search icon
என் மலர்tooltip icon

    மகரம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

    மகரம்

    குருபெயர்ச்சி பலன்-2024

    மகரம்-பஞ்சம குரு 65%

    கொள்கை பிடிப்பு நிறைந்த மகர ராசியினரே!

    இதுவரை ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்தில் நின்ற குரு பகவான் மே 1, ௨௦௨௪ முதல் ராசிக்கு 5ம்மிடமான பஞ்சமஸ்தானம் செல்கிறார். சனி பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராகு பகவான் முயற்சி ஸ்தானத்திலும், கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் பயணிக்கிறார்கள்.

    பஞ்சம குருவின் பொதுபலன்கள்

    மகர ராசிக்கு குரு பகவான் 3, 12ம் அதிபதியானார். பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்வது நல்ல விதமான அதிர்ஷ்டத்தை வழங்கும் அமைப்பாகும். 5ம்மிடம் என்பது அதிர்ஷ்டம், பூர்வீகம், குல தெய்வம், குழந்தைகள், காதல், பூர்வ புண்ணியம், ஆழ் மன சிந்தனை பற்றிக் கூறுமிடம். இந்த இடத்தில் நிற்கும் குருவால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். புண்ணிய பலன்கள் நடக்கும். மன வலிமை அதிகரிக்கும்.முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.

    பொதுவாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் நன்மையை அதிகப்படுத்தும் வல்லமை உண்டு. கோட்சாரத்தில் 5ம்மிடத்திற்கு வரும் கிரகம் குறுகிய காலத்தில் அனைத்து நன்மைகளையும் வழங்கி விடும்.

    நல்ல அறிவாற்றல், புத்திக்கூர்மை. கல்வி மேன்மை உண்டாகும். மத நம்பிக்கையை அதிகரிப்பார் அல்லது இறை வழிபாட்டில் ஆர்வம் கூடும்.சொத்து வாங்கும், விற்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும்.குடும்ப சொத்தை அனுபவிக்க ஆண் வாரிசு பிறக்கும்.பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

    பூர்வீகச் சொத்தில் நிச்சயம் ஒரு முடிவை தந்து விடுவார். பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டிற்கு பிழைப்பிற்காக செல்வீர்கள். பங்குச் சந்தையில் உங்களுக்கு என்று தனி இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

    குருவின் 5ம் பார்வை ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது.தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மற்றும் தூரதேச பயணம் பற்றிக் கூறுமிடம். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். இரக்கமும் தயாள குணமும், அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மையும்,தெய்வ நம்பிக்கையும் ஏற்படும்.மனதில் தெம்பு , தைரியம் கூடும். தந்தை ஸ்தானத்தில் இருந்து குடும்பத்தை வழி நடத்துவீர்கள்.

    9ல் கேது நிற்பதால் அந்நிய நாடு மற்றும் வேற்று மொழி பேசுபவர்கள் மத்தியில் வாழ நேரும். வெளிநாட்டு வாய்ப்பை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு தூரதேச பயணம் ஏற்படும். ஏற்கனவே வெளிநாட்டில் இருப்பவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.

    ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நடத்துபவர்களுக்கு பொற்காலம். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் அபரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். பெற்றவர்களால் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளால் பெற்றோர்களுக்கும் பெருமை சேரும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும்.

    குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

    குருவின் 7ம் பார்வை ராசிக்கு 11ம் மிடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. வாழ்க்கை குதூகலமாக இருக்கும். தடைபட்ட பணிகளும் துரிதமாகும். அனைத்து காரியங்களும் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். நல்லோர் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். செல்வாக்கு சொல்வாக்கு உயரும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர்நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு.

    அரசியல்வாதிகளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். எதிரிகள் ஒதுங்குவார்கள். மருமகள், மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகனம் என சுப பலன்கள் நடக்கும்.சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். மன வேதனையால் முதியோர் இல்லம் சென்ற சில வயது முதிர்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள்.

    குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

    குருவின் 9ம் பார்வை ராசியில் பதிகிறது. ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் புதிய முன்னேற்றம் உண்டாகும் ,உடலில் புத்தொளியும், பொலிவும் உண்டாகும். மனதில் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். முன்கோபங்கள் குறையும். தேவையற்ற பிர்சனைகள், மன வருத்தம் நீங்கும். விடா முயற்சி விஷ்வரூப வெற்றி என்ற கொள்கை பிடிப்புடன் செயல்படுவீர்கள். எண்ணங்களும், லட்சியங்களும் நிறைவேறும்.

    கடுமையாக உழைத்த உழைப்பு இப்பொழுது பணமாக காய்க்கப் போகிறது. பல விதமான நற்பலன்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும்.தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள்.

    இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும்.

    குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை)

    மகர ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வேலையை திறம்பட செய்து பெயரும் புகழும் அடைய அதிக சிரமம் எடுக்க வேண்டும். முக்கிய பதவியில் இருப்பவர்கள் பதவியை தக்க வைக்க கடுமையாக போராட நேரும். அவ்வப்போது கற்பனை பயம் தோன்றி மறையும். ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மிகுதியாகும்.

    மர்ம நோய் தாக்கம் இருந்தால் சரியாகும். ஆரோக்கியம் சீராகும். சிலர் சுப செலவுகளுக்காக சொத்து அடமானத்தின் பெயரில் கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உருவாகும். மிகவும் எச்சரிக்கையாக நிதானமாக பயபக்தியுடன் காலத்தை கடத்த வேண்டும்.

    குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024 வரை)

    மகர ராசிக்கு சம சப்தம ஸ்தானம் எனப்படும் 7ம் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தனித் திறமை மிளிரும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். வியாபார பங்காளிகளிடம் நிலவிய மனக்கசப்பு மறையும்.புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும்.

    எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்ச்சியைத் தரும். சிலர் முதல் மனைவி இருக்கும் போதே பணத்திற்காக மறுமணம் செய்வார்கள். திருமணத் தடை நீங்கும்.சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள்.

    குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள்(21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை)

    மகர ராசிக்கு சுக ஸ்தான அதிபதி மற்றும் லாப ஸ்தான அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும்.பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம். அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும். அரசிடமிருந்த வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும்.

    சில சமூக ஆர்வளர்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும்.பாக்கிய பலன் அதிகரிக்கும். இறையருள் பரிபூரணமாக கிட்டும்.குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். வாரிசுகளின் இடமாற்றம் நிம்மதி தரும்.

    குருவின் வக்ர காலம் (மகர ராசிக்கு சுக ஸ்தான அதிபதி மற்றும் லாப ஸ்தான அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை

    குரு பகவான் வக்ரமடையும் காலத்தில் புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகள் நடக்கும். சிலருக்கு பணிக்காலம் முடிந்த பிறகும் பதவி நீட்டிப்பு கிடைக்கும். களத்திர ஸ்தான அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2.2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் தம்பதிகளின் தேவையற்ற எதிர்பாலின நட்பால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பருவ வயதினர் இனக் கவர்ச்சியால் காதல் வலையில் சிக்குவார்கள். செயற்கை கருத்தரிப்பை நாடுபவர்களுக்கு சாதகமான பலன் உண்டு.

    பெண்கள்:

    புதிய வாழ்க்கை பாதையை நோக்கி முன்னேறு வீர்கள். பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். ஒவ்வொரு விசயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். வசதியும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். தம்பதிகள் மனம் விட்டு பேசுவதால் நன்மைகள் உண்டாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும்.

     பரிகாரம்

    பஞ்சம குருவால் புண்ணிய பலன்கள் அதிகரிக்க விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை புதன் கிழமை துளசியால் அர்ச்சித்து வழிபட வேண்டும். வீட்டில் துளசி செடி வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி வழிபட பிறவிப் பயனை அடைய இயலும்.

    மகரம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

    நேர்மையான மகர ராசியினரே இதுவரை ராசிக்கு 3-ம்மிடத்தில் சஞ்சரித்த குரு பகவான் நான்காமிடமான சுகஸ்தானம் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

    நான்காமிட குருவின் பொது பலன் :

    மகர ராசிக்கு 3,12-ம் அதிபதியான குருபகவான் நான்காமிடமான சுக ஸ்தானம் நோக்கிச் செல்கிறார். நான்காமிடம் என்பது கல்வி, தாய், வாகனம், பூமி, வீடு, தேக சுகம் போன்றவை பற்றிக் கூறுமிடம். அர்தாஷ்டம குருவாக இருப்பதால் அஷ்டமத்தில் கிரகங்கள் நிற்பதால் ஏற்படும் பலனில் பாதியை நிச்சயம் செய்யும். அதனால் பாதி நன்மையும் பாதி தீமையும் கலந்த பலன் நடக்கும். மூன்றாம் அதிபதி குரு நான்கில் அமர்வதால் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்காக விட்டுக் கொடுத்து வாழ வேண்டிய காலம்.நெருங்கிய சொந்தங்களால் மன அமைதி குறையும். சிலரின் மாமனார் வயோதிகத்தின் காரணமாக வீட்டோடு வந்து தங்கலாம். முறையற்ற பாகப் பிரிவினை அல்லது சொத்துப் பங்கீடு உங்களை சங்கடத்தில் ஆழ்த்தும். பணவரவும், பொருளாதாரமும் நன்றாகவே இருக்கும். அதானால் நிதி நிலைமை பற்றிக் கவலைப்பட வேண்டி இருக்காது.

    பணவரவு எவ்வளவு இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயத்தால் பற்றாக்குறையை அர்தாஷ்டம குரு ஏற்படுத்துவார். எனவே இந்த காலத்தில் சொத்து விற்கப் போனால் அடிமாட்டு விலைக்கு விற்பீர்கள். வாங்கப் போனால் அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் போகியத்திற்கு வீடு பிடித்துச் செல்லலாம். அல்லது சொந்தமாக வீடு கட்டிச் செல்லலாம். அவரவர் வயதிற்கும் தேவைக்கும் ஏற்ப வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் அல்லது பள்ளி மாற்றம் என ஏதாவது ஒரு மாற்றம் நிச்சயம் உண்டு. வயதானவர்கள் சிறிது காலம் வெளியூர், வெளிநாட்டிலிருக்கும் பேரன், பேத்தி வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுத்து வரலாம். சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்ய வெளியூர், வெளிநாடு செல்லலாம்.தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் அன்பு ஆசிர்வாதம் மகிழ்ச்சியைத் தரும். தாய்க்கு வைத்தியச் செலவில் ஆரோக்கியம் சீராகும்.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள் :

    ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் குருவின் ஐந்தாம் பார்வை பதிகிறது. குருவின் பார்வை பலத்தால் எட்டாம் பாவக காரகத்துவங்களான வம்பு, வழக்கு, அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரி ஆகிய பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். பெரிய அளவில் வரவிருந்த நஷ்டம், கடன், ஆபத்து, சிக்கல்கள் விலகி நிம்மதி உண்டாகும்.எனவே பிறர் அநாவசிய வம்பு, வழக்கு, ஜாமீன் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு மனக் குழப்பத்தை அதிகரிக்கும் சம்பவங்கள் நடக்கும். தீராத நோயால் மரணத்தின் விளிம்பு வரை சென்றவர்கள் கூட வைத்தியத்தால் எழுந்து உட்காருவார்கள்.

    குருவின் ஏழாம் பார்வை பலன்கள் :

    ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் குருவின் ஏழாம் பார்வை பதிகிறது. செய்யும் தொழிலில் இருந்து வந்த கடன்கள், சிக்கல்கள் முடிவுக்கு வரும். தொழில் மூலம் உங்கள் அந்தஸ்து கவுரவம் உயரும் . இதுவரை உங்களைப் அறிந்திராத பலர் உங்களைப் பற்றி தெரிந்து புதிய தொழில் வாய்ப்புகள் கொடுப்பார்கள். அந்தஸ்த்தான நபர்களின் நட்பால் முதலீட்டை அதிகரிப்பீர்கள். நல்ல திறமையான நம்பிக்கையான தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். புதிய எந்திரங்கள், தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி தொழிலை விரிவு செய்வீர்கள். குறைந்த முதலீட்டில் தொழில் செய்தவர்கள் வியாபார முன்னேற்றத்திற்காக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வரநேரும். சிலர் புதியதாக தொழில் துவங்குவார்கள்.

    குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள் :

    ராசிக்கு பனிரென்டாமிடமான விரயஸ்தானத்திற்கு குருவின் ஒன்பதாம் பார்வை பதிகிறது இடுப்பிற்கு கீழ் ஏற்படும் உடல் உபாதைகளான மூட்டு வீக்கம், கால்குடைச்சல்,மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுகஸ்தானத்தில் நிற்கும் குரு சாதாரண மருந்துகள் மூலம் அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வு கொடுப்பார். கண் பாதிப்பு இருப்பவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம்.மதிப்பு மரியாதை குறைவால் மன வெறுப்பால் பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் இருக்கும் இடம் தெரிய வரும்.

    அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்- 22.4.2023 முதல் 21.6.2023 வரை

    கோட்சாரத்தில் ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் பணியின் தன்மை, ஊதியம், பணி நியமன ஆணை, பணிக்கான ஒப்பந்தம் போன்றவற்றை சரிபார்த்த பிறகே வேலைக்கு செல்ல வேண்டும்.

    பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்- 22.6.2023 முதல் 17.4.2024 வரை

    மகர ராசிக்கு 5,10ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சரியில்லாத வேலை குறைவான சம்பளத்தில் காலம் தள்ளியவர்கருக்கு வேறு வேலை, வேறு கம்பெனியில் உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைக்கும்.அரசு உத்தியோக வாய்ப்பு கிடைக்கும். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி கவுரவப் பதவியில் அமரும் வாய்ப்பு உள்ளது. தாமதமாகி வந்த மகன், மகள் திருமணம் முடிவுக்கு வரும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குலதெய்வ அருளால் கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். தொழில் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் பூர்வீகத்திற்கு வந்து செட்டிலாகுவார்கள்.

    கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்- 18.4.2024 முதல் 30.4.2024 வரை

    மகர ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கோட்சார கேதுவும் ஒன்பதாமிடத்தில் இருப்பார். இந்த கால கட்டத்தில் சிலருக்கு விபரீத ராஜயோகமாக உயில் சொத்து, பங்குச் சந்தை லாபம், ரேஸ், பந்தயப் பணம், எதிர்பாராத அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.தேவையற்ற வம்பு வழக்கை தவிர்த்தல் நல்லது. சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பால் அவமானம் அல்லது ஏமாற்றம் ஏற்படும்.

    குருவின் வக்ர பலன்கள் :

    4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் குடும்பச் சொத்துக்களை விற்பது, பிரிப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அடுத்த குருப்பெயர்ச்சி வரை இவைகளை ஒத்தி வைக்க முயற்சிக்கவும்.சிலர் முக்கிய தேவைக்காக சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறலாம்.நிலம் சம்பந்தமான வழக்குகள் விசாரணைக்கு வரலாம். ஆரோக்கிய குறைபாட்டால் மன சஞ்சலம் கூடும். சேமிப்புகளை செலவிட நேரும்.

    பெண்கள் :

    பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி புதிய சொத்துக்களை கொடுக்கும். மகன், மகள் விசயத்தில் இருந்த கவலைகள் இனிமேல் இருக்காது. கணவன், மனைவி உறவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலைத்து இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சு எடுபடும். கணவர் உங்களுக்கு தங்க நகை வாங்கி கொடுத்து மகிழ்விப்பார். எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானத்திற்கு சனி பார்வை இருப்பதால் பெண்கள் வெள்ளிக்கிழமை வயதான சுமங்கலிகளிடம் ஆசி பெற வேண்டும்.

    மாணவர்கள் :

    விரும்பிய கல்லூரி, பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதால் மாணவர்கள் படிப்பில் ஒரே சிந்தனையுடன் ஈடுபட்டால் அர்தாஷ்டம குரு மற்றும் ஏழரைச் சனியின் பாதிப்பு விலகும். திட்டமிட்டு செயல்படும் போது பல சாதனைகள் புரியமுடியும்.

    உத்தியோகஸ்தர்கள் :

    வேலை இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். பணி புரியும் இடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலாதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். விண்ணப்பித்த இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரி ஆலோசனை கேட்டு செயல்படும் வகையில் சூழ்நிலை மாற்றம் உண்டாகும்.

    ராகு/கேது பெயர்ச்சி :

    அக்டோபர் 30,2023ல் ராகு 3ம் மிடத்திற்கும் கேது 9ம்மிடத்திற்கும் செல்கிறார். எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். வெளிநாட்டு வருமானம், வேற்று இனத்தவர்களின் உதவி கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். லாபம் வருவதற்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கும்.

    பரிகாரம் :

    கோட்சார பலன்களைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. உங்கள் சுய ஜாதக தசாபுத்தியும் சேர்ந்து பலன்கள் கூட்டியோ, குறைத்தோ நடக்கும். இறைவழி பாடு கவசமாய் உங்களைக் காக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு பால், இளநீர் அபிசேகம் செய்து வழிபட தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.ஜென்ம நட்சத்திர நாளில் விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை சாற்றி வழி அர்தாஷ்டம குரு மற்றும் ஏழரைச் சனியின் பாதிப்பு விலகும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    உறுதியான எண்ணம் நிறைந்த மகர ராசியினரே ராசிக்கு 3ல் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 1, 2ம் இடத்திலும் ராகு பகவான் 4ம் இடத்திலும், கேது பகவான் 10ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்த குரு பகவான் 3ம் இடமான சகாய, சகோதர, தைரிய ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி யாகிறார். மகர ராசிக்கு குரு பகவான் 3,12ம் அதிபதி. 3ம் அதிபதி குரு 3ல் ஆட்சி பலம் பெறுவதால் நீங்கள் உறுதியான கோட்பாடு உடையவர்களாக மாறுவீர்கள். யாருக்காவும் மனதை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். அதே நேரத்தில்மற்றவர்களுடைய உணர்வுகளை மதித்து நடந்து கொள்வீர்கள். உங்கள் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்கவும் தயங்க மாட்டீர்கள். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஒரு மனிதன் வெற்றியை எட்டிப் பிடிக்கத்தேவையான தைரியம், தன்னம்பிக்கையும் மனதில் குடிபுகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

    ஆரோக்கிய குறைபாட்டால் தடைபட்ட இல்லற இன்பம் தித்திக்கும். மாற்றம் ஒன்றே மாறாது என்பது போல் மாற்றக் கூடிய அனைத்தையும் மாற்றும் ஆர்வம் ஏற்படும். சிலர் தொழிலை, தொழில் முறையை மாற்றுவார்கள். வீடு அல்லது வேலையில் இடமாற்றம் உண்டாகும்.செய்ய நினைத்ததை நினைத்தபடியே செயல்படுத்துவீர்கள்.குரு உங்களுக்கு விரயாதிபதி என்பதால் என்பதால் இளைய சகோதர சகோதரிகளிடன் சுப செலவிற்காகபெரும் தொகையை இழக்க நேரும். ஒரு சிலரின் இளைய சகோதரர் வெளிநாடு அல்லது வெளிமாநிலத்திற்கு இடம் பெயறுவார்கள். உடன் பிறந்தவர்களின் நலனில் ஆர்வம் மிகும். நிறைவேறாமல் தடங்கல் ஏற்பட்டு கொண்டிருந்த சில முக்கிய பணிகள் மூன்றாமிடத்து குருவால் நிறைவேற்றப்படும்.

    குரு 12ம் அதிபதி என்பதால் ஞாபக மறதிஅதிகரிக்கும். ஆபரணங்களை கழட்டி அங்கே வைத்தேன், இங்கே வைத்தேன் என்று தேடிக் கொண்டே இருப்பீர்கள். முக்கியமான ஆவணங்கள் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள்அல்லது வைத்த இடம் மறந்து போகும் அல்லது ஆவணங்களில்திருத்தம் செய்ய நேரும். ணிழிஜி பிரச்சனைக்காக சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். சிலர் புதிய செல்போன் வாங்குவீர்கள். ஒரு சிலர் செல்போன் ஸீமீtஷ்ஷீக்ஷீளீ ஐ மாற்றுவார்கள்.தற்காப்பு கலை, வீர விளையாட்டு வீரர்கள் ஏற்றம் பெறுவார்கள். பெயர், புகழ் வெளிஉலகத்தில் பரவும்.திடீர் பெயர், புகழலால் ஆழ்மனதில் இனம் புரியாத பயம் கலந்த இன்பம் உங்களை வழி நடத்தும். கண்திருஷ்டி அதிகரிக்கும்.

    5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 7ம்இடத்திற்கு பதிவதால் ஏழாமிடம் புனிதமடையும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார். தம்பதியினர்தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோவெவ்வேறு ஊர்களில் பிரிந்துவாழ்ந்து கொண்டிருந்தால்இப்பொழுதுஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . விவகாரத்து ஆன தம்பதிகள் கூட மறுபடியும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். மனக்கசப்பு மாறும். கூட்டுத் தொழில் சிறப்படையும். தொழில் கூட்டாளிகளிடம்இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு ஏற்படும். புதியதொழில் கூட்டாளிகள் கிடைப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம், உதவிகிடைக்கும். நண்பர்களுடன்விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    7ம் பார்வை பலன்கள்:குருவின் 7ம் பார்வை 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. கவுரவப்பதவிகள் தேடி வரும்.பதவி இழந்த பலருக்கு மீண்டும் பதவி கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்கருக்கு கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். பல வயதான மகர ராசியினருக்கு தாத்தா பாட்டியாகும் யோகம் கிட்டும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து உற்றார் உறவினர்களை சந்தித்து மகிழ்வார்கள். ஆன்மீக நாட்டம் மிகுதியாகும்.சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் முன்னோர்கள் நடத்தி வந்த பரம்பரை பூஜை புண்ணிய காரியங்களைதொடர்வீர்கள்.

    9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு பதிகிறது.இதனால் பெரும்வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. வாழ்வில் வெற்றி பெற்று வாழ்வை வளம் பெறச் செய்யும் சூட்சமத்தை கற்பீர்கள். தொட்டது துலங்கும். தொழிலின் அனைத்து யுக்திகளையும் கடைபிடித்து ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி சூடுபடிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு தொழிலைவிரிவுபடுத்தும் வாய்ப்பு கிட்டும். மருத்துவம், உணவு சார்ந்ததொழில்.ஆடை அணிகலன்கள் , அழகுப்பொருட்கள் போன்ற துறையில் உள்ளவர்களுக்கு தொழில் வளர்ச்சி பெறுவர்.

    கலைத் துறையினர் அதிக நற்பலன் அடைவர். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் நிலவி வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால்மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல்இருந்தவர்களுக்குவேலையில் சேர உத்தரவு வந்து விடும். குருப் பார்வை பட்ட இடம் பெருகும் என்பதால் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் மிகக் குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும்.உங்களின் அனைத்து தேவைகளையும்பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவு செய்யப் போகிறீர்கள். ஆயுள் ஆரோக்யம் அதிகரிக்கும்.

    வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த சட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கோர்ட், கேஸ், வக்கீல் என்று அழைந்து விரக்தி அடைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாகும். நிதி நிறுவனங்கள் வீட்டிற்கு தேடி வந்து கடன் கொடுப்பார்கள். அரசுவழி ஆதாயம் உண்டாகும். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். அடமான நகைகள், சொத்துக்கள் மீட்கப்படும். பாலிசி முதிர்வு தொகை, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். மூத்த சசோதர வழி ஆதாயம் ஏற்படும். முன்னோர்கள் சொத்தைபிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள்மறைந்துசொத்துக்கள் உங்களுக்கு சாதமாக பிரிக்கப்படும்.

    குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் கேது உள்ளது. சனி பார்வையும் 10ம் இடத்திற்கு உள்ளதால் தொழில் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். 4ல் ராகு உள்ளதால் வேலையாட்கள் பிரச்சனை உருவாகும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும்எண்ணம் உருவாகும். பெண்கள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. வீண் பழி உருவாகும். மறைமுக எதிரி தாக்கம் உருவாகும். உங்களின் இயல்பானபணிகளை வெற்றிகரமாக செயல்படுத்த இயலாது.

    பெண்கள்:மனதில் மகிழ்ச்சியானஎண்ணங்கள் தோன்றும். முயற்சிகள் விரைவில் பலிதமாகும். தன வரவு திருப்தி தரும். பொருளாதார வளர்ச்சிசீராக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.புதிய அணிகலன்கள் ,அழகு,ஆடம்பரப் பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள். மூத்தசகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுமறைந்து தடைபட்ட பாகப்பிரிவினைசொத்து, பணம் வரும்.

    பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சிவ வழிபாடு செய்வது நல்லது. வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜைநடக்க உதவுதல், ஆதரவற்ற பிணங்களின் தகனத்திற்கு உதவுதல் ஆகிய மூன்றும்அசுவமேத யாகம் செய்த தற்குச் சமம்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×