செய்திகள்
திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில்.

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் திறக்கப்படுவதில் தாமதம்: பக்தர்கள் வேதனை

Published On 2021-07-07 11:14 IST   |   Update On 2021-07-07 11:14:00 IST
உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் திருமலைநம்பி கோவிலுக்கு வந்து நம்பி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோவில் அமைந்துள்ளது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோவில் ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தது ஆகும். இப்பகுதி பக்தர்களால் ஏழைகளின் திருப்பதி என்றழைக்கப்படும் திருமலைநம்பி கோவில் திருக்குறுங்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இதில் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து கோவிலுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 4 கி.மீ. தூரம் பக்தர்கள் நடந்து சென்று வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்த கோவிலுக்கு வந்து நம்பி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 2-ம் கட்ட கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் தமிழகத்தில் கோவில்கள் மூடப்பட்டது. அதுபோல திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலும் மூடப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த 5-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில் இன்னும் திறக்கப்பட்ட வில்லை.

இக்கோவில் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால் கோவிலை திறக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணை யம் அனுமதி வழங்க வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தேசிய புலிகள் ஆணையம் கோவிலை திறக்க இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கோவிலை திறப்பதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் நம்பி சுவாமிக்கு நேர்ச்சை கடன்களை செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர்.

எனவே திருமலைநம்பி கோவிலை திறக்க தேசிய புலிகள் ஆணையத்தின் அனுமதியை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும், கொரோனா விதிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனத் திற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News