search icon
என் மலர்tooltip icon

    கடகம் - ஆண்டு பலன் - 2024

    கடகம்

    புத்தாண்டு ராசிபலன்கள்-2024

    அன்பிற்கு அடிபணியும் கடக ராசியினருக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இந்த புத்தாண்டில் வருட கிரகமான குருபகவான் 10, 11-ம்மிடங்களில் நின்று பலன் தருகிறார். சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராசிக்கு 3-ல் கேதுவும் 9-ல் ராகுவும் அமர்ந்து இருக்கிறார்கள். அஷ்டமச் சனியின் காலம் என்றாலும் குரு ராகு, கேதுக்களின் நிலைபாடு சற்று சாதகமாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். தேவையற்ற எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    குருபகவான் ஏப்ரல் 21, 2023 வரை தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.அரசு உத்தியோகத்திற்கு முயற்சித்தவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும்.சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும்.வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். சிலர் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். ஏப்ரல் 21-க்குப் பிறகு லாப ஸ்தானத்திற்கு செல்லும் குரு பகவான் தனது 5-ம் பார்வையால் சகாய ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 9-ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

    குரு பலம் வந்து விட்டதால் சிலருக்கு அஷ்டமச் சனியை மீறியும் திருமணம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பீர்கள். பொருளாதார பற்றாகுறை அகலும். தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். குரு பெயர்ச்சி தடை, தாமதம், இன்னல்களை நீக்கி அற்புதமான பலன்களை அள்ளித்தரும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    உங்கள் ராசிக்கு இது அஷ்டமச் சனியின் காலம். சனியின் 3-ம் பார்வை 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்திலும் 7-ம் பார்வை 2-ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திலும், 10-ம் பார்வை 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிகிறது. அஷ்டமச் சனி நடந்தாலும் குருவால் குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் நட்பு கரம் நீட்டுவார்கள். விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்கும்.புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும்.

    உங்களின் முயற்சிக்கு மனைவியும், பிள்ளைகளும் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்விற்கான அறிகுறி தென்படும்.புகழ், அந்தஸ்து கவுரவம் நம்பிக்கை,நாணயம் உயரும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் நிலவிய சர்ச்சைகள் விலகும்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்வீர்கள். குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.கடன் சுமை குறையும். சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும்.மேன்மையான எண்ணங்களும் சீரிய சிந்தனைகளும் பெருகும். முட்டுக்கட்டைகள் அகலும். வாழ்வின் திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும்.

    ராகு-கேதுவின் சஞ்சார பலன்கள்

    இந்த ஆண்டு முழுவதும் கேது பகவான் 3-ம்மிடத்திலும் ராகு பகவான் 9-ம்மிடத்திலும் நின்று பலன் தருகிறார்கள். உங்களின் முயற்சிகள் உடனே பலிதமாகும். மனதில் தைரியம் குடிபுகும். இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், வெளிநாடு வாய்ப்பு என்று நீங்கள் எதிர்பார்த்து காத்து இருந்த மாற்றம் உங்களை தேடி வரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். பாக்கிய ஸ்தானம் வலுப் பெறுவதால் கவுரவப் பதவிகள் தேடி வரும்.

    வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும். வேற்று மத நம்பிக்கை கூடும். பூர்வீகச் சொத்தை அடைவதில் தடை தாமதம் ஏற்படும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் எழும். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். சிலர் பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவில் சென்று குடியேறுவார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும் சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூ ரன்ஸ், போன்ற பாலிசி எடுப்பார்கள்.

    புனர்பூசம் 4

    தடைகள் விலகும்.அஷ்டமச் சனியால் திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள். விவசாயிகளுக்கும், கால்நடை வளர்பவர்களுக்கு ஏற்ற காலம். தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம்.

    திறமைக்கும், தகுதிக்கு ஏற்ப வேலையில் முன்னேற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எல்லாம் சரியாக நடந்தால் கூட சிலருக்கு நேரத்திற்கு உண்ண,உறங்க முடியாமல் வெறுமை உணர்வு இருக்கும்.மன நிறைவு இருக்காது. தனியாக அமைதியாக இருப்பதை மனம் விரும்பும். முன் கோபத்தில் பகைமை உருவாகும். விநாயகர் அகவல் படிக்க காரியசித்தி உண்டாகும்.

    பூசம்

    தன் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.அஷ்டமச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் பெரும் பாதிப்பு ஏற்படாது. விரும்பிய பதவி உயர்வு தேடி வரும். பணிச் சுமை கூடும்.புதிய வேலையாட்கள் அமைவார்கள். நிரந்தர வேலை கிடைக்கும். சிலருக்கு தொழிலில் சகோதரருடன் பிரிவினை ஏற்படும். சிலருக்கு இளைய சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். பாகப்பிரிவினை நடக்கலாம். காணாமல் போன கை மறதியாக வைத்த ஆவணங்கள் கிடைக்கும்.

    ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறுபாடுக்கு காரணமாக அமையும் என்பதால் கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை. தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வர சிறப்பான யோகங்கள் அதிகரிக்கும்.

    ஆயில்யம்

    கடக ராசியில் பிறந்த ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு இந்த புத்தாண்டு மங்கலத்தையும் புது மாற்றத்தையும் வழங்க உள்ளது. வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். செலவு குறையும். சேமிப்பு கூடும்.

    தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தாய், பிள்ளை உறவில் பாசமும் உற்சாகம் பெருகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும்.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.தம்பதிகளிடம் சுமூக உறவு நிலவும்.தினமும் லஷ்மி நரசிம்மரை வழிபட மனக் கவலைகள் அகலும்.

    திருமணம்

    அஷ்டமச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு திருமணம் தொடர்பான முடிவு எடுப்பது நல்லது.சிலருக்கு திருமணம் நடந்தாலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவோ, மனதிற்கு பிடிக்காத தகுதி குறைந்த திருமணமாகவோ இருக்கும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும்.

    பெண்கள்

    பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். அதற்குக் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலைப்பளுவும் கூடும். . தொழில் உத்தியோகத்தில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில், உணவு விசயத்தில் அக்கறையும் கவனமும் தேவை. கை, கால் முட்டி வலி வேதனைகள் குறையும். வைத்தியம் பலன் தரும்.சகோதரர் வகையில் வரவு உண்டு. கணவருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும்.

    வியாபாரிகள்:

    மந்தமான தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள். ஏற்றுமதி, இறக்கு மதி தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம்உயரும். தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும். தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும்.

    உத்தியோகஸ்தர்கள்

    இதுவரை அரசுவழி ஆதாயம் ,உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும்.

    அரசியல்வாதிகள்

    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டீர்கள். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பீர்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவீர்கள்.

    பரிகாரம்

    வெற்றிலை பாக்குடன் மாதுளம்பழம் வைத்து திங்கட்கிழமை இஷ்ட குலதெய்வம் அம்மனை வழிப்பட்டால் சுப பலன் மிகும்.

    கடகம்

    ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

    தாய்மை பண்பு நிறைந்த கடக ராசியினருக்கு அன்பான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் தெளிவான மனநிலையோடு செய லாற்றுவீர்கள். பலவிதமான வாழ்வியல் மாற்றங்களும் ஏற்றங்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். இந்தப் புத்தாண்டில் குரு பகவானின் சஞ்சாரம் சற்று சாதகமாக உள்ளது.

    சனிபகவான் அஷ்டமத்தில் அமர்வதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் ஏற்படலாம். ராகு/கேதுக்கள் சற்று சுமாரான பலன்கள் வழங்குவார்கள். எனவே இந்த ஆண்டு அனுபவ அறிவால் வெற்றி பெற வேண்டும். இனி இந்த ஆண்டிற்கான விரிவான பலன்களைக் காணலாம்.

    குருபகவானின் சஞ்சார பலன்கள்:

    கடக ராசிக்கு 6,9-ம் அதிபதியான குரு பகவான் ஏப்ரல் 22, 2023 வரை 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதன் பிறகு பத்தாம் இடமான தொழில் ஸ்தானம் சென்று ராகுவுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டா கும். கண் திருஷ்டி தோஷம், செய்வினைக் கோளாறு அகலும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். அனைத்து காரியங்களுக்கும் உடன் பிறந்த சகோதர, சகோ தரிகளின் ஆதரவு கிடைக்கும். விட்டுப் பிரிந்த உறவுகள் ஒட்டி உறவாடுவார்கள்.

    அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கவுரவமும் உண்டாகும்.

    கஷ்டங்களும், சிரமங்களும் குறையும். வியாபாரத்திற்குப் போட்டியாக புதிய எதிரிகள் தோன்றுவார்கள். கடுமையான உழைப்பால் அவற்றைச் சமாளிப்பீர்கள்.கடன், ஆரோக்கி யம், வம்பு வழக்கு தொடர்பான விசயங்களில் கவனம் தேவை. பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்கை ஒத்திப்போடுவது நல்லது. குரு ராகுவுடன் இணைந்து அஷ்டமாதிபதி சனியின் பார்வை பெறுவது சற்று சுமாரான கிரக நிலவரம். எனவே கடன் பெறுவது, கடன் கொடுப்பது, ஜாமீன் போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உத்தியோகம் அல்லது தொழில் ரீதியான மாற்றங்களை சந்திக்க நேரும்.

    வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் கவனச் சிதறலை தவிர்த்து பக்குவமாக நடந்து கொள்ளவும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தங்களில் கவனம் தேவை. பல புண்ணியத் ஸ்தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுத்தால் வருடத்தின் எல்லா நாட்களும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகவே இருக்கும்.

    சனியின் சஞ்சார பலன்கள்:

    உங்கள் ராசிக்கு இது அஷ்டமச் சனியின் காலம் என்பதால் உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். இது வரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தினருடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

    இடப் பெயர்ச்சி வீடு மாற்றம், வேலை மாற்றம் செய்யலாம். வியாபாரத்தை எப்படி நடத்துவது, கிடைத்த பதவியை, வேலையை எப்படி பொக்கிஷம் போல் காக்க வேண்டும் போன்ற அனுபவ ரீதியான பாடங்களை கற்பீர்கள். பலருக்கு வெளியூர், வெளிநாட்டிற்கு சென்று பிழைப்பு நடத்தும் சூழ்நிலை உண்டாகும். காதல் விவகாரங்கள் அவமானத்தை தரும். பணவரவு தாரளமாக இருந்தாலும், தேவையற்ற அலைச்சல்கள் விரயங்கள் ஏற்படலாம். சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக உழைக்காத வருமானம் அதிகரிக்கும். அதே போல் கமிஷன் அடிப்படை வியாபாரம் லாபத்தை அள்ளிக் கொடுக்கும். அரசியல் பிரமுகர்கள்,மேடைப் பேச்சாளர்கள் வாக்கால் வருமானமும், புகழும் பெறுவர். பிள்ளைகளுக்கு வேலை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நேரம். வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. புதிய முயற்சிகளில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

    ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

    அக்டோபர் 30, 2023 வரை ராகு பகவான் 10ம் இடத்திலும், கேது பகவான் 4ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். அதன் பிறகு ராகு 9ம் இடத்திற்கும் கேது 3ம் இடத்திற்கும் மாறுகிறார்கள். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த எதிர்பாராத பெரும் தொகை கிடைக்கும். தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வீட்டில் சேரும். வீட்டிற்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

    தன வரவு மிகுதியால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். சமுதாய அங்கீகாரம், கவுரவம் கிடைக்கும். எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். உங்கள் புதிய முயற்சிகள் அனைத்தும் செயலாக்கம் பெறும். மன பாரம் குறைந்து நிம்மதியும் தன் நம்பிக்கையும் அதிகரிக்கும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞான தன்மை அதிகரிக்கும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள்.

    திருமணம்: சுய ஜாதக பலம், பலவீனம், தசா புக்திக்கு ஏற்ப திருமணத்தை முடிவு செய்ய வேண்டும். பொதுவாக அஷ்டமச் சனியின் காலத்தில் திருமணத்தை தவிர்ப்பது நல்லது. இந்த கால கட்டத்தில் திருமணம் நடந்தால் தவறான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து திருமண வாழ்க்கை நெருடல், பிரிவினையைத் தரும் வாய்ப்பு உள்ளதால் அஷ்டமச் சனி முடியும் வரை திருமணத்தை ஒத்தி வைக்க வேண்டும்.

    பெண்கள்: குடும்பத்தில் கூச்சல் குழப்பம் மறைந்து அமைதியான சூழல் நிலவும். பெண்களுக்கு மன உளைச்சல் மன அழுத்தங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் அடுத்தவரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.

    மாணவர்கள்: கல்வி மற்றும் ஆரோக்கியம் மேம்படும். தடைபட்ட உயர்கல்வி கற்கும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். அரியர்ஸ் பாடத்தை மீண்டும் எழுதி பாஸ் பண்ணும் சந்தர்ப்பம் கிடைக்கும். போட்டித் தேர்வில், பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

    புனர்பூசம் 4,: குருவின் நல்லாசியால் எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். கடந்த காலத்தில் இருந்த சண்டைகள், தோல்விகள், மன வருத்தங்கள் நீங்கும் . நீண்ட நாள் கனவுகள் நிறைவேறி மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்குள் இருக்கும் திறமைகள் வெளிப்படும். கவுரவமான பதவிகள், வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சீரான படிப்படியான வளர்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலைகள் மாறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் குறைவதுடன் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு சாதகமான பதில் வரும். பொருளாரத்தில் தன் நிறைவு ஏற்படும்.

    பரிகாரம்: ஜென்ம நட்சத்திர நாளில் ஆன்மீகப் பெரியோர்கள்,மத குருமார்களிடம் நல்லாசி பெற வேண்டும்.

    பூசம்: அன்றாடம் உழைக்கும் தொழிலாளிகளின் வறுமை, தரித்திரம் விலகும். சிலருக்கு சொந்தத் தொழில் ஆர்வம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கடந்த கால இழப்புகளில் இருந்து மீளும் நிலை உண்டாகும். கணவன் மனைவி உறவு பலப்படும். வீடு, வாகன முயற்சி சாத்தியமாகும். சிலருக்கு மதம் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சிலருக்கு எதிர்காலம் பற்றிய வீண் பய உணர்வு மனதை வாட்டும். அலைச்சல் மிகுந்த பயணம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் நல பிரச்னைகள் நீங்குவதோடு, மருத்துவ செலவு வெகுவாக குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். வீடு, வாகன யோகம் உண்டாகும். தொழில் மற்றும் சொத்துக்களுக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும்.

    பரிகாரம்: வயது முதிர்ந்த அந்தணர்களுக்கு உணவு, உடை தானம் தந்து காலில் விழுந்து நல்லாசி பெற வேண்டும்.

    ஆயில்யம்: உங்களின் தொழில் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய காலமாக இருக்கும். உங்களின் முயற்சிக்கு பல மடங்கு நற்பலன் கிடைக்கும் என்பதால், இந்த காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. பொது இடங்களில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சபைகளில் புகழ் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சுயமாக நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள், முடிவுகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழில் செய்பவர்கள் , ஒப்பந்த ஊழியர்கள், நிறுவனத்தின் மேலதிகாரி போன்ற தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மிகவும் உன்னதமான காலமாக இருக்கும். உங்களின் மனக் கவலைகள், மன அழுத்தம், வேலையில் இருக்கும் இடர்பாடுகள் முழுவதுமாக குறையும்.

    பரிகாரம்: கோ தானம், கோ பூஜை செய்ய புதிய திருப்பங்கள் ஏற்படும்.

    கடக ராசியினர் வழிபட வேண்டிய புனித ஸ்தலம். சிவன், பிரம்மா, விஷ்ணு என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் கொடுமுடி. இங்கு சென்று கடக ராசியினர் புனித நீராடி பிரம்மா, விஷ்ணு, சிவனை வழிபட கோட்சார கிரகங்களால் ஏற்படும் பாதிப்பு விலகும்.

    கடகம்

    ஆங்கில ஆண்டு பலன் - 2022

    சந்திரனின் ஆசி பெற்ற கடக ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆங்கிலப் புத்தாண்டில் வருட கிரகங்களால் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு சாதகமான பலன்கள் உண்டாகும். ஏப்ரல் 2022க்குப் பிறகு தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் துரிதமாகும். முன்னேற்றத்திற்கான பாதை தென்படும்.

    நேர்மை உங்களை சுமூகமாக வழி நடத்தும். புதிய திட்டங்கள் தீட்டி சவாலான செயல்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் திறமை வெளிப்படும். ராசியை சனி பார்ப்பதால் தேவையற்ற கோபமும் முயற்சியில் தடை, தாமதம் உண்டாகும். கோபத்தை குறைத்து நம்பிக்கையோடு முயற்சித்தால் காரிய சித்தியுடன் நிம்மதியும் நிலைக்கும். இந்த புத்தாண்டிற்கான விரிவான பலன்களைக் காணலாம்.

    குரு சஞ்சார பலன்: ஏப்ரல் 13, 2022 வரை அஷ்டம ஸ்தானத்தில் குரு இருப்பதால் உங்கள் முயற்சி வெற்றியடைய நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். உங்களின் புகழ், அந்தஸ்தை நிலை நிறுத்த கடின உழைப்பு அவசியம். கடின உழைப்பால் அசௌகரியங்கள் ஏற்படலாம். தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும்.

    பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். பேச்சாற்றலால் சிக்கலான காரியங்களைக் எளிதாக சாதிப்பீர்கள். பணிகளை மேற்கொள்ளும் போது தடை தாமதங்கள் வந்தாலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.

    குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்க்கை ஏற்படும்.அந்த புது வரவு களத்திரமாகவோ குழந்தையாகவோ இருக்கலாம். இளைய சகோதர வழியில் சொத்து தொடர்பான வில்லங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் செயல்பாடுகளில் மந்த நிலையும் மெத்தன போக்கும் ஏற்படும். தொழில் தொடர்பான சிறு தூர பயணம் ஏற்படும். காது நரம்பு தொடர்பான சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.

    ஏப்ரல் 13க்குப் பிறகு குரு பாக்கிய ஸ்தானத்திற்குச் செல்லும் போது உடல் தேஜஸ் பெரும். தங்களுடைய பணிகளை விரைவாகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். மிக மிக சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொட்டது எல்லாம் துலங்கும். ஜனவசியம் ஏற்படும். தெளிவான மன நிலையோடு செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகழ்ச்சி தரும்.

    பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும். வாழ்வில் வசந்தம் உலா வரும். மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். இளைய சகோதர வழியில் ஆதாயம் ஏற்படும். உங்களின் சகோதர, சகோதரிகளின் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை ஸ்தானத்தில் இருந்து உங்களின் சகோதர, சகோதரி திருமணத்தை ஏற்று நடத்தி ஆனந்தம் அடைவீர். காரிய சித்தி ஏற்படும். தாயின் அன்பு, ஆதரவு, ஆசீர்வாதம் நிறைந்து இருக்கும். தாய்வழி உறவினர்களின் அனுசரனை இருக்கும். தாய் வழிச் சொத்து, உயில் ஆதாயம் உண்டு.

    சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொழிவு குறையும். மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஞாபக மறதி மிகும். நம்மை உதவி செய்து கை தூக்கி விட யாருமில்லை என்ற எண்ணம் மிகைப்படுத்தலாக இருக்கும். அதிர்ஷ்டம் என்னைத் தேடி வருமா என அதிர்ஷ்டத்தைத் தேடி காலம் தள்ளுவீர்க்ள். 26.2.2022 முதல் 6.4.2022 வரை கடகத்திற்கு 5, 10ம் அதிபதியான செவ்வாய் 7, 8ம் அதிபதியான சனியுடன் 7ல் இணைகிறார். கடகத்திற்கு 5ம் அதிபதி செவ்வாய், 8ம் அதிபதி சனியுடன் இணைவதால் விபரீத ராஜ யோகம் உண்டாகும்.

    சிலருக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். பல தலைமுறையாக தீராத சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். புத்திர பிராப்தம் உண்டாகும். உணவுப் பொருட்கள், கேட்டரிங், ஹோட்டல்கள் தொழில் நடத்துபவர்களின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குல தெய்வம் பூர்வீகம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்ள முயல்வீர்கள். பூர்வீகத் தொழிலால் கௌரவம் கிடைக்கும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய தொழில் ஆரம்பிப்பார்கள்.

    ராகு/கேது சஞ்சார பலன்: ஏப்ரல் 12, 2022 வரை 11ல் நிற்கும் ராகுவாலும் 5ல் நிற்கும் கேதுவாலும் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிரிகளின் பலம் குறையும். பிள்ளைகளின் கடமைகளை செய்து முடிப்பீர்கள். திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து முடிப்பீர்கள்.

    பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும்.பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவதாக மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அதிர்ஷ்டப் பொருட்களை வாங்கி குவித்து ஏமாறுவீர்கள். அநாவசிய ஆடம்பர செலவு செய்துவிட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள். தந்தைக்கு தடைபட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும். தந்தையின் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

    வெளிநாட்டில் வசிக்கும் உங்களின் மூத்த சகோதரர் பூர்வீகத்திற்கு வந்து செல்வார். மூத்த சகோதரருடன் நல்லிணக்கம் உண்டாகும். உங்களின் பூர்வீகச் சொத்துக்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு அதன் மூலம் பெரிய பணம் கிடைக்கும்.

    ஏப்ரல் 12, 2022க்குப்பிறகு 10ல் ராகுவும், 4ல் கேதுவும் மாறும் பொழுது தொடர்ந்து தொழில் அபிவிருத்தி உண்டாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம், வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு வீடு, நிலம், தோட்டம், வாகன யோகமும் உண்டாகும்.

    சிலர் வீட்டை செப்பனிட்டு அழகு பார்ப்பார்கள். 4ல் கேது இருப்பதால் ராசி அதிபதி நிலம் தொடர்பான முதலீட்டில் கவனம் தேவை. தாயின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறையான பத்திரப் பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். சிலருக்கு அடமானத்தில் உள்ள சொத்து மீண்டு வரும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற காலம்.

    திருமணம்: பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். உங்கள் ராசியைப் சம சப்தமமாகப் பார்க்கும் சனி பகவானால் கோட்சார ரீதியான புனர் பூ தோஷம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 2022ல் குரு மீனத்திற்குச் சென்றவுடன் திருமண வாய்ப்புகள் விறுவிறுப்பாக தேடி வரும்.

    ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும். பலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும். இதனால் குடும்பஉறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.

    பெண்கள்: கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு சட்ட உதவியை நாட வைக்கும் என்பதால் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். குழந்தைகளின் நலனுக்காக கடன் வாங்க நேரலாம். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க நேரும். வீட்டிற்கு தெரியாமல், நகை சீட்டு, ஏலச் சீட்டு கட்டுவதை தவிர்த்து அரசுடைமை வங்கிகளில் உபரி பணத்தை சேமிக்க வேண்டும்.

    உத்தியோகஸ்தர்கள்: அரசு உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மிகுதியான பொறுப்புகள் வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மேலதிகாரிளிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். பல சாதகங்கள் நடந்தாலும் மிகைப்படுத்தலான மன உளைச்சலும் இருக்கும்.

    முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: இதுவரை சொந்த தொழில் நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட தொழில் ஆர்வம் உருவாகும். தொழிலுக்கு தேவையான உபரி மூலதனம் கிடைக்கும். ஏழாமிட சனி புதிய தொழில் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் தருவார். வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்யும் சூழல் நிலவும். யாரையும் நம்பி பணப் பொறுப்பை ஒப்படைக்க கூடாது.நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் தொழில் தொடர்பு வைக்க கூடாது. முதலாளி,தொழிலாளர்களிடையே சிறு சிறு பிணக்குள் அவ்வப்போது தோன்றி மறையும்.

    அரசியல்வாதிகள்: சில கடக ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். பெயர், புகழை காப்பாற்றிக் கொள்ள அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவு செய்ய நேரும். பிறரைப் பற்றிய தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும்.சில அரசியல் பிரமுகர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு உண்டாகும்.

    விவசாயிகள்: விவசாயிகளுக்கு கால் நடைகள் மூலமாகவும் அதிக விளைச்சலாலும் வருமானம் அதிகரிக்கும் காலம். பெரும் முதலீட்டு விவசாயிகளுக்கு விளைச்சல் அமோக நற்பலன் தரும்.கார்பரேட் விவசாய நிறுவனங்களுக்கு உபரி உற்பத்தி கிடைக்கும்.

    மாணவர்கள்: கடக ராசி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். 5ல் கேது இருப்பதால் படிப்பதை எளிதாக புரிந்து கொள்வீர்கள். நீங்கள் 1 வருடமாக இரவும் பகலும் படித்த படிப்பு உங்களுக்கு கைகொடுக்கும். ஏப்ரல் 2022 போட்டி பந்தயங்கள், போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்கள் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    புனர்பூசம் 4ம் பாதம்: இதுவரை பாராமுகமாக இருந்த உறவுகளின் வருகை குடும்பத்தில் கலகலப்பை அதிகப்படுத்தும். முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டலும் இந்த புத்தாண்டில் விரும்பிய மாற்றத்தை தரும். வியாழக்கிழமை வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபடவும்.

    பூசம்: நல்ல வேகமும், விவேகமும் உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணம் ஈடேறும். வரக்கூடிய இடர்பாடுகளையும், அவமானங்களையும் உணரும் உள்ளுணர்வு உருவாகும். சுப பலன்களை அதிகரிக்க சனிக் கிழமை காளியை வழிபடவும்.

    ஆயில்யம்: கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில உதவிகள் தேடி வரும். பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதன்கிழமை விநாயகருக்கு அருகம்புல் அணிவித்து வழிபட நல்லது நடக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×