search icon
என் மலர்tooltip icon

    மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்

    மேஷம்

    ஆடி மாத ராசிபலன்

    எதையும் உற்சாகத்தோடு செய்யும் மேஷ ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். இதனால் 'குரு மங்கள யோகம்' ஏற்படுகிறது. எனவே இந்த மாதத்தில், நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடைபெறுவதோடு, பொருளாதார வளர்ச்சியும் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் மாதம் இது.

    குரு - செவ்வாய் சேர்க்கை

    உங்கள் ராசிநாதன் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் விரயாதிபதி குருவோடு இணைந்து தன ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார். எனவே விரயத்திற்கேற்ற தனவரவு வந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான சூழல் உருவாகும். தங்களுக்கோ, தங்கள் குடும் பத்தைச் சார்ந்தவர்களுக்கோ, திருமண வயதடைந்த தங்கள் பிள்ளைகளுக்கோ வரன் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த காரியம் நல்ல படியாக முடியும். 'இடம், பூமி வாங்க வேண்டும், வீடுகட்ட வேண்டும்' என்று நினைத்தவர்களுக்கு அது கைகூடும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும் நேரம் இது.

    புதன்-வக்ரம்

    ஆடி 5-ந் தேதி கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 28-ந் தேதி வரை அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். எனவே இக்காலத்தில் சகோதர ஒற்றுமை கொஞ்சம் குறையலாம். உடன்பிறப்புகள் உங்கள் குண மறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். வேலைப்பளு கூடும். மேலதிகாரிகள், உங்கள் மீது கூடுதல் பொறுப்புகளை சுமத்தலாம். கொடுக்கல் - வாங்கலில் சில பாக்கிகள் மனதை உறுத்தும். அதே நேரத்தில் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடலாம். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு அதிகார யோகம் உண்டு.

    சிம்ம - சுக்ரன்

    ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது, மிகுந்த யோகம் தரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு, இப்பொழுது வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்துசேரும். ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வர நினைப்பீர்கள். அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் சுக்ரனின் ஆதிக்கத்தால், சொத்து விற்பனையும், அதன் மூலம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபமும் கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கூட்டுமுயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. கலைஞர்களின் செல்வாக்கு உயரும். மாணவ-மாணவிகள் எதிர்பார்த்த இலக்கை அடைவர். பெண் களுக்கு குடும்பச்சுமை கூடும். விரயங்கள் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 19, 20, 24, 25, 31, ஆகஸ்டு: 1, 4, 5, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

    மேஷம்

    ஆனி மாத ராசிபலன்

    சுறுசுறுப்பாக செயல்பட்டு சுற்றம் போற்ற வாழும் மேஷ ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு செயல் படுவீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஒரு நல்ல சம்பவம் நடைபெறும். லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். என்றாலும் இம் மாதம் சனி வக்ரம் பெறுவதால் ஒரு சில சம யங்களில் அதிக விரயமும், வருமானத்தில் தடுமாற்றமும் ஏற்படலாம். கவனம் தேவை.

    சனி வக்ரம்

    ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம் பெறும்போது தொழிலில் சில இடையூறுகள் வரலாம். பணிச் சுமை அதிகரிக்கும். பங்குதாரர்கள் விலகிக்கொள்வ தாகச் சொல்லி அச்சுறுத்துவர். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் தாமதமாக வந்துசேரலாம். எளிதாக முடிய வேண்டிய காரியங்களைக் கூட போராடிப் பெற வேண்டிய நிலை உருவாகும்.

    உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுத்ததன் காரணமாக சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதுபோன்ற நேரங்களில் சனிக்கிழமை விரதம் இருந்து சனி பகவானை வழிபடுவது நல்லது. மற்றவர் களுக்கு பணம் வாங்கிக் கொடுக்கும் முன்பாக யோசித்து செயல்படுவது அவசியம். பொருளாதாரப் பற்றாக் குறையை சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

    கடக - புதன்

    உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆனி 12-ந் தேதி சுக ஸ்தானத்திற்கு செல்லவிருக் கிறார். உங்கள் ராசி அடிப்படையில் பார்க்கும் பொழுது, 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும்பொழுது வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் நீங்கள் வைத்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். தாய்வழி ஆதரவு உண்டு. பழைய வாகனங் களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி களின் கெடுபிடி மாறும். அவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர்.

    கடக - சுக்ரன்

    ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், 4-ம் இடத்திற்கு வருவது பொன்னான நேரமாகும். புதிய பாதை புலப்படும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

    ரிஷப - செவ்வாய்

    ஆனி 27-ந் தேதி, உங்கள் ராசிநாதன் செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்கிறார். அவர் தன ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரத்தில் தனவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் திருப்தி ஏற்படும். வருமானம் அதிகரிக்கும் இந்த நேரத்தில், தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்புகள் கைகூடிவரும். குடும்ப முன்னேற்றம் கூடும் நேரம் இது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வியாபாரம், தொழில் செய்பவர்கள், பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்குத் தாய்வழி ஆதரவு திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூன்: 22, 23, 27, 28, ஜூலை: 3, 4, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    மேஷம்

    வைகாசி மாத ராசிபலன்

    முடியாத காரியத்தை முடித்துக் கொடுக்கும் மேஷ ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். அதே சமயம் தனாதிபதி சுக்ரன், சகாய ஸ்தானாதிபதி புதனோடு இணைந்து உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். விரயத்திற்கேற்ற தனவரவு உண்டு. வீடு மாற்றம், இடமாற்றம் மகிழ்ச்சி தரும். உடன்பிறப்புகள் வழியே திரு மணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.

    ரிஷப - சுக்ரன்

    வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். உங்கள் ராசிக்கு தனாதிபதியான அவர், தன ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது யோகமான நேரமாகும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம். புணிபுரியும் இடத்தில் வீடு, வாகனம் வாங்க விண்ணப்பித்தவர்களுக்கு, அந்த முயற்சி கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. நீண்ட நாட்களாக முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நடைபெறும்.

    ரிஷப - புதன்

    வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். 6-க்கு அதிபதியான புதன், தன ஸ்தானத்தில் வருவது நல்ல நேரம்தான். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். அதன் மூலம் வருமானம் அதிகரிக்கலாம். வாங்கிய கடனை கொடுத்து மகிழ வாய்ப்பு உண்டு. 'உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாமா?' என்று யோசிப்பீர்கள்.

    மேஷ - செவ்வாய்

    வைகாசி 18-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிநாதன், உங்களுடைய ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உயர் பதவி யில் இருப்பவர்கள், உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, சில சூட்சுமங்களை மேலதிகாரிகளே கற்றுக் கொடுப்பார்கள். உங்கள் பணி, மற்றவர்களின் மனதை ஈர்க்கும் விதத்தில் அமையும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.

    மிதுன - புதன்

    வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். சகாய ஸ்தானாதிபதி புதன், சகாய ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். ஆர்வம் காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறும். சேமிப்பு உயரும். செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். செய்தொழிலில் லாபம் உண்டு. வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க வாய்ப்புகள் கைகூடிவரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    மிதுன - சுக்ரன்

    வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியாக விளங்கும் சுக்ரன், சகாய ஸ்தானத்திற்கு செல்லும்போது பொருளாதார நிலையில் திருப்தி காணப்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பார்கள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

    திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பம் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்கள், பலமான போட்டிகளுக்கு இடையில்தான் வெற்றியைப் பெற முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர் களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ-மாணவிகளுக்கு எதிர்பார்த்த வெற்றி உண்டு. பெண் களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சு முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 14, 15, 26, 27, 28, ஜூன்: 1, 5, 6, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    மேஷம்

    பங்குனி மாத ராசிபலன்

    பிறருடைய பிரச்சினைகளுக்கு நல்ல வழி கூறும் மேஷ ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்க நாளிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார். அவரோடு லாபாதிபதி சனியும், தன - சப்தமாதிபதி சுக்ரனும் இணைந்திருக்கிறார்கள். எனவே பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். ஜென்ம குருவின் ஆதிக்கத்தால் இடமாற்றம், வீடு மாற்றம் நிகழக்கூடிய வாய்ப்பு உண்டு.

    செவ்வாய் -சனி சேர்க்கை

    மாதத்தின் முதல் நாளிலேயே செவ்வாய், கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் அங்கு லாபாதிபதி சனியோடு சேர்ந்து மாதம் முழுவதும் சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். எதிலும் துணிந்து செயல்பட இயலாது. எவ்வளவு பணம் வந்தாலும் உடனுக்குடன் செலவாகி மனக்கலக்கத்தை உருவாக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் இந்த நேரத்தில், கூட்டாளிகள் தங்களுக்குரிய பங்கைப் பிரித்துக் கேட்பதால் அச்சம் ஏற்படும். மற்றவர்களை நம்பி செயல்பட முடியாது. பழைய கடன்களை அடைக்க எடுத்த முயற்சிகள் கைகூடும். என்றாலும் புதிய கடனும் வாங்குவீர்கள்.

    உத்தியோகத்தில் அதிகாரிகள் மற்றும் சகப் பணியாளர்களின் ஆதரவு குறையும். இதனால் வாக்குவாதங்கள் ஏற்பட்டு 'விருப்ப ஓய்வில் வெளிவரலாமா?' என்று கூட சிந்திப்பீர்கள். இதுபோன்ற காலங்களில் செவ்வாய் மற்றும் சனிக்குரிய சிறப்பு வழிபாடுகளை, யோகபலம் பெற்ற நாட்களில் செய்வது நல்லது. கும்பத்தில் தன - சப்தமாதி சுக்ரனும் இருப்பதால் சுபச் செலவுகளை மேற்கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    புதன் வக்ரம்

    நீச்ச வீடான மீனத்தில் சஞ்சரிக்கும் புதன், பங்குனி 13-ந் தேதி வக்ரம் பெறுகிறார். ஏற்கனவே நீச்சம் பெற்று சஞ்சரிக்கும் புதன் இப்பொழுது வக்ரம் பெற்று வலிமை இழப்பது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்பதற்கேற்ப, நல்ல பலன்கள் நடை பெறும். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதனால், சகோதர ஒற்றுமை பலப்படும். புதிய உத்தியோக முயற்சி கைகூடும். கடன் சுமை குறையும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். புதிய பங்குதாரர்களால் பொருளாதாரம் உயரும்.

    மீனம் - சுக்ரன்

    பங்குனி 19-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு உச்ச வீடாகும். அவர் அங்குள்ள புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். மேலும் அங்குள்ள சூரியனோடு இணைவதால் 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு உயர் பதவி உண்டு. மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு சிந்தனையில் தெளிவு பிறக்கும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். பணத்தேவை பூர்த்தியாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 15, 16, 20, 21, ஏப்ரல்: 1, 2, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மேஷம்

    மாசி மாத ராசிபலன்

    திட்டமிட்டு செயலாற்றும் மேஷ ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் லாபாதிபதி சனி, லாப ஸ்தானத்தில் இருக்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க ஏதேனும் முயற்சி செய்திருந்தால் அது கைகூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த காரியம் இம்மாதம் நடைபெறும்.

    கும்பம் - புதன்

    மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். 3, 6 ஆகிய இடங்களுக்கு அதி பதியான புதன், லாப ஸ்தானத்திற்கு வருவது யோகமான நேரம்தான். சகோதர வர்க்கத்தினரால் நன்மைகள் கிடைக்கும். உங்கள் கூட்டு முயற்சிக்கு அவர்கள் உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக அகலும். புதிய உத்தியோகத்திற்காக ஏதேனும் முயற்சிகள் செய்திருந்தால் அது கைகூடும்.

    மகரம் - சுக்ரன்

    மாதத் தொடக்க நாளில், மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கும்போது 'சுக்ர மங்கள யோகம்' ஏற்படும். எனவே குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. உடன்பிறப்பு களின் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். 'வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வேலை கிடைத்து வருமானம் உயரும்.

    மீனம் - புதன்

    மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் நீச்சம் பெறுவது நன்மைதான். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்திற்கு அதிபதியான புதன் நீச்சம் பெறுவதால் சில நன்மை கள் நடைபெறும். எதிரிகள் விலகுவர். எடுத்த காரியத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். கடன் சுமை குறையும். உடல்நலம் சீராக, மாற்று மருத்துவம் கைகொடுக்கும். அதேசமயம் உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துவர். உறவினர்கள் ஒருசிலர் உங்களை விட்டு விலக நேரிடும்.

    கும்பம் - சுக்ரன்

    மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாபஸ்தானத்திற்குச் செல்லும்போது, தொழில் வளர்ச்சி திருப்தியாக இருக்கும். கூடுதல் லாபம் கிடைக்கும். பஞ்சமாதிபதி சூரியனும் புதனோடு இணைந்து சஞ்சரிப்பதால், பிள்ளைகள் வழியில் நல்ல காரியங்கள் நடைபெறும். அவர்களின் மேற்படிப்புக்காகவும், வெளிநாடு செல்லும் வாய்ப்பிற்காகவும் முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். உத்தியோகத்தில் சிலருக்கு ஊதிய உயர்வின் காரணமாக இடமாற்றம் செய்யும் வாய்ப்பு அமையும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு, போட்டிகளை சமாளிக்கும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்கு இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 17, 18, 22, 23,

    மார்ச்: 5, 6, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    மேஷம்

    தை மாத ராசிபலன்

    தன்னை சார்ந்தவர்களும் முன்னேற நினைக்கும் மேஷ ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை செவ்வாய் மீது பதிந்து `குரு மங்கள யோக'த்தை உருவாக்குகிறது. எனவே சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். லாப ஸ்தானச் சனியின் ஆதிக்கத்தால் பொருளாதார நிலை உச்சம் பெறும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும்.

    மேஷ-குருவின் சஞ்சாரம்!

    மாதத் தொடக்கத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கும் குருவால் வளர்ச்சி அதிகரிக்கும். வாய்ப்புகள் வாசல் தேடி வரும். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் குரு என்பதால் தந்தை வழி உறவில் இருந்த விரிசல் தானாக விலகும். சிந்தனைகள் வெற்றி பெறும் விதத்தில் செயல்பாடுகள் இருக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தூர தேசத்தில் இருந்து வரும் தகவல் ஆதாயம் தருவதாக அமையும். வாகன யோகம் உண்டு. இட மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    தனுசு-சுக்ரன்!

    ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல்-வாங்கல்கள் சீராகும். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலைக்கு முயற்சி செய்திருந்தால் அது கிடைக்கும். உதிரி வருமானங்களும் உண்டு. அரசு வேலைக்கு முயற்சி செய்திருந்தவர்களுக்கு அது கை கூடும்.

    மகர-புதன்!

    ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் வருகின்றார். எனவே `புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணியில் உள்ளவர்களுக்கு நிரந்தரப் பணி அமையலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் உங்களைத் தேடி வரும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கலாம்.

    மகர செவ்வாய் சஞ்சாரம்!

    பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். அது செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெறும் இந்த நேரம் உடல்நலம் சீராகும், உள்ளத்திலும் அமைதி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவதில் இருந்த தடைகள் அகலும். கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, கல்யாண சீர்வரிசைப் பொருட்களை வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். நாட்பட்ட நோய் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் எளிதில் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து அலைமோதும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். மாணவ-மாணவிகளுக்கு கல்வியில் சாதனை படைக்கக்கூடிய நேரமிது. பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 15, 16, 21, 22, 26, 27, பிப்ரவரி: 6, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மேஷம்

    மார்கழி மாத ராசிபலன்

    மற்றவர் உணர்வுகளைப் புரிந்து செயல்படும் மேஷ ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு 3, 6-க்கு அதிபதியான புதனும் இணைந்துள்ளார். தொழில், உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் உருவாகும்.

    சனிப்பெயர்ச்சியும் இந்த மாதம் நிகழ இருப்பதால் லாப ஸ்தானத்திற்கு வரும் சனி பகவானால் பொருளாதாரநிலை உயரும். அருளாளர்கள் மற்றும் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துக் கொடுக்கும்.

    கும்ப ராசியில் சனி

    மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி மிகுந்த நற்பலன்களை உங்களுக்கு வழங்கப்போகின்றது. முன்னேற்றப் பாதையில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் தொழில் அபிவிருத்தி, உத்தியோக அபிவிருத்தி உண்டு. சமூகத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் வந்து மறையும்.

    விருச்சிக-சுக்ரன்

    மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய ராசிக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் அஷ்டமத்திற்கு வரும்பொழுது எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. கொள்கைப்பிடிப்போடும் செயல்பட இயலாது. தனவரவு வந்தாலும், வந்த மறுநிமிடமே செலவாகி விடும். எதிர்பாராத விரயங்கள் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் வழங்கமாட்டார்கள். குடும்பப் பிரச்சினை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

    தனுசு-செவ்வாய்

    தனுசு ராசிக்கு மார்கழி 11-ந் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஒன்பதாம் இடத்திற்கு வருவது யோகம் தான். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். தந்தைவழி உறவில் இருந்த விரிசல் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தீர்த்த யாத்திரைகளையும், தெய்வ தரிசனங்களையும் மேற்கொள்வீர்கள். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. பொதுவாக குரு வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் குருமங்கள யோக அடிப்படையில் இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு.

    தனுசு-புதன்

    மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சூரியனோடு இணைந்து புத-ஆதித்ய யோகத்தை உருவாக்குவதால் வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் கைகூடிவரும். ெவளிநாடு செல்பவர்கள் அங்கேயே வீடு வாங்கலாமா, அல்லது சொந்த ஊரில் சொத்துக்கள் வாங்கலாமா என்று சிந்திக்கும் நேரமிது. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.

    வியாபாரம், தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வால் மகிழ்ச்சி காண்பர். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ-மாணவியர்களுக்கு கல்வி முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு பிரச்சினைகளில் இருந்து விடுபடும் சூழ்நிலை அமையும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 19, 20, 25, 26, 29, 30,

    ஜனவரி: 10, 11, 14

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு

    மேஷம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    உதவி செய்து பிறர் உள்ளத்தைக் கவரும் மேஷ ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு பஞ்சமாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி புதனும் இணைந்திருக்கின்றார்கள். எனவே போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். இட மாற்றங்கள், வீடு மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். பொருளாதாரப் பற்றாக்குறை தீர எடுத்த புதுமுயற்சி பலன்தரும்.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதும் மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின் றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவரது வக்ர இயக்க காலத்தில் பெற்றோர் வழியில் சில பிரச்சினைகள் வரலாம். அண்ணன்-தம்பிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பூர்வீக சொத்துகளை விற்கும் சூழ்நிலை ஒருசிலருக்கு உருவாகும். விரயங்கள் அதிகரிக்கும்.

    பயணங்களால் பலன் கிடைக்காது. எனவே எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. விரயாதிபதியாகவும் குரு விளங்குவதால் திடீர், திடீரெனச் செலவுகள் வந்து மனதை வாடவைக்கும். ஏதேனும் ஒரு பொருள் வாங்கவோ அல்லது சுபகாரியங்கள் நடத்தவோ சேமித்த தொகை வேறு வழியில் செலவாகலாம். வியாழன் தோறும் விரதமிருந்து குரு பகவானை உள்ளன்போடு வழிபடுவதன் மூலம் நல்ல செயல்கள் நடைபெற வழி பிறக்கும்.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 2, 7ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தன சப்தமாதிபதியான சுக்ரன் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். எனவே மாதத் தொடக்கத்தில் மகிழ்ச்சி குறைவாகவே இருக்கும். மனதில் நினைத்ததை மறு கணமே செய்ய முடியவில்லையே என்ற கவலை இருக்கும். ஆயினும் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் பெயர்ச்சியாகி வருகின்றார்.

    சப்தமாதிபதி பலம்பெறும் இந்த நேரத்தில் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். இல்லறம் நல்லறமாக அமையும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பொருளாதார நிலை உயரும். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உண்டு. மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவதோடு சம்பள உயர்வு வருவதற்கான சூழ்நிலையும் உருவாகும்.

    தனுசு-புதன்

    உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பாக்கிய ஸ்தானம் எனப்படும் இடத்திற்கு கார்த்திகை 14-ம் தேதி வருகின்றார். அங்கிருந்தபடி தன் வீட்டைத் தானே பார்ப்பது நன்மை தான். வழக்கு கள் சாதகமாக முடியும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியக் குறைபாடு கள் அகலும். ஆதாயம் தரும் விதத்தில் பயணங்கள் உண்டு.

    மறைமுக எதிர்ப்புகள் மாறும். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும்.

    மேஷம்

    ஐப்பசி மாத ராசிபலன்

    18.10.2023 முதல் 16.11.2023 வரை

    தன்னம்பிக்கையோடு செயல்படும் மேஷ ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் மீது அவரது பார்வை பதிகின்றது. எனவே 'குரு மங்கள யோகம்' உருவாகின்றது. இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.

    சனி வக்ர இயக்கம்!

    ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி, வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகி பலமடைவது யோகம்தான். எனவே இனி தொழில் வளம் சிறப்பாக இருக்கும். குறுக்கீடு சக்திகள் அகலும். கொடுக்கல்-வாங்கல்கள் சீராகும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். வருமானம் உயர வழிபிறக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு மேலிடத்து ஆதரவும், தலைமைப் பதவிகளும் தானாகக் கிடைக்கலாம். புதிய நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இருக்கும் நிறுவனமே உங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை.

    குரு வக்ரம்!

    மாதம் முழுவதும் குரு பகவான் உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்று இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ர நிலையில் இருக்கும் பொழுது தந்தை வழியில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். பெற்றோர்களின் ஆதரவு குறையும். ஆரோக்கியத் தொல்லையும், வெளிநாடு செல்லும் முயற்சிகளில் தடைகளும் ஏற்படலாம். வியாழன் விரதமும், குரு வழிபாடும் வெற்றிக்கு வித்திடும்.

    நீச்சம் பெறும் சுக்ரன்!

    ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தனாதிபதியாக விளங்கும் சுக்ரன் நீச்சம் பெறுவதால் பணப்புழக்கம் குறையும். புனிதப் பயணங்களால் விரயங்கள் ஏற்படும். கைகூடுவது போல் இருந்த கல்யாண முயற்சி கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம்.

    விருச்சிக புதன்!

    ஐப்பசி 14-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி 8-ல் வரும் பொழுது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். இதுபோன்ற காலங்களில் பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவீர்கள்.

    போட்டிகளுக்கு மத்தியில் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நாடி வரும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ-மாணவிகளுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் உண்டு. பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். விரயங்கள் வந்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யம் நாட்கள்: அக்டோபர் 20, 21, 22, 25, 26, நவம்பர் 1, 2, 5, 6

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.

    மேஷம்

    புரட்டாசி மாத ராசிபலன்

     18-09-2023 முதல் 17-10-2023 வரை

    விடாமுயற்சியே வெற்றி தரும் என்று கூறும் மேஷ ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் இருக்கும் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே தொழில், உத்தியோகம் ஆகியவற்றில் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. கன்னி ராசியில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எண்ணிய காரியங்கள் நடந்தேற ஏராளமாகச் செலவிடும் சூழல் உருவாகும்.

    புதன் வக்ரம்

    உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் புரட்டாசி மாதம் 10-ந் தேதி கன்னி ராசியில் வக்ரம் பெறுகிறார். கன்னி ராசி புதனுக்கு உச்ச வீடாகும். புதன் வலிமை இழந்திருப்பது யோகம்தான். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றை குறிப்பது ஆறாம் இடமாகும். அந்த இடத்திற்கு அதிபதி வலிமை இழக்கும் பொழுது எதிரிகள் விலகுவர். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டுகொள்வீர்கள். உடல்நலம் முற்றிலும் சீராகும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். கடன்சுமை குறையப் புதிய வழிபிறக்கும். தொடர்ந்து பொருளாதார பற்றாக்குறையில் சிக்கித் தவித்த உங்களுக்கு, இப்பொழுது சரளமான பணப்புழக்கம் ஏற்பட்டு சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

    துலாம் - செவ்வாய்

    புரட்டாசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிநாதன் சப்தம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். மேலும் குரு பார்வையால் குருமங்கல யோகம் ஏற்படுகிறது. இதன் விளைவாக காலம் காலமாக காத்திருந்தும் நடைபெறாத சுபகாரியங்கள் இப்பொழுது திடீரென முடிவாகும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். இடம், பூமி வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். கட்டிய வீட்டைப் பழுதுபார்ப்பது போன்றவற்றிலும் கவனம் செலுத்த இயலும். 'வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொண்டு பணிபுரியச் செல்லலாமா?' என்று சிந்திப்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஒரு நல்ல காரியம் நடைபெறும். தொழில் வெற்றி நடைபோடும். புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார நிலையை உயர்த்த வழிவகுத்துக் கொடுப்பர்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 28-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான புதன் சப்தம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். மாமன், மைத்துனர் வழியில் சுமுகமான உறவு ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். பயணங்களால் பலன் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குப் புதிய பங்குதாரர்களால் வருமானம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். மாணவ-மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. பெண்களுக்கு பிரச்சினைகள் அதிகரித்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பா்: 23, 24, 27, 28, அக்டோபர்: 4, 5, 8, 9, 10. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மேஷம்

    தமிழ் மாத ராசிபலன்கள்

    18-08-2023 முதல் 17-09-2023 வரை உழைப்பின் மூலமாக உயர்வை எட்டும் மேஷ ராசி நேயர்களே!

    ஆவணி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாத தொடக்கத்தில் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 5 கிரகங்கள் சேர்க்கை பெற்றிருக்கின்றன.

    கூட்டுக்கிரக யோகம் இருப்பதோடு, 'புத ஆதித்ய யோகம்', 'சந்திர மங்கல யோகம்', 'புத சுக்ர யோகம்', 'குரு மங்கல யோகம்' ஆகிய யோகங்களும் இருப்பதால், உங்களின் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். கடக - சுக்ரன் ஆவணி மாதம் 1-ந் தேதி முதல், கடக ராசிக்கு சுக்ரன் வக்ரமாகி செல்கிறார்.

    உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்திற்கு அதிபதி சுக்ரன் என்பதால், அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. புதிய முயற்சிகளில் ஒன்றிரண்டு தாமதப்படும். அதிக ஆதாயம் கிடைக்கும் என்று நினைத்த தொழிலில், ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாமல் போகலாம். கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள்.

    கன்னி - செவ்வாய் ஆவணி 2 -ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 'கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்திற்கு வருகிறார். 8-ம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய், 6-ம் இடத்திற்கு வருவது ஒரு வகையில் நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, சில நல்ல காரியங்களும் இப்பொழுது நடைபெறும்.

    ஆதாயம் தரும் விதத்தில் பயணங்கள் அமையும். ஒரு சிலருக்கு இடமாற்றமும் ஏற்படலாம். மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, வக்ர இயக்கத்தில் மகர ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி, இதுவரை லாப ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரித்தார். இனித் தொழில் ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். எனவே தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

    பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பிவரும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது. வியாபாரப் போட்டிகளை சமாளிக்க புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் வக்ர நிலையில் சஞ்சரிக்கும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார்.

    உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், வக்ர நிவர்த்தியாவதால் உடன்பிறப்புகளின் வழியில் சுமுகமான பேச்சுவார்த்தை உருவாகும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் அமையும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். வராத பாக்கிகள் வசூலாகும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ், கீர்த்தி மேலோங்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், எதிலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம்.

    கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும் காலம் என்பதால் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை குறையாமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 26, 27, 31, செப்டம்பர்: 6, 7, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மேஷம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.7.23 முதல் 17.8.23 வரை

    நினைத்ததை முடிக்கும் ஆற்றல் பெற்ற மேஷ ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் கிரக நிலைகள் சாதகமாகவே இருக்கின்றன. 'புத ஆதித்ய யோகம்', 'குரு மங்கல யோகம்', 'சுக்ர மங்கல யோகம்' போன்றவை அமையும் விதத்தில் கிரக நிலைகள் இருப்பதால், பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் திடீர் திருப்பங்களும், திரவிய லாபமும் உண்டு.

    மேஷ - குரு சஞ்சாரம்

    நவக்கிரகத்தில் சுபகிரகம் என்று சொல்லக்கூடிய குரு பகவான், மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே வீற்றிருக்கிறார். அவரது பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், தெய்வ பலம் உங்களை வழிநடத்திச் செல்லும். எனவே கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு அனுகூலம் தரும் தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து, புகழ்பெற்ற புராதனக் கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும், கல்யாணம் சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும். பூர்வீக சொத்து, பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

    குருவின் பார்வை பலத்தால் சப்தம ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். தங்கு தடைகள் தானாக விலகும். ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருந்தாலும் குரு பார்வை பதிவதால் இதுவரை உங்களுக்கு எந்தெந்த செயல்பாடுகளில் எல்லாம் சிக்கல்கள் இருந்ததோ அவை அனைத்தும் விலகி நன்மைகளை வழங்கப் போகிறது.

    உத்தியோகம் சம்பந்தமாக புதிய முயற்சிகள் செய்தால் அது கைகூடும். 9-ம் இடத்தைக் குரு பகவான் பார்ப்பதால் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். குருவை வியாழக்கிழமை தோறும் வழிபடுவதன் மூலம் மேலும் நற்பலன்களை பெறமுடியும்.

    சிம்ம - புதன்

    ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகிறார். 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். நம்பிக்கைக்குரிய விதத்தில் நண்பர்கள் நடந்துகொள்வர். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் எதிர்பாராத விதத்தில் வந்துசேரும். வழக்குகள் சாதகமாக அமையும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரும் சந்தர்ப்பங்களால் வளர்ச்சி கூடும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். மாணவ-மாணவிகள் எதிர்பார்த்த இலக்கை அடைவர். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே மற்றொரு தொகை கரங்களில் புரளும். பொறுமை தேவை.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஜூலை: 19, 20 ஆகஸ்டு: 1, 2, 4, 5, 10, 15, 16.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    ×