என் மலர்tooltip icon

    மிதுனம் - வார பலன்கள்

    மிதுனம்

    வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை

    01.06.2025 முதல் 07.06.2025 வரை

    சுப விரயங்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் 12-ல் மறைவது சுப விரயத்தை தரும். வீடு, வாகனம், கல்விச் செலவு, வீட்டு உபயோக பொருட்கள் என சுப விரயமாக மாறும். வெளிநாட்டு, உத்தியோக, வேலை முயற்சியில் நல்லது நடக்கும். உங்களின் தனித் திறமையால் சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள்.

    பழைய கவுரவத்தை நிலை நிறுத்திக் கொள்வீர்கள். உடன் பிறப்புகளால் சகாயமான பலன்கள் ஏற்படும். அரசு பணியாளர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சியால் அதிக நன்மைகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் நிலவிய தடை, தாமதங்கள் விலகி நன்மைகள் கூடும். உங்களின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும்.

    பணசுழற்சி அமோகமாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் வைத்தியத்தில் சீராகும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள்.செய்யும் வேலைகளை தெளிவாக விரைவாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பில் சுட்டியாக இருப்பார்கள். ஸ்ரீ வித்யா லட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை

    25.05.2025 முதல் 31.05.2025 வரை

    எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் வாரம். ராசியில் குரு. ராசிக்கு 9ம்மிடம் முதல் 3-ம்மிடம் வரை கிரக மாலிகா யோகம் ஏற்பட்டுள்ளது. மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். விசேஷமான சுபபலன்கள் நடக்கும். முன்னோர்களின் நல்லாசியால் பூர்வ புண்ணிய பலத்தால் சொத்துத் தகராறுகள் அகலும்.

    மனக் கசப்பால் பிரிந்த சொந்தங்கள் மீண்டும் இணைவார்கள். வராக்கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும். அடமானப் பொருட்களை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். மன மகிழ்ச்சியாக உற்சாகத்துடன் இருப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்புகள் அதிகரிக்கும்.

    பதவியில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை குறைந்து உழைப்பிற்கான பலன் கிடைக்கும். அதிக முதலீடுகள் கொண்ட தொழில் நடத்துபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். முதலாளிகளுக்கு வேலையாட்களால் அனுகூலம் உண்டு. அமாவாசையன்று பச்சைப் பயிறு தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை

    18.05.2025 முதல் 24.05.2025 வரை

    சாதகமான வாரம். ஜென்ம ராசியில் குரு பகவான். அவரின் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுவதால் நிம்மதி பெருமூச்சு விடலாம். பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும். வாழ்வில் வசந்தம் உலா வரும். உற்றார் உறவினர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். சகோதர, சகோதரிகளின் நலனில் கவனம் அதிகரிக்கும்.

    பரம்பரை குலத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் புதிய மாற்றமும், ஏற்றமும் உண்டு. தொழிலை விரிவுபடுத்தவும், புதிய தொழில் ஒப்பந்தம் செய்யவும் ஏற்ற காலம் அல்ல. தந்தையின் பூர்வீகச் சொத்துக்கள் உங்கள் பெயரில் மாற்றி எழுதப்படும். கையிருப்பு மற்றும் சேமிப்புகள் கூடும். பணவசதி சிறப்பாக இருக்கும்.

    பொருளாதார நிலையிலே மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும்.

    வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். நாட்பட்ட வியாதிகளின் தன்மை புரியும். எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும். திருமணத்தடை அகலும் 20.5.2025 அன்று காலை 7.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் செயல்பாட்டில் மந்தத்தன்மை, தடை, தாமதம் இருக்கும். செவ்வாய் கிழமை வீர பத்திரரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை

    11.5.2025 முதல் 17.5.2025 வரை

    தடை தாமதங்கள் அகலும் வாரம். ஜென்ம ராசியில் குரு பகவான். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். மனதிற்கு நிம்மதியும் தன்னம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும்.

    இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். தொழிலில் கூட்டாளிகளிடம் கவனமாக செயல்படவும். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும்.

    18.5.2025 அன்று நள்ளிரவு 12.04 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும். வருமானம் ஒரு வழியில் வந்தால் செலவுகள் பல வகைகளில் ஏற்படும். பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். சித்ரா பவுர்ணமி அன்று வில்வ அர்ச்சனை செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை

    4.5.2025 முதல் 10.5.2025 வரை

    காரிய சித்தி உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெற்ற 3ம் அதிபதி சூரியனுடன் லாப ஸ்தானத்தில் இணைந்து புத ஆதித்ய யோகம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டம், பேரதிர்ஷ்டமும் ஒருங்கே கை கொடுக்கும் காலம். எடுத்த முயற்சியில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறும் ஆற்றல் உண்டாகும். உங்களின் பெயர், புகழ், உயரும். தொழில் போட்டி, பொறாமை, மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு கவுரவமான பதவி உயர்வு கிடைக்கும்.

    அரசியல் பிரமுகர்கள் ஆசிரியர்கள், ஆலோசகர்கள், நிர்வாகிகள், ஜோதிடர்கள், பத்திரிக்கையாளர்கள் சாதகமான பலன் பெறுவார்கள். பங்குச் சந்தை முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு. பற்றாக்குறை பட்ஜெட் அகலும். அடமான நகைகள் மீண்டு வரும். பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். வீடு கட்டும் பணி துரிதமடையும். ஆரோக்கிய குறைபாடு அகலும். மருத்துவச் செலவு குறையும். சகோதர, சகோதரிகளின் அன்பும், பாசமும், சந்திப்பும் மனதில் உற்சாகத்தை அதிகரிக்கும். காரியத் தடைகள் மற்றும் துரதிர்ஷ்டங்கள் விலகும். விநாயகரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை

    27.4.2025 முதல் 03.5.2025 வரை

    முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். லாப ஸ்தானத்தில் சகாய ஸ்தான அதிபதி சூரியன். எதிர்மறை எண்ணங்கள் அகலும். சில கெட்டவைகள் கூட நல்லதாக அமையும். ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுவீர்கள். உறவினர்களின் வருகையால் பகைமை மறையும்.

    குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு கட்டுதல், வாகனம் வாங்குதலில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சீராக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் மற்றும் வாழ்க்கைத்துணை மூலம் கிடைக்கும் வருமானம் குடும்ப வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். உங்களுக்கு மன அமைதியைத் தரும், வாழ்க்கைப் பாதையில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய சில புதிய நட்புகள் கிடைக்கும்.

    வாரிசுகளின் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மேல் விழுந்த கலங்கம் அகலும். ஆரோக்கிய குறைபாடு அகலும். திருமணப் பேச்சு வார்த்தை சிறு தடங்களுக்கு பிறகு சீராகும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். தினமும் விஷ்ணு சகஸ்ஹர நாமம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை

    20.4.2025 முதல் 26.4.2025 வரை

    முன்னேற்றமான வாரம். ராசிக்கு 11ல் உச்ச சூரியன். சுய ஜாதக ரீதியான தோஷங்களும், சாபங்களும் விலகும். உடல் மற்றும் மனதில் புத்துணர்வு பெருகும். ஆடை, ஆபரணங்கள், சொத்து, சுகம் கால்நடை பாக்கியங்கள் கிடைக்கும். மனைவி மற்றும் தொழில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடலாம்.

    அடிமட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும். குறைந்த உழைப்பில் நிறைந்த ஊதியம் கிடைக்கும். கடந்த கால இழப்புகளில் இருந்து மீளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள் முக்கிய தொண்டர்களுடன் கட்சி வளர்ச்சிக்கான சந்திப்புகளை நடத்துவார்கள்.

    20.4.2025 மாலை 6.04 முதல் 23.4.2025 அன்று காலை 12.31 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பய உணர்வும் மிகுதியாக இருக்கும். எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல் படவும். முக்கியமான சந்திப்புகளைத் தவிர்க்கவும். பட்டீஸ்வரம் துர்க்கையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை

    13.4.2025 முதல் 19.4.2025 வரை

    நிம்மதியான வாரம். ராசிக்கு பத்தில் நான்கு கிரகச் சேர்க்கை. இது மிதுனத்திற்கு மிகச் சாதகமான அமைப்பாகும். குடும்ப உறவுகள் ஒருவரின் பேச்சிற்கு மற்றவர் கட்டுப்படுவார்கள். வருமானம் இல்லாதவர்களுக்கு நிரந்தர வருமானத்திற்கான வழி கிடைக்கும். தொழிலில் மதிப்பு, மரியாதை உயரும். தடைபட்ட வாடகை வருமானம் வரும். உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து தொழில் மந்தம், பொருளாதாரப் பிரச்சினை மனக்கஷ்டம் ஆகியவை மாறும்.

    வேலை பார்த்த இடத்தில் உங்களை சிரமப்படுத்தியவர்களின் கை தாழ்ந்து உங்கள் கை ஓங்கும். பெண்கள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பார்கள். விலகிச் சென்ற உறவுகள், உடன் பிறந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். சிலரின் காதல் திருமணத்தில் முடியும். புதிய சொத்துக்கள் வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். தந்தையின் அன்பும் ஆதரவும் மன நிம்மதி தரும். குழந்தைகளால் நன்மை உண்டு. கடன் வாங்குவதை தவிர்க்கவும். காஞ்சி காமாட்சியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை

    06.4.2025 முதல் 12.4.2025 வரை

    பல புதிய மாற்றங்கள் உண்டாகும் வாரம். ராசி மற்றும் சுக ஸ்தான அதிபதி புதன் வக்ர நிவர்த்தி ஆவதால் எண்ணங்கள், யோசனைகள், சிந்தனைகள் அனைத்தும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.புத்தி தெளிவு ஏற்பட்டு செயல்திறன் அதிகரிக்கும்.மலை போல் வந்த துயர்கள் பனி போல் விலகும்.தொழில் வகையில் அரசு அதிகாரிகளை அனுசரித்து ஆதாயம் பெறுவீர்கள். மன உளைச்சலான பணியிலிருந்து விடுபட்டு புதிய நல்ல பணியில் சேருவீர்கள். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.

    கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும்.வீடு, வாகன வசதிகள் மேம்படும். அழகு, ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு விரும்பிய வேலையில் சேர உத்தரவு வரும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எதிர்பார்த்த குடியுரிமை கிடைக்கும். வீட்டில் திருமணம் மற்றும் சுப வைபவங்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். தம்பதி களுக்குள் ஒற்றுமை உணர்வு அதிக மாகும். மகா விஷ்ணுவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை

    30.3.2025 முதல் 5.4.2025 வரை

    உற்சாகமான வாரம். ராசிக்கு 4,7,12ம் மிடத்திற்கு சனி பார்வை உள்ளது.எதிர்காலம் குறித்து சில தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான இடங்களுக்கு பயணம் செய்து சந்தோஷமாக இருப்பீர்கள்.பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மை ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் முன்னேற்றங்கள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடங்களில் கவனம் வேண்டும். கால்நடை விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

    மனதிற்குப் பிடித்த செயல்களை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான விஷயங்களை சிந்தித்து செயல்படுத்துவீர்கள்.அலுவலக பணிகளை வழக்கத்தை விட குறைவான நேரத்தில் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். தொழில் நிறுவனத்திற்கு நம்பிக்கையும், நன்றியும் உள்ள புதிய வேலையாட்கள் அமைவார்கள். திருமணத்தடை அகலும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். கருட வழிபாடு செய்வதால் இன்னல்கள் அகலும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    30.3.2025 முதல் 05.4.2025 வரை

    உற்சாகமான வாரம். ராசிக்கு 4,7,12ம் மிடத்திற்கு சனி பார்வை உள்ளது. எதிர்காலம் குறித்து சில தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான இடங்களுக்கு பயணம் செய்து சந்தோஷமாக இருப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மை ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் முன்னேற்றங்கள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடங்களில் கவனம் வேண்டும். கால்நடை விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்குப் பிடித்த செயல்களை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான விஷயங்களை சிந்தித்து செயல்படுத்துவீர்கள்.

    அலுவலக பணிகளை வழக்கத்தை விட குறைவான நேரத்தில் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். தொழில் நிறுவனத்திற்கு நம்பிக்கையும், நன்றியும் உள்ள புதிய வேலையாட்கள் அமைவார்கள். திருமணத்தடை அகலும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். கருட வழிபாடு செய்வதால் இன்னல்கள் அகலும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை

    23.3.2025 முதல் 29.3.2025 வரை

    மகிழ்ச்சியான வாரம். 10-ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். இந்த வாரம் 10-ம்மிடத்தில் 6 கிரகங்கள் சேருகிறது. மாமியாரை அனுசரித்து செல்லுங்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் கடனாக கொடுத்த பணம் வசூலாகும். மற்றவர்களின் உதவி, குறுக்கீடு இல்லாமல் முக்கியமான வேலைகளை நீங்களே கையாள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, வேலை மாற்றம், இடமாற்றம் பற்றிய சாதகமான தகவல் வந்து சேரும்.

    குடும்பத்துடன் பொழுது போக்கு சுற்றுலா மையங்களுக்குச் சென்று நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கிய தொல்லைகள் அகலும். திருமணத் தடைகள் அகலும்.24.3.2025 அன்று காலை 10.25 முதல் 26.3.2025 அன்று மாலை 3.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். வாக்கு வாதங்கள், விவாதங்களைத் தவிர்க்கவும். அதுதான் எல்லா பிரச்சிினைகளுக்கும் அருமருந்து.பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வர கர்ம வினைத் தாக்கம் குறைந்து தடைக் கற்கள் படிக் கற்களாக மாறும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×