என் மலர்
மிதுனம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
மிதுனம்
குருபெயர்ச்சி பலன்-2024
மிதுனம்- விரய குரு 50%
புத்தி கூர்மை நிறைந்த மிதுன ராசியினரே!
இதுவரை லாப ஸ்தானத்தில் நின்று சுப பலன்களை வழங்கிய குரு பகவான் மே 1, 2024 முதல் அயன, சயன, விரய ஸ்தானமான 12ம்மிடம் செல்கிறார். சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் நிற்கிறார். கேது பகவான் சுக ஸ்தானத்தில் நிற்கிறார். ராகு பகவான் தொழில் ஸ்தானத்தில் நிற்கிறார்.
விரய குருவின் பொது பலன்கள்
மிதுன ராசிக்கு 7, 10ம் அதிபதியான குரு பகவான் 12ம்மிடமான மோட்ச ஸ்தானம், விரய ஸ்தானம், வெளிநாட்டுப் பயணம் பற்றிக் கூறுமிடம். மனது பண்படும். சேவை மனப்பான்மை அதிகமாகும். மனம் பற்றற்ற நிலைக்கு செல்லும். எதிர்பார்ப்புகள் குறையும்.
தனித்திறமையால் உன்னதமான உயர்வான நிலையை அடையப் போகிறீர்கள்.வாழ்க்கையில் செழுமை அடையத் தேவையான நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரப்போகிறது. வாழ்வாதாரம் உயரப் போகிறது. மற்றவர்களுடைய உணர்வுகளை மதித்து நடந்து கொள்வீர்கள்.
உங்கள் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்கவும் தயங்க மாட்டீர்கள். உண்மை, நாணயம், சத்தியம், மோட்சம் பற்றிய சிந்தனை மிகையாகும்.தனிமையை, அமைதியை மனம் விரும்பும்.
ஒருவருக்கு ஏற்படும் விரயத்தை சுப விரயம் அசுப விரயம் என இரண்டாக வகைப்படுத்தலாம். சுப விரயம் என்றால் மன நிறைவோடு குடும்பத்தின் நிகழ்கால எதிர்கால தேவைக்காக செய்யப்படும் முதலீடாகும். அசுப விரயம் என்றால் காலத்தின் கட்டாயத்திற்காக விருப்பமில்லாம் செலவிடும் தொகையாகும்.
குரு கடாட்சத்தால் வீடு, வாகனம்,நகை, ஆடம்பர பொருட்கள், பிள்ளைகளின் சுப செலவு என சுப விரயங்களால் மனம் மகிழப்போகிறது. படுத்தவுடன் எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக உறங்குவீர்கள். வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்
விரய குருவின் 5ம் பார்வை ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் பதிகிறது. 4ம்மிடம் என்பது சுக ஸ்தானம்.சொத்து சுகம் ஆரோக்கியம் பற்றிக் கூறுமிடம். உடல் சோர்வு, தூக்கமின்மை விலகும்.தாயின் ஆரோக்கிய குறைபாடு வைத்தியத்தில் சீராகும். சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பூர்வீகச் சொத்துக்கள் பங்கு பிரிக்கப்படும். அடமான நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். விலை உயர்ந்த அழகு, ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.தாய் வழி உறவுகளிடம் நெருக்கம் அதிகரிக்கும்.பொதுச் சேர்வையில் ஆர்வம் அதிகமாகும்.
வீட்டில் அமைதி நிலவும், உல்லாச பயணம் செல்லக்கூடிய நேரம். வெளிநாட்டுச் சுற்றுலா சென்று ஆனந்தம் அடைவீர்கள். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். மூத்த சகோதர சகோதரிகள். மூலம் ஆதாயம் ஏற்படும்.குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும். குடும்பம் ஒரு கோவிலாக இறைவனின் இருப்பிடமாக மாறும்.
குருவின் ஏழாம் பார்வை பலன்கள்
ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு குருவின் 7ம் பார்வை பதிகிறது.வறுமை, தரித்திரம், இயலாமை விலகி உங்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் மிளிரப்போகிறது. கடன் தொல்லைகள் முற்றிலும் அகலும். வராக்கடன்கள் வசூலாகும். கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கொடுத்து விடுவீர்கள். பணம் எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் வந்து விடாது.
கடன் இல்லா வாழ்க்கை பெரும் பாக்கியம் குருவருளால் உங்களுக்கு சாத்தியமாகும். கடனை வளரவிடாமல் பார்த்து கொள்ளவது வளமான எதிர்காலத்தை உருவாக்கும். பொருளாதார வரவை திட்டமிட்டு செயல்படுத்த குருபகவான் பக்கபலமாக இருப்பார்.
உடல் ஆரோக்கியம் சீராகும். நோயின் தன்மைக்கு தகுந்த வைத்தியம் கிடைக்கும். ஆச்சரியப்படத் தகுந்த வகையில் நோயிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.செய்வினை. கண் திருஷ்டி அகலும். அக்கம்பக்கம் உள்வர்களிடம் சுமூகமான நல் இணக்கம் ஏற்படும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை ஏற்படும். எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் செயல்கள் உங்களுக்கு சாதகமாகும்.
குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்
குருவின் 9ம் பார்வை ஆயுள், வம்பு, வழக்கு ஸ்தானமான அஷ்டம ஸ்தானத்தில் பதிகிறது. ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு அகலும்.வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு ஏற்படும். பூர்வீக சொத்து தொடர்பான வில்லங்கம் முடிவுக்கு வரும். மன வேதனை மற்றும் அவமானப் படுத்திய வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும். புதிய அணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கணவனுக்கோ, மனைவிக்கோ திடீர் அதிர்ஷ்டம், பெரும் பணம் போன்றவை லாட்டரி, பங்குச் சந்தை, புதையல் , உயில் மூலம் கிடைக்கலாம்.ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உயர் அதிகாரிகளால் வேலையில் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை அடைக்கும்.
அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மத்திய அரசு வேலை கூட கிடைக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும்.
குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024- 13.6.2024 வரை)
மிதுன ராசிக்கு 3ம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சிக்கலான காரியங்கள் கூட நல்ல விதமாக முடியும். மாமனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.தொலைந்து போன முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள் கிடைக்கும். ஊடகங்களின் பணி புரிபவர்களின் திறமை போற்றப்படும்.நூல்கள் இயற்றுதல், நாவல் எழுதுதல் போன்றவற்றில் நாட்டம் ஏற்படும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். மந்த தன்மை விலகும்.உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.
குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024. வரை)
மிதுன ராசிக்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் பேச்சால் வாக்கு வன்மையால் எதையும் சாதிப்பீர்கள் பேச்சில் தைரியம், தன் நம்பிக்கை உண்டாகும்.
வாக்குவன்மை வாக்குப்பலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனை கேட்க ஒரு கூட்டம் உருவாகும். பேச்சுத் திறமையால் வருமானத்தை அதிகரிப்பீர்கள். குடும்பத்திற்கு நிலையான நிரந்தரமான வருமானத்திற்கான வழி தென்படும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும்.
குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள் (21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை)
மிதுன ராசிக்கு 6, 11ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கர்ம வினைத் தாக்கத்தால் ஏற்படும் பரம்பரை வியாதிக்கு மருந்து சாப்பிடுபவர்களுக்கு நோய் நிவாரணம் ஏற்படும். நீண்ட நாட்களாக என்னவென்றே தெரியாத நோய் தாக்கம் எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும். வட்டிக்கு வட்டி கட்டி சமாளிக்க முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும்.
குருவின் வக்ர காலம் (மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)
வக்ரமடையும் காலத்தில் முன் கோபத்தால் சில முன்னேற்றத் தடை உருவாகலாம். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகளால் பணிச் சுமை அதிகமாகும். மன நிறைவு இருக்காது. மலைபோல் நம்பிய சில முக்கிய நபர்கள் கடைசி நேரத்தில் காலை வாரி விடலாம். கடனுக்கு பயந்து மன சஞ்சலத்தில் ஆரோக்கிய குறைபாட்டை வரவழைத்துக் கொள்வார்கள்.
ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2.2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் எதிலும் நிதானத்தோடு நேர்மறை எண்ணத்துடன் செயல்பட்டால் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற இனம் புரியாத மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.
திருமணம்
பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் பாக்கியாதிபதி சனி பகவான் மிதுனத்திற்கு அவரவரின் வயதிற்கு ஏற்ப நடைபெற வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களை இந்த ஒரு வருடத்தில் வழங்கிவிடுவார். எனவே சுய ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும். காதல் திருமணத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சிலருக்கு நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். நின்று போன திருமணம் பேச்சு வார்த்தையில் வெற்றி தரும். மறுமண முயற்சி பலிக்கும்.
மாணவர்கள்
ஒருவரின் கல்வி நிலையைப் பற்றிக் கூறும் 4ம் மிடத்திற்கு குருப் பார்வை உள்ளது. அங்கே ஞானகாரகன் கேது பகவான் உள்ளார். 10, 12ம் வகுப்பு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு எந்த முறையில் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்ற அனுபவ உண்மை புலப்படும்.
பெண்கள்
பெண்கள் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் ஆனந்தமாக இருப்பார்கள். குடும்பம் நலனுக்காக உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் மறைமுக வருமானம் அதிகரிக்கும்.சில பெண்களுக்கு புதிய சுய தொழில் தொடங்கும் ஆர்வம் உருவாகும். பெண்களுக்கு தாய் வழிச் சீதனம் கிடைக்கும்.உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வர்.

பரிகாரம்
விரய குருவால் ஏற்படும் விரயங்களை சுப மாக்க லட்சுமி நாராயணரை வழிபடுவது நல்லது.
மிதுனம்
குருப்பெயர்ச்சி பலன்கள் 2023
மிதுன ராசி அன்பர்களே இதுவரை ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் நின்று சுப பலனை வழங்கிய குரு பகவான் 11ம்மிடமான லாப ஸ்தானம் சென்று தொடர்ந்து ஆதரவு வழங்கவுள்ளார். அக்டோடர் 30, 2023 வரை ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.
லாப குருவின் பலன்கள்:
மிதுன ராசிக்கு குரு பகவான் 7,10ம் அதிபதி.பதினொன்றாமிடம் என்பது லாப ஸ்தானம். உபரி லாபத்தைக் கொடுக்குமிடம். 10மிடமான தொழில் ஸ்தானத்தில் நின்று தொழில் வளர்ச்சியை அதிகரித்த குரு பகவான் அதை பல மடங்கு லாபமாக பெருக்கித் தரவுள்ளார். 7,10ம் அதிபதி குரு லாப ஸ்தானம் செல்வது மிகச் சிறப்பு. எதிர்பாராத மிகப் பெரிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப்போகிறது. வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். இதுவரை வருமானம், தொழில் பற்றிய சிந்தனையற்றவர்கள் கூட வளர்ச்சி பாதை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள்.
பாக்கியாதிபதி சனியின் பார்வை பெறுவதால் குரு, சனி சம்பந்தம் உங்களுக்கு வரமாக செயல்படும் காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது.தன்னம்பிக்கை தைரியத்தோடு செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். சித்தப்பா, மற்றும் மூத்த சகோதரருடன் இணைந்து குலத் தொழில் செய்பவர்களின் வளர்ச்சியை அளவிட முடியாது. சுய ஜாதக தசா புத்தி சாதகமாக இருந்தால் இமாலய வளர்ச்சி நிச்சயம். லாப குருவாலும், பாக்கியச் சனியாலும் ஆடம்பர, சொகுசு வாழ்க்கையில் நாட்டம் மிகுதியாகும். இழுபறியாக இருந்த வழுக்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். கடன் தொல்லைகள் குறையத் துவங்கும். முதலீடுகள், சேமிப்புகள் அதிகமாகும். வங்கிகள், நிதி நிறுவனங்கள், வட்டித் தொழில் செய்பவர்களின் வருமானம் பல மடங்கு உயரும் . நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து சாதனை படைப்பீர்கள்.இதுவரை வாழ்க்கையில் செட்டிலாகாத மிதுன ராசியினர் பொருளாதாரத்தில் தன் நிறைவடைந்து செட்டிலாகுவீர்கள். நோயிலிருந்து பரிபூரண குணம் கிடைக்கும். மேலும் அஷ்டமச் சனியின் காலத்தில் ஏற்பட்ட அனைத்து இழப்புகளும் ஈடாகும்.
குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:
ராசிக்கு மூன்றாமிடமான வெற்றி ஸ்தானம், முயற்சி, சகாய ஸ்தானத்தில் குருவின் ஐந்தாம் பார்வை பதிவதால் வேலை, தொழிலுக்காக இடம் பெயருவீர்கள். சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றலாம். தடை தாமதங்கள் விலகும். அனைத்து விதமான முயற்சிகளும் பலிதமாகும். உடன் பிறப்புகளுடன் நிலவிய சலிப்பு, சங்கடங்கள் சீராகும். எதிர்காலம் பற்றிய அச்சம் விலகி மனதில் தைரியம் குடிபுகும். செவித்திறன் குறைபாடு சீராகும். இழுபறியாக கிடந்த பேச்சு வார்த்தைகள், பஞ்சாயத்துகள் முடிவிற்கு வரும். பாகப்பிரிவினை, உயில் எழுத உகந்த நேரம். அண்டை அயலாருடன் உள்ள எல்லைத் தகராறு முறையான ஆவணங்கள் மூலம் சீராகும். அடமான சொத்துக்கள், நகைகள் மீண்டுவரும். உங்கள் பெயர், புகழ், பரவும். வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்களின் பெயர், புகழ் தகவல் தொடர்பு சாதனங்கள் யூடியுப், பேஸ்புக், டிவி, பத்திரிக்கைகள் மூலம் வெளி வரும்.
குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:
ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருப் பார்வை பதிகிறது. ஐந்தாமிடம் என்பது பதவி ஸ்தானம். பூர்வ புண்ணிய ஸ்தானம். கவுரவப் பதவியில் நிலவிய பிரச்சனைகள் சீராகும். சிலருக்கு புதியதாக கவுரவப் பதவி கிடைக்கும். காதல் திருமணத்திற்காக உங்களை தள்ளி வைத்த குடும்ப உறவுகள் ஏற்றுக் கொள்வார்கள். இதுவரை புத்திர பேறு இல்லாதவர்களுக்கு புத்திரப் பேறு உண்டாகும். ஒரே குழந்தை இருந்தவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். பூர்வீகம், குலதெய்வம் தெரியாதவர்களுக்கு அது பற்றிய தகவல் கிடைக்கும். குல தெய்வ கோவிலில் முதல் மரியாதை கிடைக்கும்.பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகள் முடிவிற்கு வரும். சொத்தில் முறையான பங்கீடு கிடைக்கும். பங்குச் சந்தையில் ஆர்வம் அதிகரிக்கும். நிரந்தர வருமானத்திற்கு வழி பிறக்கும். சிலருக்கு புதியதாக எதிர்பாலின நட்பு கிடைக்கும்.
குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:
ராசிக்கு ஏழாமிடத்தில் குருவின் ஒன்பதாம் பார்வை பதிவதால் சுய ஜாதக ரீதியான பாதிப்பு அறிந்து உரிய பரிகாரம், வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க 30,40வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் திருமணத் தடை அகலும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் ஒன்று கூடுவார்கள். அஷ்டமச் சனியின் காலத்தில் விவகாரத்து பெற்ற சிலர் மீண்டும் சேர்ந்து வாழத்துவங்குவார்கள்.சுய ஜாதக ரீதியாக பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பித்ருகள் வழிபாடு மற்றும் திலஹோமம் செய்து பாக்கிய பலனை அதிகரிக்க உகந்த காலம் தடைபட்ட பழைய நண்பர்களின் நட்பு மீண்டும் கிடைக்கும். பிரச்சனையாக இருந்த பழைய தொழில் கூட்டாளி விலகுவார் தகுதி, திறமை, பொருளாதார வசதி நிறைந்த புதிய தொழில் கூட்டடாளி கிடைப்பார். சிலருக்கு வாழ்க்கைத் துணை அல்லது மாமனார் மூலம் அதிர்ஷ்ட பணம் கிடைக்கும்.
அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.4.2023 முதல் 21.6.2023 வரை
கோட்சாரத்தில் ராசிக்கு 5ல் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆலயத் திருப்பணி செய்து மகிழ்வீர்கள். குல, இஷ்ட, உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும். பிள்ளைகளுக்கு சுப காரியம் செய்து பார்க்கும் பாக்கியம் கிட்டும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலை அகலும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும். சிலர் மாந்தரீகம் கற்பார்கள்.
பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை
பரணி சுக்கிரனின் நட்சத்திரம். மிதுன ராசிக்கு 5,12ம் அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வெளிநாட்டு வேலை தொடர்பான முயற்சி பலிக்கும்.வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து சில மாதம் தங்கிச் செல்லலாம்.வீடு, வாகன யோகம் உண்டாகும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். பாகப்பிரிவினை துரிதமாகும். சொத்துக்கள் மற்றும் சேமிப்புகளின் மதிப்பு உயரும். உற்றார், உறவினர்கள் வியக்கும் வகையில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை
கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். ராசிக்கு மூன்றாம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சிக்கலான காரியங்கள் கூட நல்ல விதமாக முடியும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாமனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். தொலைந்து போன முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள் கிடைக்கும்.
குருவின் வக்ர பலன்கள் :
4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் தொழில் போட்டி அதிகரிக்கும். தொழிலில் லாபம் குறையும். மூத்த சகோதரம் மற்றும் சித்தப்பா மூலம் சில அசவுகரியங்ள் உண்டாகும்.
பெண்கள் :
குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் நடத்த மனக் கசப்பான பிரச்சனைகள் படிப்படியாக மாறும். பழைய ஆபரணங்களைக் கொடுத்து விட்டு புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள். கணவன், மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் உத்தியோக ரீதியான முன்னேற்றம் உண்டு.
மாணவர்கள்:
உடல் சோர்வு மனச் சோர்வு நீங்கும். கல்வியில் மந்த நிலை விலகி சுறுசுறுப்புடன் படிக்க முடியும். படிக்கும் பாடம் ஆழ் மனதில் பதியும்.பெற்றோர்களுக்கும், கல்வி நிறுவனத்திற்கும் நல்ல பெயர் எடுத்து தருவீர்கள். மேற்படிப்பிற்கு அரசின் சலுகைகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் :
உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் வருவதோடு உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பணி உயர்வு, ஊதிய உயர்விற்கான வாய்ப்பு உள்ளது. அரசு உத்தியோகத்திற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். பணி நிரந்தரமாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். மனம் மகிழும் இடமாற்றம் உண்டு.
ராகு/கேது பெயச்சி :
அக்டோபர் .30, 2023ல் ராகு பத்தாம் இடத்திற்கும். கேது நான்காமிடத்திற்கும் செல்கிறார்கள். எனவே சொத்து தொடர்பான முயற்சிகளில் ராகு/கேது பெயர்ச்சியில் கவனத்துடன் இருப்பது நல்லது. வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் பணப் பரிவர்த்தனையில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பரிகாரம் :
தொழில் லாபம் எல்லாக் காலத்திலும் கிடைக்காது. பணம் கிடைப்பது எளிதல்ல. பணம் தேடி வரும் பொழுது அதை சேமித்து வைத்தால் கஷ்ட காலத்திற்கு உதவும். மிதுன ராசியினர் புதன்கிழமை துளசி அர்ச்சனை செய்து சக்ரத்தாழ்வாரை வழிபட சுய ஜாதக ரீதியான தோஷம் விலகி லாப குருவால் நன்மைகள் அதிகரிக்கும். ஜென்ம நட்சத்திர நாளில் திருநங்கைகளின் உணவு, உடை போன்ற முக்கியத் தேவையறிந்து உதவ வேண்டும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023
புத்திக் கூர்மையான மிதுன ராசியினரே குருபகவான் 10ம் இடத்திலும், ராகு பகவான் 11ம் இடத்திலும், கேது பகவான் 5ம் இடத்திலும் சனி பகவான் 8, 9ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
மிதுன ராசிக்கு குரு பகவான் 7,10 அதிபதி. இதுவரை உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்த குரு பகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். 10ம் இட குரு கேந்திராதிபத்திய தோஷத்தை தருவரா? 10ம் இட குரு பதவியை பறிப்பாரா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டாகும். உங்களின் 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு 17.1.2023 வரை சனிப் பார்வை இருப்பதால் கேந்திராதிபத்திய தோஷம் செயல்படாது.
தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்தப் போகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் பல விதமான யோகங்கள் கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு மனிதன் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ முதல்தரமான யோகமாக கூறப்பட்டுள்ளது தர்ம கர்மாதிபதி யோகம். அதாவது குரு மற்றும் சனி சம்பந்தம் தர்மகர்மாதிபதி யோகமாகும். அதாவது உங்களின் 9ம் அதிபதி சனிக்கும் 10ம் அதிபதி குருவிற்கும் கோட்சார ரீதியான சம்பந்தம் ஏற்படுவதால் முன்னோர்களின் பூர்வ புண்ணியம் உங்களைக் காப்பாற்றும் காலம். 10ல்குரு வரும் போது பதவி பறி போகும் என்பது ஜோதிட விதி. அது உண்மை தான். ஆனால் 10 அதிபதி குருவிற்கு சனி பார்வை இருப்பதால் இந்த குருப்பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு பெரும் வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. 10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 10ம் இடத்திற்குச் சனி, குரு சம்பந்தம் இருப்பதால் பதவி பறிபோகாது.
தொழில் ஸ்தானத்தைப் பார்க்கும் சனி தொழில் ஞானத்தை உங்களுக்கு வழங்குவார், வியாபாரத்தை எப்படி நடத்துவது, எப்படி. தக்க வைத்து கொள்ள வேண்டும். கிடைத்த பதவியை எப்படி பொக்கிஷம் போல் காக்க வேண்டும் என்பதை அனுபவ ரீதியாக புரிய வைப்பார். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் வாங்கிய கடன் தொகையையும் வட்டியுடன் திருப்பி செலுத்து காலம். கடன்காரன் எவனாது போன் பண்ணி திட்டுவானோ என்று போனை எடுக்க பயந்தவர்கள் எல்லாம் கெத்தாக போனை எடுத்து பேசுவீர்கள். காசோலை தொடர்பான வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். கடன் சுமையை குறைக்க அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். இந்த காலகட்டத்தி இழந்த வேலை மீண்டும் கிடைக்கும்.
5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 2ம்மிடமானதன ஸ்தானத்தில் பதிகிறது. இதனால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் வலிமை பெறுகிறது. தனவரவு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். பொருளாதார நிலையில் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். உங்களின் தொழில், குடும்ப சொத்து, வராகடன் வசூல் என பல்வேறு வழிகளில் பணம் வந்து குவியும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு.
அதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும். தங்களின் பேச்சாற்றலால் உங்களின் காரியங்களை சாதிக்க முடியும்.
7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை ராசிக்கு 4ம் இடமான சுக ஸ்தானத்திற்கு உள்ளது. தாய் வழி உறவினர்களிடம் சொத்து, கொடுக்கல் வாங்கல் தொடர்பான தொடர்பான சங்கடங்கள் மறையும். வீடு, வாகன யோகம் ஏற்படுவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டாலும் முயற்சிகள் வெற்றி தரும். கடன் பெற்றாவது சொந்த வீடு வாகன யோகத்தை அடைவீர்கள். முறையான ஆவணங்கள் உள்ள சட்டரீதியான சொத்து, வாஸ்து குற்றம் இல்லாத மனை உங்களுக்கு கிடைக்கும். நல்ல பொருளாதார விருத்தியை, மன நிம்மதியைக் தரக்கூடிய பூமியின் அதிர்வலை சிறப்பாக உள்ள வீடு, மனை அமையும். ஏற்கனவே சொந்த வீட்டில்குடியிருப்பவர்களுக்கு வீட்டை புதுப்பிப்பார்கள். அடமானத்திலிருக்கும் நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும். வீடு, வாகனம், மனை தொடர்பான சுபவிரையம் ஏற்படும் காலம்.
9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு உள்ளதால் எதிரிகளை வெல்லக் கூடிய ஆற்றல் உண்டாகும்.
கண் திருஷ்டி தோஷம், செய்வினைக் கோளாறு அகலும். உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும். சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரும்பிய உத்தியோகம் கிடைக்கும்.என்ன நோய் என்றே தெரியாமல் குழப்பத்தில் இருந்தவர்களுக்கு நோயின் தன்மை புரியும். அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருந்த நோய் கூட அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் குணமடையும். மிதுன ராசியை சேர்ந்த மருத்துவர்களின் புகழ் கொடி கட்டி பறக்கும். அவர்கள் தொட்டாலே நோய் குணமாகும். கைராசி மருத்துவர் என்ற பெயர் கிடைக்கும். பலர் 6ம்மிடம் என்றால் பொருள் கடன் என்று நினைக்கிறார்கள். பிறவிக்கடன், பொருள் கடன் சேர்ந்தது தான் 6ம் பாவகம். குருவின் 9ம் பார்வைக்கு பாக்கிய பலன்களை அதிகரிக்கும்சக்தி உள்ளது. குருவின் 9ம் பார்வை 6ம் இடத்திற்கு இந்த கால கட்டத்தில் முன்னோர்களுக்கு முறையான பித்ருக்கள் பூஜை செய்து வழிபட பிறவிக்கடன் மற்றும் பொருள் கடன் தீரும்.
குருவின் வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை
குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலம் குல தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். ஒரு சில குடும்பங்களில் குல தெய்வ கோவிலில் யாருக்கு முதல் மரியாதை என்ற கருத்து வேறுபாடு ஏற்படும். ஒரு சிலருக்கு பூர்வீகத்தை விட்டு இடம் பெயற நேரும். பூர்வீகம் தொடர்பான அனைத்து செயல்களிலும் தடை தாமத்தை தருவார். மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கிறோம். தீர்க்கமான முடிவு செய்யும் திறன் குறையும். மன உளைச்சல் காரணமாக யாரைப் பார்த்தாலும் கோபம், டென்சன் மிகுதியாகும்.
பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகளும் தலை தூக்கும். முன்னோர் வழி சொத்துக்களை முறைப்படுத்துவதில் கருத்து வேறுபாடு மிகும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு பங்கு குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புதிய முதலீடு செய்ய ஏற்ற காலம் அல்ல. மிகப் பெரிய தொழிலில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்தபலன் பொருந்தும். முதலீட்டை காப்பதில் கவனம் தேவை. 5ம் இடத்திற்குசனி பார்வை இருப்பதால்குழந்தை பாக்கியம் ஏற்பட கால தாமதம் ஏற்படும் என்பதால் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடுபவர்கள் சுயஜாதகத்தில் உங்களின் நேரம், காலம் அறிந்து செயல்படுதல் நலம். ஒரு சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதி வந்து மன சஞ்சலத்தை அதிகரிக்க செய்யும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
பெண்கள்: சுய தொழில் செய்யும் பெண்களுக்கு செல்வமும் புகழும் பெருகிவரும் யோகமான காலம்.பிள்ளைகளால் கிடைக்கும் பெருமையும் கணவரின் அன்பான ஆதவும் உங்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் தொடரும். விருந்துகளும் மனமகழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.இன்ப சுற்றுலா செல்வது வீட்டை அழகுபடுத்துவது போன்ற மன மகிழும் நிகழ்வுகளால் மனதும் உடலும் புத்துணர்வு பெறும்.
பரிகாரம்:வீட்டில் ஆஞ்சநேயர் படத்திற்கு துளசி சாற்றி வழிபடவும். புதன்கிழமை காலை 9&-10 மணி வரையான குரு ஓரையில் பிரம்மாவின் முன் உங்கள் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






