வார ராசிபலன் 15.2.2026 முதல் 21.2.2026 வரை

Published on

மகரம்

வாழ்வில் வசந்தம் உலா வரும் வாரம். ராசியில் உள்ள உச்ச செவ்வாய் இந்த வாரத்தில் மட்டுமே சஞ்சரிப்பார். செவ்வாயின் இந்த சஞ்சாரம் மிகச் சாதகமான திருப்புமுனையான நல்ல பலன்களை வழங்கும். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் கூடிவரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மன நிறைவுடன் இருப்பீர்கள்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைக்கக்கூடும். தாய், தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். தடைபட்ட வெளி நாட்டு பயணம் சாதகமாகும். குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்க்கை ஏற்படும். அந்த புது வரவு களத்திரமாகவோ குழந்தையாகவோ இருக்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி வெற்றி தரும். எட்டாமிட கேதுவால் வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அமாவாசை அன்று விரதம் இருந்து உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவி செய்யவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com