search icon
என் மலர்tooltip icon

    கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்

    கும்பம்

    பங்குனி மாத ராசிபலன்

    மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்யும் கும்ப ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு பகைக் கிரகமான செவ்வாயும், 4, 9-க்கு அதிபதியான சுக்ரனும் இணைந்து சஞ்சரிக்கின்றனர். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் தொழிலில் ஏற்றமும், இறக்கமும் வந்து கொண்டே இருக்கும். அஷ்டமத்து கேதுவால் ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது.

    செவ்வாய் - சனி சேர்க்கை

    மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்குள்ள சனியோடு மாதம் முழுவதும் இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கையின் விளைவாக மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். பணப்புழக்கம் குறையும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது. எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உடன்பிறப்புகள் கூட பகையாக மாறுவர். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் சலுகைகள் கிடைக்காது. உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைப்பதும் அரிதுதான். வரவிற்கு மிஞ்சிய செலவு இருக்கும். வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுதாவதும், அதனால் விரயங்களும் ஏற்படும். தீட்டிய திட்டங்கள் திசைமாறிச் செல்லாமல் இருக்க சனி பகவான் வழிபாடும், அங்காரக வழிபாடும் அவசியம் தேவை.

    புதன் வக்ரம்

    மீனத்தில் நீச்சம் பெற்று சஞ்சரித்து வரும் புதன், பங்குனி 13-ந் தேதி வக்ரமும் அடைகிறார். இதன்விளைவாக பிள்ளைகள் வழியில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் கல்யாணம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் தடை, தாமதங்கள் உருவாகும். `படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வில்லையே' என்று ஆதங்கப்படுவீர்கள். அதே நேரம் அஷ்டமாதிபதியாகவும் புதன் விளங்குவதால், அவர் வக்ரம்பெறுவது நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத சில நல்ல வாய்ப்புகள் வரலாம். குறிப்பாக புதிய நண்பர் களின் அறிமுகம் கிடைத்து சாதித்துக் கொள்வீர்கள். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் பணிபுரிய வாய்ப்புகள் கைகூடி வரும்.

    மீனம் - சுக்ரன்

    பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தன்னுடைய உச்ச வீடான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெறுவது நன்மைதான். இதனால் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து உள்ளத்தை மகிழ்விக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அசையாச் சொத்துகள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட பதவி உயர்வு தானாக கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்குவர். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவி களுக்கு கல்வி வளர்ச்சி திருப்தி தரும். மாதத்தின் முற்பாதியை காட்டிலும் பிற்பாதியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபச்செலவுகள் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 16, 18, 27, 28, ஏப்ரல்: 1, 2, 8, 9, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    கும்பம்

    மாசிமாத ராசிபலன்

    வேகமும், விவேகமும் இணைந்த கும்ப ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு சப்தமாதிபதி சூரியனும் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிகிறது. எனவே சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். 2-ல் ராகு 8-ல் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

    கும்பம் - புதன்

    மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் புதன். பஞ்சமாதிபதியான புதன், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பிள்ளை களால் பெருமை சேரும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் அகலும். பிரபலங்களின் நட்பால் பெருமை காண்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு வரலாம். மாமன், மைத்துனர் வழியில் விரயம் உண்டு.

    மகரம் - சுக்ரன்

    மாதத் தொடக்க நாளிலேயே, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாயோடு இணைந்து விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. தொழில் மாற்றங்கள் ஏற்படலாம். பங்குதாரர்கள் பகையாகலாம். உடன்பிறப்புகள் வழியில் பிரச்சினைகள் உருவாகும். விரயங்கள் அதிகரிக்கும் நேரம் என்பதால், எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்யுங்கள்.

    மீனம் - புதன்

    மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம-அஷ்டமாதி பதியாக விளங்குபவர் புதன். அஷ்டமாதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான் என்றாலும், பஞ்சமாதிபதியாகவும் அல்லவா அவர் விளங்குகிறார். எனவே பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வரலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களிடம் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

    கும்பம் - சுக்ரன்

    மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல நேரமாகும். சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். உற்றார் உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறையலாம். கலைஞர்கள் மிகுந்த முயற்சி எடுத்து முன்னேற்றம் காணவேண்டிய நேரமிது. மாணவ - மாணவியர்கள் திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கல்களும் சிறப்பாக இருக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 13, 14, 17, 18, 29,

    மார்ச்: 1, 5, 6, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.

    கும்பம்

    தை மாத ராசிபலன்

    வரவறிந்து செலவு செய்ய வேண்டுமென்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

    தை மாத கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கிற பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். இதுவரை விரயச் சனியின் ஆதிக்கத்தில் இருந்த உங்களுக்கு இப்பொழுது ஜென்மச் சனியின் ஆதிக்கம் வந்திருக்கிறது. எனவே ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் ஏற்ற இறக்க நிலை உருவாகலாம். சர்ப்ப சாந்தி பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் சந்தோஷ வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள இயலும்.

    மேஷ-குருவின் சஞ்சாரம்!

    மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். தன லாபாதிபதியான குரு பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம் தான். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் உங்களுக்கு குருவின் பார்வை பலத்தால் திருமண முயற்சி கைகூடும். மேலும் தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் ஆதரவோடு நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும்.

    தனுசு-சுக்ரன்!

    ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். தாய் வழி ஆதரவு உண்டு. இதுவரை கடின முயற்சி செய்தும் எளிதில் முடிவடையாத காரியங்கள் இப்பொழுது எளிதில் முடிவடையும்.

    மகர-புதன்!

    ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது திடீர் முன்னேற்றங்கள் ஏற்படப் போகிறது. வராத பாக்கிகள் வசூலாகும். வசதி, வாய்ப்புகள் பெருகும். வாகனம் வாங்கி மகிழ வேண்டுமென்ற ஆர்வம் கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். சேமிப்பு உயர புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

    மகர-செவ்வாய் சஞ்சாரம்!

    பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கிறார். மகரம் செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்தில் உச்சம் பெறும் இந்த நேரம் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். உடன் பிறப்புகள் வழியில் நடைபெறும் சுபகாரியத்தை முன்னிட்டு ஒரு தொகையை கொடுத்து உதவுவீர்கள். தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகிக் கொள்வதாக சொல்லி அச்சுறுத்துவர். எனவே புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன் வருவீர்கள். உத்தியோகத்தில் வரும் திடீர் இடமாற்றம் மன கிலேசத்தை உருவாக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு திருப்தி தரும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு சீரான லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றங்கள் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ, மாணவியர் களுக்கு கல்விக்கேற்ப வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு இனிமை தரும் விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 17, 18, 21, 22, பிப்ரவரி: 1, 2, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    கும்பம்

    மார்கழி மாத ராசிபலன்

    சமூகத்தில் நல்ல பெயர் எடுக்க விரும்பும் கும்ப ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இருப்பினும் தன-லாபாதிபதியான குரு, இம்மாதம் வக்ர நிவர்த்தியாவதால் தேவைக்கேற்ற விதத்தில் பணமும் வந்து சேரும். எனவே கவலைப்பட வேண்டியதில்லை. இட மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறிகள் தென்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. அஷ்டமத்தில் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

    கும்ப ராசியில் சனி

    மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான், மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஜென்மச் சனியாக வருகிறது. சுமார் 2½ ஆண்டு காலம் உங்கள் ராசியில் வீற்றிருப்பார். இந்த சனியின் ஆதிக்கத்தால் நன்மை, தீமை கலந்தே வரும். உங்களுக்கு முதல் சுற்றோ, மூன்றாவது சுற்றோ வருமேயானால் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    2-வது சுற்றான பொங்குசனி காலமாக இருந்தால் உங்கள் சிந்தனைகள் ஒவ்வொன்றும் படிப்படியாக நடைபெறும். சிரமங்கள் விலக நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தக்க வைத்துக் கொள்வது நல்லது. சனிக்கிழமை தோறும் சனி கவசம்பாடி சனி பகவானை முறையாக வழிபடுவது நல்லது.

    விருச்சிக-சுக்ரன்

    மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடிவரும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்பு உண்டு. பெற்றோரின் ஆதரவு பெருமை சேர்க்கும். பகைமை நிலை மாறும்.

    தனுசு-செவ்வாய்

    தனுசு ராசிக்கு மார்கழி 11-ந் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகி செல்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். திருமணத்தடை அகலும். தைரியமாக சில முடிவெடுத்து மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    தனுசு-புதன்

    மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். தொழிலில் எடுத்த புது முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்தும் உத்தியோகம் குறித்தும் யோசிப்பீர்கள்.

    பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் பணிபுரிவது நல்லது.

    மாணவ, மாணவியர்களுக்கு கலை, விளையாட்டுத்துறை போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்கு பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும்.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 20, 21, 25, 26,

    ஜனவரி: 5, 6, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    கும்பம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்ற கும்ப ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். தன ஸ்தானத்தில் ராகு இருக்கின்றார். எனவே லாபமும், விரயமும் சம அளவிலேயே இருக்கும். செலவிற்கு முன்னதாகவே வரவு வந்து சேரும் என்றாலும் அஷ்டமத்தில் கேது இருப்பதால் எந்தக் காரியத்தையும் உடனடியாக முடிக்க இயலாது. போராடியே முடிக்க நேரிடும். எனவே புது முயற்சிகள் செய்யும் போது அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளை கேட்டுக்கொள்வது நல்லது.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதும் மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தனலாபாதிபதி என்பதால் தனவரவில் தடைகள் ஏற்படும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வருவதில் தாமதம் ஏற்படும். உறவினர் பகை உருவாகும். உடல்நலத்தில் தாக்கங்கள் ஏற்படும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 4, 9-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெறுகின்றார். எனவே சுகங்களும், சந்தோஷங்களும் குறையும். பணப்பற்றாக்குறையின் காரணமாக ஒருசிலர் கடன் வாங்கும் சூழ்நிலை கூட உண்டு. நகைகளை அடகு வைத்தும் பணம் புரட்டிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். கார்த்திகை 14-ம் தேதி தனது சொந்த வீடான துலாம் ராசிக்கு சுக்ரன் வரப்போகின்றார். இதன் விளைவாகப் பாக்கியஸ்தானம் வலுவடைகின்றது. எனவே அதன் பிறகு படிப்படியான நன்மைகள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மனநிம்மதியோடு புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

    தனுசு-புதன்

    உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் கார்த்திகை 14-ம் தேதி லாப ஸ்தானத்திற்கு வருகின்றார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். எதிர்பாராத நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தி யோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர் களுக்கு அது கிடைக்கலாம்.

    கும்பம்

    ஐப்பசி மாத ராசிபலன்

    18.10.2023 முதல் 16.11.2023 வரை

    நட்பால் நன்மை உண்டு என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் வக்ரம் பெற்று விளங்குகின்றார். விரயாதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான் என்றாலும், ராசிநாதனாகவும் சனி விளங்குவதால் எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதே நல்லது. கூடுதல் விரயங்கள் வந்தாலும் அதற்கேற்ப வருமானங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். 2-ல் ராகு இருப்பதால் தொழில் வளர்ச்சியும், புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

    சனி வக்ர நிவர்த்தி!

    ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுவதால் உடல்நலம் சீராக வழிபிறக்கும். அதே நேரம் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும், கூட்டாளிகளுக்காகவும் விரயங்களைச் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும். வீண் விரயங் களிலிருந்து விடுபட்டு சுபவிரயங்களை மேற்கொள்ளவும் முயற்சிப்பது நல்லது, இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் முதலீடு செய்யலாம். திருமண வயதடைந்த பெண் குழந்தைகளுக்கு சீர்வரிசைப் பொருள் வாங்குவதில் கவனம் செலுத்தலாம்.

    குரு வக்ரம்!

    மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு தனலாபாதிபதியாக விளங்கும் குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணத்தட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம். ஒரு சிலருக்கு ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். இதுபோன்ற காலங்களில் பிறருக்கு பணப்பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும். இளைய சகோதரத்தோடு இருந்த உறவில் விரிசல்கள் ஏற்படலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    நீச்சம் பெறும் சுக்ரன்!

    ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பெற்றோர்களின் ஆதரவு குறையும். பணநெருக்கடி காரணமாக வாங்கிய இடத்தை விற்க நேரிடும். வாகனப் பழுதுகளின் காரணமாக வாட்டம் ஏற்படும். வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள இயலாமல் போகலாம். கவனம் தேவைப்படும் நேரமிது.

    விருச்சிக புதன்!

    ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் 10-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். வியாபார அபிவிருத்தி உண்டு. பொருளாதார நிலை சீர்படும். சருமப் பிரச்சினைகள் தகுந்த சிகிச்சையினால் குணமடையும். புண்ணிய காரியங்களுக்கு பொருளுதவி செய்வீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். வியாபரம் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவ-மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கும் நேரம் என்பதால் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் கூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 20, 21, 27, 28, நவம்பர் 1, 2, 3, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும்பச்சை.

    கும்பம்

    புரட்டாசி மாத ராசிபலன்

    18-09-2023 முதல் 17-10-2023 வரை

    நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் கும்ப ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் விரய ஸ்தானத்திற்கு வருகிறார். எனவே வரவை விட செலவு அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லைகளும், அதனால் மன உளைச்சலும் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைப்பது போல் இருந்தாலும் அது கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம். இம்மாதம் உங்கள் எண்ணங்கள் செயலாக, யாரேனும் ஒருவருடன் இணைந்துதான் செயல்பட வேண்டும்.

    புதன் வக்ரம்

    உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் கன்னி ராசியில் உச்சமும், வக்ரமும் பெறுகிறார். புரட்டாசி 10-ந் தேதி இந்த நிகழ்வு நடைபெறஇருக்கிறது. இதன் விளைவாக இடமாற்றம், ஊர் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் வரலாம். பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். கல்யாணம், காதுகுத்துவிழா போன்றவை நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும்.புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சியில் புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரலாம். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது பலமடங்கு லாபம் தரும் விதத்தில் விற்பனையாகலாம். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் வருகிறார். பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன் துலாம் ராசிக்கு வரும்பொழுது, பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். புதிய முயற்சிகளில் குறுக்கீடுகள் வந்தாலும் அதை வெல்லும் ஆற்றல் உங்களுக்குப் பிறக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முடிவு பலன்தரும். அவர்கள் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்திருந்தால் வாய்ப்புகள் கைகூடும். காரிய வெற்றிக்கு நண்பர்களும், உறவினர்களும் போட்டி போட்டுக்கொண்டு உதவுவர். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் உண்டு. உத்தி யோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ -மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கலாம். பெண்கள் புத்துணர்ச்சியோடு புதுமை படைப்பர். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்:- 18, 19, 23, 24, 29, 30, அக்டோபர்: 4, 5, 14, 15. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    கும்பம்

    தமிழ் மாத ராசிபலன்கள்

    18-08-2023 முதல் 17-09-2023 வரை

    எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் வெற்றிகரமாக முடிக்கும் கும்ப ராசி நேயர்களே!

    ஆவணி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது,  மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். சில நாட்கள் கழித்து அந்த வக்ர இயக்கத்தோடு விரய ஸ்தானத்திற்கும் வருகிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் பற்றாக்குறையும் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை குறிப்பிட்டபடி செய்ய இயலாது.

    வழிபாட்டினை மேற்கொள்வதன் மூலம் வக்ரச் சனியின் காலத்தில் வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ள இயலும். கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். எதையும் தன்னிச்சையாகச் செய்ய இயலாது. மனஅழுத்தம், நிம்மதியின்மை போன்றவை ஏற்படலாம்.

    தொழிலில் பங்குதாரர்கள் விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்துவர். 'நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். அலுவலகத்தில் உள்ளவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை.

    கன்னி -செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 'கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. எனவே மிகுந்த பொருள் விரயம் ஏற்படும் நேரமிது. குறைந்த செலவில் முடிவடைய வேண்டிய காரியம் அதிகச் செலவில் முடியும். ஒருவேலையை ஒருமுறைக்கு இருமுறை செய்யும் நிர்பந்தம் ஏற்படும். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய் என்பதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. வம்பு, வழக்குகள் வாசல் தேடி வரலாம். அஷ்டமத்துச் செவ்வாய் மாறும்வரை முறையான வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, வக்ர இயக்கத்திலேயே மகர ராசிக்கு செல்கிறார்.

    உங்கள் ராசிநாதன் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, கூடுதல் விரயங்களைச் சந்திக்க நேரிடும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரப் போட்டி அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கோபத்தின் காரணமாக பல நல்ல வாய்ப்புகளை நழுவவிட நேரிடும். 'விரிவு செய்த தொழிலை தொடர்ந்து நடத்த மூலதனம் இல்லையே' என்று கவலைப்படுவீர்கள்.

    புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன் பலம் பெறும் இந்த நேரம், பிள்ளைகளின் சுபாகரிய பேச்சுக்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான பாகப்பிரிவினைகள் நடைபெற்றால் அது திருப்தி தரும். தேகநலன் படிப்படியாகக் குணமாகும்.

    வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தத்தளிப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதையும் யோசித்துச்செய்வது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

    உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது. கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் மூலம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு இருமடங்காக உயரும்.பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஆகஸ்டு: 22, 23, 26, 27, செப்டம்பர்: 3, 4, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    கும்பம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.7.23 முதல் 17.8.23 வரை

    உழைப்பையே மூலதனமாக்கி செயல்படும் கும்ப ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை பதிந்த செவ்வாய், சனியைப் பார்க்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். மனநிலையில் மாற்றம் ஏற்படும். தொடக்கத்தில் வேகமாகச் செய்த வேலையை நிறுத்திவிடுவீர்கள். பல வேலைகள் அரைகுறையிலேயே நிற்கக்கூடும். எனவே திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். வழிபாட்டின் மூலமே வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ளலாம்.

    மேஷ - குரு சஞ்சாரம்

    நவக்கிரகத்தில் சுப கிரகமான குரு பகவான், இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். தன - லாபாதிபதியாக விளங்கும் குரு பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். அதே நேரம் ராகுவோடு இணைந்திருப்பதால், குருவால் ஓரளவே நன்மை செய்ய இயலும். அவரது பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றன. 7-ம் இடம் களத்திர ஸ்தானம் என்பதால் குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். கடுமையாக முயற்சித்தும் முடிவடையாத திருமணங்கள் இப்போது நடைபெறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானம் கிடைக்கலாம்.

    குருவின் பார்வை 9, 11 ஆகிய இடங்களில் பதிவதால் பாக்கிய ஸ்தானமும், லாப ஸ்தானமும் புனிதமடைகிறது. எனவே தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். முன்னோர்கள் கட்டி வைத்து சிதிலமடைந்த கோவில்களைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்வீர்கள். வாகனங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். லாப ஸ்தானம் பலம்பெறுவதால் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இதுவரை கேட்டும் கிடைக்காத சலுகைகள் இப்பொழுது கிடைக்கும். வரும் வாய்ப்புகள் எல்லாம் வளர்ச்சிக்குரியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    சிம்ம - புதன்

    ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் களத்திர ஸ்தானத்திற்கு வரும்பொழுது பிள்ளைகளின் திருமணப் பேச்சுக்கள் திடீரென முடிவாகும். வெளிநாடு சென்று படிக்கவோ, வேலை பார்க்கவோ நினைக்கும் தங்களின் பிள்ளைகளுக்கு அது கைகூடும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு இணக்கமாக நடந்து கொள்வர். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குத் தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் பெறுவதற்கான அறிகுறி தென்படும். கலைஞர்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை. மாணவ - மாணவியர்கள், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பெண்களுக்கு எதையும் யோசித்து செய்ய வேண்டிய காலகட்டம். ஆரோக்கியத் தொல்லை உண்டு. வீண்பழிகளுக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 25, 26, 30, 31, ஆகஸ்டு: 6, 7, 10, 11.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    கும்பம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    உழைப்பால் உயர முடியும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், சனியைப் பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி முடியாது. திடீர் விரயங்கள் அதிகரிக்கும். ஒட்டி உறவாடிய நண்பர்கள் உங்களை விட்டு விலகுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் இணக்கம் குறையும். எதையும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கலாம்.

    மிதுன - புதன்

    ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். கல்யாண முயற்சி கைகூடலாம். 'படித்து முடித்தும் வேலை இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். பூர்வ புண்ணியத்தின் பலனாக, சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக முடியும். பூமி விற்பனை மூலம் வரும் லாபத்தைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள்.

    சிம்ம - செவ்வாய்

    ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்போது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகின்றது. எனவே 'குரு மங்கல யோகம்' ஏற்படுகின்றது. இதனால் சுபகாரியங்கள் நடைபெறும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். குருவின் பார்வை பதிந்த செவ்வாய், சனியைப் பார்ப்பதால் ஆராக்கியத் தொல்லை அகலும். பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டிற்கு வரமுடியாமல் தத்தளித்தவர்களுக்கும், தாய் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லமுடியாமல் தத்தளித்தவர்களுக்கும் இப்பொழுது வழிபிறக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வருமானம் கூடும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் ெசல்கிறார். இதன் விளைவாக 'சுக்ர மங்கல யோகம்' நடைபெறுகின்றது. குருவின் பார்வை செவ்வாய் மற்றும் சுக்ரன் மீது பதிவது யோகம்தான். சொத்துத் தகராறுகள் அகலும். சொந்தங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். உள்ளத்தில் உறுதியோடு செயல்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    கடக - புதன்

    ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். இப்போது அஷ்டமாதிபதி 6-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். 'இடம், வீடு இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்போது அவற்றை வாங்கும் யோகம் உண்டு. படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். பரந்த மனப்பான்மை கொண்ட சிலரால் நிரந்த வருமானத்திற்கு வழிபிறக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பயணங்கள் பலன்தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் ஆதரவு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட பதவி தானாக கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வீடு தேடிவரும். மாணவ-மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் தலைதூக்கும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 16, 17, 28, 29, 30, ஜூலை: 3, 4, 5, 9, 10.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    கும்பம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    உழைப்பால் உயர முடியும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், சனியைப் பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி முடியாது. திடீர் விரயங்கள் அதிகரிக்கும். ஒட்டி உறவாடிய நண்பர்கள் உங்களை விட்டு விலகுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் இணக்கம் குறையும். எதையும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கலாம்.

    மிதுன - புதன்

    ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். கல்யாண முயற்சி கைகூடலாம். 'படித்து முடித்தும் வேலை இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். பூர்வ புண்ணியத்தின் பலனாக, சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக முடியும். பூமி விற்பனை மூலம் வரும் லாபத்தைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள்.

    சிம்ம - செவ்வாய்

    ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்போது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகின்றது. எனவே 'குரு மங்கல யோகம்' ஏற்படுகின்றது. இதனால் சுபகாரியங்கள் நடைபெறும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். குருவின் பார்வை பதிந்த செவ்வாய், சனியைப் பார்ப்பதால் ஆராக்கியத் தொல்லை அகலும். பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டிற்கு வரமுடியாமல் தத்தளித்தவர்களுக்கும், தாய் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லமுடியாமல் தத்தளித்தவர்களுக்கும் இப்பொழுது வழிபிறக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வருமானம் கூடும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் ெசல்கிறார். இதன் விளைவாக 'சுக்ர மங்கல யோகம்' நடைபெறுகின்றது. குருவின் பார்வை செவ்வாய் மற்றும் சுக்ரன் மீது பதிவது யோகம்தான். சொத்துத் தகராறுகள் அகலும். சொந்தங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். உள்ளத்தில் உறுதியோடு செயல்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    கடக - புதன்

    ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். இப்போது அஷ்டமாதிபதி 6-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். 'இடம், வீடு இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்போது அவற்றை வாங்கும் யோகம் உண்டு. படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். பரந்த மனப்பான்மை கொண்ட சிலரால் நிரந்த வருமானத்திற்கு வழிபிறக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பயணங்கள் பலன்தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் ஆதரவு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட பதவி தானாக கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வீடு தேடிவரும். மாணவ-மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் தலைதூக்கும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 16, 17, 28, 29, 30, ஜூலை: 3, 4, 5, 9, 10.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    கும்பம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.5.23 முதல் 15.6.23 வரை

    செயலாற்றல் மிக்கவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே சனி பகவான் சஞ்சரிக்கிறார். ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பொருளாதார நிலையிலும் பற்றாக்குறை ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை கூறுவர். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்பு கரையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவ்வளவு பாடுபட்டாலும், அதிகாரியின் ஆதரவைப் பெற இயலாது. திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது.

    ராகு-கேது சஞ்சாரம்

    பின்னோக்கிச் செல்லும் கிரகங்களில், ராகு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். கேது 9-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது தாமதப்படும். சில சலுகைகள் உங்களுக்கு மறுக்கப்படலாம். பூர்வீக சொத்துத் தகராறுகள் தலைதூக்கும். பாகப்பிரிவினைகளில் குழப்பங்கள் அதிகரிக்கும். தேக நலனில் அக்கறை தேவை. தெய்வ பலம் உங்களுக்கு கை கொடுக்கும். என்றாலும் குறிப்பிட்ட நாளில் சில ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாமல் போகலாம். சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை முறையாகச் செய்துகொள்ளுங்கள். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகளைப் பெற முடியும்.

    கடக - சுக்ரன்

    வைகாசி 16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு நீச்சம் பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.

    ரிஷப - புதன்

    வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன், சூரியனுடன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் மேற்படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வும், உத்தியோக உயர்வும் வந்துசேரும். புதியவர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கிடைக்கும். நீண்ட நாளைய எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு திருப்தி தரும். தொழில் செய்பவர்களுக்கு, தொழில் நடைபெறுவதில் இழுபறி நிலை இருக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். கலைஞர்களுக்கு விலகிச் சென்ற வாய்ப்பு மீண்டும் வந்து சேரும். மாணவர்கள் பாடங்களில் மனதைச் செலுத்தி குறிப்பிட்ட இலக்கை அடைவார்கள். பெண்களுக்கு ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். அசையாச் சொத்துகளை உங்கள் பெயரில் வாங்கும் யோகம் வாய்க்கும். பணவரவு திருப்தி தரும். பணிபுரிபவர்களுக்கு யோகமான நேரம் இது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 20, 21, 31, ஜூன்: 1, 5, 6, 12, 13.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    ×