புதுச்சேரி

தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

விசைப்படகு உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Published On 2022-10-26 14:42 IST   |   Update On 2022-10-26 14:42:00 IST
  • புதுவை பெரிய மார்க்கெட் பகுதியில் வெளிமாநில மீன்களை கொண்டு வந்து விற்க 9 ஏஜென்சிகளை மீன்வளத்துறை அனுமதித்ததாக தெரிகிறது.
  • தேங்காய்த்திட்டு துறைமுகத்தை பூட்டி வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை பெரிய மார்க்கெட் பகுதியில் வெளிமாநில மீன்களை கொண்டு வந்து விற்க 9 ஏஜென்சிகளை மீன்வளத்துறை அனுமதித்ததாக தெரிகிறது.

புதுவையில் 18 மீனவ பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் புதுவை பெரிய மார்க்கெட், சின்னகடை, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், வீராம்பட்டினம் போன்ற சிறிய மார்க்கெட்டில் விற்பனை செய்வது வழக்கம்.

சமீபகாலமாக புதுவையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 9 ஏஜென்சி மூலம் மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை எதிர்த்து விசைப்படகு உரிமையாளர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தை பூட்டி வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி விட்டு வெளிமாநில மீன்கள் வரத்தை நிறுத்தும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என எச்சரித்துள்ளனர்.மேலும் 9 ஏஜென்சிகள் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு மீன்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள மீன்வளத்துறைக்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெளிமாநிலத்தில் இருந்து மீன் வருவதை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News