புதுச்சேரி

வீட்டில் சமையல் செய்யும் போது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது: அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்

Published On 2023-11-04 07:52 GMT   |   Update On 2023-11-04 07:52 GMT
  • தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
  • ரூ.1½ லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தது.

புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை அப்பாவு நாயக்கர் வீதியை சேர்ந்தவர் பழனி. ஓட்டல் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இன்று காலை பழனியின் இளைய மகள் வீட்டின் மாடியில் உள்ள சமையல் அறையில் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கியாஸ் சிலிண்டரை திறந்து தீ பற்ற வைக்கும் போது ரெகுலேட்டரில் தீபற்றியது.

இதனை பார்த்ததும் பழனியின் மகள் அதிர்ச்சியடைந்து வீட்டின் கீழ் தளத்தில் இருந்த தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

இதனால் சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர் உடனே வீட்டை விட்டு வெளியேறினர். சிறிது நேரத்தில் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சிலிண்டர் இரண்டாக பிளந்து போனது.

குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் அனைவரும் உயிர் தப்பினர்.

இதுபற்றி உடனடியாக புதுவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், தையல் எந்திரம் உள்ளிட்ட ரூ.1½ லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தது.

இந்த தீவிபத்து குறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News