என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். உத்தியோக முயற்சி கைகூடும். பொருளாதார நிலை உயரும். உதவி செய்வதாய் சொன்னவர்கள் ஒத்துழைப்புத் தருவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் காண முக்கியப் பிரமுகர்களை சந்திக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்புச் செய்வர். ஆரோக்கியக் குறைகள் அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன் 30.5.22

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு உண்டு. சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடியும். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன் 28.5.22

    குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் அருகில் இருந்தும் சில காரியங்களை செய்ய இயலாமல் போகலாம். உடன் பிறப்புகள் வழியே விரயம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன் 27.5.22

    பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். நிர்வாக திறமைக்கு பாராட்டு கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பளம் பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். ஊர் மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பொருளாதார நிலை உயரும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும். பதவிகளும் வந்து சேரலாம். பிள்ளைகளால் பெருமைகள் உண்டு. பணவரவு இருமடங்காக உயரும்.

    கும்பம் - Kumbam

    ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023

    12.4.2022 முதல் 30.10.2023 வரை

    மூன்றில் ராகு/ ஒன்பதில் கேது

    விவேகமான கும்ப ராசியினரே உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும் 9ல் கேதுவும் உள்ளார்கள். குருபகவான் 2 ,3ம் இடத்திலும், சனி பகவான் 12 , 1ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.

    3மிட ராகுவின் பலன்கள்:மூன்றாமிடம் என்பது முயற்சி ஸ்தானம், சகாய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானம், உப ஜெய ஸ்தானம், வெற்றி ஸ்தானம். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை ராகுவைச் சேரும். எந்த செயலிலும் விரைந்து செயல்பட்டு தெளிவாக முடிவு எடுப்பீர்கள். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் காலம்.

    தைரியம், தெம்பு , ஞாபக சக்தி அதிகரிக்கும். இது வரை அனுபவித்து வந்த சங்கடங்கள் தீரும். நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் பெற்று வாழ்வீர்கள்.உடல் ஆரோக்கியம் அதிகரித்தும். நன்மைகள் அதிக அளவில் நடக்கும். குடும்ப தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் பெருகும். உங்கள் சொத்தை சகோதர, சகோதரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார். சிலருக்கு சொத்து தொடர்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். ஆடை ,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். செய்தி, தகவல்தொடர்பு, அச்சுத் துறை நூலகத்தில் வேலை செய்பவர்களுக்கு , எழுத்தாளர்களுக்கு ஏற்றம் உண்டாகும். சிலருக்கு செவித்திறன் குறைபாடு வரலாம்.

    ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.

    12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:கிருத்திகை நட்சத்திர அதிபதி. சூரியன் கும்பத்திற்கு ஏழாம் அதிபதி. ராசிக்கு 3ல் பயணிக்கும் ராகு ஏழாமதிபதியின் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே நல்லிணக்கம். நீடிக்கும். தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள். நீண்ட நாட்களாக தொடர்பில்லாத பள்ளி, கல்லுரி மற்றும் அக்கம் பக்க பால்ய நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியைத் தரும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும்.

    15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுக்ரனின் நட்சத்திரமான பரணி கும்பத்திற்கு 4,9ம் அதிபதி. பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும் காலம். தங்களின் தோற்றம் மற்றும் செயல்களில் மாற்றம் ஏற்படும். பொது நலமான சிந்தனை தோன்றி அதன் படி செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும். உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்கு தெரிய வரும். எண்ணிய எண்ணம் பலிதமாகும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும்.

    21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 9ல் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் கோட்சார ராகு பயணிக்கும் காலம்.மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்படையும். சாஸ்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் ஏற்படும். புகழ் பரவும். பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். அரசு அதிகாரிகள் மெமோ வாங்குவீர்கள் அல்லது இடமாற்றம் செய்யப்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தை வழி உறவினர்களால் முன்னோர்களின் சொத்தை பிரிப்பதில் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    9 மிட கேதுவின் பொது பலன்கள்:ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் நீதி, நேர்மை, நியாயம் போன்றவற்றை போதிப்பவர். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை புரிய வைப்பவர். தந்தையின் அருமை, பெருமைகளை உணர்வீர்கள். தந்தை இல்லாமல் ஒரு மனிதனுக்கு பிறவி என்பதே கிடையாது என்ற உண்மை மனதை வாட்டும். லௌகீக நாட்டம் குறையும். தந்தை ஆன்மீக வாதியாக மாறுவார்.தந்தை மகன் உறவில் ஏற்பட்ட விரிசல் சீராகும்.

    பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையில் தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அதிகமாகும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி அடைய முயற்சிப்பீர்கள். சிலருக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் யோகா, தியானம் போன்ற வற்றில் ஆர்வம் அதிகரிக்கும். ஒன்பதில் நிற்கும் கேது பகவான் இழந்த பாக்கிய பலன்களை மீண்டும் வழங்க தயராக இருக்கிறார். அதை பயன்படுத்த கும்ப ராசியினர் தயாராக வேண்டும். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.

    12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம்.குரு கும்பத்திற்கு தன லாபாதிபதி. கோட்சார குரு குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலம் குடும்ப வாழ்க்கை மனநிறைவு தரும். உற்றார் உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போகும். திருமண வயதில் உள்ள மகள், மகனின் திருமணத்தை தடபுடலாக நடத்துவார்கள். தொழிலில் பல வருடமாக உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் நேரம். உங்கள் பிரார்த்தனை மற்றும் வேண்டுதலுக்கு கடவுளின் அருள் கிடைக்கும் காலம். லாபம் வீடு தேடி வந்து கதவை தட்டும். ஜனன கால ஜாதகத்தில் சனி சுப வலு பெற்றவர்களுக்கு அதிக முயற்சி இல்லாமலே கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். மனைவிக்கு தாய் வழி சொத்து கிடைக்கும்.

    18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 3ல் பயணிக்கும் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் காலம். பாக்கியஸ்தானத்தில் நிற்கும் கேது உங்களுக்கு பாடம் புகட்ட தயார் நிலையில் உள்ளதால் சுபமும் அசுபமும் கலந்தே நடக்கும்.

    உயர் கல்வி முயற்சி சிறு தடைக்குப் பின் சீராகும். தந்தைக்கும் சகோதரருக்கும் கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.அண்டை, அயலாருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். உங்களின் பூர்வீக மற்றும் சுய சம்பாத்திய சொத்துகளின் ஆவணங்கள் தொடர்பான குழப்பம் உங்களை கவலையில் ஆழ்த்தும்.பத்திர பதிவு அலுவலகத்திற்கு நடந்தே அழுத்துவிடுவீர்கள் .அதாவது கேதுவின் டார்கெட் நிம்மதியின்மை கொடுத்து முக்திக்கு அழைப்பது.

    27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் கும்பத்திற்கு 3,10ம் அதிபதி. சிலர் வேலையை விட்டு விடுவார்கள் அல்லது வேலையிலிருந்து நிறுத்திவிடுவார்கள். சிலர் வீடு அல்லது வியாபர நிறுவனத்தை மாற்றலாம். சிலர் தொழிற்சாலையை இட மாற்றம் செய்ய நேரும். தொழில் தர்மத்தை கடைபிடித்து நியாயமான முறையில் சம்பாதித்து புகழடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். சிலர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து புதிய தொழில் தொடங்கலாம். சிலர் தங்களின் மறைமுக வருமானத்தைக் கொண்டு புதிய தொழில் கிளைகளை உருவாக்கலாம். அதிக பொருள் ஈட்டும் ஆசையால் சட்டத்திற்கு புறம்பான தொழிலை செய்பவர்களுக்கு அசுப விளைவுகளை தந்து தவறை சுட்டிக் காட்டும்.

    திருமணம்:ஜென்மச் சனியின் காலத்தில் திருமண முயற்சியில் தடை தாமதங்கள், மனம் வருந்தும் நிலை ஏற்படும். பெண்ணை மாப்பிள்ளை வீட்டாரிடம் காண்பிக்கும் முன்பு பல முறை யோசிக்கவும். அதிக கவனத்துடன் வரனை தேர்வு செய்ய வேண்டும். தவறான சுய விருப்ப விவாகம் தோல்வியை ஏற்படுத்தலாம்.

    பெண்கள்:திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையும் அன்னியோன்யமாக இருப்பீர்கள். மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . வீடு , வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.

    உத்தியோகஸ்தர்கள்:தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    கும்பராசியினருக்கு குருவின் சஞ்சாரம் மிகச் சாதக மாக உள்ளது. ஏழரைச் சனி மற்றும் ராகு/கேதுவின் தாக்கம் உங்களை பாதிக்காது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    இரக்க குணம் மிகுந்த கும்ப ராசியினரே ராசிக்கு 2ல் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 12, 1 ம் இடத்திலும், ராகு பகவான் 3ம் இடத்திலும், கேது பகவான் 10ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதுவரை ராசியில் சஞ்சரித்த குருபகவான் 2ம்மிடமான தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கும்ப ராசிக்கு குரு தன லாபாதிபதி. தனாதிபதி குரு தன ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் கும்ப ராசியினருக்கு இந்த குருப் பெயர்ச்சியால் ஏற்றமிகு பலன்கள் ஏற்படப்போகிறது. தன ஸ்தானத்திற்கு ராசி அதிபதி சனியின் 3ம் பார்வையும் 17.1.2023 வரை இருப்பதால் சுப பலன் இரட்டிப்பாகும்.

    2மிடம் என்பது தனம் வாக்கு குடும்ப ஸ்தானம். வாக்கு ஸ்தானம், குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. ஜென்ம குருவால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் வேதனைகளும், துயரங்களும் விலகும். பேச்சில் தைரியம், தன் நம்பிக்கை உண்டாகும். அமைதியாக பேசுபவர்கள் கூட அதிகார தோரணையான பேச்சில் அனைவரையும் கட்டிப் போடுவார்கள். சிலர் பேசியே பிறரை வதைப்பார்கள். சிலர் பேச்சுத் திறமையால் வருமானத்தை அதிகரிக்கப்பார்கள். ஒருவர் சம்பாத்தியத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகளின் வருமானத்தால் நிமிர்ந்து நிற்கும். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும்.

    குடும்பத்திற்கு நிலையான நிரந்தரமான வருமானத் திற்கான வழி தென்படும். இதுவரை வீட்டு வேலையில் காலத்தை கழித்த பெண்கள் கைத் தொழில் கற்று வருமானம் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவார்கள். கடன் சுமை குறையத் துவங்கும்.வீடு முழுவதும் பண வாசனை நிரம்பும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். பணத்தைப் பார்த்தசில போலியான உறவுகள் உண்மையானவர்கள் போல் நடிப்பார்கள்.

    சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும்.குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும்.சொல் வலிமை, வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனை கேட்க ஒரு கூட்டம் உருவாகும். ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள். சிலருக்கு பேரன் பேத்தி பிறப்பார்கள்.

    5ம் பார்வை பலன்கள்: குருவின் 5ம் பார்வை 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் பதிகிறது. குருவின் 5ம் பார்வை ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய6ம் இடத்திற்கு இருப்பதால் உடல் ஆரோக்யம் சீராகும். எந்த முறை வைத்தியம் செய்து நோய் நிவாரணம் பெறலாம் என்று திணறியவர்களுக்கு நோயின் தன்மை புலப்படும். நோயின் தன்மைக்கு தகுந்த வைத்தியம் கிடைக்கும். ஆச்சரியப்பபடத்தகுந்த வகையில் நோயிலிருந்து விடுதலை பெறுவீர்கள். வலது காதில்சிறு குறைபாடு தோன்றும். செய்வினை, கண் திருஷ்டி அகலும். கடன் தொல்லைகள் முற்றிலும் அகலும். வராக்கடன்கள் வசூலாகும். கொடுக்க வேண்டியபணத்தை திரும்ப கொடுத்து விடுவீர்கள். பணம் எல்லாநேரத்திலும் எல்லோருக்கும்வந்து விடாது. கடன் இல்லா வாழ்க்கை பெரும் பாக்கியம். குருவருளால் உங்களுக்கு சாத்தியமாகும் . கடனை வளரவிடாமல் பார்த்து கொள்ளவது வளமான எதிர்காலத்தை கொடுக்கும்.

    பொருளாதார உயர்வு எற்படும். பொருளாதார வரவைதிட்டமிட்டு செயல்படுத்த குருபகவான் பக்கபலமாக இருப்பார். அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் சுமூகமான நல் இணக்கம் ஏற்படும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை ஏற்படும். எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் செயல்கள் உங்களுக்கு சாதகமாகும்.3ல்ராகு நிற்பதால் சகோதரர்களிடம் அவ்வப்போதுகருத்து வேறுபாடு தோன்றி மறையும்.சகோதரர்களுக்குகாக அதிக செலவு செய்ய நேரும். எதற்கும்கலங்காமல் மன உறுதியுடன் செயலாற்றுவீர்கள். இது வரை வாடகை வீட்டில் குடியிருந்த சிலர் கடன் பெற்று சொந்த வீடு கட்டி குடிபுகும்ஆர்வம் உண்டாகும். உங்கள் எண்ணம் போல் வீடு, வாகன யோகம் அமையும். சிலர் வீடு, வாகனங்களை விற்று கடன் அடைக்கலாம்.

    6, 8 ம்மிடத்திற்கான குரு பார்வைபிரச்சனையை மூடி மறைக்கும். வட்டிக்கு வட்டி கட்டி சமாளிக்க முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்குகடன் தொகை தள்ளுபடியாகும் . விவசாயிகள் கடன் பிரச்சனையிலிருந்தும் மீண்டு வருவார்கள். 6ம் இடம் குருவின் கட்டுப்பாட்டில் இருப்பதால்கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் போட்டி போடும்.குரு பார்வை இல்லாத போது கடனே கழுத்தை நெரிக்கும் என்பதால் தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

    7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 8ம்மிடமான ஆயுள் ஸ்தானத்தில் பதிவதால் ஆயுள் பலம் ஏற்படும். நீண்ட நாள் வைத்தியம் செய்யக் கூடிய பரம்பரை வியாதியின் தாக்கம் வெகுவாக குறையும்.நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தால் இப்பொழுது ஆரோக்கியம் ஏற்படும். கடுமையான உயிருக்கு ஆபத்தான நோயில் போராடுபவர்களுக்கு சிறிய நிவாரணம் ஏற்படும். சிலருக்கு கண், பல், முகம் தொடர்பான அறுவை சிகிச்சை செய்ய நேரும். வழக்கு வெற்றிகள்தள்ளிப்போகும். அல்லது இடைக்கால நிவாரணம் கிடைக்கும். யோகா மெடிடேசன், பிராணயாமம் கை கொடுக்கும்.இயற்கை வைத்தியம் நல்ல பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனையாக உருவாகும். முன்னோர்களின் மரபு வழி நோய் தாக்கம் உருவாகலாம். புதிய கடன் உருவாக வாய்ப்புகள் அதிகம்.மன வேதனை மற்றும் அவமானப்படுத்திய வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். உங்களுக்குசாதகமான தீர்ப்பு கிடைக்கும்.கணவனுக்கோ , மனைவிக்கோதிடீர் அதிர்ஷ்டம், பெரும் பணம்போன்றவை லாட்டரி, பங்குச் சந்தை, உயில் மூலம்கிடைக்கலாம்.

    9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பதிவதால். அபாரமான வளர்ச்சி ஏற்படும். அரசு, அரசியல், நிர்வாகம் சார்ந்த செயல்கள் சாதகமாகும். அரசு சார்பாக செய்யும் செயல்களுக்கு வாய்ப்பு தேடி வரும்.தொழிலில் புதிய கிளைகளை துவக்கி நல்ல லாபங்கள் பார்க்கலாம். மறைமுக எதிரிகளால் தொழில் முடக்கம் இடையூறுகள் ஏற்படும். சம்பளத்திற்கு சென்றவர்கள் கூட புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

    சின்னத்திரை, பெரிய திரை கலைஞர்களுக்குபுதிய வாய்ப்புகூடி வரும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் உள்ளவர்களுக்கு தனி முத்திரை பதிக்க ஏற்ற நேரமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உயர் அதிகாரிகளால் வேலையில் இருந்து வந்தபிரச்சனைகள் தீரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்குவெளிநாட்டு வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மத்திய அரசு வேலை கூட கிடைக்கும்.

    குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் குலப் பெருமையை காப்பாற்ற போராட நேரும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்தபிரச்சனைகள் இழுபறியாக இருக்கும். தந்தை வழி உறவினர்களிடம் சிறு சிறு மனத்தாங்கல் இருக்கும். உரிமைக்காவும், நியாத்திற்காகவும் போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.ஆலயத் திருப்பணி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பொதுக் காரியங்களுக்காக அதிக நேரம் செலவு செய்வீர்கள். சமூக அந்தஸ்து மிகச் சிறப்பாக இருக்கும். நன்மதிப்பும் பாராட்டும் கிடைக்கும்.

    தந்தையின் ஆரோக்யம் சீராகும். நிம்மதியான உறக்கம் இருக்காது. பேச்சில் தெளிவின்மை இருக்கும். குடும்பவாழ்வில் ஆர்வம் இருக்காது. குடும்பத்தில் சுகமும் துக்கமும் மாறி மாறி இருந்து கொண்டே இருக்கும்.கடுமையான வாக்கு பிரயோகம், கூசாமல் பொய் பேசுதல் ஆகியவைகளால் குடும்பத்தில்தேவையில்லாத பிரிவினையை உண்டாகும். சிலருக்கு உண்மையே பேச முடியாமல் சூழ்நிலை ஏற்படும்.பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தேவையில்லாதகெட்ட பெயர் ஏற்படும்.பொருளாதாரத்தில் கடுமையானஏற்ற இறக்கம் இருக்கும். எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற இனம் புரியாத மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.

    திருமணம்: இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பெயர்ச்சி யாவதால் திருமணத் தடை அகலும். ராசி அதிபதி சனியின் பார்வையும் தன ஸ்தானத்தில் பதிவதால் கும்ப ராசி இளைஞர்கள், இளைஞிகளுக்கு திருமணம் நடைபெறும்.

    பெண்கள்: குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும். புதியஅணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.வீட்டில் அமைதி நிலவும், உல்லாச பயணம் செல்லக்கூடிய நேரம். சுற்றுலா சென்று ஆனந்தம்அடைவீர்கள்.கணவன் மனைவி கருத்துஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து செல்வதால்இல்லறம் நல்லறமாகும்.

    பரிகாரம்: குளத்து மீன்களுக்கு அரிசிப் பொரி இட பொருள் வரவு அதிகரிக்கும். உடல் ஊனமுற்றோருக்கு தயிர் சாதம் தண்ணீருடன் வழங்க குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    சுபகிருது வருட பலன் - 2023

    உறவுகளுக்காகவே வாழும் கும்ப ராசியினர் இந்த தமிழ் புத்தாண்டில் அடுக்கடுக்கான முன்னேற்றங்களைப் பெற நல் வாழ்த்துக்கள்.

    உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும் 9ல் கேதுவும் உள்ளார்கள். குருபகவான் தன ஸ்தானத்திலும், சனி பகவான் 12 மற்றும் ராசியில் சஞ்சரிக்கிறார். தன குருவால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. குடும்ப தேவைகளுக்கு மேல் உபரி வருமானம் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறமையால் உறவுகளை பாசப் பிணைப்பில் கட்டுவீர்கள்.சொல் வலிமை, வாக்குபலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனைக்குஉற்றார் உறவினர்கள் செவி சாய்ப்பார்கள்.

    வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை குருவைச் சாரும். எந்த செயலிலும்விரைந்து செயல்பட்டு தெளிவாக முடிவு எடுப்பீர்கள். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் காலம். தைரியம், தெம்பு , ஞாபக சக்திஅதிகரிக்கும். இது வரை அனுபவித்து வந்த சங்கடங்கள் தீரும். நன்மைகள் அதிக அளவில் நடக்கும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பிரயாணங்கள் செய்ய நேரும். முறையற்றஆவணங்களால் வம்பு , வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் சொத்தை சகோதர, சகோதரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார். சிலருக்கு சொத்து தொடர்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். ஆடை ,ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.சிலர் நடக்காததை நடப்பது போல் கற்பனை செய்வார்கள். சிலருக்கு செவித்திறன் குறைபாடு வரலாம். கும்பராசியினருக்கு குருவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளதால் ஏழரைச் சனி மற்றும் ராகு/கேதுவின் தாக்கம் உங்களை பாதிக்காது.

    குடும்பம்:குடும்ப ஸ்தானாதிபதி குரு குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால்சிலர் தீய நண்பர்களின் சேர்க்கையிலிருந்து விடுபடலாம்.குடும்ப தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் பெருகும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். சிலரின் வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். சம்பந்திகள் சண்டை முடிவுக்கு வரும். விருந்து உபசாரம் மற்றும் சுப நிகழ்வுகளால் வீடு கலகலப்பாக மாறும். தவறான புரிதலால் விலகிச் சென்ற உறவுகள் உண்மை நிலை புரிந்து மீண்டும் உறவாடுவார்கள்.மகன், மகளின் திருமணம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

    ஆரோக்கியம்: ஏழரைச் சனியின் காலம் என்பதால் கை, கால், மூட்டு வலி இருக்கும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு வைத்தியம் நல்ல பலன் தரும். குருவின் பார்வை 6, 8ம் இடத்தில் பதிவதால் மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும்குடிபுகும். ஆரோக்கியம் சிறப்படையும். ஆயுள் பலம் உண்டு. மருத்துவச் செலவு குறையும்.

    திருமணம்:2022ல் திருமணம் எந்த தடையும் இன்றி எளிமையாக நடந்து முடியும். வரன் பற்றிய மிகைப்படுத்தலான எதிர்பார்ப்பு இன்றி திருமண முயற்சி செய்வது நல்லது. நேரம், காலம் சாதகமாக இருக்கும் பொழுது சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் 2023ல் சனி கும்பத்திற்கு பெயர்ச்சியாகும் போது ஜென்மச் சனியால் திருமணத் தடை உருவாகலாம். அதிக கவனத்துடன் வரனைதேர்வு செய்ய வேண்டும். தவறானசுய விருப்ப விவாகம் தோல்வியை ஏற்படுத்தலாம்.

    பெண்கள்:திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையும் அன்னியோன்யமாக இருப்பீர்கள்.மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . வீடு ,வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.தாய் வழி உறவினர்களின்அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்தசகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வந்து சேரும்.

    மாணவர்கள்:பள்ளி, கல்லுரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ,மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். 9ம் இடத்தில் நிற்கும் கேது உங்களுக்குபுத்தி கூர்மை , தெய்வ அனுகிரகம், ஞானம்போன்றவற்றை வாரி வழங்க போகிறார். ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அரசுத் துறை சார்ந்த கல்வி வாய்ப்பும் கிடைக்கும்.

    உத்தியோகஸ்தர்கள்:தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும்.அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையேநல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். அரசு அதிகாரிகள்இடமாற்றம் செய்யப்படுவீர்கள்.

    முதலீட்டாளர்கள்:ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு இது பொற்காலம்.நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும். புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள்.

    அரசியல்வாதிகள்:பல அரசியல் பிரமுகர்களுக்கு வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையை தரும். முக்கிய கட்சியில்இணையும் வாய்ப்பு கிட்டலாம்.பெரிய பதவிகள்கிடைக்க கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது.

    கலைஞர்கள்:தடைகள் விலகும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். உங்கள் கனவுகளை நிறைவேற்றும் புதுப்பட வாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் வந்து குவியும்.

    விவசாயிகள்:விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான நேரம். பழைய விவசாய கடன் அல்லது வட்டி தள்ளுபடியாகும்.விளை நிலங்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும்.விவசாயிகள் புதிய தொழில் முறையில் போதிய அனுபவம் இல்லாத தொழில் முறையைபற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்தவும்.

    ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 3ல் ராகுவும் 9ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு வாழ்வாதாரத்திற்கு இடம் பெயரலாம். ஞாபக சக்தி குறையும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகாது என்பதால் வழக்குகளை ஒத்திப் போட வேண்டும். சிலர் சட்டச் சிக்கல் நிறைந்த சொத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். சிலர் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படலாம். அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சனை ஏற்படலாம். உயர் கல்வி முயற்சி சிறு தடைக்குப் பின் சீராகும்.

    குரு: 29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தை வழி உறவினர்களால் முன்னோர்களின் சொத்தை பிரிப்பதில் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    பரிகாரம்:வியாழக்கிழமை சித்தர்கள் வழிபாடு செய்து வர முத்தாய்பான மாற்றங்கள் தேடி வரும்.

    ஐஸ்வரியம் கிடைக்கும்

    தன குருவால் சிலரின் பேச்சுத் திறமை வருமானத்தை அதிகரிக்கும். பற்றாக்குறை வருமானம் பிள்ளைகளின் பங்களிப்பால் உபரி வருமானமாகும். வீட்டில் மகாலஷ்மி வாசம் செய்வாள். குடும்பத்திற்கு நிலையான நிரந்தமான வருமானம் கிடைக்கும். இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும்.தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். அடமானத்தில் இருந்தநகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள். கடன் தொல்லை குறையும். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிப்பலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். சமுதாய பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

    ×