செய்திகள்
சதுரகிரி மலை செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
பேரையூர்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது.
மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கோவில் அமைந்துள்ள பகுதி வனத்துறைக்குட்பட்டதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் நாளை (21-ந்தேதி) ஆடி பிரதோஷம் மற்றும் 23-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 24-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மலை ஏற வரும் பக்தர்கள் அடிவாரத்தில் கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும், கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், போதிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்றவை வலியுறுத்தப்பட்டுள்ளன. பீடி, சிகரெட் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
மலை பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது.
மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கோவில் அமைந்துள்ள பகுதி வனத்துறைக்குட்பட்டதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் நாளை (21-ந்தேதி) ஆடி பிரதோஷம் மற்றும் 23-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 24-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மலை ஏற வரும் பக்தர்கள் அடிவாரத்தில் கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும், கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், போதிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்றவை வலியுறுத்தப்பட்டுள்ளன. பீடி, சிகரெட் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
மலை பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.