என் மலர்
மிதுனம்
வார ராசிபலன் 17.8.2025 முதல் 23.8.2025 வரை
17.8.2025 முதல் 23.8.2025 வரை
இழந்த இன்பங்களை மீட்டுப் பெறும் வாரம். தனஸ்தானத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் இது லட்சுமி நாராயண யோகமாகும். இது உங்களுக்கு மங்களகரமான பலன்களை வழங்க கூடிய அமைப்பாகும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் நிறைவேறும்.
இது சமூகத்தில் பிரபலத்தை ஏற்படுத்தும் யோகமாகும். கலைத் துறையை சார்ந்தவர்களுக்கு மிகச் சிறப்பான காலமாகும். மனதில் சந்தோசமும் அமைதியும் குடிபுகும். நிகழ்கால, எதிர்கால தேவைகள் பூர்த்தியாக கூடிய வகையில் தாராள தன வரவு உண்டாகும். தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும்.
அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள்.
அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் பலன் தரும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்துவீர்கள். புத்திர பிராப்தம் உண்டாகும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். புதன்கிழமை மகாலட்சுமி சமேத மகாவிஷ்ணுவை வழிப்பட்டால் மன நிம்மதி கூடும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






