என் மலர்tooltip icon

    மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    முயற்சி அனைத்தையும் முடித்துக் காட்டும் மகர ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகி பலம்பெற்று சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இருப்பினும் செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் தோன்றும்.

    துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானம் என்னும் 10-ம் இடத்திற்கு ஐப்பசி 2-ந் தேதி செல்கிறார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானப் பற்றாக்குறை அகன்று, வசதி வாய்ப்புகள் பெருகும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்கும் சூழ்நிலை உருவாகும். பெண் பிள்ளைகளின் திருமணம் சிறப்பாக நடைபெற வழிபிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும்.

    துலாம் - புதன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். 6-க்கு அதிபதி 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் உண்டு. சில காரியங்களை உடனுக்குடன் முடித்துக் காட்டுவீர்கள். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும், சலுகைகளும் கிடைக்கும்.

    மிதுன - செவ்வாய் வக்ரம்

    ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். அதுமட்டுமின்றி செவ்வாயின் பார்வையும் மகரத்தில் உள்ள சனி மீது பதிகிறது. எனவே அதிக கவனம் தேவைப்படும் நேரம் இது. நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். உடன்பிறப்புகளும் உடன் இருப்பவர்களும் உதவி செய்வதாகச் சொல்லி, கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.

    விருச்சிக - புதன் சஞ்சாரம்

    ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வரலாம். ஆயினும் ஏழரைச் சனியும், ஜென்மச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுவதால் எதையும் ஏற்றுக் கொள்ள இயலாமல் இடையூறுகள் வந்து சேரும். சனிக்குரிய பரிகாரம் செய்வது நல்லது.

    விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

    ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் ெசல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். குறிப்பாக தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வருவீர்கள். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறும் நேரம் இது.

    குரு வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், மாதத் தொடக்கத்தில் வக்ரமாக இருக்கிறார். ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தியாகி, பலம் பெறுகிறார். வெற்றிகள் ஸ்தானம் பலம்பெறும் போது, உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பார்த்தபடி தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு தற்காலிகப் பணி, நிரந்தரமாக மாறும். தடைகள் அகலும். உடன்பிறப்புகளின் ஆதரவு கூடுதலாக இருக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 24, 25, 28, 29, நவம்பர்: 2, 3, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    18.9.22 முதல் 17.10.22 வரை

    எதையும் ஆராய்ந்து அறிந்து அதற்கேற்ப சிறப்பாக செயல்படும் மகர ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அஷ்டமத்தில் புதனும், சுக்ரனும் இருக்கிறார்கள். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

    கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

    புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மீது வக்ர குருவின் பார்வை பதிவதால் இக்காலத்தில் சில நற்பலன்களும் நடைபெறும். திடீர், திடீர் என வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்க முற்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களை பங்கீடு செய்வதில் குழப்பங்கள் ஏற்படும்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் உச்சம் பெறுவது யோகம்தான். பாக்கிய ஸ்தானம் பலமடைகிறது. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய இயலும். உத்தியோகத்தில் திறமைக் குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். கடன் சுமை குறைய வழிபிறக்கும். தொழிலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இதுவரை கேட்டும் கிடைக்காத ஊதிய உயர்வு இப்பொழுது தானாக வந்து சேரும்.

    மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் உறவினர்களிடையே பகை உருவாகலாம். உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் வைத்துப் பேசுபவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இடம், பூமி வாங்குவதில் இருந்த தடை அகலும். உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. ஊர்மாற்றம், இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    சனி வக்ர நிவர்த்தி

    புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய பலன்களைக் கொடுக்கும். குறிப்பாக ஜென்மச் சனி வக்ர நிவர்த்தியாவதால் ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவு குறையும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களிலும் ஆதாயம் உண்டு.

    இம்மாதம் நரசிம்மர் வழிபாடு நன்மைகளை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்: 26, 27, 30, அக்டோபர்: 1, 2, 7, 8, 11, 12.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உடல்நிலையிலும் சிறுசிறு தொல்லைகள் வந்து அலைமோதும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். குருவும் வக்ர இயக்கத்தில் இருப்பதால் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு குறையும். பணிபுரியும் பெண்கள் பாராட்டு மழையில் நனைவர்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.8.2022 முதல் 17.9.2022 வரை

    உழைப்பின் மூலமே உன்னத வாழ்வு அமையும் என்று கூறும் மகர ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சகாய ஸ்தானாதிபதி குருவும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    சிம்ம - சூரியன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன், 8-ம் இடத்திலேயே மாதம் முழுவதும் சஞ்சரிக்கிறார். எனவே சில இழப்புகளும், விரயங்களும் ஏற்படத்தான் செய்யும். மாற்றங்கள் மனதிற்கு இனியவிதம் அமையுமா என்பது சந்தேகம். உறவினர் பகை உருவாகும். கொடுக்கல்- வாங்கல்கள் பிரச்சினையாகும்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    ஆவணி 8-ந் தேதி, கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 9-ம் இடத்தில் உச்சம் பெறுவதால் பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகல புதிய முயற்சி களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    வக்ர புதன் சஞ்சாரம்

    ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் 6-க்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுகிறார். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். எதிர்பாராத நற்பலன்கள் உங்களுக்கு வரலாம். அதே நேரம் 9-க்கு அதிபதியாகவும் புதன் விளங்குவதால், தந்தை வழி உறவில் சில பிரச்சினைகள் உருவாகும்.

    சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

    ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், அஷ்டமாதிபதி சூரியனோடு இணையும் போது சுபகாரியங்கள் நடைபெறும். தொழிலை விரிவு செய்யும் முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். வீடுகட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். பாகப்பிரிவினையில் உங்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சுயதொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.

    குரு வக்ரமும், சனி வக்ரமும்

    மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ரமாக இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திற்கு அதிபதியான குரு வக்ர இயக்கத்தில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. அவர் சகாய ஸ்தானாதிபதி என்பதால், பல நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். சனி வக்ரம் பெறுவதால் சஞ்சலங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை உண்டு. பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் ஏற்படும்.

    இந்த மாதம் வரும் அஷ்டமி தினங்களில் பைரவரை வழிபாடு செய்து வந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 29, 30, செப்டம்பர்: 2, 3, 4, 10, 11, 14, 15

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தாநீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறுவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரணையாக செல்வதன் மூலம்தான் குடும்பத்தில் அமைதி நிலவும். வீண் விரயங்கள் அகல சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17-07-2022 முதல் 16-08-2022 வரை

    எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்தும் மகர ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லலாம். ஜென்மச் சனி நடைபெறுவதால் எதிலும் கூடுதல் கவனம் தேவை.

    ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். இருப்பினும் சனி வக்ர இயக்கத்தில் உள்ளதால், வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் சேமிக்க இயலாது. வீண் விரயங்களும், சுபவிரயங்களும் மாறி மாறி வரும். புதன் 9-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குவதால் பூர்வீக சொத்து சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். பயணங்கள் பலன் தரும்.

    ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்போது நன்மை உண்டாகும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நேரம் இது.

    ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். சகோதர, சகாய ஸ்தானாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்கும் குரு பகவான் வக்ர இயக்கத்தில் செயல்படும்போது, சகோதரர் களால் பிரச்சினைகள் உருவாகலாம். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். குரு பகவான் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. உத்தியோகத்தில் நிரந்தரப் பணி அமையும். 12-ம் இடத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால் விரயாதிபதி குரு வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். பயணங்கள் பலன் தரும். வீடு மாற்றம், இடமாற்றம் விரும்பும் விதத்தில் அமையும். ஜென்மச் சனி வக்ரம் பெற்றுள்ளதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்கள்.

    ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து வளர்ச்சிக்கு வழிவகுத்துக் கொடுப்பர். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை செய்யுங்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஜூலை: 17, 18, 21, 22, ஆகஸ்டு: 2, 3, 6, 7, 8, 13, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் சனியின் வக்ரத்தாலும், சுக ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. குடும்பச்சுமை கூடும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பணிபுரியும் பெண்களுக்கு சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு பெரும் முயற்சி எடுக்கும் சூழல் உருவாகும்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை

    யாரைப் பார்த்தால் காரியத்தை முடிக்க முடியும் என்று அறிந்த மகர ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சுகாதிபதி செவ்வாயை, சனி பார்க்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும்.

    ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பலம்பெறும் பொழுது ஓரளவு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக செய்தொழிலில் போதுமான வருமானம் கிடைக்கும். ஜென்மச் சனி வக்ரம் பெற்றிருப்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திடீரென மாற்றங்கள் உருவாகும். உறவினர்களின் யோசனை மனக்குழப்பத்தை ஏற்படுத்தும்.

    ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். 6-க்கு அதிபதி புதன் 6-ல் வலுவடையும் இந்த நேரம் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது. எதிரிகளின் பலம் கொஞ்சம் மேலோங்கியிருக்கும். உடல்நலத்திலும் மீண்டும் பழைய தொல்லை தலைதூக்கும். எதையும் யோசித்துச் செய்வது மட்டுமல்லாமல், அருளாளர்கள் மற்றும் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளையும் கேட்டு செயல்பட்டால்தான் வெற்றிபெற முடியும்.

    ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் சுக ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே வளர்ச்சி கூடும். வருமானம் திருப்தி தரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. பத்திரப்பதிவில் இருந்த தடை அகலும். சொத்து விற்பனை லாபம் தரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை விலக்குவீர்கள். உத்தியோகத்தில் மேலிடத்தின் சலுகைகள் கிடைக்கும்.

    ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் ஆதாயம் தரும் தகவலைக் கொடுப்பர். எதிர் காலத்திற்காக சேமிக்க முன்வருவீர்கள்.

    ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். பஞ்சமாதிபதி 6-ல் வரும் இந்த நேரம் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்துசேரும். நகைகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்துவீர்கள். உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பர். மனக்குழப்பம் அகலும். வியாபாரத்தில் பற்று, வரவு கணிசமாக உயரும். 'கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறவில்லையே' என்ற கவலை அகலும்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 20, 21, 24, 25, ஜூலை: 7, 8, 10, 11 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் ஜென்மச் சனி வக்ரம் பெற்றிருப்பதாலும், 10-ல் கேது இருப்பதாலும் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். உறவினர் பகை உருவாகும். கணவன் -மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படலாம். பணி நிரந்தரமாவதில் தாமதம் ஏற்படும்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் மகர ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தில் செவ்வாயும், சகாய ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த காரியம் தாமதப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். இக்காலத்தில் மருத்துவச் செலவு கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. தடைகளும், மனப் போராட்டமும் அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.

    புதனின் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு இனிய காலம்தான். உத்தியோக மாற்றம் உருவாகலாம். மணவாழ்வில் இருந்த கருத்து வேறுபாடு அகலும். தனவரவிற்கு குறைவிருக்காது. வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். 6, 9-க்கு அதிபதி புதன் 5-ம் இடத்திற்குச் செல்லும் இந்த நேரத்தில் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். புதிய வாய்ப்புகளை வரவழைத்துக்கொள்வீர்கள். நீண்ட நாளைய சச்சரவுகள் மாறும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலம்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம்பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். தடைகளை வென்று முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் ஏற்படலாம். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி, பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 23, 24, 28, 29, ஜூன்: 9, 10, 12, 13மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர் நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. பணப்புழக்கம்நன்றாக இருந்தாலும் மனக்குழப்பமும் அதிகரிக்கும். கணவன் - மனைவி உறவில் பாசமும் நேசமும் குறையும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. சகப் பணியாளர்களால் திடீர், திடீரெனப் பிரச்சனைகள் உருவாகும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

    மகரம்

    ஆங்கில ஆண்டு பலன் - 2022

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் மகர ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தில் செவ்வாயும், சகாய ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த காரியம் தாமதப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். இக்காலத்தில் மருத்துவச் செலவு கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. தடைகளும், மனப் போராட்டமும் அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.

    புதனின் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு இனிய காலம்தான். உத்தியோக மாற்றம் உருவாகலாம். மணவாழ்வில் இருந்த கருத்து வேறுபாடு அகலும். தனவரவிற்கு குறைவிருக்காது. வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். 6, 9-க்கு அதிபதி புதன் 5-ம் இடத்திற்குச் செல்லும் இந்த நேரத்தில் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். புதிய வாய்ப்புகளை வரவழைத்துக்கொள்வீர்கள். நீண்ட நாளைய சச்சரவுகள் மாறும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலம்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம்பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். தடைகளை வென்று முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் ஏற்படலாம். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி, பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 23, 24, 28, 29, ஜூன்: 9, 10, 12, 13மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர் நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. பணப்புழக்கம்நன்றாக இருந்தாலும் மனக்குழப்பமும் அதிகரிக்கும். கணவன் - மனைவி உறவில் பாசமும் நேசமும் குறையும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. சகப் பணியாளர்களால் திடீர், திடீரெனப் பிரச்சனைகள் உருவாகும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

    மகரம்

    ஆங்கில ஆண்டு பலன் - 2022

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் மகர ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தில் செவ்வாயும், சகாய ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த காரியம் தாமதப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். இக்காலத்தில் மருத்துவச் செலவு கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. தடைகளும், மனப் போராட்டமும் அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.

    புதனின் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு இனிய காலம்தான். உத்தியோக மாற்றம் உருவாகலாம். மணவாழ்வில் இருந்த கருத்து வேறுபாடு அகலும். தனவரவிற்கு குறைவிருக்காது. வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். 6, 9-க்கு அதிபதி புதன் 5-ம் இடத்திற்குச் செல்லும் இந்த நேரத்தில் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். புதிய வாய்ப்புகளை வரவழைத்துக்கொள்வீர்கள். நீண்ட நாளைய சச்சரவுகள் மாறும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலம்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம்பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். தடைகளை வென்று முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் ஏற்படலாம். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி, பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 23, 24, 28, 29, ஜூன்: 9, 10, 12, 13மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர் நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. பணப்புழக்கம்நன்றாக இருந்தாலும் மனக்குழப்பமும் அதிகரிக்கும். கணவன் - மனைவி உறவில் பாசமும் நேசமும் குறையும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. சகப் பணியாளர்களால் திடீர், திடீரெனப் பிரச்சனைகள் உருவாகும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

    மகரம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் மகர ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தில் செவ்வாயும், சகாய ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த காரியம் தாமதப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். இக்காலத்தில் மருத்துவச் செலவு கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. தடைகளும், மனப் போராட்டமும் அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.

    புதனின் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு இனிய காலம்தான். உத்தியோக மாற்றம் உருவாகலாம். மணவாழ்வில் இருந்த கருத்து வேறுபாடு அகலும். தனவரவிற்கு குறைவிருக்காது. வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். 6, 9-க்கு அதிபதி புதன் 5-ம் இடத்திற்குச் செல்லும் இந்த நேரத்தில் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். புதிய வாய்ப்புகளை வரவழைத்துக்கொள்வீர்கள். நீண்ட நாளைய சச்சரவுகள் மாறும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலம்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம்பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். தடைகளை வென்று முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் ஏற்படலாம். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி, பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 23, 24, 28, 29, ஜூன்: 9, 10, 12, 13மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர் நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. பணப்புழக்கம்நன்றாக இருந்தாலும் மனக்குழப்பமும் அதிகரிக்கும். கணவன் - மனைவி உறவில் பாசமும் நேசமும் குறையும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. சகப் பணியாளர்களால் திடீர், திடீரெனப் பிரச்சனைகள் உருவாகும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

    ×