செய்திகள்
திருப்பதி

இந்த மாதம் திருப்பதியில் கருட வாகன வீதி உலா 2 முறை நடக்கிறது

Published On 2021-08-10 13:41 IST   |   Update On 2021-08-10 13:41:00 IST
13-ந்தேதி கருட பஞ்சமி அன்று புதிதாக திருமணமான தம்பதிகள் தங்களின் சிறப்பான இல்வாழ்க்கைக்காகவும், கருடனை போல் நல்ல பலமுள்ள குழந்தையை பெற வேண்டும் என்றும் விரதம் மேற்கொள்வர்.
திருப்பதியில் இந்த மாதம் 2 முறை கருட வாகன சேவை நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்றும் மற்றும் பிரம்மோற்சவம், ரதசப்தமி அன்றும் கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதேபோன்று கருட பஞ்சமியன்றும் கருட சேவை நடைபெறுவது ஐதீகம்.

இந்த மாதம் 13-ந்தேதி கருட பஞ்சமி அன்றும், 22-ந்தேதி ஆடி பவுர்ணமி அன்றும் கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளன.

2 நாட்களிலும் இரவு 7 மணிக்கு ஏழுமலையான் 4 மாடவீதிகளிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

13-ந்தேதி கருட பஞ்சமி அன்று புதிதாக திருமணமான தம்பதிகள் தங்களின் சிறப்பான இல்வாழ்க்கைக்காகவும், கருடனை போல் நல்ல பலமுள்ள குழந்தையை பெற வேண்டும் என்றும் விரதம் மேற்கொள்வர்.

மகா விஷ்ணுவின் வாகனமான கருடனின் பிறந்த தினம் என்பதால் அந்நாளில் திருப்பதியில் கருட வாகன சேவை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பதியில் நேற்று 20,016 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11,353 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.2 கோடி உண்டியல் வசூலானது.

Similar News