வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள்

    வேலை மாற்றம் நடக்கும்.இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும். உத்தியோகரீதியான பயணங்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியைத் தரும்.

    அரசியல்வாதிகள்

    4-ல் கேது 10-ல் ராகு. கட்சி மேலிடத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியைத் தரும். பல வருடமாக உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் காலம் வந்துவிட்டது. புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் ராகு எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்தும், வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது.

    பரிகாரம்

    வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட குலதெய்வம், மகாவிஷ்ணுவை வழிப்பட்டால் மன நிம்மதி கூடும்.

    மிதுனம்

    புத்தாண்டு ராசிபலன்கள்-2024

    அறிவாற்றல் மிகுந்த மிதுன ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இந்த புதிய வருடத்தில் வருட கிரகமான குரு பகவான் 11, 12ம் மிடத்திலும் சனி பகவான் 9ம்மிடத்திலும், ராகு, கேதுக்கள் 10, 4-ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். சனி மற்றும் ராகு, கேதுவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளதால் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். துன்பங்களும் துயரங்களும் முடிவுக்கு வரப்போகிறது. சனிபகவானும், ராகு கேதுவும் சாதகமாக இருப்பதால் புத்தாண்டை சந்தோஷமாக அனுபவிப்பீர்கள்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டின் துவக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும். ஏப்ரல் 21-ம் அன்று லாப ஸ்தானத்தில் பயணம் செய்த குரு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். குருவின் 5-ம் பார்வை 4-ம் மிடமான சுக ஸ்தானத்தையும் 7-ம் பார்வை 6-ம் இடமான ருண, ரோக, சத்ரு, ஸ்தானத்தையும் 9-ம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். விரய குருவின் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் புது வீடு கட்டலாம்.

    சுப விரைய செலவுகள் ஏற்படும். நோய்கள் தீரும். வைத்தியச்செலவு குறையும். கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும். உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். வெளிநாட்டு, அரசு வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும். பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் ஏதாவது செலவு இருந்து கொண்டே இருக்கும்.வழங்குகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆயுள் பயம் அகலும். விரய குரு என்பதால் பண விசயத்தில் யாரையும் நம்பாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    ஆண்டு முழுவதும் 8,9-ம் அதிபதி சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். 3-ம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் முயற்சி ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.இந்த புத்தாண்டில் அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். செய்த தர்மம் தலை காக்கும். சாதிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் மேலோங்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும்.

    தடை பட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும். தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும். தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். ஆன்மீக, வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் சென்று வரும் சந்தர்ப்பம் உருவாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளை முன் நின்று நடத்துவீர்கள்.உடன் பிறந்தவர்களுடன் பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை, முயற்சி நடக்கும். ஞாபக சக்தி குறைவு சீராகும். காது, மூக்கு தொடர்பான அறுவை சிகிச்சை நடக்கும்.நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

    ராகு கேது சஞ்சார பலன்கள்

    ராகு கேதுக்கள் தொழில் மற்றும் சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் பெருகும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு உயரும். நேர்வழி, குறுக்குவழி என பணம் பல வழிகளில் பணம் பையை நிரப்பும். சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும்.வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம், புதையலை நம்பி கால விரயம் செய்வீர்கள்.தவறான சொத்து அல்லது பயன்படாத சொத்தை கட்டிக்காத்து ஏமாறுவீர்கள்.

    பணியில் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும். உங்களை புண்படுத்திய சகோதர சகோதரிகள் மனம் திருந்துவார்கள்.திருமண வாய்ப்பு தேடி வரும்.தம்பதிகள் ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தால் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தலாம். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், பண்ணையாளர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் கூடும்.

    மிருகசீரிஷம் 3, 4

    உங்களின் கெளரவம், அந்தஸ்து உயரும்.பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும்.

    துணிச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நிலவிய சின்னச் சின்ன தகராறுகள் முடிவிற்கு வரும். வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம். புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.

    திருவாதிரை

    மனம் விரும்பும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள்.பணம் என்பது மனிதனுக்கு வரப்பிரசாதம். நட்சத்திராதிபதி ராகு பகவானால் பணக்கவலை குறையும் பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடை போடுவீர்கள்.

    பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம்.பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும். நீண்ட காலமாக தொல்லை கொடுத்து வந்த குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.அவ்வப்போது சிறு சோர்வு, அசதி அலுப்பு தோன்றி மறையும். அடிக்கடி கை கால்களில் உடம்புகளில் வலி இருந்து கொண்டே இருக்கும். சிவனுக்கு பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து வழிபடவும்.

    புனர்பூசம் 1,2,3

    உடல் ரீதியான மன ரீதியான சங்கடங்கள் மறைந்து பாக்கிய பலன்கள் சித்திக்கும். மற்றவர்களால் மதிக்கக்கூடிய நிலையை அடைவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் துரிதமாகும்.முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அருளும் உண்டாகும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும். தொழில் கூட்டாளிகள் இடையே முறையான ஒப்பந்தம் போட்டு தொழில் நடத்த வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும்.

    பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். புதிய கடன் பெற்று பழைய கடனை அடைப்பீர்கள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்பவர்களுக்கு கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும். வியாழக்கிழமை ஸ்ரீ சாய் பாபாவை வழிபடவும்.

    திருமணம்

    திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். திருமணத்திற்கான நாளை எண்ண வேண்டிய நேரம் வந்து விட்டது. மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். மறு விவாக முயற்சி வெற்றி தரும்.

    பெண்கள்

    பெண்களுக்கு நிம்மதியான சூழல் நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். சிக்னமாக இருக்க முயற்சி செய்வீர்கள். அடமானத்தில் உள்ள நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் கூடி வரும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். கணவன், மனைவி ஒற்றுமை மேம்படும் அற்புதமான நல்ல நேரம். மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து, பணம் வரும்.

    வியாபாரிகள்

    இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்வார்கள். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். வருமானம் பல மடங்கு பெருகும். புதிய தொழில் துவங்கும் விரும்பம் உள்ளவர்கள் .கணிதம் சார்ந்த தொழில்கள், வங்கி தொழில், ஜோதிடம், காலி நில விற்பனை, நடிப்பு தொழில், புத்தக விற்பனை , வெளிநாட்டு பொருள் இறக்குமதி, விஷ மருந்துகள், கமிஷன் தொழில் செய்யலாம். புதிய தொழில் தந்திரங்களை பயன்படுத்தி வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள்

    வேலை மாற்றம் நடக்கும்.இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும். உத்தியோகரீதியான பயணங்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியைத் தரும்.

    அரசியல்வாதிகள்

    4-ல் கேது 10-ல் ராகு. கட்சி மேலிடத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியைத் தரும். பல வருடமாக உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் காலம் வந்துவிட்டது. புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் ராகு எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்தும், வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது.

    பரிகாரம்

    வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட குலதெய்வம், மகாவிஷ்ணுவை வழிப்பட்டால் மன நிம்மதி கூடும்.

    மிதுனம்

    ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

    திட்டமிட்டு வெற்றிபெறும் மிதுன ராசியினர் ஆங்கிலப் புத்தாண்டு மகிழ்ச்சியை அதிகரிக்கும் வருடமாகத் திகழ நல்வாழ்த்துக்கள்.

    2023ம் ஆண்டு உங்களை ரத்தின கம்பளம் விரித்து வளர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறது. இந்த வருடம் பனிரெண்டு ராசிகளில் உன்னதமான சுப பலன்களை அடையப் போவது மிதுன ராசி என்பதில் எந்தவிதமான மிகைப்படுத்தலும் இல்லை. இதுவரைப் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் விலகும். தன்னம்பிக்கையும், தைரியமும் மேலோங்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். சனி,குரு, ராகு/கேது போன்ற வருட கிரகங்களின் சஞ்சாரம் அனைத்தும் மிக மிகச் சாதகமாக உள்ளது.

    குருவின் சஞ்சார பலன்கள்:

    மிதுன ராசிக்கு 7, 10ம் அதிபதியான குரு பகவான் ஏப்ரல் 22, 2023 வரை ராசிக்கு 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். அதன் பிறகு 11ம் இடமான லாப ஸ்தானத்திற்குச் சென்று ராகுவுடன் இணைகிறார். பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் சனியின் 3ம் பார்வை குருவிற்கு கிடைப்பது தர்ம கர்மாதிபதி யோகம் . அதாவது குரு மற்றும் சனி சம்பந்தம் தர்ம கர்மாதிபதி யோகமாகும். உங்களின் 9ம் அதிபதி சனிக்கும் 10ம் அதிபதி குருவிற்கும் கோட்சார ரீதியான சம்பந்தம் ஏற்படுவதால் முன்னோர்களின் பூர்வ புண்ணியம் உங்களைக் காப்பாற்றும் காலம்.

    வியாபாரம் பெருகும். பல தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும். பிரமாண்டமான தொழில் சிந்தனை இருக்கும். லாபகரமான நிலைக்கு தொழிலை கொண்டு செல்வீர்கள்.தொழில் வளர்ச்சிக்காக வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்து காலம். கடன் பிரச்சனையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். காசோலை தொடர்பான வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். கடன் சுமையை குறைக்க அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். இந்த காலகட்டத்தில் இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். வெறுப்பை உமிழ்ந்த மேல் அதிகாரி கருணை காட்டுவார். பணிச்சுமை குறையும்.

    கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். இழந்த நிம்மதி, சந்தோஷம் மீண்டும் உங்களுக்குள் குடிபுகும். அவப்பெயர்கள், சங்கடங்கள் விலகும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும்.

    சனியின் சஞ்சார பலன்கள்:

    மிதுன ராசிக்கு 8,9ம் அதிபதியான சனி பகவான் ஜனவரி 17, 2023 முதல் 9ம் இடமான பாக்கிய ஸ்தானம் செல்கிறார்.அஷ்டமச் சனியிலிருந்து முழுமையாக விடுபடுவதால் இழந்த அனைத்துவிதமான பாக்கியங்களையும் மீண்டும் அடைவீர்கள். புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். தாய், தந்தையின் அன்பும் நல்லாசிகள் கிடைக்கும். தீர்த்த யாத்திரை செல்லுதல், தானதர்மம் செய்வதில் ஆர்வம் மிகும். வெளிநாட்டு வாழ்க்கையை மனம் விரும்பும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். தந்தை,மகன் உறவில் அன்பு வெளிப்படும். பிரிந்த தந்தை மகன் சேர்ந்து வாழ்வார்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    பித்ருக்களின் நல்லாசிகள் கிடைகும். பல தலைமுறையாக தீர்க்க முடியாத பித்ரு தோஷத்தை முறையான பித்ருக்கள் வழிபாட்டை கடைபிடித்து சரிசெய்வீர்கள். பல தலைமுறையாக பயன்படாத பூர்வீகச் சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்று பணம் கிடைக்கும். பல வருடங்களாக கண்டு பிடிக்க முடியாத, தெரியாத பூர்வீகம்,குலம், கோத்திரம்,குல தெய்வம் பற்றிய தகவல் கிடைக்கும். சிலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாழ்வார்கள். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். புத்திர பேறு உண்டாகும்.

    புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரும்பிய உத்தியோகம் கிடைக்கும். என்ன நோய் என்றே தெரியாமல் குழப்பத்தில் இருந்தவர்களுக்கு நோயின் தன்மை புரியும். அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருந்த நோய் கூட அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் குணமடையும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் கூடி மகிழ்வார்கள்.

    ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

    அக்டோபர் 30, 2023 வரை ராகு பகவான் 11ம் இடத்தலும், கேது பகவான் 5ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதன் பிறகு ராகு 10ம் இடத்திற்கும் கேது 4ம் இடத்திற்கும் இடம் பெயருகிறார்கள்.சிலருக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும். பங்குச் சந்தை ஆதாயம் அதிகமாக கிடைக்கும். சொத்துச் சேர்க்கை அதிகமாகும். சொத்துக்களின் மதிப்பு உயரும்.

    பூர்வீகச் சொத்து தொடர்பான சிக்கல்கள் நல்ல படியாக முடிந்து சாதகமான தீர்ப்பு வரும். நல்ல பொருளாதார விருத்தியை, மன நிம்மதியைக் தரக்கூடிய பூமியின் அதிர்வலை சிறப்பாக உள்ள வீடு, மனை அமையும். ஏற்கனவே சொந்த வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டை புதுப்பிப்பார்கள். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும்.

    திருமணம்: ராசிக்கு 7ம் இடத்திற்கு குருப்பார்வை இருப்பதால் அஷ்டமச் சனி காலத்தில் தடைபட்ட திருமணம் குருபகவானின் நல்லாசியால் நடந்து முடியும்.

    பெண்கள்: தாய் வழி உறவினர்களிடம் சொத்து, கொடுக்கல் வாங்கல் தொடர்பான சங்கடங்கள் மறையும். வீடு, வாகன யோகம் ஏற்படுவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டாலும் முயற்சிகள் வெற்றி தரும். தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

    மாணவர்கள்: நீண்ட காலமாக தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி விரும்பிய கல்லூரியில் சென்று படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அதிக நேரம் ஒதுக்கி படித்தால் பள்ளி இறுதி தேர்வில் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் நிச்சயம் உண்டு. சில மாணவர்கள் பள்ளியை மாற்றுவார்கள்.

    மிருகசீரிஷம் 3, 4,: எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். சுணங்கிக் கிடந்த காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். அண்டை, அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தடைகள் வந்தாலும் குருப் பார்வையால் சுமூகமாகும்.புதிய தொழில் தொடங்க சாதகமான சூழல்கள் உருவாகும்.

    வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு , இடமாற்றம் உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமணத் தடை அகலும். முன்னோர்களின் நல் ஆசியும் குலதெய்வ கடாட்சமும் உண்டாகும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த தீராத சிக்கல்கள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    பரிகாரம்: தினமும் ஆஞ்சநேயர் கோவில் செந்தூரத்தை நெற்றியில் இட்டு வர வெற்றி உண்டாகும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

    திருவாதிரை: தடைபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு இப்பொழுது கிடைக்கும். பிள்ளைகள் கல்விக்காக வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். வராகடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். பாலிசி முதிர்வு தொகை, பூர்வீகச்சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி சூடுபடிக்கும். கூட்டுக் குடும்பத்தை விட்டுப் பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும் குடும்பத்தில் இணைவார். விழிப்புணர்வோடு செயல்படுவீர்கள்.தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களிடம் நிலவிய பகை விலகும். அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்களுக்கு இமாலய வளர்ச்சி உண்டு. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான நிலை நீடித்தாலும் வேலைப் பளுவும் பொறுப்புகளும் அதிகரிக்கும்.

    பரிகாரம்: ரோஜா மாலை சாற்றி சிவ பெருமானை வழிபடவும்.

    புனர்பூசம் 1, 2, 3: தோரணையாலும் சாமர்த்தியத்தி னாலும் திட்டம் தீட்டி நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். தடைபட்ட முயற்சிகள் துரித மாகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சுறுசுறுப்பும் செயல்திறனும் கூடும். நோய்த் தொல்லை குறையும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் அனுகூலமாகும்.

    பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சொத்துகளின் வாடகைதாரர் மாறலாம். தாய்மாமாவுடன் ஏற்பட்ட மன வருத்தம் மாறும். தம்பதிகளின் கருத்து வேற்றுமை குறையும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும்.

    பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் உண்டாகும். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் விலகும். கடந்தகால உழைப்பிற்கான பலன் இப்பொழுது கை கொடுக்கும். சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். சிலருக்கு இடப் பெயர்ச்சியுடன் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும்

    பரிகாரம்: தசமித் திதியில் புனித நீரால் அல்லது சுத்தமான பசும் பாலால் சிவனுக்கு அபிசேகம் செய்து வழிபட தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

    மிதுன ராசியினர் புத்தாண்டிற்கு சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் திருச்செந்தூர். முருகன் இங்கு நவகிரகங்களில் குரு பகவானின் சாராம்சத்தை கொண்டவராக இருக்கிறார். ஒரு மனிதன் வாழ்வில் வெற்றி பெற குரு பலம் மிக அவசியம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மிதுன ராசியினர் அஷ்டமச் சனியால் பட்ட இன்னல்கள் அளப்பரியது. தொழில், உத்தியோகம், பொருளாதாரம், திருமண வாழ்க்கை, குழந்தைகளால் வேதனை என எண்ணிலடங்கா துயரங்களை அனுபவித்து விட்டார்கள். ஒருவருக்கு குருபலம் இருந்தால் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற முடியும். இந்த திருசெந்தூர் கோவில் சிறந்த குரு பரிகார தலமாகும். எனவே இந்த ஆங்கிலப் புத்தாண்டில் திருச்செந்தூர் சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட பட்ட துயரம் அனைத்து விலகி இன்பம் பெருகும்.

    மிதுனம்

    ஆங்கில ஆண்டு பலன் - 2022

    மிருகசீரிஷம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3

    புத்திக்கூர்மையான மிதுன ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்துக்கள். இந்த ஆங்கிலப் புத்தாண்டில் குரு மற்றும் ராகு/கேதுவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது. இந்த புத்தாண்டு உங்கள் மனதிலிருக்கும் இனம் புரியாத பயத்தை அகற்றி தெளிவையும் துணிவையும் வழங்கும்.

    குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் அகலும். அஷ்டமச் சனியால் சிறுசிறு இன்னல்கள் சங்கடங்கள் நிலவினாலும் தன்னம்பிக்கையும் பரிபூரண சிந்தனையும் உங்களை வெற்றியாளராக்கிவிடும். கடமைக்காக சமுதாயத்திற்காக வாழ்ந்து வரும் நிலை முற்றிலும் மாறப் போகிறது. உங்களுடைய முயற்சிகளில் சிறு தடை, தாமதங்கள் நிலவினாலும் முடிவில் வெற்றி உங்களுக்கே என்பதால் மனம் தளராது செயல்படுவது அவசியம். உங்கள் திறமையை முழுமையாக பயன்படுத்தினால் இந்தப் புத்தாண்டின் எல்லா நாளும் சுபமாக அமையும். இனி இந்த ஆண்டிற்கான பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.

    குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 13, 2022 வரை குருபகவான் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் ராசி மற்றும் 5ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் அதிர்ஷ்ட தேவதை அரவணைப்பு கிடைக்கும். தடைபட்ட அதிர்ஷ்டம் துளிர் விடும்.பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் குறையும். கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என பிள்ளைகளைப் பற்றிய அனைத்து மனக்குறையும் தீரும். தவறான நட்பிலிருந்த பிள்ளைகள் மனம் மாறி குல கௌரவத்தை காப்பார்கள்.

    புத்திர பாக்கியம் கிடைக்கும். பல வருடங்களாக தீராத முன்னோர்களின் பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் அகலும். பூர்வீக சொத்துகள் தொடர்பாக நிலுவையிலிருந்த வழக்குகள் சாதகமாகும். பாகப் பிரிவினைகள் மத்தியஸ்தர்கள் மூலம் பேசப்பட்டு சுமூகமாக முடியும். வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதிலிருந்த தடைகள் அகலும். குல, இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை பூர்த்தி செய்ய ஏற்ற காலம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான தொழில் வளர்ச்சி ஏற்படும். உங்களது திறமையை வெளி உலகத்திற்கு காட்ட புதிய, புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

    ஏப்ரல் 13, 2022க்கு பிறகு 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறும் குருபகவான் அஷ்டமச் சனியையும் மீறி தொழில், உத்தியோக ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவார். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்துவீர்கள். அஷ்டமச் சனி முடியும் வரை புதிய தொழில் முதலீட்டை தவிர்க்கவும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

    தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன்பு இருந்ததை விட வருமானம் சற்று உயர்வாகவே இருக்கும். தொழில் உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் மாறும். செய்யும் தொழிலே தெய்வம் எனும் சிந்தனை மேலோங்கும். சிலருக்கு தொழில், உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாட்டுப் பயணம் செய்ய நேரும். வியாபாரமே செய்ய முடியாத அளவுக்கு கடன் பிரச்சனை, வேலை ஆட்கள் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை என பல குழப்பத்தில் இருந்தவர்களுக்கு தொழிலில் மீண்டும் எழுந்து நிற்கும் படியான மாற்றங்கள் உருவாகும்.

    சனியின் சஞ்சார பலன்கள்: 2022 முழுவதும் சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அஷ்டமாதிபதி சனி சனி ஆட்சி பலம் பெறுகிறார். மேலும் அவரே பாக்கியாதி என்பதால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. குருவின் சஞ்சாரம் சற்று சாதகமாக இருப்பதால் அஷ்டமச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும்.

    26.2.2022 முதல் 6.4.2022 வரை சனி பகவானும் 6, 11ம் அதிபதியான செவ்வாய் இணைகிறார்கள். தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக சிலர் வாழ்க்கை துணையை பிரிந்து வாழ நேரலாம் அல்லது கணவன் மனைவி கருத்து வேறுபாட்டாலும் பிரிய நேரும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு பஞ்சாயத்து நீதி மன்றம் செல்லும் நிலையை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். தவறான நட்பு வலையில் மாட்டலாம்.களத்திரம், நண்பர்கள் மூலம் வம்பு, வழக்கு, கோர்ட் கேஸ் பிரச்சனை வரும்.

    நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும். நம்பிக்கை வைத்த நண்பரே துரோகியாகலாம். பழைய கூட்டாளி விலகலாம். புதிய கூட்டாளி சேரலாம். வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவும். சிலர் தொழில் உத்தியோகத்திற்காக வெளிநாட்டு குடியுரிமை பெறலாம். சிலர் வெளிநாட்டு வேலையை விட்டு சொந்த தொழில் செய்கிறேன் என விரயத்தை உண்டு பண்ணலாம். சிலர் மன நிம்மதிக்காக ஆன்மீக இயக்கங்கள் அல்லது சங்கங்களுக்கு தங்கள் சேவையை அர்ப்பணிக்கலாம். சிலர் துக்கம் மிகுதியால் தலைமறைவாக வாழலாம்.

    ராகு/கேது பெயர்ச்சி: ஏப்ரல் 12ம் தேதி வரை 12ல் ராகுவும் 6ல் கேதுவும் இருக்கிறார்கள். 12ம் இடம் என்பது அயன, சயன, போக, விரய ஸ்தானம் மற்றும் வெளிநாட்டு பயணத்தை குறிக்கும். ராகு தான் நின்ற பாவக பலனை பிரமாண்டப்படுத்துவார். கேது தான் நின்ற பாவக பலனை சுருக்கம் தன்மை கொண்டவர். மிதுன ராசிக்கு பனிரென்டாம் இட பலன்களான விரயத்தை ராகு மிகுதிப்படுத்துவார். இன்றைக்கு சம்பாதித்த பணத்தை இன்றே செலவு செய்தால் மட்டுமே நாளைக்கு சம்பாதிக்கும் ஆசை வரும் என்ற கதையாக வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.

    குழந்தைகளின் படிப்பு, திருமணம் வீடு, வாகன செலவு என வாழ்க்கைக்கு அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து மகிழ்வீர்கள். வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரும். எது எப்படி இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.

    ஏப்ரல் 12ல் 11ம் இடமான லாபஸ்தானத்திற்கு ராகுவும் 5ம் இடத்திற்கு கேதுவும் செல்கிறார்கள். எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆயுள் ஆரோக்யம் அதிகரிக்கும். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த சட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கோர்ட், கேஸ், வக்கீல் என்று அலைந்து விரக்தி அடைந்தவர்களுக்கும் வழக்கு சாதகமாகும். இதுவரை வெளிநாட்டு வேலைக்காக பல முறை முயன்றவர்களின் வெளிநாட்டு கனவு நிறைவேறும்.

    திருமணம்: அஷ்டமத்துச் சனியின் தாக்கத்தால் தான் திருமணம் தடைபட்டுக் கொண்டு இருக்கிறது. மேலும் சனி ராசி அதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் தன் பயணப்பாதையில் சுக்கிரன், புதன் இருந்து தசா புத்தி சாதகமாக இருந்தால் திருமணத்தை நடத்தித் தருவார். இந்த நவம்பர் 2021ல் கும்பத்திற்கு மாறிய குரு ராசி, மூன்று, ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதால் ஜனன ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதகத்தை ஒப்பிடாமல் திருமணம் செய்யக் கூடாது.

    பெண்கள்: கணவனின் அன்பு, அனுசரனைக்காக ஏங்கிய பெண்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. இதுவரை புரிந்து கொள்ளாத உங்களின் கணவர் உங்களை புரிந்து கொண்டு உங்கள் மனதிற்கேற்ற மணாளனாக மாறுவார். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் மாமியாரால் புகழப்படுவீர்கள். தடைபட்ட திருமணம் நடக்கும். பண வரவில் இருந்த தடை தாமதம் விலகும். பொருளாதார முன்னேற்றம் மகிழ்சியை தரும். கணவர் மற்றும் அவர் வழி உறவினர்களால் பொருள் வரவு ஏற்படும்.

    விவசாயிகள்: இந்த ஆண்டுக்குள் மிதுன ராசி விவசாயிகள் கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு விடுவீர்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. குறுகிய கால பயிர்கள் நல்ல மகசூல் பெற்றும் தரும். நிலத்தகராறு, வாய்க்கால் வரப்பு தகராறு போன்ற பிரச்சனைக்கு சட்ட உதவியை நாடாமல் மத்தியஸ்தர் மூலம் தீர்ப்பது நலம். சரியான வேலையாட்கள் கிடைக்காமல் வேலைப்பளு மிகுதியாக இருக்கும்.

    உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகஸ்தர்களுக்கு மிகுதியான பொறுப்புகள் வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களது கடமைக்களை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். மன திருப்தி கிடைக்கும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு உத்தியோகத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

    முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: ஏப்ரல் 12 வரை ராகு விரைய ஸ்தானத்தில் இருப்பதால் சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தை தந்து பேராசையை உருவாக்கி பெரிய முதலீட்டில் மாட்டிவிட்டு தேவையில்லாத பெரும் விரயத்தை தேடித் தருவார். புதிய ஒப்பந்தங்களில் மிகுந்த கவனம் தேவை. விசுவாசமான வேலையாட்கள் உங்களை விட்டு விலகிப் போவார்கள். நம்பகமான வேலையாட்கள் இன்மை உங்களுக்கு நிம்மதியின்மையை தரும்.அஷ்டமச் சனி முடியும் வரை அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. அலைச்சல் மிகுந்த பயணங்கள் இருந்தாலும் ஆதாயமும் இருக்கும்.

    அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் கவனமாக திட்டமிட்டு காய் நகர்த்த வேண்டிய காலம். வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு சனிப் பார்வை இருப்பதால் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்கை கொடுக்க வைத்து அஷ்டமச் சனியால் வம்பு வழக்கை விட்டு வாசலில் நிறுத்துவார். உங்களின் வாக்கே உங்களை கட்டம் கட்டி நிற்க வைக்கும் என்பதால் வாக்கில் நிதானம் தேவை. கொள்கை கோட்பாடுடன் தூய்மையாக செயல்பட்டால் நிலைக்கலாம். நீடிக்கலாம்.

    மாணவர்கள்: வேற்று மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். நன்றாக படித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.எனினும் சிறிய உடல் உபாதைகளால் ஏற்பட்டு அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்களாம்.

    மிருகசீரிஷம் 3,4ம் பாதம்: உங்கள் எண்ணங்கள், லட்சியங்கள், ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற கடுமையாக உழைக்க நேரும். நிலையான தொழில், நிரந்தரமான உத்தியோகம் கிடைக்கும். செவ்வாய் கிழமை முருகனை சிவப்பு மலர் சாற்றி வழிபடவும்.

    திருவாதிரை: தேவையற்ற பணவிரயம் தம்பதிகளிடையே கருத்து வேற்றுமையை மிகைப்படுத்தும். எளிதாக பணம் கிடைக்க குறுக்கு வழியில் இறங்ககூடாது. திருவாதிரை நட்சத்திர நாளில் நடராஜரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

    புனர்பூசம் 1,2,3: 9,10 பகவானால் வேலை பளு, வேலை நேரம் அதிகமாகும். பணப்புழக்கம் அதிகமான இடங்களில் வேலை கிடைக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல் நன்று.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×