search icon
என் மலர்tooltip icon

    கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

    கும்பம்

    குருபெயர்ச்சி பலன்-2024

    கும்பம்- அர்தாஷ்டம குரு 50%

    உயர்வான குணம் நிறைந்த கும்ப ராசியினரே!

    இதுவரை முயற்சி ஸ்தானத்தில் நின்ற குரு பகவான் மே 1, 2024 முதல் சுக ஸ்தானம் சென்று அர்தாஷ்டம குருவாக பலன் வழங்கப்போகிறார். சனி பகவான் ஜென்ம ராசியிலும் ராகு பகவான் தனம்,வாக்கு, குடும்ப ஸ்தானத்திலும் கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    அர்தாஷ்டம குருவின் பொதுபலன்கள்:

    கும்ப ராசிக்கு குரு பகவான் 2, 11ம் அதிபதி. தனாதிபதி மற்றும் லாபாதிபதி. தன லாபாதிபதி குரு 4ம்மிடமான சுக ஸ்தானம் செல்வது மிகச்சிறப்பு. லெளகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும். தாய்வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும். 2ம் அதிபதி குரு 4ம்மிடம் செல்வதால் இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும்.

    விவசாயிகள் பண்படுத்த முடியாத தங்களின் விளை நிலங்களை குத்தகைக்கு விட்டு வருமானம் பெறலாம். கால்நடை மற்றும் உயிரினம் வளர்ப்பவர்களுக்கு ஆதாயம் மிகும். விவசாயிகள் கிணறு வெட்டலாம். பம்பு செட் போடலாம். பூமி தொடர்பான ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு மிக ஏற்றமான நேரம். சிலருக்கு அடமானத்திலிருக்கும் சொத்துக்கள், நகைகள் மீண்டு வரும்.

    விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புது சொத்தாகி விடும். ஆடம்பர பொருட்கள் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடம்பரம், அந்தஸ்து நிறைந்த சொகுசு வீடு, வாகனம் அமையும்.தாயின் ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்த கவலைகள் அகலும்.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

    குருவின் 5ம் பார்வை ராசிக்கு 8ம் மிடமான அஷ்டம ஸ்தானத்தில் உள்ள கேதுவின் மேல் பதிகிறது. பய உணர்வு அகலும். புதிய தெம்பு, தெளிவு பிறக்கும்.இதுவரை உங்கள் மேல் இருந்த தவறான குற்றச்சாட்டு மறையும். நீங்கள் பிறந்த பலனை அடையப் போகிறீர்கள். உங்கள் புகழ், பெருமையை உற்றார், உறவினர் அறியப் போகிறார்கள். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டவர்கள் வாழ்க்கையில் புதுவசந்தம் வீசப்போகிறது.

    எட்டாமிடம் ஆணுக்கு ஆயுள் ஸ்தானம் பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானம். நோயின் வீரியம் குறைந்து வாழ்க்கைத் துணையின் ஆயுள், ஆரோக்கியம் சீராகும். பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோய் சிறிய வைத்தியத்தில் சீராகும். மீள முடியாத வழக்கிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும் அல்லது தீர்ப்பு சாதகமாகும். எப்போதோ நடந்த விபத்திற்கான நஷ்ட ஈடு இப்போது கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டப் பணம், சீதனம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும்.

    குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

    குருவின் 7ம் பார்வை 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. நீண்ட காலமாக தடைபட்ட செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். சுய தொழில் செய்கிறவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும், கடன் உதவியும் கிட்டும்.புதிய தொழில் சந்தர்ப்பம் தேடி வரும்.புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள் . மிகப் பெரிய புகழ் கிடைக்கும். செல்வச் செழிப்பு உருவாகும். வழக்கத்தை விட அதிகமான பணம் சம்பாதிப்பீர்கள்.வாடிக்கையாளர்கள் உங்களுக்கு முழு ஆதரவு வழங்குவார்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றத்துடன் கூடிய பதவி,ஊதிய உயர்வு ஏற்படும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    அலுவலகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலையிலிருந்த கெடுபிடிகள் குறையும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.சக ஊழியர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    குருவின் ஒன்பதாம் பார்வை:

    குருவின் 9ம் பார்வை ராசிக்கு 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் பதிகிறது. உங்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் சிற்சில மாற்றங்கள் ஏற்படும். மன சஞ்சலம், மனக்குழப்பம் தடை தாமதங்கள், தூக்கமின்னை ஆகிய குறைபாடுகள் அகலும். வரவுக்கு மீறிய செலவு மற்றும் வீண் விரயங்கள் அதிகமாகும்.

    சிலர் வைத்தியத்திற்காக தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம். கண்களில் பார்வை குறைபாட்டை சீர் செய்ய உகந்த காலம். மகான்களின் ஆசிகள், மந்திர உபதேசங்கள் கிட்டும்.

    நீத்தார் கடன் தொடர்பான வழிபாடுகள் பலன் தரும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம், ஆன்மீக, இன்பச் சுற்றுலா சென்றுவருவீர்கள்.

    பிரயாணத்தின் போது பொருள் இழப்பு,திருட்டு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.கர்ம வினை நோய்க்கு வைத்தியம் செய்பவர்கள் இயற்கை வைத்தியத்தை நாடினால் நோய் தாக்கம் விரைவில் கட்டுப்படும்.

    சுய ஜாதகத்தில் வலுவான தசா புக்தி இருந்தால் ஏற்றுமதி, இறக்குமதி மூலம் பெரும் லாபம் கிடைக்கும். சுய ஜாதகத்தில் வலிமையற்ற தசா புக்தி இருப்பவர்களின் எதிர்மறை எண்ணம், பய உணர்வு மட்டுப்படும்.

    குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை)

    கும்ப ராசிக்கு 7ம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ராசிக்கு 7ம் மிடத்திற்கு சனி பார்வை இருப்பது சனி தோஷம். 2ல் ராகு, 8ல் கேது நிற்பது சர்ப்ப தோஷம். இது போன்ற காரணங்களால்திருமண முயற்சியில் தடை தாமதங்கள், மனம் வருந்தும் நிலை ஏற்படும். பெண்ணை மாப்பிள்ளை வீட்டாரிடம் காண்பிக்கும் முன்பு பல முறை யோசிக்கவும்.

    திருமண விஷயத்தில் மன வேதனைய உருவாக்கும் அல்லது விருப்பம் இல்லாத திருமணம் நடக்கும் காலம் என்பதால் திருமணத்திற்கு காத்து இருப்பவர்கள் அதிக கவனத்துடன் வரனை தேர்வு செய்ய வேண்டும்.தன் குலத்திற்கு விரோதமான திருமணம், தவறான சுய விருப்ப விவாகம் தோல்வியை ஏற்படுத்தலாம். நண்பர்கள். தொழில் கூட்டாளிகள் வாழ்க்கை துணை மற்றும் வாடிக்கையாளர்களால் அனுகூலமான பலன் உண்டு.

    குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024 வரை)

    கும்ப ராசிக்கு 6ம் அதிபதியான சந்தரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சிலருக்கு தந்தையின் அரசுப்பணி கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். திரைக் கலைஞர்களுக்கு பிற மொழிப் படங்களில் வாய்ப்பு கிடைக்கும். வங்கிகள், பைனான்ஸ் கம்பெனிகள் உங்களுக்கு கடன் கொடுக்க வீடு தேடி வருவார்கள்.

    குடும்ப தேவைகள் சுப நிகழ்விற்காக வைத்தியத்திற்காக கல்விக்காக கடன் பெறலாம். அரசியல் ஈடுபாடும் பிரபலமாகும் யோகமும் உண்டாகும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீர்க்க உகந்த நேரம்.மகான்களின் தரிசனம், குலதெய்வம், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

    குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள்(21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15.5.2025 வரை)

    கும்பராசிக்கு 3, 10ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் உங்களின் புகழ், தைரியம், நம்பிக்கை, வீரம், விவேகம் அதிகமாகும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இதுவரை உங்களுக்கு எது கிடைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டு இருந்தீர்களோ அவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். அசாத்திய துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்வீர்கள்.

    செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டு இலகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். புத்திர பிராப்தத்தில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும்பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். பாகப் பிரிவினையில் நிலவிய சர்ச்சைகள் முடிவிற்கு வரும். நெடுங்காலமாக முறைப்படுத்த முடியாத பூர்வீக சொத்துக்களுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

    குருவின் வக்ர காலம்:(கும்பராசிக்கு 3, 10ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

    குரு வக்ரமடையும் காலத்தில் வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருப்பவர்களின் சொத்தை இளைய சகோதரம் தனக்கு சாதகமாக பயன்படுத்துவார். சிலருக்கு சொத்து தொடர்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு மேலோங்கும்.நல்ல பங்குதாரரை இழப்பது அல்லது டூபாக்கூர் பங்குதாரரை சேர்ப்பது போன்ற தவறுகள் நேரலாம்.

    கும்ப ராசிக்கு 6ம் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2.2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் தேவையில்லாத கடன் சிரமம் தரும் என்பதால் கடன் வாங்குவதை தவித்தல் நலம். இயன்றவரை வம்பு, வழக்கு பிறர் விவகாரஙகளில் தலையீட்டை குறைத்தல் நல்லது. ஜாமீன் கையெழுத்து போடுவது, கடன் கொடுப்பது, வெற்று காசோலை தருவது போன்றவற்றில் கவனம் தேவை.

    பெண்கள்:

    சகாயங்கள் நிறைந்த குருப் பெயர்ச்சி. கம்பீரமான வசீகரமான தோற்றம் ஏற்படும்.குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். பெண்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு இரவல் கொடுத்த நகைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். அரசு வேலை கிடைக்கும். தேவைக்கு பணப்புழக்கம் இருக்கும்.

     பரிகாரம்:

    சிவாலயங்களில் உழவார பணிகளை மேற்கொண்டால் பிறவி பயனை அடைய இயலும். வியாழக்கிழமை சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபட தடையில்லாத முன்னேற்றம் தேடி வரும்.

    கும்பம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

    காரியவாதியான கும்ப ராசியினரே இதுவரை ராசிக்கு இரண்டாமிடமான தன ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் மூன்றாமிடம் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

    மூன்றாமிட குருவின் பொது பலன்கள் :

    கும்ப ராசிக்கு தன, லாபாதிபதியான குருபகவான் மூன்றாமிடமான தைரிய, வீரிய, சகாய, இளைய சகோதர ஸ்தானம் செல்கிறார். 2, 11ம் அதிபதியான குரு பகவான் 3ம்மிடம் செல்வது சிறப்பு. 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நின்று பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையச் செய்த குருபகவான் முயற்சி ஸ்தானம் எனும் உப ஜெய ஸ்தானம் செல்வதால் தொடர்ந்து குரு கடாட்சம் கிடைக்கப் போகிறது.

    ஜென்ம ராசியில் சனி பகவான் இருக்கிறார், இந்த நிலையில் அக்டோபரில் ராகு/கேது பெயர்ச்சியாகி 2 , 8ம்மிடத்திற்குள் நுழைகிறார்கள் என்ற பய உணர்வு தேவையில்லை. ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியாகிய சனி பகவான் தனது 3 ம் பார்வையால் 3ம்மிடத்தில் உள்ள தன, லாபாதிபதி குருவை பார்ப்பதால் தன வரவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் உற்சாகம் கூடும். முயற்சிகளில் தளர்வில்லாத வெற்றி கிடைக்கும்.தொட்டது துலங்கும். ஞாபக சக்தி கூடி செயல்திறன் அதிகரிக்கும். தெளிவான பேச்சு, தைரியமான செயல்பாடுகள், பண்பான நடவடிக்கைகள் இவை அனைத்தும் சமுதாயத்திற்கு உங்களை அடையாளம் காட்டி பிரபலம் அடையச் செய்யப்போகிறது. இது வரை வெளியுலகத்திற்குத் தெரியாமல் இருந்த உங்களின் திறமைகள் தகவல் தொடர்பு சாதனங்களான யூடியுப், இன்ஸ்டாகிராம், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி மூலம் வெளிவரும். உங்களுடன் பிறந்த சகோதரர்களுக்கு உங்கள் மேல் மதிப்பு, மரியாதை உயரும்.

    சகோதர, சகோதரிகளின் சண்டைகள் அன்பாக மலரும். தந்தை ஸ்தானத்தில் நின்று அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்து மகிழ்வீர்கள். மாமனாருடன் புரிதல் ஏற்படும். சிலருக்கு மாமனார் மூலம் பெரும் பொருள், பணம், தங்கம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.இது வரை குண்டு மணி தங்கம் கூட வாங்கி அனுபவிக்காதவர்களுக்கு தங்க நகைகள் வாங்கி அணிந்து மகிழும் யோகம் கிடைக்கும். காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் குணமாகும். சிலர் தொழிலை, தொழில் முறையை மாற்றுவார்கள். வீடு அல்லது வேலையில் இடமாற்றம் உண்டாகும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும்.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள் :

    ராசிக்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்திற்கு குருவின் ஐந்தாம் பார்வை பதிகிறது. சம்மந்திகள், மாமன், மைத்துனன், தொழில் கூட்டாளிகள் உறவு பலப்படும். சிறு வயது பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு சமுதாய அந்தஸ்து நிறைந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சனைகள் நட்பால் தீரும். தொழிலுக்கு தகுதி திறமை வாய்ந்த நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். திருமணமான தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வார்கள். குடும்ப ரீதியான விசயங்களுக்கு சேர்ந்து முடிவு எடுப்பார்கள். ஏதேனும் காரணத்தினால் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். விவாகரத்தான சில தம்பதிகள் கூட இணைந்து வாழத்துவங்குவார்கள்.

    குருவின் ஏழாம் பார்வை பலன்கள் :

    ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குருவின் ஏழாம் பார்வை பதிகிறது. வெளிநாட்டிற்கு சென்று குடிபுகலாம். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். சிலரின் தந்தை தொழில், வேலைக்காக வெளிநாடு சென்று தங்கலாம். ஆன்மீக நாட்டம் மிகும். இளம் வயதினருக்கு புத்திர பிராப்தம் கிடைக்கும்.மத்திம வயதினருக்கு பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். வயோதிகர்களுக்கு கொள்ளு பேரன், பேத்தி பிறப்பார்கள். சிலர் சொத்து , வியாபாரத்தை பாகப் பிரிவினை செய்து பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுக்க விரும்புவார்கள்.

    குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள் :

    ராசிக்கு பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்திற்கு குருவின் ஒன்பதாம் பார்வை பதிகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இழுத்து மூடும் நிலையில் இருந்த தொழில் கூட விறுவிறுப்பாக சூடு பிடிக்கும். நல்ல கணிசமான லாபம் கிடைக்கும். கடன் தொல்லையி லிருந்து விடுபட்டு மன அமைதி பெறுவீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். பொன், பொருள், ஆடம்பரப் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். இதுவரை பாராமுகமாக பேசாமல் இருந்த சித்தப்பா, பெரியப்பா, உடன்பிறந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். வழக்குகளில் வெற்றி அல்லது சாதகமான திருப்புமுனை ஏற்படும்.ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும்.

    அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்- 22.4.2023 முதல் 21.6.2023 வரை

    கோட்சாரத்தில் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தந்தையின் ஆரோக்கிய குறைபாடு வைத்தியத்தில் சீராகும். தந்தையின் அன்பு, ஆதரவு பரிபூரண ஆசிர்வாதம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் நிலவிய பங்காளிச் சண்டை பிரச்சனைகள் விலகி பேச்சு வார்த்தையில் முடிவுக்கு வரும். சிலருக்கு ஆன்மீக குருமார்களின் தீட்சைகள், உபதேசம் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரித்து ஆன்மீக சுற்றுலாக்கள் சென்று வரலாம். சிலர் தொழில் அல்லது வேலைக்காக வெளியூர், வெளிநாடு சென்று வரலாம்.

    பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்- 22.6.2023 முதல் 17.4.2024 வரை

    கும்ப ராசிக்கு 4,9ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பிரிந்து வாழ்ந்த தாயும், தந்தையும் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். தாய், தந்தை உங்கள் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். இதுவரை சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு புதிய சொத்துக்கள் வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. ஏற்கனவே வாங்கிய சொத்துக்களின் மதிப்பு உயரும். கல்வி நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி முன்னேற்றம் தரும்.

    கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

    கும்ப ராசிக்கு ஏழாம் அதிபதியாகிய சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கல்வி, வேலை, பொருளாதாரம், குழந்தை பாக்கியம் திருமணம் போன்றவற்றில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் தடைபட்ட பல நல்ல விசயங்கள் நடக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் வெற்றி கொடுக்கும்.

    குருவின் வக்ர பலன்கள் :

    4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட வேண்டும். குல தெய்வம் , பூர்வீகம் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொள்ள கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.முதல் திருமணத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு மறு திருமணம் நடக்கும்.

    பெண்கள் :

    நிறைவேறாமல் தடங்கல் ஏற்பட்டு கொண்டிருந்த சில முக்கிய பணிகள் மூன்றாமிடத்து குருவால் நிறைவேற்றப்படும். உடல் நலம் சீராகும். குடும்பத்தினர் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிறந்து தனிக்குடித்தனம் செல்வார்கள். கணவன், மனைவி ஈகோ தணியும். ஆடம்பர பொருட்கள் சேரும்.

    மாணவர்கள் :

    கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்கால கல்வியை திட்டமிடுதலில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நல்ல சிந்தனைகள் தோன்றும். படித்த பாடம் நன்றாக ஞாபகத்தில் இருக்கும். முயற்சி ஸ்தான குரு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்கப் போகிறார்.

    உத்தியோகஸ்தர்கள் :

    நீங்கள் வேறு வேலைக்கு செல்லப் போகிறேன் என்று சொன்னால் நிர்வாகம் உங்களை விடாது. அது மட்டுமா உயர் அதிகாரிகள் உங்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவார்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். புதியதாக வேலை தேடும் இளைஞர்கள் கிடைக்கும் வேலை வாய்ப்பை முதலில் பயன்படுத்துவது நல்லது.

    ராகு/கேது பெயர்ச்சி :

    அக்டோபர் 30,2023ல் ராகு 2ம்மிடம் செல்கிறார். கேது எட்டாமிடம் செல்கிறார். தாராள பொருளாதார உயர்வு ஏற்படும். அடிக்கடி உற்றார், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களது அறிவாற்றல் உலகப் புகழ் பெறும். திறமைகள் பாராட்டப்படும். வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றி தரும். குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

    பரிகாரம் :

    பனிரென்டு ராசிகளில் குரு நின்ற மற்றும் பார்வை பட்ட இடங்களின் மூலம் மிகுதியான சுப பலன்களை பெறுபவர்கள் கும்ப ராசி என்றால் அது மிகையல்ல. அதே நேரத்தில் ஜென்மச் சனி மற்றும், ராகு/கேதுவினால் ஏற்படும் இன்னல்களும் கட்டுப்படும். தினமும் மாலை நேரம் 4.30 முதல் 6 மணி வரை சரபேஸ்வரரை வழிபட வளர்ச்சி கூடும். ஜென்மச் சனியின் பாதிப்பு குறையும். ஜென்ம நட்சத்திர நாட்களில் வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவவும். தினமும் சிவ வழிபாடு செய்யவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    இரக்க குணம் மிகுந்த கும்ப ராசியினரே ராசிக்கு 2ல் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 12, 1 ம் இடத்திலும், ராகு பகவான் 3ம் இடத்திலும், கேது பகவான் 10ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதுவரை ராசியில் சஞ்சரித்த குருபகவான் 2ம்மிடமான தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கும்ப ராசிக்கு குரு தன லாபாதிபதி. தனாதிபதி குரு தன ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் கும்ப ராசியினருக்கு இந்த குருப் பெயர்ச்சியால் ஏற்றமிகு பலன்கள் ஏற்படப்போகிறது. தன ஸ்தானத்திற்கு ராசி அதிபதி சனியின் 3ம் பார்வையும் 17.1.2023 வரை இருப்பதால் சுப பலன் இரட்டிப்பாகும்.

    2மிடம் என்பது தனம் வாக்கு குடும்ப ஸ்தானம். வாக்கு ஸ்தானம், குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. ஜென்ம குருவால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் வேதனைகளும், துயரங்களும் விலகும். பேச்சில் தைரியம், தன் நம்பிக்கை உண்டாகும். அமைதியாக பேசுபவர்கள் கூட அதிகார தோரணையான பேச்சில் அனைவரையும் கட்டிப் போடுவார்கள். சிலர் பேசியே பிறரை வதைப்பார்கள். சிலர் பேச்சுத் திறமையால் வருமானத்தை அதிகரிக்கப்பார்கள். ஒருவர் சம்பாத்தியத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகளின் வருமானத்தால் நிமிர்ந்து நிற்கும். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும்.

    குடும்பத்திற்கு நிலையான நிரந்தரமான வருமானத் திற்கான வழி தென்படும். இதுவரை வீட்டு வேலையில் காலத்தை கழித்த பெண்கள் கைத் தொழில் கற்று வருமானம் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவார்கள். கடன் சுமை குறையத் துவங்கும்.வீடு முழுவதும் பண வாசனை நிரம்பும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். பணத்தைப் பார்த்தசில போலியான உறவுகள் உண்மையானவர்கள் போல் நடிப்பார்கள்.

    சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும்.குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும்.சொல் வலிமை, வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனை கேட்க ஒரு கூட்டம் உருவாகும். ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள். சிலருக்கு பேரன் பேத்தி பிறப்பார்கள்.

    5ம் பார்வை பலன்கள்: குருவின் 5ம் பார்வை 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் பதிகிறது. குருவின் 5ம் பார்வை ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய6ம் இடத்திற்கு இருப்பதால் உடல் ஆரோக்யம் சீராகும். எந்த முறை வைத்தியம் செய்து நோய் நிவாரணம் பெறலாம் என்று திணறியவர்களுக்கு நோயின் தன்மை புலப்படும். நோயின் தன்மைக்கு தகுந்த வைத்தியம் கிடைக்கும். ஆச்சரியப்பபடத்தகுந்த வகையில் நோயிலிருந்து விடுதலை பெறுவீர்கள். வலது காதில்சிறு குறைபாடு தோன்றும். செய்வினை, கண் திருஷ்டி அகலும். கடன் தொல்லைகள் முற்றிலும் அகலும். வராக்கடன்கள் வசூலாகும். கொடுக்க வேண்டியபணத்தை திரும்ப கொடுத்து விடுவீர்கள். பணம் எல்லாநேரத்திலும் எல்லோருக்கும்வந்து விடாது. கடன் இல்லா வாழ்க்கை பெரும் பாக்கியம். குருவருளால் உங்களுக்கு சாத்தியமாகும் . கடனை வளரவிடாமல் பார்த்து கொள்ளவது வளமான எதிர்காலத்தை கொடுக்கும்.

    பொருளாதார உயர்வு எற்படும். பொருளாதார வரவைதிட்டமிட்டு செயல்படுத்த குருபகவான் பக்கபலமாக இருப்பார். அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் சுமூகமான நல் இணக்கம் ஏற்படும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை ஏற்படும். எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் செயல்கள் உங்களுக்கு சாதகமாகும்.3ல்ராகு நிற்பதால் சகோதரர்களிடம் அவ்வப்போதுகருத்து வேறுபாடு தோன்றி மறையும்.சகோதரர்களுக்குகாக அதிக செலவு செய்ய நேரும். எதற்கும்கலங்காமல் மன உறுதியுடன் செயலாற்றுவீர்கள். இது வரை வாடகை வீட்டில் குடியிருந்த சிலர் கடன் பெற்று சொந்த வீடு கட்டி குடிபுகும்ஆர்வம் உண்டாகும். உங்கள் எண்ணம் போல் வீடு, வாகன யோகம் அமையும். சிலர் வீடு, வாகனங்களை விற்று கடன் அடைக்கலாம்.

    6, 8 ம்மிடத்திற்கான குரு பார்வைபிரச்சனையை மூடி மறைக்கும். வட்டிக்கு வட்டி கட்டி சமாளிக்க முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்குகடன் தொகை தள்ளுபடியாகும் . விவசாயிகள் கடன் பிரச்சனையிலிருந்தும் மீண்டு வருவார்கள். 6ம் இடம் குருவின் கட்டுப்பாட்டில் இருப்பதால்கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் போட்டி போடும்.குரு பார்வை இல்லாத போது கடனே கழுத்தை நெரிக்கும் என்பதால் தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

    7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 8ம்மிடமான ஆயுள் ஸ்தானத்தில் பதிவதால் ஆயுள் பலம் ஏற்படும். நீண்ட நாள் வைத்தியம் செய்யக் கூடிய பரம்பரை வியாதியின் தாக்கம் வெகுவாக குறையும்.நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தால் இப்பொழுது ஆரோக்கியம் ஏற்படும். கடுமையான உயிருக்கு ஆபத்தான நோயில் போராடுபவர்களுக்கு சிறிய நிவாரணம் ஏற்படும். சிலருக்கு கண், பல், முகம் தொடர்பான அறுவை சிகிச்சை செய்ய நேரும். வழக்கு வெற்றிகள்தள்ளிப்போகும். அல்லது இடைக்கால நிவாரணம் கிடைக்கும். யோகா மெடிடேசன், பிராணயாமம் கை கொடுக்கும்.இயற்கை வைத்தியம் நல்ல பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனையாக உருவாகும். முன்னோர்களின் மரபு வழி நோய் தாக்கம் உருவாகலாம். புதிய கடன் உருவாக வாய்ப்புகள் அதிகம்.மன வேதனை மற்றும் அவமானப்படுத்திய வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். உங்களுக்குசாதகமான தீர்ப்பு கிடைக்கும்.கணவனுக்கோ , மனைவிக்கோதிடீர் அதிர்ஷ்டம், பெரும் பணம்போன்றவை லாட்டரி, பங்குச் சந்தை, உயில் மூலம்கிடைக்கலாம்.

    9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பதிவதால். அபாரமான வளர்ச்சி ஏற்படும். அரசு, அரசியல், நிர்வாகம் சார்ந்த செயல்கள் சாதகமாகும். அரசு சார்பாக செய்யும் செயல்களுக்கு வாய்ப்பு தேடி வரும்.தொழிலில் புதிய கிளைகளை துவக்கி நல்ல லாபங்கள் பார்க்கலாம். மறைமுக எதிரிகளால் தொழில் முடக்கம் இடையூறுகள் ஏற்படும். சம்பளத்திற்கு சென்றவர்கள் கூட புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

    சின்னத்திரை, பெரிய திரை கலைஞர்களுக்குபுதிய வாய்ப்புகூடி வரும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் உள்ளவர்களுக்கு தனி முத்திரை பதிக்க ஏற்ற நேரமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உயர் அதிகாரிகளால் வேலையில் இருந்து வந்தபிரச்சனைகள் தீரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்குவெளிநாட்டு வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மத்திய அரசு வேலை கூட கிடைக்கும்.

    குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் குலப் பெருமையை காப்பாற்ற போராட நேரும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்தபிரச்சனைகள் இழுபறியாக இருக்கும். தந்தை வழி உறவினர்களிடம் சிறு சிறு மனத்தாங்கல் இருக்கும். உரிமைக்காவும், நியாத்திற்காகவும் போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.ஆலயத் திருப்பணி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பொதுக் காரியங்களுக்காக அதிக நேரம் செலவு செய்வீர்கள். சமூக அந்தஸ்து மிகச் சிறப்பாக இருக்கும். நன்மதிப்பும் பாராட்டும் கிடைக்கும்.

    தந்தையின் ஆரோக்யம் சீராகும். நிம்மதியான உறக்கம் இருக்காது. பேச்சில் தெளிவின்மை இருக்கும். குடும்பவாழ்வில் ஆர்வம் இருக்காது. குடும்பத்தில் சுகமும் துக்கமும் மாறி மாறி இருந்து கொண்டே இருக்கும்.கடுமையான வாக்கு பிரயோகம், கூசாமல் பொய் பேசுதல் ஆகியவைகளால் குடும்பத்தில்தேவையில்லாத பிரிவினையை உண்டாகும். சிலருக்கு உண்மையே பேச முடியாமல் சூழ்நிலை ஏற்படும்.பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தேவையில்லாதகெட்ட பெயர் ஏற்படும்.பொருளாதாரத்தில் கடுமையானஏற்ற இறக்கம் இருக்கும். எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற இனம் புரியாத மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.

    திருமணம்: இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பெயர்ச்சி யாவதால் திருமணத் தடை அகலும். ராசி அதிபதி சனியின் பார்வையும் தன ஸ்தானத்தில் பதிவதால் கும்ப ராசி இளைஞர்கள், இளைஞிகளுக்கு திருமணம் நடைபெறும்.

    பெண்கள்: குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும். புதியஅணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.வீட்டில் அமைதி நிலவும், உல்லாச பயணம் செல்லக்கூடிய நேரம். சுற்றுலா சென்று ஆனந்தம்அடைவீர்கள்.கணவன் மனைவி கருத்துஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து செல்வதால்இல்லறம் நல்லறமாகும்.

    பரிகாரம்: குளத்து மீன்களுக்கு அரிசிப் பொரி இட பொருள் வரவு அதிகரிக்கும். உடல் ஊனமுற்றோருக்கு தயிர் சாதம் தண்ணீருடன் வழங்க குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×