செய்திகள்
கடலூர் எல்லை காளியம்மன் கோவில் செடல் உற்சவம் 29–ந் தேதி நடக்கிறது
கடலூர் எல்லை காளியம்மன் கோவில் கோவிலில் ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையையொட்டி வருகிற 29-ந் தேதி செடல் திருவிழா நடக்கிறது.
கடலூர் பழைய வண்டிப்பாளையத்தில் அமைந்துள்ள எல்லை காளியம்மன் கோவிலில் ஆடி 2ம் வெள்ளிக்கிழமையையொட்டி வருகிற 29-ந் தேதி செடல் திருவிழா நடக்கிறது.
இதனை முன்னிட்டு நாளை 28-ந் தேதி வேம்பு அரசு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின்னர் அன்று காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து எல்லை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை, காலை 11 மணிக்கு வேம்பு அரச திருக்கல்யாண உற்சவமும், இரவு காப்பு கட்டுதல் மற்றும் எல்லை கட்டும் உற்சவமும் நடக்கிறது.
29-ந் தேதி காலை ஊற்றுகாட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம் வீதியுலாவும், மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு 1,008 குடம் நீர் அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் சாகை வார்த்தலும், அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு செடல் உற்சவமும், இரவு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.
இதனை முன்னிட்டு நாளை 28-ந் தேதி வேம்பு அரசு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின்னர் அன்று காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து எல்லை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை, காலை 11 மணிக்கு வேம்பு அரச திருக்கல்யாண உற்சவமும், இரவு காப்பு கட்டுதல் மற்றும் எல்லை கட்டும் உற்சவமும் நடக்கிறது.
29-ந் தேதி காலை ஊற்றுகாட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம் வீதியுலாவும், மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு 1,008 குடம் நீர் அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் சாகை வார்த்தலும், அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு செடல் உற்சவமும், இரவு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.